“ அடி அடி டா.. நல்லா இன்னும் அடி.. ஏன் நிறுத்திட்ட..? அடி அடி டாஆஆஆ.. ஒரு நாள் நான் பணம் குடுன்னு கேட்டதுக்கு உனக்கு வலிக்குதே இப்படித்தானே கல்யாணம் கட்டின 18 வருடமா எங்க அம்மா ஒவ்வொரு நாளும் வலியில் செத்து செத்து பொழச்சிருப்பாங்க..
அந்த ஆள் ஏன் எங்க அம்மாவ பார்த்து கல்யாணம் கட்டிப் போனான்..? ஏன் அவ்வளவு கொடுமை படுத்தினான்?.. எதுவுமே எனக்கும் எங்க அம்மாவுக்கும் தெரியாது… நாங்க என்ன பாவம் பண்ணினோம் என்று கூட தெரியாது..
அந்தாளுக்கும் தாத்தாவுக்கும் அதாவது உங்க அப்பாவுக்கும் எதுவும் முன் பகை இருந்துதா?.. அதனால எங்க அம்மாவ கட்டாய கல்யாணம் பண்ணி இவ்வளவு டார்ச்சர் பண்ணினானா?.. அதுவும் தெரியாது..
எங்க அம்மாவ அந்த ஆள் கல்யாணம் பண்ணும் போது நீ சின்ன ஆளா இருக்கலாம்.. உங்க அப்பா இருந்தார் தானே.. அவங்க வளர்த்த மகள் திடீரென்று ஒருத்தனை புடிச்சிருக்கு அவனை நான் கல்யாணம் கட்ட போறேன்னு சொன்னா எக்கேடும் கெட்டுப் போகட்டும்னு விட்டுடுவீங்களா?..
எங்க அம்மாவோட குணம் என்ன?.. எங்க அம்மா உங்க வீட்ல எப்படி இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியாதா?.. எப்படி முன்ன பின்ன யாருன்னு தெரியாத ஒரு ஆளு எங்க அம்மா புடிச்சிருக்குன்னு சொல்லும்போது நீங்க நம்புவீங்க?….
அதுக்கு முதல் அவங்க ரெண்டு பேரும் எங்கேயும் பார்த்துக் கொண்டதை நீங்க பார்த்தீங்களா?.. இல்ல பேசிக்கிட்டதை நீங்க பார்த்தீங்களா?.. சொல்லு என்ன கல்லு மாதிரி இருக்க சொல்லுடா வாயை திறந்து பேசு.. ” என்று
அவன் மார்பில் அடித்து அவனை போட்டு உலுக்கி எடுத்தாள்..
அவள் மனதில் இருந்து அழுத்தம் அனைத்து பாரத்தையும் இறக்கி வைக்கட்டும் என்று அவன் பேசாமல் அமைதியாக இருந்தான்..
அவனிடம் அவள் கேள்விக்கு பதில் இல்லை.. அமைதியாக இருக்கிறான்.. என்பதை தெரிந்ததும் காட்டாற்று வெள்ளம் போல் மனதில் இருப்பதை கோபத்தோடு கொட்ட ஆரம்பித்தாள்
“ நீ எப்படி பேசுவ?.. அதுதான் நீ இப்ப அமைதியா இருக்கும்போதே தெரியுது.. எங்க அம்மா இங்க இருந்து போனது உனக்கு சந்தோசம் போல.. சொத்து மொத்தமும் பாகம் பிரிக்காமல் உனக்கு வரும்னு தானே நீ எங்க அம்மாவை இதுவரைக்கும் கண்டுக்காம இருந்த..
நீ அந்த ஆளால் வெறும் ஆறு வருஷம் தான் சிறையில் இருந்த.. ஆனா நான் 17 வருஷம்.. எங்க அம்மா 18 வருஷம் ஆயுள் தண்டனை மாதிரி நாங்க அத்தனை வருஷம் நாலு சுவத்துக்குள்ள சிறையில் தான் இருந்தோம்..
