இரண்டு நாட்கள் கழித்தும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தவித்தான் மதி..
இரண்டு நாட்களுக்கு முன்பு அன்று இரவு அவனது மனைவி செண்பகவள்ளி மனதில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் இறக்கி வைத்து நிம்மதியை தேடிக்கொண்டாள்..
அவள் இறுதியாக அவனிடம் கேட்டது அது மட்டும் தான்..
“ மாமா நீ என்ன வேணும்னாலும் பண்ணு.. என் அம்மா சாவுக்கும்.. என்னோட கஷ்டத்துக்கும்..உன்னோட கஷ்டத்துக்கும்.. அந்த ஆளுக்கு தண்டனை கட்டாயம் கிடைத்தே ஆகணும்… நீ அவரை கொலை கூட பண்ணு.. அதுக்காக திரும்ப ஜெயிலுக்கு கூட போ.. தவறே இல்லை… நான் உனக்கு ஃபுல் பர்மிஷன் தரேன்.. நீ என்ன வேணாலும் பண்ணு.. அந்த ஆள் சந்தோஷத்தோட நிம்மதியா வாழவே கூடாது.. முதல் கட்டமா அந்த ஆளுக்கு ஒரு துன்பத்தை நீ கொடுக்காமல் என்னோட முகத்தை பார்க்கவும் கூடாது.. என்னோட பேசவும் கூடாது.. என் பக்கத்துல நெருங்கவும் கூடாது…” என்று அவன் மனைவி கூறியதை மனதில் வைத்து தீவிரமாக யோசித்தான்…
அப்படி இரண்டு பேருகும் இடையில் முரைத்துக் கொண்டிருந்த நேரம் தான் பாண்டியும் மீனாட்சியும் விருந்துக்கு வந்து சென்றார்கள்…
எப்போது முதன்முதலாக அவளை தொட்டானோ அப்போது இருந்து அவள் மீது ஒரு அக்கா மகள் என்னும் பாசத்தையும் தாண்டி ஒரு காதல் அவனுள் உருவாகியது..
ஆனால் அதைக் காட்டி காதலில் திளைக்க அவனுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை..
மனைவியே அவனிடம் முதல் முதலாக ஒன்றை கேட்டு விட்டாள்.. இனி அதை செய்யாமல் இருப்பானா என்ன?..
அவர்களுக்கு இடையே இருவரும் முரைத்து கொண்டிருக்கும் இந்த அழகிய ஊடலும் அழகாகத் தான் இருந்தது..
ஊடல் முடிவில் நடைபெறும் கூடல் அழகோ அழகு..
மனைவியின் பேச்சை மதித்து மதி மாமனருக்கு முதல் படியாகவே சிறப்பான சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மனைவியின் அந்த அழகான ஊடல் உடன் கூடிய கூடலுக்காக காத்திருக்கிறான்..
அவள் பட்ட துன்பங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டோம்… தனக்காக இனி அவள் எதுவும் கஷ்டப்படத் தேவையில்லை.. நேரத்தோடு எழுந்து ஐந்து மணிக்கு ஃகாபி குடிக்கும் பழக்கத்தையும் மனைவிக்கு இனி கஷ்டம் தரக்கூடாது என நினைத்து தவிர்க்க வேண்டும் என அவன் நினைக்க அதற்கு அவன் மனைவி விடவில்லை..
காலையில் எழுந்து அவள் அதை செய்து பழகிவிட்டது.. இனி அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.. இனி தான் கணவன் மீது பயமில்லாமல் சந்தோஷமாக விரும்பி செய்வேன்.. என கூறி தடுத்து விட்டாள்..
இனி காபி கொடுக்க ஒரு நிமிடமோ ஐந்து நிமிடமோ தாமதித்தாலும் தன் கணவனுக்கு அவள் பயப்படத் தேவையில்லை..
காலை ஐந்து மணிக்கு கொடுக்கும் காபி இனி அவர்களுக்கு இடையே அழகான காதலை வெளிப்படுத்தும்..
இதோ இரண்டு நாட்கள் ஆகிவிட்டது அவன் மனைவி கேட்டு இன்னும் ஒரு சரியான ஐடியா அவனுக்கு வரவில்லை..
மாலையில் அன்போடு அவன் வீட்டுக்கு செல்லும் போது மகளிடம் கேட்பது போன்று ஜாடை மாடையாக அவனிடம் கேட்பாள்… எதுவும் காரியம் முடிந்ததா?.. என்று அவனும் இரண்டு நாட்களாக இல்லை என்று பதில் வாயால் கூறாமல் தலையை அசைத்து விட்டு சென்று விடுவான்..
மூன்றாவது நாள் இன்றும் அப்படி தலை அசைத்து செல்ல அவனுக்கு விருப்பம் இல்லை.. மனைவிக்கு காரியத்தை முடித்து விட்டேன் என்று பதில் கூற வேண்டும.. என்று ஆசை அவனை பாடாய் படுத்தியது..
