விமான நிலையத்திற்கு வந்து அனைத்து செக்கிங் வேலையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்ததும் கைபேசியை பார்த்திருந்தான் பாண்டி..
மனைவியின் கைபேசி எண்ணை அழுத்துவதும் மீண்டும் அதை துண்டிப்பதுமாக இருந்தான்.. அழைத்துப் பேச மனம் துடித்தது ஆனால் பேசினால் அவளை விட்டு செல்ல மனம் வராது..
அந்த காரணத்தினால் அலைபேசியை எடுப்பதும் கையில் அதை மீண்டும் வைப்பதுமாகவே சற்று நேரத்தை கடத்தினான்..
அப்படியே அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது..
எட்டு வருடங்களுக்கு முன்பு.
குடும்பத்தோடு செந்தூரபாண்டியும் அதேபோன்று மீனாட்சியும் அவள் குடும்பத்தோடு அந்த கோயிலுக்கு வந்திருந்தார்கள் திருவிழாவிற்கு..
எட்டு வருடம் என்பதால் மீனாக்கு 11 வயது ஆரம்பித்த நேரம்..
சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் தத்தமது வேலைகளை பார்த்து கோவில் திருவிழாவை சந்தோசமாக கொண்டாடி கடைவீதிகள் என சுற்றித்திரிந்த நேரம்..
பாண்டியும் தங்கைகளை அழைத்துக் கொண்டு அவனுக்கு கிடைத்த சம்பளத்தில் அவர்களுக்கு தேவையான கிளிப் பொட்டு வளையல்கள் என வாங்கி கொடுக்க கடை வீதிக்கு அழைத்துச் சென்றான்..
அப்பொழுது நான்கு சிறுவர்களுக்கு நடுவே மீனாட்சி அழுது கொண்டு நின்றாள்..
தங்கைகளை ஒரு கடையில் கவனமாக நிற்கும்படி கூறிவிட்டு அவன் அங்கே சென்றான்..
இமைகள் கண்ணீரில் நனைந்து கண்களை அழகாக விரித்து உதடு வளைத்து மூக்கை உறிஞ்சி பட்டு பாவாடை சட்டையில் அழகோவியமாக அவன் கண்ணுக்கு தெரிந்து மனதில் ஆழமாக அக்காட்சியிலேயே பதிந்து விட்டாள்..
“ மீனா பொண்ணு மீனா பொண்ணு மாசியில் பார்த்தா மாறா பொண்ணு..” அந்த சிறுவர்கள் ஒத்த வயதை கொண்டவர்கள் அவளுடன் படிப்பவர்கள்.. அவளை பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.. அதில் தான் பயந்து மீனாட்சி அழுது கொண்டிருந்தாள்..
பல அபிநயங்கள் பிடிக்கும் அந்த கண்ணில் கண்ணீரை பார்க்க ஏதோ மனதிற்கு ஒவ்வாமல் இருந்தது பாண்டிக்கு..
அங்கே சென்று அந்த சிறுவர்களை அவளிடம் இருந்து விலக்கி அனுப்பிவிட்டு அவளிடம் பேச்சு கொடுத்தான்..
“ யார் பாப்பா நீ?.. எந்த ஊர்?.. யார் கூட வந்த?..” என அவன் அன்பாக அவளிடம் கேள்வி கேட்க அவளோ அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்..
இந்த நான்கு சிறுவர்களும் எப்பொழுதும் மீனாட்சியை ஏதாவது ஒரு பாட்டு பாடியோ ஏதாவது ஒன்றை சொல்லியோ சீண்டிக்கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்களை கண்டால் அவளுக்கு கொஞ்சம் பயம்..
பாண்டி வந்து அவர்களை கலைத்து அனுப்பிவிட்டு அன்பாக விசாரிக்கவும் அவன் தன்னை எதுவும் செய்ய மாட்டான் என்று நினைத்தாலோ பாவை அவனுக்கு பதில் கூறாமல் நன்றியும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டாள்..
அவள் ஓடியதை பார்த்து சிரித்துவிட்டு தங்கைகள் நின்ற இடத்தில் வந்து சேர்ந்தான் பாண்டி..
அவன் கையில் தங்கைகளுக்கு எனக் கொண்டு வந்த காசில் அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு தாயின் அருகே அவர்களை விட்டுவிட்டு மீண்டும் கடைவீதி சுற்ற அவன் சென்று விட்டான்..
