பூவிதழ் அன்று அலுவலகம் வந்த போது அனைவருமே அவளுக்கு முன் வந்து இருந்தனர்.. எப்போதும் தாமதமாக வரும் பெண்கள் கூட இவளுக்கு முன் வந்து பக்கத்து இருக்கையில் அமர்ந்தவர்களுடன் ஏதோ கதை அடித்து கொண்டு இருந்தனர்..
அவர்கள் டிப்பார்ட்மெண்ட் சூரஜூம் வந்து அந்த பெண்மணிகளின் பேச்சில் கூட்டு சேர்ந்து கொண்டு.. அன்று என்ன என்ன மெனு என்று கூறியவன்.. அதுவும் ஒரு தரம் வாய்ந்த ஒட்டலின் பெயரை சொல்லி அங்கு இருந்து தான் புட் என்று சொல்லவும்..
அதில் ஒரு பெண்.. “மும்பையில் அந்த ஒட்டல் பேமஸ்.. ஆனா சென்னையில் அதை போன வாரம் தானே திறந்தது..” என்று தனக்கு தெரிந்த தகவல்களை கூறினாள்
மற்றோரு பெண்ணே.. உன்னோடு எனக்கு அதிகம் தெரியும் என்று தெரியப்படுத்த வேண்டி.. “மும்பையில் மட்டும் இல்ல.. டெல்லி கொல்கத்தா கூட இவங்க பிரான்ச் இருக்குப்பா. ஆனா சென்னையில் தான் ரொம்ப லேட்டா ஆரம்பித்து இக்காங்க..” என்று கூறி முடித்தவள்
“ஆனாப்பா அங்கு எல்லா புட்டும் செமயா.. டேஸ்ட்டா இருக்கும்.. ஆனா கொஞ்சம் காஸ்லி.. தான்” என்று தான் அங்கு சாப்பிட்டத்தை தெரியப்படுத்தியதோடு.. தன்னுடைய அபிப்ராயத்தையும் சேர்த்து சொல்லி முடித்தாள் .. மூன்றாம் பெண்..
ஆக மொத்தம் அன்று முழுவதுமே ஒரு வேலையும் நடக்கவில்லை.. குறிப்பாக சாப்பிடுவது. அன்று உடுத்தும் உடையை தன் பேகில் இருந்து எடுத்து காட்டி.. நேற்று சென்ற பார்லர் செய்த ப்ளீச்சிங் பேஷியல் இது போல பேச்சுக்கள் தான் நடந்து கொண்டு இருந்தது..
பூவிதழுக்கு அந்த அலுவலகத்தில் எப்போதுமே வேலை கொடுத்தது கிடையாது.. இன்று கொடுத்து விட போகிறார்களா என்ன.? என்றும் தன் கை பேசியில் நோண்டி கொண்டு இருப்பவள் இன்று அவர்களின் பேச்சை கேட்டு கொஞ்சம் டைம் பாஸ் ஆனது.
பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாலும். அலுவலகத்தில் தன் டேட் ஆப் பர்த் இருப்பதால், பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வார்கள் காலையில் ஒரு பெரிய கேக் கட் செய்வார்கள்..இவள் இங்கு வேலைக்கு சேர்ந்து பன்னிரெண்டு பேருக்கு பிறந்த நாள் வந்து விட்டது.
பூவிதழின் பிறந்த நாளான இன்றோ.. டீ டைம் முடிந்து. லன்ச் டைமும் முடிந்து இதோ அலுவலகம் நேரமும் முடிந்து விட்டது.
போங்கடா இன்று என் நாள் இல்லை போல என்று தான் நினைத்து கொண்டாள்..
எப்போதும் அனைத்துமே சகஜமாக கடந்து விடுபவள் தான்.. சின்ன வயதில் தந்தையை இழந்தவர்களுக்கு அந்த அனுபவம் நிறையவே இருக்கும்..ஆனால் இன்று எதுவுமே நடக்கவில்லை.. ஏன் மனது என்னவோ போல் இருக்கிறது என்று நினைத்து கொண்டே தான்..