எனக்கு ஏதும்னா எங்க அம்மா பார்ப்பாங்க… எங்க அம்மாவுக்கு ஒண்ணுன்னா நான் பார்ப்பேன்.. அதுவும் அப்ப எனக்கு 10 வயதுக்கு மேல் விவரம் தெரிய ஆரம்பிச்சதுக்கு பிறகு தான் நான் பார்க்க ஆரம்பிச்சேன் எங்க அம்மாவை.. எங்க அம்மா உடலாலும் மனதாலும் எவ்வளவு துன்பத்தை அனுபவிச்சிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?.. வாயை திறந்து சொல்லு உனக்கு தெரியுமாடா?..
அந்தாளுக்கு தெரியாம அந்த ஆளு வீட்ல இல்லாத நேரமா நீ வந்தாவது எங்க அம்மாவோட பேசி சிரிச்சு சந்தோஷமாக வைத்து எங்க அம்மாவோட பிரச்சினையை தெரிந்து தீர்த்திருக்கலாமே…
அக்கா உனக்கு நான் இருக்கேன்.. நம்ம அப்பா இருக்கார்.. நம்ம குடும்பம் இருக்கு நீ எதுக்கும் கவலைப்படாத எங்களோட வந்துடுன்னு ஒரு வார்த்தை நீங்க யாராவது என் அம்மாவை பார்த்து சொல்லி இருந்தா அம்மா என்கூட உயிரோட இருந்து இருப்பாங்களே…
அந்த நம்பிக்கையை ஆரம்பத்தில் தாத்தாவும் கொடுக்கல.. வளர்ந்த பிறகு உனக்கு ஒரு அக்கா இருக்காங்க அவங்க எங்க இருக்காங்க?..எப்படி இருக்காங்க?.. என்று நினைப்பு உனக்கு மனசுல இல்லவும் இல்ல..
அம்மாவை நினைச்சு மனசுக்குள்ள கவலைப்பட்ட பாட்டி ஒரு வார்த்தை அவங்க உன்னிடம் சொல்லி அம்மாவை பார்க்க ஏற்பாடு பண்ணி இருக்கலாம்.. அவங்க மனசுல கவலைப்பட்டேன்னு சொல்றாங்க ஆனா அது யாருக்கும் தெரியாமலே போயிடுச்சு.. அதனால எங்க அம்மா உயிரோடு இருக்காங்களா இல்லையே..!
அவங்களும் பொண்ணு மேல பாசம் இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா அது உரிய முறையில் காட்ட வேண்டிய நேரம் காட்ட தவறிட்டாங்க..
இப்ப பொண்ணு போட்டோவ வச்சு அழுது யாருக்கு என்ன பிரியோஜனம்…
உங்க குடும்பத்துல ஒரு ஆள் ஒரு சொல் நான் இருக்கேன் நீ கவலைப்படாதே.. என்று அந்த ஒரு ஆறுதல் வார்த்தை எங்க அம்மாவுக்கு கூறி இருந்தால் அந்த துன்பக் கடல்ல இருந்து அந்த ஆள உதறி தள்ளிட்டு எங்க அம்மா வந்து இருப்பாங்க…
அந்த ஆளால் தான் பட்ட கஷ்டமும் துன்பமும் அந்த ஆள் பார்க்கிற மாப்பிள்ளையை கட்டி நான் படக்கூடாது என்று தானே எங்க அம்மா இந்த கல்யாணத்தை தடுக்குறதுக்கு வேற வழி இல்லாமலுக்கு நஞ்சு குடித்து இறந்து போனாங்க…
நீ எங்க அம்மாவை வந்து சந்திச்சுட்டு போயிருந்தா.. எனக்கு என் தம்பி இருக்கான்.. எதுனாலும் அவன் பாத்துக்குவான்.. தம்பி கிட்ட என் பொண்ணை ஒப்படைச்சா ஒன்னு அவன் கல்யாணம் பண்ணிக்குவான்.. இல்லனா நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பான்னு.. எங்க அம்மாக்கு நம்பிக்கை இருந்திருந்தால் உனக்கு தகவல் சொல்லி என்ன உன்கிட்ட ஒப்படைத்து இருப்பாங்களே.. எங்க அம்மாவும் இப்ப உயிரோட இருந்து இருப்பாங்களே…
அந்த பொறுக்கி பொறம்போக்கு நாயோட என் பொண்ணு சந்தோஷமா வாழ மாட்ட சித்திரவதை பட்டு சீரழிவான்னு நினைத்து தானே அவங்க இறப்பு தான் என்னோட வாழ்க்கை காப்பாதும்னு தவறான முடிவு எடுத்துட்டாங்க..
