மீட்டிங் முடியவே மதியம் மூன்றை தொட்டு விட்டது.. அந்த மீட்டிங் நடந்ததே ஒரு ஸ்டார் ஒட்டல் என்பதால் மதிய உணவை அங்கேயே இருவரும் முடித்து கொண்டனர்.
விக்னேஷ் கம்பெனி பார்ட்டிக்கு இன்னும் நான்கு மணி நேரம் இருந்தது.. மீண்டும் “விக்ரம் வீட்டுக்கு போய் கிளம்ப சரியாக இருக்கும்” என்று சொன்னவனின் பேச்சை டேனியல் ஏற்று கொள்ளவில்லை..
டேனியல் வீட்டில் என்ன வெரட்டியா ட்ரஸ் இருக்கு. இது போல பங்கஷனுக்கு போடுவது போல் இல்லை.” என்று சொன்னவன் தரம் வாய்ந்த புகழ் பெற்ற பிராண்டட் துணிக்கடைக்கு அழைத்து சென்று விக்ரமுக்கு வாங்கியதோடு அவனுக்குமே ஒன்று வாங்கி கொண்டான்..
டேனியல் தொழில் சம்மந்தமாக தானே வந்தான்.. அதனால் விழாவுக்கு போடுவது போல் அவனிடம் உடை இல்லாததால் இருவரும் ட்ரஸ் கோட் என்பதினால் ஒரே மஞ்சள் நிறத்தில் எடுத்தாலும் வித்தியாசம் தெரிவது போல் ஷல்வானியை எடுத்து கொண்டனர்..
மேல் தான் யெல்லோ. பாட்டாம் சந்தன நிறத்தில் எடுத்து கொண்டு விக்ரம் அலுவலகத்திற்க்கு வந்து தொழில் சம்மந்தமாக சிறிது வேலை பார்த்த பின் அந்த விழாவுக்கு கிளம்பினர்.
விக்ரம் இப்படி பெண் பார்ப்பது போல பர பரக்க. ஆனால் அதற்க்கு எதிர் பதமாக பூவிதழ்.. காலையில் எழும் போதே தன் பிறந்த நாளுக்கு என்று தன் அண்ணன் வாங்கி தந்த அந்த லைட் ப்ளூ கலர் சாரியை கட்ட முடியவில்லையே என்று ஒரு வித எரிச்சலோடு தான் அன்று அவளுக்கு விடிந்தது..
அந்த எரிச்சல் தொடர்வது போல் தன் அறையை விட்டு வெளியில் வந்தவளுக்கு. “சீமந்ததிற்க்கு இன்னும் மூன்று நாள் தான் இருக்கு.. அவங்க என்ன தான் பேசி இருந்தாலும், அவங்க இல்லாம செய்வது தப்பு..” என்று பெரியம்மா அண்ணனிடம் பேசிக் கொண்டு இருந்தது காதில் விழுந்தது.
முதல் போல் இருந்தால், அவளுமே பெரியம்மா பேச்சுக்கு ஒத்து ஒதி இருப்பாள் தான்.ஆனால் இப்போது.. சம்பிரதாயமாக கூட தன் தாய் மாமா வீட்டிற்க்கு ஆதரவாக அவளாள் பேச முடியவில்லை.
வீட்டில் பேச்சு எல்லாம் ஒன்னுமே இல்லை என்பது போல் தானே.. அவள் அண்ணனுடன் மாமன் வீட்டிற்க்கு சென்ற போது கேட்க நேர்ந்தது..
சொன்னது போல் அனைவரும் தங்கள் குடும்பத்தையே டார்கெட் செய்வது போல் பேசியதில் இப்போது எல்லாம் தாங்கள் ஒரு ஒட்டு உண்ணி என்று நினைத்து விட்டார்களா..? அன்று அந்த விக்ரம் கூட எங்களை வைத்து தானே என் அண்ணன் காதலை தோல்வியில் முடிய செய்தான்..
இப்போ அதே பேச்சு ஆனால் வேறு மாதிரி.. இப்போது இதனால் அண்ணனின் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்படுமா..? என்ற பயமும் எழுந்தன..
அதனால் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தாள்.. அதே அமைதி தான் பூவின் அம்மா பத்மினியிடமும்.. தன் அண்ணன் என்று தான் பேசுவதாக நினைக்க கூடாது என்று ஒரு வித தயக்கத்தோடு அவர் அமைதி காத்தார்.
சித்தார்த்.. “சீமந்ததிற்க்கு அவங்க வந்தா தான் ஆச்சின்னா. அப்போ சீமந்தமே வேண்டாம்.. சாதனாவுக்கு அடுத்த வாரம் அவங்க வீட்டில் சீமந்தம் வைக்கிறங்கலே. நம்ம சைடில் யார் யாருக்கு சொல்லனும் என்று சொல்லுங்க சொல்லி விடலாம்.. அதே போல் தான் என்ன வாங்கனும் என்று சொல்லுங்க. இன்னைக்கு நம்ம பொம்மா பர்த்டே அவளை வெளியில் கூட்டிட்டு போவேன்.. எல்லோருமே முதல்ல கோயில் பின் ஷாப்பிங். வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்துடலாம்..” என்று கட கட என்று தன் திட்டத்தை சொன்ன சித்தார்த் பக்கத்தில் அமர்ந்து இருந்து தங்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த தன் மனைவி ப்ரீத்தியிடம்..
‘நீ என்ன சொல்ற ப்ரீ..?.. உன்னால அலைய முடியும் தானே..?” அவளின் உடல் நிலையையுமே கேட்டு கொண்டான்..
“இரண்டுக்குமே. எனக்கு ஒகே தாங்க..” என்று தன் சம்மதத்தை சொல்லி விட்டாள் ப்ரீத்தி..
