‘இவன் எங்கே இங்கு..? என்று இவள் யோசிக்கும் போதே இவளை பார்த்து பளிச் என்றும் சிரித்து வைக்க.இவன் நம்மை பார்த்து தான் சிரிக்கிறானா.? என்ற சந்தேகத்தில் தன் பின் திரும்பி பார்த்தவள் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்களையும் பார்த்து விட்டு பூவிதழ் மீண்டும் விக்ரமை பார்த்தாள்..
இப்போது தன் விரல் கொண்டு நீட்டி உன்னை என்பது போல் சைகை செய்ததோடு தன் இதழை விரித்தும் காட்டினான்..
அவனை பார்த்தே பற்றி கொண்டு வந்தது என்றால், என்னை பார்த்து சிரிக்க வேறு செய்கிறான்.. எவ்வளவு நெஞ்சு அழுத்தம் இவனுக்கு இருக்க வேண்டும் இவனுக்கு என்று நினைத்தவளுக்கு..
இது என்ன இன்னும் என் நெஞ்ச அழுத்தத்தை பார் என்பது போல்..
விக்னேஷ்..விக்ரமையும் டேனியலையும் காண்பித்து.. “இவங்க தான் இன்னைக்கு பார்ட்டிக்கு புட் ஸ்பான்ஸர் செய்வது..D.L ஒட்டல் டேனியலை காட்டி இவருடையது தான் சென்னை பிரான்ச்.. விக்ரமோட சேர்ந்து தான் ஆரம்பித்து இருக்கிறார்.. ப்ளஸ் என் பிரண்சும் என்று அறிமுகம் செய்ததோடு விட்டு விடாது..
இன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடும் நபர்.. என்று இழுத்தவன் தன் பி.ஏ விடம். பெயர் சொல்லுங்க. என்று என்ன நடிப்புடா சாமீ என்று அந்த பி,ஏ நினைத்தாலுமே.. அவர் சபையில் பூவிதழ் என்று சொல்ல.
விக்னேஷ்.. “மிஸ் பூவிதழ் இங்கே வாங்க.” என்று அனைவரின் முன்னும் அழைத்ததால் அதை மறுக்க முடியாது சென்றாலும்.. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல சிடு சிடு என்ற முக பாவனையோடு தான் மேடை ஏறினாள்.
டேனியல் பூவிதழ் முகத்தை பார்த்த போதே ஏதோ சரியில்லாதது போல் தோன்றியது.. அப்போதும் விக்ரம் காதில்..
“நீ சித்தார்த் பற்றி இந்த பெண்ணுக்கு தெரியாது என்று தானே சொன்ன. ஆனா ஏன் இப்படி கோபமா உன்னை பார்த்துட்டு வராங்க..?” என்று டேனியல் விக்ரமனிடம் தன் சந்தேகத்தை கேட்டான்..
சாதாரணமாக இருந்து இருந்தால் விக்ரமும் பூவிதழின் முகத்தை பார்த்து கண்டு கொண்டு இருப்பானோ என்னவோ.. இப்போது அவன் கண்களில் காதல் எனும் வளையம் தடுத்து இருந்ததால்,
“இப்படி ஒருத்தன் உத்து பார்த்தா எந்த நல்ல பெண் என்றாலும் முறைக்க தான் செய்வா தோஸ்த்..” என்று அவளின் முறைப்புக்கு ஒரு காரணம் சொன்னவன்..
“டிஸ்டப் செய்யாதே தோஸ்த். கிட்ட வரா.” என்று சொல்ல டேனியலும் அமைதியாகி விட்டான்..
விக்னேஷோ.. “இது என் கம்பெனிடா. நான் இதுக்கு ஒனருடா. ஆனா இவங்களுக்கு நான் செய்வது என்னையே வேறு மாதிரி யோசிக்க வைக்குதுடா என்று மனதினில் புலம்பி கொண்டான்..
பூவிதழ் அருகில் சென்றதும் அனைவரின் முக பாவனையும் சாதாரணாம மாற்றி கொண்டனர்.. அதுவும் விக்னேஷ் எம்.டி அல்லவா அந்த கெத்தை விடாது.
மேடையில் ஏறியவளிடம் கை கொடுத்து வாழ்த்து கூறி விட்டு.. கேக்கை காண்பித்து.” கட் செய்ங்க.” என்று சொல்ல ..விக்னேஷ் பூவிதழிடம் கை கொடுக்கும் போது விக்ரமுக்கு புகைய ஆரம்பித்து விட்டது.
