பூவிதழுக்கு சொல்ல முடியாத பாரம்.. அண்ணனிடம் எதையும் காட்டாது தன் அறைக்குள் வந்து விட்டவளுக்கு, தங்கள் குடும்பத்தை வைத்து அவர் அவர் பேசுவதை கேட்க.. அவள் என்ன மாதிரி மனநிலைக்கு ஆளாகி போனாள் என்று சொல்ல முடியாத ஒரு நிலையில் தான் அவள் மனம் இருந்தது.
பூவிதழுக்கு எப்போதும் தன் வீடு தான் சொர்க்கம்.. பிரண்ஸோடு வெளியில் செல்வதை விட குடும்பத்தோடு வெளியில் செல்வதை தான் அவள் அதிகம் விரும்புவாள்..
அதே போல் தான்.. வீட்டோடு மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்பது தான் அவள் கேள்வியாக இருந்தது..
வேலையில் தனக்கு பிடித்தமான பிரெஜெக்ட் கொடுக்காததில் பேசாது வேலையை விட்டு விடலாமா என்று யோசித்து கொண்டு இருந்தாள்..
வேலையை விட கூட மூன்று மாதம் வேலை செய்த பின் தான் ரிசைன் செய்ய முடியும் என்ற ரூல்ஸ் இருக்க.. நாளையோடு அவள் வேலையில் சேர்ந்து மூன்று மாதம் முடிவடைகிறது..
யப்பா அந்த வேலைக்கு ஒரு கை எடுத்து கும்பிடு போட்டு விட்டு ரிசைன் செய்து விடலாம் என்று முடிவு செய்து வைத்து இருந்த பூவிதழ்.. இப்போது அதை மறு பரிசீலனை செய்து விட்டாள்..
வேண்டாம் செல்லலாம் என்று.. ஆனால் வேறு ஒரு வேலை தேடிக் கொள்ள வேண்டும்.. வேலையே செய்யாது முன் சொன்னதோடு இரண்டு மடங்கு சம்பளத்தை வாங்குவதில் அவள் மனசாட்சியே அவளை கேள்வி கேட்டு தாளித்து விட்டது..
அதனால் கூடிய விரைவில் புது வேலை தேடி கொள்வது என்றும்.. அது வரை இந்த வேலைக்கு செல்வது என்பதும் முடிவு எடுத்தாள்..
இங்கு அவள் வேலை செய்யும் அலுவலகத்திலோ. விக்னேஷ்.. “எதை வைத்து விக்ரா நான் ஆபிசில் பார்ட்டி வைப்பது.. பங்கஷன் என்றால் ஏதாவது ஒரு காரணம் இருக்கனும் தானே.. என்ன தான் நீ பணம் ஸ்பான்ஸர் செய்தாலும் நான் என்ன என்று காரணத்தை சொல்வது.” என்று பாவம் காலையிலேயே தன்னை வெளியில் அழைத்து..
“உன் ஆபிசில் பார்ட்டி வை.. நான் வர வேண்டும்.. நானே எத்தனை நாள் அவளை பார்ப்பது.. என்னை அவள் பார்க்க வேண்டாமா..?” என்று சொல்லி கொண்டு இருக்க.
அதற்க்கு டேனியலும் விக்ரம் பேச்சுக்கு ஒத்து ஊதிக் கொண்டு இருந்தான்..
விக்னேஷ் டேனியலிடம். “போன முறை நீ விக்ரமுக்கு இந்த அளவுக்கு சப்போர்ட் செய்யலையே.?” என்ற கேள்வியை புரம் தள்ளி விட்ட டேனியல்..
“நம்ம விக்ராவுக்கு நாம் தானே உதவி செய்யனும்..” பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டு கொண்டு இருந்தான் டேனியல்.. அதை புரிந்து கொண்டு விக்ரம் அவனை ஒரு மாதிரி பார்த்து வைத்தது எல்லாம் வேறு விசயம்..
“இல்ல விக்கி நீ என்ன காரணம் சொல்லுவியோ எனக்கு தெரியாது.. நீ ஏதாவது உங்க ஆபிசில் பார்ட்டி வைத்து தான் ஆக வேண்டும்.” என்று சொல்லி விட்டான் விக்ரம்..
காதல் என்றாலே நண்பன் தானே உதவி செய்வான்.. இங்கேயும் அது தான் நடந்தது.. அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு எல்லாம் ஒரு மெயிலை தட்டி விட்டான்..