நேரம் மாலை 6 மணி தாண்டி நன்கு இருட்டிவிட்டது..
கடைவீதிகள் சுற்றி திரியும் போது ஒரு மரத்தின் பின் அழுகுரல் கேட்க அங்கே சென்றான்..
காலையில் அவன் பார்த்த அதே பச்சைக்கிளி..
ஆனால் தற்பொழுது அவளை சுற்றி யாரும் இல்லை ஏன் அழுகிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை..
மரத்தின் பின் கீழே அமர்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்..
அவள் தான் அவன் இளமனதை திருடிவிட்டாலே அதனால் அவள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்து மீண்டும் அருகே சென்று என்னவென்று கேட்டான்..
“ ஏன் பாப்பா அழுகுற?.. யாரும் திட்டி அல்லது அடிச்சு போட்டாங்களா?.. என்கூட வா.. உன் அம்மா கிட்ட கொண்டு போய் விடுறேன்… உங்க அம்மா யாருன்னு காட்டு.. யார் உன்னை அடிச்சது சொல்லு அவங்கள நான் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.. ” என்றான்..
அவளுக்கு வயிற்று வலி உயிர் போனது.. அவள் எங்கே அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல அழுது கொண்டே இருந்தாள்..
முன்று தங்கைகளுடன் பிறந்திருந்தாலும் தங்கைகளுக்கு வரும் இயற்கை உபாதைகளை அவன் என்றும் தெரிந்து கொண்டதில்லை.. அதை தெரிந்து கொள்ளும்படி சூழ்நிலையும் அவனுக்கு அமைந்ததில்லை..
கோவிலுக்கு வந்த இடத்தில் மீனாட்சி பருவம் அடைந்து விட்டாள்.. அவளுக்கும் அதை பற்றி விளக்கம் தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்.. அவனுக்கும் ஏன் அழுகிறாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை..
பெண்களுக்கு பருவம் அடையும் பொழுது இருக்கும் பயம் வலி.. அதைப் பற்றிய சரியான தெளிவு இன்மை என அனைத்தும் சேர்ந்து மீனாட்சியை ஒரு வழியாக்கியது..
அவன் பல வழிகளில் ஏன் அழுகிறாள் என்று கேட்டு விட்டான் ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..
அவளை இந்த சூழ்நிலையில் தனியே விட்டு செல்லவும் மனம் இல்லாமல் அவள் பதிலும் சொல்லாமல் இருக்கவும் சற்று தள்ளி அவளை பார்த்துக்கொண்டு அவனும் நின்றிருந்தான்..
அவளுக்கும் வலி ஓரளவுக்கு மட்டு பட்டு இருக்க தாயிடம் சென்று விடலாம் என அவள் எழும் போது தான் அவள் உடையில் இருந்த கரையைப் பார்த்தான்..
அப்பொழுதுதான் அவனுக்கும் அப்படி இருக்குமோ என சிறு பொறி தோன்றியது..
அவளுக்கு அருகில் வந்து அவன் வேட்டியில் இடுப்பை சுற்றி கட்டி இருந்த சால்வை எடுத்து அவளுக்கு கொடுத்தான் அவள் கரையைக் காட்டி அதை மறைத்து கட்டும்படி..
அவளும் அதை குனிந்து பார்த்து ரத்தக்கரை பட்டிருப்பது பார்த்து இன்னும் பயந்து கே வி கே வி அழுதாள்..
இப்பொழுது தானே 11 வயது அவளுக்கு..
சில பெண்கள் 12 13 15 என வயது வித்தியாசங்களில் சடங்காவார்கள்… அதனால் இந்த சிறு வயதில் பக்குவம் இல்லாததால் மீனாட்சிக்கு அவரது தாய் கோமதி அதைபற்றி சொல்லிக் கொடுக்கவில்லை..
அவளுக்கு அதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை..
அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை அழைத்து “ அக்கா இந்த பாப்பா ரொம்ப நேரமா அழுதுட்டே இருக்கு கொஞ்சம் என்னன்னு வந்து பாருங்களேன்.. ” என்று கூறிவிட்டு அவர்களை விட்டு சற்று தள்ளி நின்றான்..
அவரும் அவள் தோற்றம் என அனைத்தையும் பார்த்து அந்தப் பெண்ணும் புரிந்துகொண்டார்.. அவள் கோவிலுக்கு வந்த இடத்தில் சடங்காகி இருப்பதை..