விக்னேஷ் தான் பாவம் போல் முகத்தை வைத்து உதட்டசைவில் மன்னிப்பு வேண்ட.. சரி என்று விக்ரம் நண்பனை போனால் போகட்டு என்று விட்டானா..?
இல்லை காதலியை அருகில் காணும் வாய்ப்பை நழுவ விட கூடாது என்று மற்றதை விடுத்து அவனின் பூவம்மாவையே பார்த்து கொண்டு இருந்தான்.
இந்த நாடகம் அனைத்துமே கீழே இருந்தவர்கள் கண்ணுக்கும் தெரிந்தது தான். இதில் என்ன அதிசயம் என்றால் அனைவரின் கண்ணுக்கும் விக்ரம் தான் பெரியதாக தெரிந்தது.
அதுவும் விக்ரம் பூவிதழை பார்க்கும் அந்த காதல் பார்வை பூவிதழுக்கு புரிந்ததோ இல்லையோ மற்றவர்களுக்கு தெள்ள தெளிவாக புரிந்து விட்டது.
ஒ அது தான் இந்த பெண்ணுக்கு வேலை கொடுக்காது சம்பளம் கொடுக்க காரணமோ.. சூரஜ் அவள் டிப்பார்ட்மெண்ட் எட்.. அவனுக்கு தெரியும் தானே வேலைகளை பற்றி..’இப்போது பெரிய கை தான் அது தான் நம்மளை எல்லாம் சட்டை செய்யல என்று சூரஜ் நினைக்க மற்ற பெண்களோ.. நம்ம எல்லாம் ஒரு ஆளா பார்க்க மாட்டா இப்போ தான் தெரியுது. என்று இவர்கள் தான் அவர்களின் காதலுக்கு இவர்கள் தூது சென்றது போல் பேசியும்.. நினைத்தும் கொண்டனர்..
பூவிதழுக்கோ விக்னேஷ் கேக் கட் செய் என்றதுமே அனைவரின் முன்னும் எதுவும் சொல்ல முடியாது போனாலுமே, கேக்கின் தரம் பார்த்த உடனே தெரியும் அளவுக்கு இருக்க..
“சார் நான் ரொம்ப மிடில் க்ளாஸ் சார்.. எனக்கு இது போல் எல்லாம் பழக்கம் இல்லை..” என்று விக்னேஷிடம் மறுத்தாள் தான்.
ஆனால் விக்னேஷ் திரும்பவும் இன்னைக்கு உங்க பிறந்த நாளுக்கு என்று ஸ்பெஷலா ஆர்டர் செய்தது.. நீங்க தானே கட் செய்யனும் என்று சொன்ன பின் மறுக்க முடியாது. குனிந்து அந்த கேக்கை கட் செய்தாள் செய்து விட்டு அந்த பீசை அதில் பக்கத்திலேயே வைத்து விட்டு சிரித்து வைக்க..
அவள் வைத்த பீசை அவளை பார்த்து கொண்டே விக்ரம் எடுத்து தன் வாயில் போட்டு கொள்ள பூவிதழுக்கோ ஒன்றும் சொல்ல முடியாத நிலை..இந்த காட்சிகள் பார்த்தவர்களுக்கு ஏதோ சினிமா பார்ப்பது போல் சுவாரசியமாக இருக்க.. அனைவரின் பார்வையும் இவர்கள் மீது தான்/.
பின் அந்த மேடையில் நிற்காது கீழே வந்து விட்டாள்..
கீழே வந்த பின்னும் அவளுக்கு சங்கடம் தான் காத்திருந்தது.. இது வரை சாதாரணமாக பார்த்து இருந்தவர்களின் கண்களில் பல ஆராய்ச்சிகள். எப்போதடா இது முடியும் என்ற நிலையில் இருந்தவள் அவசரமாக தன் அண்ணனுக்கு மெசஜ் அனுப்பி விட்டாள்..
“வந்து பிக்கப் செய்ய சொல்லி.” ஏனோ விக்ரம் பார்வை சரியில்லாதது போல் அவளுக்கு தோன்றியது.. கூடவே இப்போ ஏன் விக்ரம் புதுசா கண் முன் வரான்.. ஏற்கனவே வீட்டில் அண்ணி அம்மா வீட்டால் பிரச்சனை அதிலேயே அண்ணாவுக்கும் அண்ணிக்கும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து இருக்கேன்.. இதுல இவன் வேற..?’ என்று நினைத்து கொண்டவளுக்கு தெரியவில்லை..
