சில வருடங்களாக அவளது வீட்டில் நடந்த சில சம்பவங்கள் வள்ளியின் மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்தது..
அதனால் இந்த மல்லிகை பூவையும் அல்வாவையும் பார்த்ததும் அழுத்தம் தாங்க முடியாமல் தான் மயங்கி சரிந்தாள்..
வள்ளியை பற்றி மதியழகனுக்கு இன்னும் வரை எதுவும் தெரியாது..
அவர்கள் என்ன அன்னியோன்யமான தம்பதிகளாகவா வாழ்ந்தார்கள்?..
ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு..
அப்படி வாழ்வதற்கு அவர்களுக்கு கொடுப்பினை அமையவில்லை..
இன்று எப்படியாவது அவளிடம் மன்னிப்பு கேட்டு அவள் மன்னிப்பை பெற்று அவனது ஐந்து வருட குற்ற உணர்வை போக்கி அதன்பின் சேர்ந்து வாழ முடிவெடுத்தான்..
17 வயது பெண் என்று தெரியாமல் திருமணம் செய்து குழந்தையும் கொடுத்த அந்த குற்ற உணர்வு அவன் மனதில் ஆறாத வடுவாகவே இருந்தது..
படித்த அவனே இப்படி செய்து விட்டானே.. படிக்காதவர்கள் விவரம் புரியாதவர்கள் இதற்கு மேலும் செய்யமாட்டார்களா என்ன?..
குளித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன் அவள் கட்டிலில் படுத்திருப்பது போன்று இருக்கவும் உறங்கிவிட்டாள் என்றுதான் நினைத்தான்..
அவள் படுத்து உறங்குவது போன்று இல்லாமல் இருந்த மாதிரியே விழுந்திருப்பதை வைத்து தான் என்ன ஆனதோ என்று உடனடியாக அவள் அருகே வந்தான்..
அவளை தட்டி உலுக்கினான்.. அப்போதும் அவள் எழவில்லை.. தண்ணீர் தெளித்து எழுப்பினான்..
அப்போது தான் தாமரை மொட்டு கண்களை மலர்ந்து அவனைப் பார்த்தாள்..
“ என்ன பண்ணுது டி உடம்புக்கு முடியலையா?..” என்றான்.. நெற்றி மற்றும் கழுத்தில் கை வைத்து காய்ச்சலோ என்று சோதித்து பார்த்தான்..
“ ஒன்னும் இல்ல மாமா.. என்னவோ தெரியல தலைக்குள்ள ஒரு மாதிரி இருந்தது.. அப்படியே மயக்கம் வர மாதிரி இருந்தது.. மயங்கிட்டேன் போல.. இப்ப எதுவும் பிரச்சனை இல்லை நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கவா?.. ” என்று அவன் பதிலுக்கு எதிர் பாராமல் அறையை விட்டு வெளியேறினாள்..
அவனும் லுங்கி கட்டிக்கொண்டு வேறொரு துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேறி சாப்பாட்டறை மேசையில் அமர்ந்தான்..
அவனும் அவள் வைத்த சப்பாத்தியை போதுமான அளவு சாப்பிட்டு விட்டு அவளை அருகே அமர வைத்து சாப்பிட வைத்தான்..
அவள் உணவு உண்டதை பார்த்தபின் அவன் அறைக்கு சென்று விட்டான்.. அவள் சமையல் அறையை ஒதுங்க வைத்துவிட்டு அறைக்கு வந்தாள்..
அறையில் மகள் உறங்கிக் கொண்டிருந்தாள்..
இசைக்கு தொல்லை செய்யாமல் அவன் பாட்டு கேட்டு கண்களை மூடி இருந்தான்..
அரை மணி நேரம் கழித்து அவனுக்கு கொடுப்பதற்கு பால் எடுத்துக் கொண்டு வள்ளி அறைக்கு வந்தாள்..
மகளை நன்கு திரும்பி பார்த்தான் .. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வள்ளி கையை பிடித்து அருகே அமர வைத்தான்..
அவள் கொடுத்த பாலை வாங்கி குடித்து விட்டு அவளுக்கும் கொடுத்தான்.. அவளும் குடித்துவிட்டு அங்கிருந்த முகம் கழுவும் சிங்கில் கப் கழுவி வைத்துவிட்டு மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து இருந்தாள்..
“ இப்ப ஓகேவா ஏதும் பண்ணுதாடி?.. “
“ இல்ல மாமா.. “
“ அப்போ நான் கேட்ட டீலுக்கு ஓகேவா?..”
“ அப்படின்னா?.. என்ன கேக்குறீங்கனு புரியல.. “
“ மக்கு மக்கு.. அதுக்கு சம்மதமாடி?.. இதெல்லாம் எதுக்கு வாங்கிட்டு வருவாங்க?.. இசை பாப்பாக்கு விளையாட இன்னொரு பாப்பா வேணாமா?.. அதுக்குத்தான்.. சம்மதமா?.. ” என்றான் மல்லிகை பூ அல்வாவை எடுத்து காட்டி..
என்று கேட்டுக்கொண்டே அந்த பூ எடுத்து தலையில் வைத்து கொண்டாள்..
அதுவே அவள் விருப்பம் கூற.. அங்கே ஐந்து நீண்ட வருடத்தின் பின் இரண்டாம் கூடல் அமர்க்களமாக அரங்கேறியது..
நீண்ட இடைவெளி விழுந்ததால் அவன் தாகம் உடனே தீரவில்லை..