ஒரு கம்பெனி பெயர் குறிப்பிட்டு.. இவங்க பிரஜெக்ட் நம்ம கன்பெனிக்கு கிடைத்ததை செலபரேட் செய்ய உள்ளோம்.. என்று விக்ரம் சொன்ன நாளில் விழாவுக்கு உண்டான நாளாக சொன்ன விக்னேஷ் நேரமும் மாலை என்று குறிப்பிட்டு அனுப்பி விட்டான்..
பழைய ஊழியர்கள்.. இந்த பிரஜெக்ட் ஒன்னும் அவ்வளவு பெருசு இல்லையே.. இதற்க்கு மேல் லாபம் தந்ததை எல்லாம் செலபரேட் செய்யாது இதுக்கு என்ன என்று நினைத்து கொண்டாலும் வெளியில் ஒன்றும் கூறவில்லை..
அவர்களுக்கு என்ன பணம் இருக்கிறவங்க கொண்டாட கூப்பிடுறாங்க. நம்ம கை கடிக்காத வரை ஒன்னும் பிரச்சனை கிடையாது என்று . வரவு தானே வரப்போகிறது.. பார்ட்டி என்றால் நல்ல சாப்பாடு கிப்ட் என்று ஏதாவது கொடுப்பாங்க. என்று வேலை செய்பவர்கள் மகிழ்ந்து தான் போயினர்.
பூவிதழ் புதியதாக வேலைக்கு சேர்ந்தவள் என்பதால் பழைய பிரஜெக்ட் பற்றி எல்லாம் தெரியாது.. அதனால் என்னடா இது இத்துனுண்டு பிரஜெக்ட்டை இப்படி கொண்டாடுறாங்க. வெளியில் தான் இந்த கம்பெனிக்கு பெத்த பேர்.. இதை நம்பி இதுல வந்து நான் சேர்ந்தேன் பார். என்னை சொல்லனும்.. முதல்ல ஒரு நல்ல வேலையை தேடிக் கொள்ளனும் என்று முன் எடுத்த முடிவுவை இன்னும் துரிதப்படுத்த நினைத்து கொண்டாள்..
அனைவருக்கும் ட்ரஸ் கோர்டும் வந்தது.. மஞ்சள் நிறம் என்று.. ஆ மஞ்சள் கலர் ட்ரஸ் போட்டு வந்து எல்லோரும் சாமீ ஆட வேண்டியது தான்.. என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை.. உண்மையில் அன்று விக்ரமை பார்த்து அவள் சாமீ தான் ஆட போகிறாள் என்று..
விக்ரம் பூவிதழை சந்திக்க அந்த நாளை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் இருந்தது. அன்று பூவிதழின் பிறந்த நாள்.. இருபத்தி ஒன்று முடிந்து இருபத்திரெண்டாம் வயதில் அடி எடுத்து வைக்கும் நாள்.விக்ரம் அவள் மனதிலும் தான் அடி எடுத்து வைக்கும் நாளாக அந்த நாளை தேர்வு செய்தான். பாவம் அந்த தேர்வின் முடிவு தோல்வி என்று தெரியாது.
அன்று காலையில் இருந்து விக்ரம் அவனிடம் இருந்த அனைத்து உடையையும் மெத்தை மீது போட்டு குழம்பி போய் அமர்ந்து இருந்தவனை பார்த்து கொண்டே தான் டேனியல் அவன் அறைக்குள் நுழைந்தது..
இப்போது எல்லாம் விக்ரம் வீட்டிற்க்கு டேனியலின் வரவு சகஜமாகி போனது.. சாத்வீகா தனி விட்டில் தான் இருக்கிறாள் வீடு பக்கம் என்பதால் சில சமயம் குழந்தைகளோடு அவள் வருவாள். இல்லை விக்ரம் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து விடுவான்..
அப்போது டேனியல் கண்டிப்பாக விக்ரம் வீட்டிற்க்கு வந்து விடுவான்.. இப்போது குழந்தைகள் தாய் மாமன் விக்ரமோடு டேனியலிடம் தான் மிக நெருக்கமாக இருக்கின்றனர்.
இதை பார்ப்பவர்களுக்கு தவறாக படவில்லை.. காரணம் டேனியல் சாத்வீகாவின் தம்பியின் தோழன் என்பதால், இதே அண்ணன் தோழன் என்றால் சாத்வீகா இந்த அளவுக்கு இலகுவாக பழகி இருப்பாளா…? என்பது சந்தேகம் தான்..
ஆம் சாத்வீகா டேனியலிடம் நன்றாகவே பேசுவாள்.. “சில்ரன்ஸ் உங்க கிட்ட அட்ராக் ஆகிடுறாங்க.” என்று சொல்லும் அளவுக்கு பேசுவாள்..