கோவில் இறுதி திருவிழா நாள் இன்று மாலை நேரம் நெருங்கி விட்டது.. இப்போது அவளை எப்படி அழைத்துச் செல்வது என தெரியாமல் ஒரு நிமிடம் தவித்து விட்டு சற்று தள்ளி அவன் நிற்பதை பார்த்து அவனை அழைத்து “ ஏப்பா தம்பி இந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா?.. “
“ இல்ல க்கா.. “
“ சரி அப்போ நீ கொஞ்சம் துணைக்கு இங்கே நில்லு நான் வரும்வரைக்கும் எங்கேயும் போயிடாத நான் போய் ஆளுங்களை கூட்டிட்டு வரேன்.. “
என்று அந்தப் பெண் கூறிவிட்டு அங்கிருந்து செல்லவும் அவன் முன்பு நின்ற இடத்தில் போய் நின்றான்..
அவன் தாய் வீட்டிற்கு செல்ல நேரம் போவதால் அவனை காணவில்லை எங்கோ சென்று ஊர் சுத்த சென்று விட்டான் என்று மகனை பற்றி வசவு பாடிக்கொண்டிருந்தார்..
அறிவிக்கும் இடத்திற்கு சென்று 11 வயது மீனாட்சியின் தாய் எங்கிருந்தாலும் வரவும் என கூறி அறிவிக்க சொன்னார்..
உடனே மகளை காணவில்லை என தேடிக் கொண்டிருந்த மீனாட்சி தாய் கோமதி பாட்டி மற்றும் அன்பு என அனைவரும் அங்கே சென்றனர்..
சற்று தள்ளி நின்று அவள் யார் என தெரிந்து கொண்டதும்.. அவள் குடும்பம் வந்து அவளை அழைத்து சென்றதும் அவள் போகும் வரை பார்த்த நின்று விட்டு அவன் தாய் மற்றும் தங்கைகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்..
அவள் சடங்கானதை அவன் தான் முதலில் பார்த்தான் என்பதாலும் அவளை பார்த்த அந்த முதல் பார்வையில் அழுது நின்ற காட்சி ஆழமாக மனதில் பதிந்து போனதாலும் கட்டினால் அவளைத்தான் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவன் அன்றே தீர்மானித்து விட்டான்..
மூன்று வருடங்கள் கடந்ததும் அவன் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தான் அப்பொழுதுதான் அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..
லாரி கிளீனர் ஆக இருந்த நேரம் பாண்டி ஊருக்கு வருவது போவதும் தெரியாது.. அந்த இடைப்பட்ட மூன்று வருடமும் அவளை அவன் ஒரு முறையும் பார்த்ததில்லை..
அவளை முதல் முதலாக பார்த்த நினைவுடன் அவன் காலங்கள் சென்றது..
லைசன்ஸ் எடுத்து டாக்ஸி ஓட்ட ஆரம்பித்ததும் தான் அவன் அந்த ஊரை கடந்து போகும் போது அவளை மீண்டும் பார்த்தான்..
அன்று மாலை அவள் யார் என்ன என்பதை அனைத்தையும் தெரிந்து கொண்டான்..
அதன் பின் தினமும் அவளை தொடர்ந்து கொண்டே இருந்தான்… ஆனால் அவளுக்கு தெரியவில்லை..
அவளைத்தான் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவளுக்கு தன்னை எப்படி ஆகினும் படிக்க வைக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டான்..
ஒருவேளை அவள் படித்தவள் தான் படிக்கவில்லை என்பதால் பிடிக்கவில்லை எனக் கூறி விடுவாளோ என பயமும் அவனுக்கு இருந்தது..
அவளை தொடர்ந்ததால் அவளது குணநலங்களை தெரிந்து கொண்டவன் அவள் சட்டென முகத்துக்கு நேராக சுடு சொல் பேசும் ரகம் இல்லை என தெரிந்து கொண்டான்..
அவளது படிப்பு திறமை மெஸ் நிர்வாகிப்பது அவள் செய்யும் தோட்டம் என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தெரிந்து அவளைப் பார்த்து பூரித்து போய் இருக்கிறான்..
அவனுக்கு அவன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள எப்படியான ஒரு பெண் மனைவியாக வர வேண்டும் என நினைத்தானோ அது அனைத்தும் அவளுக்கு பொருந்தியது..