மாலை விழாவுக்கு பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்று தனி தனியே உடை மாற்றும் இடம் இருக்க.. அங்கு பெண்கள் பகுதியில் அவள் தன் அலங்காரத்தை விரைவில் முடித்து கொண்டு கொண்டாள்..
காரணம். இந்த மஞ்சள் நிறம் என்றாலே அவளுக்கு ரொம்ப அலர்ஜீ.. அவளுக்கு அது ஒரு சென்டி மெண்ட் என்று கூட சொல்லலாம்,.
அவள் பெரியப்பா இறந்த போது அவள் மஞ்சள் நிறத்தில் தான் உடை உடுத்தி கொண்டு இருந்தாள்.. அதே போல் அவள் தந்தை இறக்கும் சமயமும் அவள் உடுத்தி கொண்டு இருந்தது மஞ்சள் நிறம் தான்..
அதனால் அவள் பெரும் பாலும் மஞ்சள் உடையை உடுத்த மாட்டாள்.. அப்படி அந்த நிறத்தில் உடை எடுத்தாலுமே வேறு ஒரு நிறம் அதில் கலந்தது போல் இருப்பது போல் அவள் பார்த்து கொள்வாள்..
இன்று முழு மஞ்சள் நிறம் என்று விட. இதற்க்கு என்று புதியதாக பிடிக்காது தான் எடுத்தாள்.. அதே பிடிக்காது உடுத்தி கொண்டு ஏனோ தானோ என்று தான் தன்னை அலங்கரித்து கொண்டாள்..
ஆனால் அந்த ஏனோ தானோ என்ற அந்த அவளின் அலங்காகரம் பார்த்து பார்த்து தங்களை அலங்கரித்து கொண்டவர்களை விட இவள் பார்க்க அழகாக தெரிந்தாள்..
அதே போல் தான் அவளின் அந்த உடையும் அழகாக இருந்தது.. அந்த உடை அவளுக்கு அவ்வளவு பொருந்தியும் போனது.
அதனால் மற்ற பெண்கள் இவளிடம் அவள் உடுத்தி இருந்த உடை எங்கு வாங்கியது என்று கேட்டாள்.. மற்றோரு பெண்ணோ.. “ நீங்க எந்த பார்லருக்கு போவிங்க..?” என்று கேட்டு கொண்டே அவள் புருவத்தை பார்த்த அந்த பெண்..
“நீ ஐப்ரோ த்ரேட் செய்து கொள்ள மாட்டியா.?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்..
“நான் இது வரை பார்லருக்கு சென்றது இல்லை..” என்று பூவிதழ் உண்மையை தான் கூறினாள்..
ஆனால் அதை யாரும் நம்பவில்லை.. இவளும் நீங்க நம்பினா எனக்கு என்ன நம்பா விட்டா எனக்கு என்ன என்று தான் தோள் குலுக்கி சென்று விட்டாள்..
மற்ற பெண்கள்.. இவள் கொஞ்சம் அலட்டலா தான் இருக்கா.” என்று கமெண்ட் என்று அந்த அலங்காரம் செய்யும் போதும் மற்றவர்களை பற்றிய பேச்சோடு முடிந்தது..
ஏழு மணி அனைவரும் விக்னேஷ் சொன்ன அந்த தளத்தில் கூடி விட்டனர்.. வெல்கம் ட்ரீங்கஸ்.. முதலில் ஆரம்பம் ஆனது.. பின் பாடல் ஆடல் என்று அந்த வயதுக்கே உரிய கல கலப்பில் சென்று கொண்டு போனது..
பூவிதழ் இங்கு வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆனதாலும், என்னவோ அந்த வேலை தன்னுடையது இல்லை என்று உணர்ந்ததாலோ.. மற்றவர்களுடம் சகஜமாக பழகவில்லை..
ஏன் என்றால் கொஞ்சம் நாள் தான் இங்கு வேலை பார்ப்பது.. பழகி பின் ஏன் பிரிவது என்ற எண்ணம் அவளுக்கு..
பூவிதழை பொறுத்த வரை. நட்போ உறவோ.. ஒன்று ஏற்படுத்தி கொண்டு விட்டால், அதை பாதியில் விட மனது வராது..அதனால் தான் தோழி என்றால் அது காயத்திரி என்ற அளவில் மட்டும் நின்று கொண்டாள்..