முதலில் இன்ஸ்பெக்டராக இருந்த போது அவ்வளவு ஆட்டம் காட்டிய ராவணன் தற்போது அசிஸ்டன்ட் கமிஷனர் ஆகிவிட்டான்… அதனால் அவனை ஒன்றும் யாரும் புடுங்க முடியாது என்று நினைப்பில் ஆடுகிறான்.. அதை முதலில் தகர்த்தெறிய வேண்டும்…
கமிஷனர் எவ்வளவுதான் அவர் பார்க்கும் புனிதமான போலீஸ் வேலைக்கு பணத்துக்காக துரோகம் செய்தாலும் . மனைவி பிள்ளைகள் மற்றும் தங்கை குடும்பம் என வரும் போது உண்மையான கணவனாகவும் தந்தையாகவும் தான் இருந்திருக்கிறார்..
அப்படி இருக்கும் போது ஏன் உண்மையான அண்ணனாக இருக்கக் கூடாது என்று அவனுக்கு தோன்றியது..
சமீப காலமாக ஒரு நியூஸ் பரவி வந்தது..
மகள் காதலிக்கிறாள் என்று அறிந்ததும் கமிஷனர் சந்தோஷமாகவே திருமணம் செய்து வைத்தார்..
மகள் மற்றும் மாப்பிளைக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவன் மகளை கைநீட்டி அடிக்கும் நேரத்தில் கமிஷனர் மகளை பார்க்க சென்று விட்டார்..
அவர் ஆசை மகள் அடி வாங்குவதை பார்த்ததும் அவர் தந்தை பாசம் மேலோங்க ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்றும் மறந்து மாப்பிள்ளையை ரோட்டுக்கு இழுத்து அடித்து புரட்டி எடுத்துவிட்டார்..
அதை யாரோ வீடியோ எடுத்து நியூஸ் சேனல் ஏனய ஊடகங்கள் என போட்டு அது வைரல் ஆகியது..
அதைப் பார்த்து குடும்ப பிரச்சனையை தொழிலில் இணைக்க கூடாது என டிஎஸ்பி கமிஷனரை எச்சரிக்கை பண்ணிவிட்டார்..
இதே பார்முலாவை ஏன் தான் எடுத்து சக்ஸஸ் ஃபுல்லாக முடிக்க கூடாது என திட்டம் தற்போது மதிக்கு தோன்றியது..
அதற்கு முதல் திட்டமாக ராவணனின் மனைவியை அவன் சந்தித்து தனியாக பேச வேண்டும்..
இன்று வெள்ளிக்கிழமை அவர் மாலை நேரத்தில் இராவணனின் அனுமதியோடு கோவிலுக்கு வருவார.. என்பதை தெரிந்து கொண்டவன் அங்கு வைத்து அவரை சந்தித்து நடந்த அனைத்தையும் அவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைத்தான்..
இதோ அவன் நினைத்தது போன்று இராவணன் அறியாமல் மனைவியை சந்திக்க முடிவு செய்து விட்டான்..
எல்லா நேரங்களிலும் அனைவரும் தோற்றுப் போக மாட்டார்கள்..
என்று மனைவியின் மனதை புரிந்து கொண்டு அவளை சந்தோசமாக வைத்து அவளோடு ஒத்துப்போய் வாழ வேண்டும் என தீர்மானித்தானோ அன்றே அவனது வெற்றிக்கான படிக்கட்டு அமைந்துவிட்டது..
சரியாக பூஜை நேரம் முடிந்ததும் நிர்மலா முன் போய் நின்றான் மதி..
அன்று கடையில் அவனை பார்த்தது ஆனால் அவன் அவர்களுக்கு உறவா இல்லை கணவனுக்கு தெரிந்தவனா?. அவன் யார் என்று தெரியாமல் பார்த்து நின்றாள்..
“ ஹலோ நான் மதியழகன்.. ஒரு வகையில் பார்த்தா அந்த நாய் அதுதான் இப்ப உங்க புருஷன் அந்த கேடுகெட்ட ராவணன்.. அவன் எனக்கு மாமனார் நீங்க அக்கா முறை ஆகணும்..