ப்ரீத்திக்கு தெரியும் தன் கணவன் இப்படி ஒரே அடியாக தன் அம்மா வீட்டை ஒதுக்க நினைக்கிறான் என்றால், ஏதாவது காரணம் இருக்கும்.
அதுவும் அவள் அம்மா அன்று அப்படி பேசிய பின் கூட. பெரியவர்கள் இருக்கும் போது.. அதுவும் மாமா ஒன்றும் செய்யாத போது அவரையும் அவமதித்தது போல் வந்து விட்டது தப்பு என்று பூவிதழோட தன் வீட்டிற்க்கு சென்றது.
வந்த போது தன் கணவன் முகத்தில் முன்றைய விட கோபம் என்பதை விட ஆக்ரோஷம் என்று சொன்னால் சரியாக இருக்கும். அப்படி ஒரு முகத்தோற்றத்தோடு வீடு வந்தது.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பொம்மா.. அன்று சிரிப்பு தொலைத்தவளாக மட்டும் அல்லாது இரண்டு நாளாக தன் அறையை விட்டும் வெளியில் வராது ஏதோ போல் இருந்ததிலேயே தெரிந்து கொண்டாள்.. தன் வீட்டில் ஏதோ பெரியதாக நடந்து இருக்கிறது என்று.. கணவன் ஒன்றும் சொல்லாமலேயே..
அதனால் இன்று கணவன் பேச்சு அனைத்திற்க்கும் ஒத்து கொண்டாள்..
ஆனால் பாக்யவதிக்கு தான். அது சரியாக தோன்றவில்லை.. அழுத்தி சொன்னால் சீமந்தமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறான்..
சாதனாவுக்கு மட்டுமே சீமந்தம் செய்து மருமகளுக்கு செய்யாது போனால் அது சரியாக வருமோ என்று யோசனை.
அவர் வீட்டிற்க்கு பெரியவர்.. எது என்றாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்ய முடியாதே நாளையும் யோசித்து தானே பார்க்க முடியும்..
அதனால் தான் சம்மந்தி இல்லாது நடத்துவது சரி என்று அவருக்கு படவில்லை..
பாக்யவதிக்கு ஒரு வாரமாக இதே தான் யோசனை..சித்தார்த் தான்..
“இன்னைக்கு என்னம்மா ஸ்பெஷலா செய்து இருக்கிங்க..?” என்று தங்கையின் பிறந்த நாள் மெனுவை கேட்டான்.. அனைத்துமே பொம்மாவுக்கு பிடித்த உணவாகவே இருக்க.
சரி என்றவன்.. “ஆமாம் இன்னுமா பர்த்டே பேபி எழுந்துக்கல.” என்று கேட்ட போது தான் பூவிதழ்..
“நான் இங்கு தான் இருக்கேன் அண்ணா..” என்று சொல்லி பின் பக்கம் நின்று கொண்டு இருந்தவள் அண்ணன் முன் வந்து நின்றாள்.
பொம்மாவை பார்த்ததுமே பிறந்த நாள் வாழ்த்து சொன்னவன்.. தன் தங்கைக்கு வாங்கி வைத்த பிறந்த நாள் பரிசாக மோதிரத்தை கொடுத்தான்..
எப்போதும் அண்ணன் கொடுத்தால் மகிழ்ச்சியோடு பெற்று கொள்பவள்.. இன்று அண்ணன் பரிசை வாங்கும் போது கொஞ்சம் தயங்கி தான் பெற்று கொண்டாள்.. அதை சித்தார்த்தும் கவனித்தான் தான்.. ஆனால் அப்போது எதுவும் பேசி கொள்ளவில்லை.. ஆனால் கண்டிப்பாக பேச வேண்டும் என்றும் நினைத்து கொண்டான்..
அண்ணி பெரியம்மா அம்மா என்று வாழ்த்து பரிசோடு தர. அனைத்தையும் இன்முகமாக தான் பெற்றுக் கொண்டாள்.. ஆனால் அதில் உண்மையான மகிழ்ச்சி என்பது தான் அவளிடம் இல்லாது போனது.
ஏன் என்றே தெரியவில்லை.. பூவிதழுக்கு காலையில் இருந்தே மனம் ஒரு மாதிரியாக தான் இருந்தது.
அதை வலிய விரட்டி விட்டு.. மஞ்சள் கோர்ட் வெர்ட் ட்ரஸை கை பையில் எடுத்து வைத்து கொண்டவள்..
தன் பிறந்த நாளுக்கு தன் அண்ணன் எடுத்து கொடுத்த உடையை தான் அவள் அணிந்து அலுவலகம் கிளம்பினாள்..
போகும் போது அண்ணனிடம்.. “அண்ணா இன்னைக்கு என் ஆபிஸில் ஒரு ஈவென் நடக்குது.. நான் வர லேட் ஆகும்.. அதனால இன்னைக்கு என்னுடைய பர்த்டே செலபரேஷனை இன்னொரு நாளைக்கு வைத்து கொள்ளலாம் அண்ணா. ஆ இன்னொன்னு முக்கியமானது. அன்னைக்கு புல்லா என் ட்ரீட் தான்.. அதனால உங்க பர்சை வீட்டிலேயே வைத்து விட்டு தான் வரனும்..” என்று சொல்லி அலுவலகத்திற்க்கு கிளம்பியவளுக்கு காலையில் இருந்தே ஏன் தன் மன நிலை ஒரு நிலையில் இல்லாது இருந்தது என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும் என்று.. தெரிந்த அந்த விசயம்.. தன் வாழ் நாள் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாக்க போகிறது என்பதும் தான்..