மற்றவர்களிடம் பேசினாள். பேசுவாள்.. அவ்வளவு தான்..
அதனால் அந்த விழா க்ரூப் க்ரூப்பாக ஆண்கள் பெண்கள் சேர்ந்து கொண்டு பேச்சு சிரிப்பு என்று கலை கட்டியது.. பூவிதழ் இதை எல்லாம் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள்..
விக்னேஷ் விழா வேலையை மேற்பார்வை இட்டு கொண்டாலுமே, நண்பனுக்காக பூவிதழ் மீதும் ஒரு கண் வைத்து இருந்தான்.. தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்து விக்ரமுக்கு அழைத்து விட்ட விக்னேஷ்..
“எங்கேடா இருக்க.? பாவம் அந்த பொண்ணு தனியா உட்கார்ந்துட்டு இருக்காங்க.. எங்க ஆபிஸ் ஸ்டாப்க்கு எல்லாருக்குமே பர்த்டேக்கு கேக் கட் பண்ணுவோம்.. ஆனா நீ நான் வந்த பின் தான்.. பூவிதழ் பர்த்டே செலபரேஷன் என்று சொல்லிட்ட..
பாவம் டா.. வீட்டுக்கு போய் இருந்தா கூட அவங்க பேமிலியோட செலபரேட் பண்ணி இருப்பாங்க..” என்று தன் மன ஆதங்கத்தை விக்னேஷ் சொல்லி முடிக்கும் போது விக்னேஷ் பின் பக்கம் ஒரு கரம் படிந்தது.
என் மீது யார் தைரியமா கை வைப்பது என்று நினைத்து கொண்டே விக்னேஷ் திரும்பி பார்க்க. தன் கை பேசியை அணைத்து விட்டு..
“ரொம்ப தான்.. உன் சிஸ்டருக்காக பார்க்கிற..” என்று நண்பனிடம் கேட்டவன்ன.
“எங்கே பூவம்மா.?” எங்கு என்று கேட்ட போது விக்னேஷ் பூவிதழ் அமர்ந்திருந்த பகுதியை காட்டிய போது முன் தனித்து அமர்ந்திருந்த பெண் பக்கம் இப்போது சூரஜ் அமர்ந்திருந்தான்..
அமர்ந்ததோடு மட்டும் அல்லாது ஏதோ பேசி கொண்டு இருப்பதை பார்த்து விக்ரம்.. “யார் அது..?” என்று விக்னேஷிடம் கேட்க..
“பூவிதழ் டிப்பார்மெண்ட் எட்..” என்று பதில் சொல்ல.
“எப்போவும் பூவம்மா கிட்ட அவன் இப்படி தான் பேசுவானா.? நீ இதை எல்லாம் பார்க்க மாட்டியா.?” என்று கடு கடுத்து கொண்டு இருக்க..
கார் பார்க் செய்து விட்டு வந்த டேனியல் விக்ரம் பேசியதை கேட்டு கொண்டே வந்தவன்..
“தோஸ்த்.. அவன் இந்த கம்பெனியின் எம்டிடா. பாவம் அவன் எந்த வேலையை தான் பார்ப்பான்.. விடு.. அது தான் இன்னைக்கு ப்ரபோஸ் செய்ய போறேன் என்று சொல்லிட்டியே கவலையை விடு..” என்று டேனியல் நண்பனுக்கு தைரியம் கொடுத்தான்..
உடனே விக்னேஷ்.. “இன்னைக்கு பர்த்டே செலரேஷன் என்பது போல் தானே சொன்ன. மெல்ல மெல்ல தான்.. லவ் சொல்ல போற அப்படி தானே உன் ஐடியா..” என்று கேட்டதற்க்கு.
விக்ரம்.. “இதோ இது போல யாராவது உள்ளே நுழைந்து விட்டால்.. இப்போ நான் ப்ரபோஸ் செய்வது உடனே அக்சப் செய்து கொள்ளவில்லை என்றாலும் யோசிப்பா தானே..” என்று விக்ரம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான்..
இவ்வளவு பேச்சிலும் விக்ரம் கண் பூவிதழ் மீதும் அவளிடம் பேசி கொண்டு இருந்த சூரஜ் மீதுமே இருந்தது..