அந்த ஆளைப் பற்றி உங்களுக்கு என்ன விவரம் தெரியும்.. அவன் எது சொன்னான்.. எதை மறைச்சானு எனக்கு தெரியாது.. நான் பார்த்தது தெரிஞ்சுகிட்டது அனுபவப்பட்டது என்று எல்லாத்தையுமே அந்த ஆள பத்தி சொல்றேன் கேட்டுக் கொள்ளுங்க.. என்னோட சொந்த அக்கா சந்திரா மாதிரி உங்களையும் நான் அக்காவாத்தான் நினைக்கிறேன்.. உங்களுக்கு நல்லதுக்கு தான் சொல்றேன்.. நான் சொல்ல வர்றதை நீங்க நல்லபடியா புரிஞ்சுகிட்டு நல்லாதா எடுத்துகிட்டா.. நீங்க வர்ற காலத்துல சந்தோசமா இருப்பீங்க.. நீ யாரு என் புருஷன பத்தி பேசுறதுக்குன்னு நினைச்சீங்கன்னா அதுக்கு பிறகு நீங்க பட போற கஷ்டத்தை யார் வந்தாலும் தடுக்க முடியாது பார்த்துக்கோங்க.. ” அதுக்கு முன்னெச்சரிக்கை செய்துவிட்டு நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்றும் மறைக்காமல் கூறினான்..
அவன் கூறிய பின்பு தான் அவளுக்கு அனைத்து உண்மைகளும் தெரியவந்தது. அதைக் கேட்டு அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார் நிர்மலா..
“ இப்ப ஷாக் ஆகி என்ன பிரயோஜனம்.. நீங்க கல்யாணம் முடிச்சு வாழ்ந்து ஒரு பிள்ளையும் பெத்துட்டீங்க.. ஆனால் அந்த ஆள பத்தி உண்மை எதுவுமே தெரியாம இவ்ளோ காலமா இருந்துட்டீங்க.. இனி சுதாரிப்பா இருந்தீங்கன்னா பொழைச்சுக்குவீங்க.. என் மேலயும் தவறு இருக்கு.. நான் கொஞ்சம் முன்னாடி போயிருந்தேன் எங்க அக்காவ காப்பாத்திருக்கலாம்.. ஆனா என்ன செய்யறது தெரியாம போயிடுச்சு.. அந்த ஆள் எங்க அக்காவை இவ்வளவு கொடுமை படுத்தியது.. சரி போனது போயிடுச்சு நீங்களும் ஒரு அக்கா மாதிரி அதனால உன்ங்க உயிரையும் காப்பாற்றிக் கொள்றதுக்கு இது உங்களுக்கு ஒரு உதவியாக அமையட்டும்.. இனியாவது கவனமா இருங்க.. இவ்வளவு நேரமா நான் உங்களோட பேசினதை யாரும் பார்த்துட்டு அந்த ஆளுக்கு சொன்னா அதுவும் உங்களுக்கு ஒரு பிரச்சனையா வந்து சேரும்.. நான் கிளம்புறேன் ஈவினிங் உங்க வீட்டுல ஒரு சம்பவம் இருக்கு.. அதுக்கு நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணினா உங்க வாழ்க்கைக்கு ஒரு விடிவு வரும்னு நான் நம்புறேன்.. நான் சொல்ற மாதிரி பண்ணுவீங்களா?.. அப்ப உங்க கணவர் பத்தி உங்களுக்கு முழுசா தெரியவரும்.. ” என்றான் மதி..
“ அவரோட மூத்த சம்சாரம் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போயிட்டாங்கன்னு தான் சொன்னாரர்… பொண்ணுக்கு என் அண்ணன் மகன பேசினதாம். ஆனா அவங்க பொண்ணு அவனை புடிக்காம ஓடி போயிட்டதாவும் அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் மனைவி இறந்து போயிட்டதாகவும் மனைவியும் இல்லாமல் மகளும் இல்லாமல் தனித்து இருக்கிறதால தான் என்ன புடிச்சு போய் கல்யாணம் பண்ணிக்க கேட்டதாகவும் தான் என்கிட்ட அண்ணனும் சொன்னார்.. சரி நம்மளும் கணவர் இல்லாமல் ஒரு புள்ளைய வச்சுக்கிட்டு இருக்கோம்னு சொல்லி தான் நானும் கல்யாணத்துக்கு சம்பாதிச்சேன்.. ஆனா இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்குறது. நீங்க சொல்லித்தான் தம்பி எனக்கு தெரியும்.. நானும் இவர் செய்த கொடுமைகள் எல்லாம் பொறுத்து போனதுக்கு ஒரே காரணம் எவ்வளவு காலத்துக்கு தான் அண்ணனுக்கு பாரமா இருக்கிறது.. ஊர்ல கணவன் இல்லாமல் தனித்து இருந்து வரப்போற அவ பேர் சந்திப்பதற்கு கணவனோடு இருந்து கணவன் தரும் சின்ன சின்ன டார்ச்சர் வலியே தாங்கிக் கொள்ளலாம்.. என்ற முடிவுக்கு தான் நான் வந்தேன்.. இப்படி சொந்த மனைவிய கொல்ல முயற்சி செய்து மகள் குடும்பத்துக்கு இப்படி துரோகம் செய்தவர் நாளைக்கு என்னை என்ன வேணும்னாலும் செய்வார்.. ஒன்னு நான் அண்ணனோட இருக்கணும்.. இல்ல தனியா இருக்கணும்.. ஆனா முதல் நான் என் பிள்ளைகளுக்காக உசுரோட இருக்கணும்.. தம்பி நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.. ” என்றார் நிர்மலா..