அவள் என்னவென்று உணரும் முன்பே முதல் கூடல் முடிந்து இசை உருவாகி விட்டால்..
அதனால் அவளும் இதுதான் கணவன் மனைவி உறவு என இப்போதுதான் தெரிந்து கொண்டாள்..
அல்வா இருவர் இதழ்களுக்கும் இடையே சிக்கி காணாமல் கரைந்து போனது.. யார் உண்டார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை..
அவள் கையில் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் சத்தம் அவனை இன்னும் போதையேற்றியது..
அவனுக்கு போதும் என்று தோணும் வரை அவளை எடுத்துகொண்டான் மதி..
அவள் மிகுந்த சோர்வோடு எழுந்து குளியலறை சென்று அவளை சுத்தம் செய்து நைட்டி அணிந்து வெளியே வந்தாள்..
அடுத்து அவனும் தன்னை சுத்தப்படுத்திவிட்டு அவள் அருகே படுத்தான்..
அப்போது அவள் அவன் முகம் பார்க்கும் படி எழுந்து அமர்ந்து கை நீட்டினாள்..
அவள் செயல் புரியாமல் என்னவென்று கேட்டான்..
“ என்னடி அடுத்த டீலுக்கு ஓகேவா?.. ” எனறான்..
அதற்கு அவள் “ பணம் கொஞ்சம் அதிகமாகும் பரவாயில்லையா மாமா?.. இப்போ முடிந்ததுக்கு பணத்தை எடுத்து வைங்க.. ” என்றாள்..
அவனுக்கு இவள் என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை..
ஏதேனும் வாங்க பணம் கேட்கிறாள் போல.. என்று நினைத்து “ இப்ப எதுக்குடி பணம்?.. நாளைக்கு உனக்கு வேண்டிய அளவு உன் கார்ட்ல எடுத்துக்கோயேன்.. இப்ப இப்படி பக்கத்துல வா.. ” என்று அவளை நன்றாக நெருங்கி அணைத்து கொண்டான்..
அவன் சிறையில் இருந்த போது வீட்டு செலவிற்கும் இனி அவர்களுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு என வருமானத்தில் வரும் ஒரு தொகை பணத்தை நண்பன் மூலம் அவளது வங்கி கணக்கில் போடும்படி ஏற்பாடு செய்திருந்தான்..
அதை வைத்து தான் அவள் வீட்டு தேவை அவர்களுக்கான தேவைகளை பார்த்து வந்தாள்..
அவன் வந்த பின்னும் அந்த பழக்கத்தை கடைப்பிடித்தான்..
அவள் தன்னிடம் பணம் என்று வந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் முன்பு போன்று அவள் கணக்கில் பணம் போட்டு விடுவான்..
அவள் கிழமைக்கு ஒருமுறை வெளியே சென்று தேவையானவற்றை வாங்கி வருவாள்..
பணம் இந்த மாதம் போட்டது அவ்வளவு வேகமாக முடிந்து இருக்காது.. ஏனென்றால் அவன் மனைவி செலவாளி இல்லை.. என்று அவனுக்கு தெரியும்..
அப்படி இருக்கையில் இந்த இரவு நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் பணம் கேட்கிறாளே என்று தான் அவனுக்கு யோசனை..
இருக்கும் பணத்தை விட மேலதிக தேவை இருக்கிறதோ அதனால் கேட்கிறாளா?. இருக்கும். என்று நினைத்து காலை தருவதாக கூறினான்..
ஆனால் அவன் மனைவி சத்தம் இல்லாமல் அவனது தலையில் இடியை இறக்கினாள்..
“ இந்த இரவு நேரத்தில் எனக்கு என்ன சம்பந்தம் இல்லாத தேவை இருக்க போகுது மாமா?.. இப்ப நீங்க என்ன தொட்டதுக்கு தான் நான் பணம் கேட்கிறேன்.. அடுத்து ஓகே வானு கேட்டீங்க அதுக்கு இன்னும் பணம் அதிகமாகும்.. என்ன எனக்கு உடம்பு வலி மட்டும் தானே மிச்சம்.. முதல் முறை இப்படி ஒன்னு நடந்தது என்னை அறியாமல் நடந்துடுச்சி.. அதனால அப்ப பணம் கேட்க முடியல..
அதனால இந்த விஷயம் உங்களுக்கு இத்தனை வருஷம் தெரியாமலே போயிடுச்சு.. நான் இவ்வளவு வேணும்னு கேட்கவா?.. இல்ல நீங்களா பார்த்து என்னோட ஒத்துழைப்புக்கு இவ்வளவுதான் கொடுக்கலாமுன்னு நினைச்சு தர போறீங்களா..? ” என்றாள்..
புத்தியில் உறைப்பது போன்று நெற்றிப்போட்டில் அடித்துக் கூறினாள்.. அவன் மனைவி எதற்காக தான் பணம் கேட்கிறேன் என்று..
அவள் பேசி முடிக்கும் முன்பே அவளது கன்னம் இரண்டும் பழுத்தது..
அடி ஒன்றும் இடிப்போல போர்சாக விழுந்தது..
இந்த ஐந்து வருடத்தில் மதி ஒரு போதும் அவன் மனைவியை பார்க்காத அவதாரத்தை எடுத்தாள் வள்ளி..
வள்ளி அமைதியானவள்.. அதிகம் பேச மாட்டாள்.. அன்பானவள்.. என்று அவன் நினைத்திருக்க அவள் வெடிக்க ஆரம்பித்தாள்..