விக்ரம் வரும் வழியில் தான் டேனியலிடம் தன் மனதை இன்றே பூவிதழிடம் வெளிப்படுத்த போவதை கூறினான்..
டேனியல் கேட்டது இது தான்.. “எனக்கு திரும்ப திரும்ப உன் சிஸ்டர் எக்ஸ் பத்தி பேச விருப்பம் கிடையாது.. அந்த சித்தார்த் அவன் வீட்டில் சாத்வீகாவை பற்றி ஒன்றும் சொல்லி இருக்க மாட்டானா.?” என்று கேட்டதற்க்கு..
விக்ரம் அடித்து கூறினான்.. “அதுக்கு சான்ஸே கிடையாது.” என்றவன். அதோடு வயது கணக்கு பார்த்தால் ஏழு வருடம் முன்.. பூவிதழுக்கு ஜஸ்ட் பிப்ட்டீன் இயர்ஸ் தான் இருக்கும்..
ஒரு அண்ணன் சின்ன பெண்ணிடம் இது எல்லாம் பேசி இருக்க சான்ஸே இல்லை.. எனக்கு என்ன என்றால் என் காதல் அவள் ஏத்துக் கொண்ட பின் சித்தார்த் என்னை அறிந்து கொண்டால் போதும்..
அதற்க்கு முன் நான் என்னை வெளிப்படுத்திக்க விரும்பவில்லை.. வீட்டில் என்ன தான் எதிர்த்தாலும் பூவம்மா என்னை தான் கல்யாணம் செய்துப்பேன் என்று ஸ்டாங்கா சொல்லனும்.. அந்த அளவு நான் ஸ்டாங்கா அவள் மனதில் இடம் பிடித்தே ஆக வேண்டும்..” என்று சொன்னான்..
டேனியலுக்கு அவன் சொன்னது சரி தான்.. ஆனால் பூவிதழுக்கு அவன் அண்ணனின் காதல் தெரியாது தானே .. தெரிந்தால் பிரச்சனை தான் என்பது அவன் எண்ணம்..
பாவம் விக்ரமுக்கு தெரியவில்லை.. சித்தார்த் வாய் மூலம் தெரிந்து இருந்தால் கூட எபெக்ட் அவ்வளவு பெரியதாக இருந்து இருக்காது.
நான் வில்லன் தான் என்று அவள் உன் வாய் வழி மூலமாகவே கேட்டு தெரிந்து கொண்டவள்..
அதுவும் விக்ரம் தங்களை வைத்து சித்தார்த் அண்ணாவை கார்னர் செய்தது.. கூடவே மிடில் க்ளாஸ் பற்றிய அன்றைய விக்ரமனின் பேச்சு பெண்ணுக்கு இன்னுமே நன்றாகவே நியாபகம் இருக்கிறது என்று தெரியாது.. அவள் மனதில் தன்னை பதிய வைக்க அவள் முன் இன்று நின்றான்..
பூவிதழுக்கோ.. சூரஜ் வந்து பேச ஆரம்பித்த உடனே என்னடா இது எப்போதும் இவன் என்னை கல்லையும் மண்ணைய்யும் போல தானே பார்ப்பான்..
இன்று என்ன காணாதது கண்டது போல பார்க்கிறான் என்று பார்க்க.. அவன் பேசவும்.. தவறு தவறு பிதற்றவுமே ஆரம்பித்து விட்டான்.
“இந்த கலர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு.” என்று ஆரம்பித்தவன் பேச்சு..அய்யோ போதுமடா சாமீ என்பது போல் ஆன போது தான்..
“யார் இந்த ஹன்சம் நம்ம பாஸ்க்கு பிரண்டாம்..” என்ற பேச்சில்..
சூரஜிடம் “எஸ்க்யூஸ்மீ..” என்று அனுமதி கேட்டு கொண்டு அந்த பெண்கள் கேங்கில் அமர்ந்து கொண்டவள்..
இவர்கள் சொன்ன அந்த ஹன்சமை நாமும் தான் பார்ப்போம் என்று பார்த்தவள் கண்ணுக்கு பளிச் என்று நின்று கொண்டு இருந்தான் விக்ரம்..