நீ கேட்கலாம்.. இவ்வளவு பேசுற நீ விவரம் தெரிஞ்ச போது எங்க கிட்ட வந்து சொல்லி இருக்கலாமே.. என்று ஆனா எங்க அம்மா ஒரு வார்த்தை கூட தனக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்கு தம்பி இருக்கான்னு சொல்லவே இல்லையே…
மூச்சு காத்துல கூட அந்த ஆள் உங்க குடும்பத்தை பற்றி பேச கூடாதுன்னு நினைச்சு இருக்கான் போல.. ஏன் இருக்கிற துன்பம் பத்தாது இன்னும் நம்ம துன்பத்தை விலை கொடுத்து வாங்குவான் என்று நினைத்து உங்களை பத்தி என்கிட்ட சொல்லாமலே எங்க அம்மா என்ன வளர்த்துட்டாங்க..
கேளு நல்லா காது குளிர கேளு.. என் அம்மாவோட அந்தரங்க விஷயத்த ஒரு தம்பி கிட்ட பகிர்ந்து கொள்ள கூடாது.. ஆனா நான் பட்ட துன்பத்தை என் புருஷன் கிட்ட நான் பகிர்ந்து கொள்ளலாம் தவறே இல்லை…
காலைல எழுந்து வேலை செய்வது சமைக்கிறது அந்த ஆளுக்கு செய்த எல்லா உதவிக்குமே அவன் போடுற சாப்பாடும் விதவிதமா ஊருக்காக கட்டுற கலர் கலரான பட்டு புடவைகளும்.. நகைகளும் சரிசமமா ஆயிடுமாம்…
ஒரு நாள் கல்யாணம் முடிக்கிறதுக்கு ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு 15 வயசு இருக்கும் அப்ப.. எனக்கு நைட் டைம் பீரியட் வந்திருச்சு.. என்கிட்ட விஸ்பர் அப்போ இல்ல.. அம்மா கிட்ட இருந்தா கேட்கலாம் என்று அம்மா ரூமுக்கு போனேன்.. அப்போ தான் அந்த ஆள் வந்து ஒரு பத்து நிமிஷம் இருக்கும்..
இரண்டு முறை அம்மா அம்மானு கூப்பிட்டேன்.. அவங்களுக்கு கேக்கல போல.. அதனால கதவை தட்டினேன் கதவு தன்னால திறந்துவிட்டது. உள்ள போக கால் எடுத்து வைக்கும் போது பெத்த பொண்ணு என் காதுல கேட்க கூடாத வார்த்தையை கேட்டேன்..
‘ இந்தாடி பணம் இன்னைக்கானது.. நீயும் இப்ப முதல் மாதிரி ஃபிரஷ் பீஸ் இல்லை… ரொம்ப முத்தின பீஸ் ஆயிட்ட.. நீ இப்போ எல்லாம் அவ்வளவு வெர்த் இல்லை..
இருந்தாலும் என்னோட பிரெஸ்டிஜ் என்னோட சுத்தம். ஆரோக்கியம் எல்லாம் —-சி இருக்கிற இடங்களுக்கு போய் கெட்டுப் போக கூடாதுன்னு சொல்லி தான் உன்கிட்ட வாரேன்..