அதே போல் தான் டேனியலும்.. “ம் சில்ரன்ஸ் மட்டும் தானே.” என்று சிரித்து கொண்டே பதில் கொடுப்பான்.. இது போல் பேச்சுக்கள் சகஜமாக இருக்கும்.. ஆனால் பாவம் சாத்வீகா டேனியல் தன்னை விரும்ப கூடும் என்று ஒரு சின்ன சந்தேகம் கூட இல்லாததால் அவள் சாதாரணமாக பேசிக் கொண்டு இருக்கிறாள்..
இன்றும் டேனியல் வரும் போதே ஹாலில் சாத்வீகா தன் இரு குழந்தைகளோடு அமர்ந்திருந்தாள்..
டேனியல் வரும் போதே சாத்வீகா தன்னை கவனிக்கும் முன்னவே டேனியல் அவளை அடி முதல் நுனி வரை ஒரு பார்வை இட்டு முடித்து விடுவான்..
அதன் பின் தான் அருண் பார்த்து விட்டு.. “ தோஸ்த்..” என்று அழைத்து கொண்டே அவன் காலை கட்டி கொள்வான். அதன் பின் டேனியல் சாத்வீகாவை அது போல் பார்ப்பதை தவிர்த்து தன் கவனத்தை இரு குழந்தைகள் மீது மட்டுமே செலுத்துவான்.
அன்று அருண் வர அவனை பின் தொடர்ந்து ஸ்வரனும்.. மெல்ல நடந்து வந்து இன்னொரு காலை பிடித்து கொண்டு.. தோத்து..” என்று அவனும் தூக்க சொல்லி கை நீட்டுனான்.. சின்ன வாண்டுவின் வாயில் இருந்து ஸ் என்ற வார்த்தை வராது..அதனால் அவனின் அழைப்பு தோத்து தான்..
இரு குழந்தைகளையும் இரு கையில் அள்ளி கொண்டு சாத்வீகாவை நோக்கி வரும் போது டேனியல் மனதில் வேறு நினைப்பு வந்து விட.. அப்போது மட்டும் சத்வீகாவை ஒரு வித சொந்தத்தோடு பார்ப்பான்..
அதுவும் சாத்வீகா தன்னை பார்க்கும் போது சட்டென்று தன் பார்வையை மாற்றி கொள்வான். அதில் எல்லாம் டேனியல் கில்லாடி தான். பார்க்கலாம் அவனின் இந்த கில்லாடி தனம் அனைத்திலும் இருந்து சாத்வீகாவை மணம் முடித்து கொள்கிறானா என்று..
அப்படி ஹாலில் குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாட்டு காட்டி விட்டு சாத்வீகாவிடம்..
“என்னை வர சொல்லிட்டு இன்னும் அவன் ரூமில் என்ன செய்யிறான் இன்னும்..?” என்று கேட்டதற்க்கு ..
சாத்வீகா அக்கம் பக்கம் பார்த்து விட்டு தன் அருகில் வா என்று சைகை செய்த சாத்வீகாவின் அந்த தோற்றம் டேனியலுக்கு வேறு ஏதேதோ நினைக்க தூண்டியது தான்..
ஆனால் இப்போதைக்கு அதற்க்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிந்ததால், என்ன என்று கேட்க சாத்வீகாவின் பக்கம் போதிய இடை வெளி விட்டு அமர்ந்து கொண்டவனின் பார்வை அந்த இடைவெளியை தான் பார்த்து கொண்டு இருந்தது..
இந்த இடைவெளி எப்போது தங்களுக்குள் இல்லாது போகும் என்று நினைத்து..
சாத்வீகா.. “உஸ் உஸ்.” என்ற அந்த அழைப்பில் டேனியல் சிரித்து கொண்டே அவளை பார்க்க..
சாத்வீகாவிடமும் சிரிப்பு தான்.. ஆனாலும் டேனியல் சிரிப்புக்கு சாத்வீகாவின் சிரிப்புக்கும் வித்தியாசம் இருந்தது..
சாத்வீகா தன் குரலை மெல்லியதாக்கி.. “உன் பிரண்ட் ஒரு பெண்ணை லவ் பண்றான் .உனக்கு தெரியுமா.?” என்று கேட்க.
என்ன சொல்வது என்று யோசித்தான் தெரியும் தான்.. ஆனாலும் அவன் சொல்ல விரும்பவில்லை..
உன் எக்ஸ் லவ்வரோட சிஸ்டர்.. தான் அந்த பெண் என்று சொல்லி, அவளுக்கு ஒரு நிமிடமே ஆனாலுமே அந்த நியாபகம் படுத்த டேனியல் விரும்பவில்லை..