உடனே தீர்மானித்து விட்டான்.. அவளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் தன் முன் அவளை காட்டி இருக்கிறார் என்று நினைத்தான்..
அன்று அவளை மனதில் சுமந்தவன் இன்றும் அவளை அன்பாக சுமந்து கொண்டு அவன் நினைத்தபடி அவளை கைபிடித்து நல்லபடியாக அவளை சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும் என்பதனால் பல அறிவுரைகளை கூறி அவன் வீடு நரிகள் வாழும் காடு என தெரிந்தும் அவள் விருப்பதிற்காக அங்கே விட்டுவிட்டு வந்து விட்டான்..
அவளுக்கு என்னதான் நடந்தாலும் எதிர்த்து பேச மாட்டாள் என அவனுக்கு தெரியும்..
அதனால் அவனால் நிம்மதியாக வேலையும் செய்ய முடியாது என தெரியும்.. அவளை என்ன செய்வார்களோ?. ஏது செய்வார்களோ?. என நினைப்பே அவனை கொன்று தின்னும் தினமும்..
அவள் நினைவுகளுடன் பயணித்து அவன் சவுதி நாட்டிற்கும் வந்து சேர்ந்து விட்டான்..
வந்து இறங்கியதுமே அவர்களை அழைத்துச் செல்ல வந்தவர் முன் போய் வேறு ஊர்களில் இருந்தும் அவனுடன் வேலை செய்ய வந்தவர்கள் அனைவரும் அந்த கம்பெனி போர்ட் பிடித்து நின்றவர் முன்பு போய் நின்றார்கள்..
கிட்டத்தட்ட 20 பேர் இருக்கும்..
அனைவருக்கும் பாஸ்போர்ட்டையும் அங்கேயே வைத்து வாங்கிக்கொண்டு அவர்களை அழைத்துச் செல்ல வந்திருக்கும் வாகனத்தின் ஏற்றி அவர்கள் போய் சேர வேண்டிய இடத்தில் இறக்கி விட்டார்கள்..
இன்று அறையில் ஓய்வு எடுத்துவிட்டு நாளை அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை செய்ய தயாராகும் படி கூறிவிட்டு சென்றார்கள்..
முதல் மதிக்கு அழைத்து அவன் நல்லபடியாக வந்து விட்டதாக கூறி மீண்டும் அன்புக்கு அழைத்து அவன் வந்துவிட்டதாகவும் மீனாட்சியை நல்லபடியாக பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு வைத்தான்..
தற்பொழுது மீனாட்சியும் லதாவும் காலேஜ் சென்று இருப்பார்கள் என அவனுக்கு தெரியும் அதனால்..
உடனடியாக மனைவிக்கு வந்து விட்டதாக அழைத்துப் பேச முடியவில்லை என கவலையுடனே அவள் காலேஜ் முடிந்து வந்ததும் பேசலாம் என்று நினைத்து அவன் உடை எடுத்து குளிக்க சென்று மீண்டும் வரும்பொழுது அவர்களுக்கான உணவு கத்திருந்தது..
பசியும் மனைவியின் நினைவும் ஒன்று சேர அவனை வாட்டி வதைத்ததால் என்ன உணவு என்று தெரியாமலே உணவை உண்டு விட்டான்..
இந்தியாவிற்கும் சவுதி நாட்டிற்கும் நேரம் வித்தியாசப்படுவதால் இனி மாலை நேரத்தில் தான் மனைவியுடன் பேசலாம் என்பதை தெரிந்து கொண்டு பயண களைப்பினால் சற்று நேரம் உறங்குவதற்கு தயாராகினான் செந்தூரப்பாண்டி..
பாண்டி வீட்டில் மீனாட்சி அவர்களுக்கு பிடித்த உணவை செய்து கொடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு விட்டாள் என்று தான் கூற வேண்டும்..
அவளுக்கு விறகடுப்பில் சமைப்பது ஒன்றும் புதிதில்லை.. இருந்தாலும் புது இடம் குறைவான நேரம் விதவிதமான உணவு வகைகள் செய்ய வேண்டும்..
பொருட்களும் ஒழுங்காக உரிய இடத்தில் வைக்கப்படவில்லை..
ஒவ்வொன்றையும் தேடி தேடி எடுத்து செய்வதற்குள் மிகுந்த பாடுபட்டு விட்டாள்..