இனிமே உனக்கு இந்த பணமும் கம்மியா தான் தருவேன்… நீ மரக்கட்ட மாதிரி கிடக்கிறதுக்கு எதுக்கு உனக்கு பணம்…
இனிமே இதுக்காக தனி பணம் தரணுமா?.. இல்லையான்னு நான் யோசிக்கணும்..
மத்த வேலை செய்ற மாதிரி.. எனக்கு நேரத்துக்கு ஆக்கி போடுற மாதிரி இதுவும் உன் கடமைதானே..! நான் எடுத்துக் கொடுக்கிற புடவை நகையை உடுத்திட்டு இந்த சொகுசான வாழ்க்கையை ஆத்தாளும் மகளும் வாழ்றதுக்கு பணம் இல்லாம தான் நீ என் கூட படுக்கணும்..
ரெடியா இரு.. குளிச்சிட்டு வரேன்..’ என்று ராவணன் கூறிவிட்டு தன் மனைவி சந்திராவின் முகத்தில் பணத்தை தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டான்…
15 வயது செண்பகவள்ளிக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.. அம்மா என்று வீடே அதிரும் படி அலறினாள்..
இத்தனை நாள் மகளுக்கு எது தெரியக்கூடாது என சந்திரா நினைத்தாரோ இன்று மகள் தெரியக்கூடாததையும் பார்க்கக்கூடாதையும் தெரிந்து கொண்டால் என்று அப்பொழுதே கொஞ்சம் இருந்த அவரது உணர்வுகளும் செத்து ஜடமாகிவிட்டார்..
அந்த 16 வருஷமும் எங்க அம்மா இப்படித்தானே ஒவ்வொரு இரவும் கஷ்டப்பட்டு கடந்து வந்திருப்பாங்க..
அன்னைக்கு என் அம்மாவை என்னால காப்பாத்த முடியல நானும் கோழையா போயிட்டேன்..
அந்த ஆள் அன்னைக்கு பேசினது நடந்துகிட்டது எல்லாம் இன்னமும் என் மனக்கண்ணுல காட்சியா ஒரு வார்த்தை மாறாமல் ஞாபகம் இருக்கு..
அடுத்த நாளிலிருந்து நான் எங்க அம்மாக்கு பக்கத்துல போயி படுத்துகிட்டேன்..
அந்தாள் எவ்வளவோ முயற்சி செஞ்சான்.. என்ன தனி ரூமுக்கு திரும்பவும் அனுப்புவதற்கு..
ஆனா எனக்கு பயமா இருக்குன்னு இல்லாத பொய் எல்லாம் சொல்லி நான் எங்க அம்மாவை தனியா விடல..
அந்த ஆளை எதிர்த்து பேசுற தைரியம் வேணும்னா எனக்கு இல்லாம இருந்திருக்கலாம்.. ஆனால் இனியும் என் அம்மா அந்த ஆளுகிட்ட சித்திரவதைப்படக்கூடாது என்று முடிவெடுத்து தான் நான் அப்படி பண்ணினேன்..
நீ யார் சொல்லி சரியா கல்யாணம் நடக்கிற இடத்துக்கு வந்தியோ எனக்கு தெரியாது.. அதை கொஞ்சம் முந்தியோ இல்ல முதல் நாளோ செய்திருந்தால் எங்க அம்மா உயிரோடு இருந்திருப்பார்களே..
எனக்கு என்னோட தாய் மாமா அதாவது நீ இருக்க.. அம்மாச்சி இருக்காங்க.. என் பொண்ணு இருக்கா.. நான் கல்யாணம் கட்டி வந்தேன்.. இது என்னோட வீடு..அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு இது என் வீடுன்னு..
இதே மாதிரி நம்பிக்கையை கொடுக்க வேண்டிய அந்த ஆளும் கொடுக்கல எங்க அம்மாவுக்கு.. நீங்களும் கொடுக்க தவறிட்டீங்க..