அவர் சொன்னதைக் கேட்டு அவருக்கு சிறு ஆறுதல் கூறிவிட்டு மாலை அவன் அவருக்கு அலைபேசியில் அழைத்து செய்ய வேண்டியதை கூறுவதாகவும் அப்பொழுது அவன் சொன்னபடி செய்து வைக்கும் படியும் கூறிவிட்டு யாரும் பார்க்கும் முன்பு அங்கிருந்து சென்று விட்டான்…
அங்கிருந்து நேரடியாக கடைக்கு வந்து
தனி அறைக்கு சென்று அவன் கைப்பேசியில் ஓர் அழைப்பு விடுத்தான்..
“ ஹலோ தலைவரே நான் மதி பேசுறேன்.. எப்படி போகுது அரசியல் வாழ்கை.. “
“ அடடேய்.. மதி பையா.. நான் நலம் நீ என்ன பண்ணுது.. உன்னால மீண்டும் நான் கட்சி தலைவர் பதவிக்கு வந்து இருக்கேன்.. சூப்பரா போகுது பையா.. நீ எனக்கு முன்னாடி ஜெயில் இருந்து போயிட்ட இப்பதான் என் நினைவு வந்ததா?.. நான் என்ன வேலை பண்ணனும் பையாவுக்கு?… ” என்றார் எதிர்க்கட்சி மூத்த தலைவர்..
பொய் கேஸில் அவர் சிறை வந்தபோது அவருக்கு அனைத்து விதத்திலும் மதி தான் உதவியாக இருந்தான்..
அதில் தான் இருவருக்கும் குடும்ப விஷயம் பேசும் அளவிற்கு நெருக்கம் ஏற்பட்டது..
“ என்ன அங்கிள் உங்க புத்தி கூர்மைய என் கிட்டயே அழகா காட்டுறீங்க.. நான் ஏதாவது ஒரு தேவைக்கு தான் கால் பண்ணி இருப்பேன்னு கரெக்ட்டா சொல்றீங்க?.. இவ்வளவு அறிவாளியா இருந்தும் ஏன் அங்கிள் நீங்க அவங்க கிட்ட இருந்து பயந்து ஒதுங்கி போய் இருக்கீங்க?.. உங்களோட பயம் உங்களுக்கு தேவையில்லாதது.. உங்க தைரியமும் பலமும் உங்களுக்கு தெரியல.. சரி அதை அப்புறம் பார்ப்போம்.. இப்ப திரும்பவும் கட்சித்தலைவர் ஆயிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. இனி தொடர்ந்து நல்லதே நடக்கும்.. என் மாம்ஸ் அதான் ஏசிபி ராவணன் சார் இருக்கிறார் இல்ல.. அவருக்கு இன்னைக்கு சிறந்த ஆப்பு ஒன்னு வைக்கணும் அங்கிள்.. நீங்க உங்க தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் பலத்த வச்சி நான் சொல்ற இடத்துக்கு அவரை வரவழைக்கணும்.. அதே மாதிரி ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கமிஷனர் சாரையும் அங்க வரவழைக்கணும்.. என்ன அங்கிள் சைலன்டா இருக்கீங்க முடியுமா?.. “
“ அடடே..! என்னப்பா.. நீ கேட்டு நான் ஒன்னு செய்ய முடியாதுன்னு சொல்லுவனா என்ன?.. உன் வாழ்க்கை இனி சந்தோஷமா அமைவதற்கு எப்பவும் எந்த நேரத்திலும் என்ன உதவினாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்.. இது என்ன பெரிய விஷயமா?.. சப்ப மேட்டர்.. நான் பண்ணிட்டு உனக்கு திரும்ப கால் பண்றேன்.. நீ உன் சைட்ல எல்லாத்தையும் ரெடியா வச்சுக்கோ.. ஓகே ஆல் தி பெஸ்ட்.. ஹேப்பியா லைஃப் நல்லா என்ஜோய் பண்ணு மதி பையா.. ” என்று கூறி அவர் அழைப்பை துண்டித்தார்..
அதன் பின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டு விட்டு காய் நகர்த்த ஆரம்பித்தான் மதியழகன்..
ராவணனுக்கு ராகு காலம் ஆரம்பித்துவிட்டது..
மனைவி எதிர்பார்த்ததை செய்து நல்ல கணவனாக சந்தோஷமாக வாழ்வானா?..
இல்லை இன்னுமும் அவன் வாழ்வில் சிக்கல்களை சேர்த்து வைத்து கொள்வானா?.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..