பாண்டியின் தாய் லட்சுமி மூன்று நேரமும் சமையலறையில் நின்று வேலை செய்தாலும் பெண் பிள்ளைகளில் யாருமே அவருக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை.. அவர்தான் உணவை எளிதாகவே செய்து கொடுத்துவிட்டு முடிந்தால் சமையலறையை சுத்தம் செய்வார் இல்லை என்றால் ஏனோதானோ என்று விட்டு விடுவார்..
நேற்று மதிய உணவை செய்து உண்டு விட்டு பாத்திரங்களை மட்டும் ஓரளவுக்கு கழுவி வைத்துவிட்டு பொருட்களை இருக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக அடுக்கி வைக்காமல் அப்படியே போட்டுவிட்டார்… அதனால் தான் மீனாட்சி சமையலறையும் ஒழுங்குப்படுத்தி உணவு வகைகளையும் செய்து தேவையான பொருட்களையும் தேடி கண்டுபிடித்து மிகுந்த கஷ்டப்பட்டு விட்டாள்..
லதாவின் உதவியுடன் ஊரளவுக்கு முடித்து அனைவருக்கும் பரிமாறி அதையும் எடுத்து துப்புரவு செய்து வைத்துவிட்டு லதாவுடன் அறைக்குள் உறங்குவதற்கு சென்றுவிட்டாள்.
ஒரு பக்கம் புது இடம் உறக்கம் வரவில்லை.. கணவனின் பிரிவு புது குடும்ப சூழ்நிலை..
தன்னால் தாக்கு பிடிக்க முடியுமா?.. என சிறு பயமும் அவளிடம் இருந்தது.. ஆனால் அதையும் மீறி தான் கணவனுக்கு எவ்விதத்திலும் அவ பெயர் எடுத்து கொடுக்க விரும்பாமல் முடிந்த அளவு போராட வேண்டும் என நினைத்துக் கொண்டாள்..
அவளும் அவன் அழைப்பான் பேசுவோம் என காத்திருந்தாள் ஆனால் அவன் அழைக்கவில்லை..
முன்பின் விமான நிலைய சட்ட திட்டங்கள் தெரியாது.. விமான நிலையத்துக்கு சென்றால் கைபேசி பாவிக்க முடியுமா?.. இல்லையா?.. என்று தெரியாது.. அதனால் அங்கிருக்கும் சூழ்நிலையை பார்த்து அவன் அழைத்தால் பேசலாம் என்ன கண்விழித்து காத்திருந்தாள்..
அவனிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்பதால் அடுத்த நாள் காலை என்ன உணவு செய்யலாம் என நினைத்துக் கொண்டே உறங்கி விட்டாள்..
காலையில் ஊரில் இருப்பது போன்றே நேரத்துடன் எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு சமையல் அறையில் சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி.. அனைவருக்கும் டீ காபி என கேட்டு அதையும் போட்டு கொடுத்து காலை உணவு மதிய உணவையும் சுத்தமாக செய்து பெண்கள் மூவருக்கும் டிபன் பாக்ஸில் உணவுகளை அடைத்து மேசையில் வைத்து விட்டு லட்சுமிக்கு ஹாட் பாக்ஸில் உணவை வைத்துவிட்டு அவள் குளித்து தயாராக லதாவின் அறைக்குள் சென்று விட்டாள்..
குளித்து தயாராகி வெளியே வந்து காலேஜ் போவதற்கு லதா வருகைக்காக பார்த்து நின்றாள்..
அப்போது தான் அவள் போட்டு வைத்த காபியை ரசித்து குடித்துக் கொண்டே லலிதாவும் லட்சுமியும் அங்கே வந்தார்கள்..
