*கனவிலே வருகிறாய்
கண்டதும் மறைகிறாய்
கண்களில் வாழ்கிறாய்
கண்ணீரில் மிதக்கிறேன்
எதற்கென்னை மறுக்கிறாய்
இதயம் வலிக்குது
எப்படி தாங்குவேன்
என்னிடம் வா
கலங்கரை வெளிச்சமும்
அணைந்து போனாலே
கடலினில் சுழலினில்
எங்கு போவேன் நான்
இணைந்த கை நழுவினால்
என்ன ஆவேன் நான்?*