அதனால் தெரியாது என்று சொல்லி விட .. அதை சாத்வீகா நம்பவில்லை தான்.. இருந்தும் கட்டாயப்படுத்தாது.. “தெரியும்.. உனக்கு தெரியும் என்று எனக்கு தெரியும். பரவாயில்லை.. விக்ரமே சொல்லட்டும்..” என்று கூற.
டேனியலுக்கு சாத்வீகாவின் இந்த அழைப்பான உனக்கு என்ற ஒருமை அழைப்பும் பிடிக்கவில்லை..
அந்த பிடிக்கவில்லை என்பது அவள் தனக்கு மரியாதை தரவில்லை என்பதினால் இல்லை.. தன் தம்பியின் தோழன் தன்னை விட சின்னவன் என்ற எண்ணத்தினால் அழைப்பதினால் பிடிக்கவில்லை..
அதனால் அவள் பேச்சுக்கு டேனியல் அமைதியாகி விட. சாத்வீகா தான்.. “ இன்னைக்கு அந்த பெண்ணோட ஸ்பெஷல் டே போல ஐய்யா கிளம்புறார் கிளம்புகிறார் கிளம்பிட்டே இருக்கார்.. நீ போய் என்ன என்று பாரு..” என்று மேல் விக்ரம் அறையை நோக்கி கண் காட்டா.
இன்னும் இங்கு அமர்ந்து இருந்தால் இந்த பெண் தன்னை தம்பி என்று அழைத்தாலும் அழைத்து விடுவாள் என்று பயந்தே விக்ரம் அறைக்கு ஒடி வந்து விட்டான்..
அங்கு அவன் சென்ற போது பார்த்தது தான் விக்ரம் உடம்பில் டவல் மட்டுமே இடம் பிடித்து இருக்க உடற் பயிற்ச்சி செய்த அவனின் படிக்கட்டு தேகத்தை காட்டி கொண்டு கையை மோவாயின் வைத்த வாறு மெத்தையில் இருந்த தன் உடைகளையே பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்தவாறு வந்த டேனியல்..
விக்ரமிடம்.. “இப்போ உனக்கு என்ன யோசனை..?” என்று கேட்டவனிடம்..
“இதுல எந்த ட்ரஸ் ஈவினிங் போட்டு போறது என்று ஒரே குழப்பமா இருக்கு டேனி..” என்று கேட்டு விட்டு மீண்டும் மெத்தையை பார்வை இட்டான் விக்ரம்..
அவனையும் அவன் உடைகளையும் பார்த்த டேனியல்.. ஒரு ப்ளக் கோர்ட் ஷுட் எடுத்து அவனிடம் நீட்டி ..” முதல்ல இது போடு மார்னிங் ஒரு மீட்டிங் இருக்கு.. முதல்ல அதை முடிக்கலாம்.. உன்னை நம்பி நான் சென்னையில் ஒட்டல் திறக்க கோடியில் கொட்டி இருக்கேன் அதை பார்க்கலாம். அதோடு உங்க கிட்ட இருக்கிறதுல.. அப்படி என்ன வெரட்டியா இருக்கு.?
கோர்ட் ஷுட் மட்டும் தான் இருக்கு.. கலர் கலரா.? அதுலேயும் ஒரு சிலது உத்து பார்த்தா மட்டும் தான் கலர் வித்தியாசமே தெரியுது.. இதுல இவ்வளவு நேரமா அதை பார்த்துட்டு என் டைமை வேஸ்ட் செய்யிற. முக்கியமான ட்ரஸ் கோர்ட்வேர்ட் மறந்து விட்டதா..” என்று கடுப்புடன் சொன்ன டேனியல் கையில் இருந்து உடையை பரித்து அணிந்து கொண்டு வந்தவன்..
“கீழே நீ டைம் வேஸ்ட் செய்துட்டு இருந்த. அதை நான் நம்பனும்.” என்று நக்கலுடம் கேட்டாலுமே விக்ரம்..
“ டேனி நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்.. நீ இதுல சீரியஸா தானே இருக்க. ஏன்னா சாதுவோட வாழ்க்கையில் ஒரு முறை நான் செய்ததே போதும்..” என்றவனிடம் டேனியல்..
“ஒரு முறை இல்ல தோஸ்த் இரண்டு முறை..” என்று தன் விரலை காட்ட அதை பிடித்து திருகி கொண்டே..
“கேப் கிடச்சா போதுமே..” என்று இருவரும் கிண்டலும் பேசினாலும் அன்றைய மீட்டிங்கை வெற்றி கரமாக தான் முடித்தனர்..