“ யாரைக் கேட்டு நீ இப்ப காலேஜுக்கு போக ரெடியாகிட்ட.. நேற்று தான் கல்யாணம் முடிச்சு இங்கே வந்த இன்னைக்கு நீங்க மினுக்கி கிட்டு கெளம்பிட்டா இங்க இருக்கிற வேலை எல்லாம் யார் பார்த்துக்குவா?.. “
“ கிச்சன் வேலை எல்லாம் முடிஞ்சு ரெண்டு நேரத்துக்கும் சேர்த்து சமைச்சு வச்சிட்டேன்.. “
“ சமைத்துவிட்டால் மட்டும் போதுமா?.. எங்க துணி துவைக்கணும்.. வீட்டை சுத்தி உள்ள இடத்தை துப்புரவு பண்ணி கூட்டி பெருக்கணும்.. இன்னும் எவ்வளவு வேலை இருக்கு.. அதெல்லாம் யார் செய்வா?.. “
“ மீனாட்சி என்ன இந்த வீட்டுக்கு வேலைக்காரியாவா வந்து இருக்கா?.. இதெல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன்.. பாத்துக்கோ அண்ணா கிட்ட கால் பண்ணி பேசிடுவேன்.. முழுக்க முழுக்க இந்த வீட்டில மீனாவ என்ன நம்பித்தான் விட்டுட்டு போயிருக்கான்.. நேற்று இரவு இவ கேஸ் கனெக்சன் பிடுங்கி விடுறா?.. இன்னைக்கு காலைல அவ சரியான மருமகளா எல்லாத்தையும் முடிச்சிட்டு போகும்போது நீ காலேஜுக்கு போக வேணாம்னு சொல்ற.. எல்லாம் வீடியோவா எடுத்து ஆதாரமா அண்ணாவுக்கு அனுப்பி விட்டால் அதுக்கப்புறம் உங்க நிலைமை என்னன்னு நினைச்சுக்கோங்க ஒழுங்கா அவளை காலேஜ் போக விடுங்க.. ” என்று தாயையும் அக்காவையும் பார்த்து கூறிவிட்டு
“ மீனா அவங்க வாய பார்த்துட்டு நிக்காம சீக்கிரமா வாடி.. பஸ் போயிடும்.. ” என்று கூறி தோழியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் லதா பாண்டி..
காலேஜ் உள்ளே சென்று அவள் கணவன் நினைவோடு படிப்பில் சற்று கவனம் தப்பி.. மிஸ் கேள்வி கேட்கவும் அதற்கு பதில் கூற முடியாமல் தவித்தவள் மீண்டும் பாடத்தில் கவனம் வைக்க ஆரம்பித்தாள்..
காலேஜ் இடைவேளையின்போது மதிய உணவின்போது என கைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.. ஒரு மெசேஜ் ஆவது அழைப்பாவது கணவனிடம் இருந்து வந்திருக்கிறதா?. என்று இல்லை என்று தெரிந்ததும் லதாவிடம் ஏன் என்ன என்று கேள்வி கேட்டு அவளை ஒரு வழியாக்கினாள்…
ஒருமுறையேனும் அவன் அழைத்து மீனம்மா என்று கூறிவிட்டால் போதும் அவள் ஜீவன் சீராக துடிக்க ஆரம்பித்து விடும்..
நேரம் போகப் போக அவள் கவனம் கைபேசியிலேயே இருந்தது சற்றும் கவனம் பாடத்தில் இல்லை..
தோழியின் நிலையைப் பார்த்து மெசேஜ் மூலம் லதா அன்பு விடம் திட்டிக் கொண்டிருந்தாள்..
“ ஏங்க மீனா ரொம்ப கஷ்டப்படுறாங்க அண்ணன் நல்லபடியா போய் சேர்ந்துடுச்சுன்னு நான் சொல்ல போறேன்.. “
“ வேண்டாங்க மாப்பிள்ளை அவரே கால் பண்ணி பேசிக்கிறேன்னு சொன்னார்.. அதனாலதான் நாங்களும் அவர் பேசுனதை பாப்பா கிட்ட சொல்லலை.. நீங்களும் சொல்ல வேண்டாம்.. கொஞ்ச நேரம் அவரை தேடி தவிக்கட்டும்.. அப்பத்தான் அவர் மேல அவளுக்கும் காதல் இருப்பதை அல்லது காதல் வரும் என்பதை அவள் புரிந்து கொள்வாள்..” என அன்பு மெசேஜ் பண்ணியதை பார்த்து லதா பாண்டி பல்லை கடித்தாள்..
தோழி பரிதவிப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை..
அவன் எட்டு வருடங்களாக அவளை இதயத்தில் சுமந்து அவள் காதலுக்காக காத்திருக்கிறான்..
மீனாட்சி அவன் காதலை புரிந்து ஏற்றுக்கொண்டு அவனோட சந்தோஷமாக வாழ்வாளா?.. இல்லை அவள் அழகிய வாழ்க்கையை சிக்கல் ஆக்கிக் கொள்வாளா?..