நீ கொஞ்சம் முந்தி வந்து இருந்தா எங்க அம்மாவை மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றி நீ என் கழுத்துல கட்டுன தாலியோட மத்த கையில எங்க அம்மாவை பொணமா தூக்காம உயிரோடு காப்பாற்றி கூட்டிட்டு வந்து இருக்கலாம்..
எனக்கு எங்க அம்மா இல்லாமலேயே போயிட்டாங்களே..
அம்மா ஒரு அரை மணி நேரம் சிரிச்சு சந்தோசமா பேசிக்கிட்டதில்லை.. அப்படி சிரித்து சந்தோஷமாக பேசிக்க கூடிய மனநிலையில் எங்க அம்மாவும் நானும் இருந்ததும் இல்லை..
அவள் மன பாரத்தை கணவன் முன் இறக்கி வைத்துக் கொண்டே காதை பொத்திக்கொண்டு அலறி கத்தினாள்..
தெரியும் இத நான் இப்ப பேசியும் செத்துப்போன எங்க அம்மா வர மாட்டாங்க.. ஆனா நீ இன்னைக்கு மல்லிகை பூ அல்வா கொடுத்து என்னோட உறவு வைக்க கேட்டதும் எனக்கு இதுதான் முதல் ஞாபகம் வந்தது..
எங்க அம்மாவே எனக்கு பொண்ணா வந்து பொறந்திருக்காங்கன்னு தான் நான் கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்.. எனக்கு இசைன்னா ரொம்ப பிடிக்கும்..
இசையை புடிக்கும்.. இசையை பிடிக்கும்.. அந்த ஆளு உயிரோட விடக்கூடாது.. அந்த ஆள் உயிரை நீ தான் எடுக்கணும்.. நீயும் நானும் எங்கம்மா பாட்டி தாத்தா எல்லாரும் அந்த ஆளால் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம். அவன் இந்த பூமியில் வாழக்கூடாது..
நீ அந்த ஆளு உயிரை எடுத்துடு.. ஒரு கொலை பண்ற அளவுக்கு தைரியம் எனக்கு இல்ல.. இருந்திருந்தால் நான் உன்கிட்ட கேட்க மாட்டேன்… நானே அந்த ஆள கொன்னு போட்டு இருப்பேன்… அந்த ஆள் உயிரோடு இருக்கக் கூடாது… அந்த ஆள் உயிரோடு இருக்கக் கூடாது.. என்று அவள் மனக் குப்பைகளை கொட்டி விட்டு மனம் அமைதி அடைய உடல் சோர்வோடு அப்படியே கண் மூடினாள்..
வள்ளியை தனது மடியில் போட்டு தலையை வருடி கொண்டே அவன் கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்தான் மதியழகன்..
தான் மட்டும் தான் அந்த ராவணனால் கஷ்டப்பட்டு இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தான்..
அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியுமே அவனுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது..
அவன் விரும்பி தான் அக்காவை திருமணம் செய்து கொண்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தான்…
வள்ளி கேட்ட எதுவுமே தவறில்லை.. அவள் பேசிய எதுவுமே குற்றம் இல்லை.. மொத்தத்தில் வளர்ந்த பின்னும் தன் அக்காவை பற்றி யோசிக்காத அவனே தவறானவன்..
அந்த ராவணனை ஒரு முறை எதிர்து இருந்தால் தன் அக்கா அவள் கூறியது போன்று இந்நேரம் தன்னுடன் இருந்திருப்பாளோ?.. என்று தான் அவன் நினைத்து கவலைப்பட்டான்…
யார் கவலைப்பட்டு இனி என்ன ஆகப்போகுது.. சந்திரா மீண்டும் உயிரோடு வருவாரா என்ன?..
வள்ளியின் சொல்லை மதித்து இராவணனின் வதம் மதியழகனின் கையால் நடக்குமா?..