விக்ரம் இவளை வேறாக பார்க்காததோடு தன்னையும் அவன் வழியில் பார்க்க வைப்பான் என்று..
முதலில் இருந்தே இந்த வேலையில் அவ்வளவு பிடித்தம் இல்லாது தான் இருந்தாள்.. அடுத்து ஒரு நல்ல வேலை கிடைத்ததும் இந்த வேலையை விட நினைத்தாள். இப்போது உடனே வேலையை ரிசைன் செய்ய நினைத்து விட்டாள்..பாவம் பூவிதழுக்கு இதுவும் தெரியவில்லை.. அவள் கனவை வைத்தே அவளை தன் வழிக்கு கொண்டு வரப்போவதை..
மேடையிலோ.. விக்னேஷ் விக்ரமை காட்டி இவன் நல்லா படுவான்.. பிறந்த நாள் கொண்டாடிய பூவிதழுக்கா ஒரு பாட்டு பாட இருக்கிறான் என்று..
அனைத்தும் முன் ஏற்பாடு செய்தது போல் தான் இன்ஸ்டியூமெண்ட் மைக் என்று எல்லாம் பக்காவாக வந்து விட.
அவனின் ஆரம்ப பாடலே..
“பூ பூக்கும் மாசம் தை மாசம்…
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரேங்கும் வீசும் உன் வாசம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சின்ன கிளிகள் பறந்து ஆட..
சிந்துக் கவிகள் குயில்கள்
பாட
புது ராகம் புதுதாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்..
என்று ஆரம்பித்து அடுத்த அடுத்த பாடல்களுமே பூவில் இருந்த பாடல்களையே பாடிக் கொண்டு இருக்க.. அதுவும் ஒரு சில பாடல்கள் காதல் ரசம் சொட்ட.. அவன் குரலில் இசைந்த அந்த பாடல்வரிகளை கேட்டு முதல் ஏனோ தானோ என்று கேட்க ஆரம்பித்தவர்கள் அவன் குரலுக்கும்,, அந்த குரலில் தெரிந்த உயிர்ப்பிலும் ரசித்து கேட்க ஆரம்பித்து விட்டனர்..
பூவிதழ் நேரத்தை பார்த்த போது தான் டேனியல் மைக்கை கை கொண்டு மூடி விட்டு.
“நான் நினைக்கிறேன் அவங்க ப்ரதரை பிக்கப் செய்ய வர சொல்லி இருக்காங்க என்று.. நீ பாடிட்டே இருந்தா தனி ஆலாபனை தான் நடத்தனும் உனக்கு ஜோடி சேரவே சேராது..” என்ற நண்பனின் எச்சரிக்கையில் தான் விக்ரம் தன் பாடலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தான்..
பூவிதழுக்காக பாடிய விக்ரமனின் பாட்டுக்கு பூவிதழை தவர அனைவரும் கரகோசம் செய்ய. பூவிதழுக்கு இப்போது தான் விக்ரம் தன்னை காதலிக்கிறானோ என்ற சந்தேகம்.
அந்த லிப்ட் பிரச்சனை ஆன போது தான் தன்னை பார்த்தது.. பார்த்த உடனே லவ்வோ.. ஆமா ஆமா இவங்களுக்கு லவ்வும் சீக்கிரம் வந்துடும் பிரிவுமே வந்த வேகத்தை விட போயிடும் என்று மனதில் எள்ளலாக நினைத்து கொண்டாள்..
கூடவே மிடிக் க்ளாஸ் பற்றி இவன் அப்பா கிட்ட அன்னைக்கு அவ்வளவு க்ளாஸ் எடுத்தான்.. இன்னைக்கு என்ன என்னை..
என்னை பார்த்தா இவனுக்கு மிடில் க்ளாஸ் பெண் போல தெரியவில்லையா.. தன்னை யார் என்று தெரியாது தான் தன்னை காதலிக்கிறான் என்று பெண் நினைத்து கொள்ள..
ஆணோ பூவிதழுக்கு தன்னை யார் என்று தெரியாது.. தெரிவதற்க்குள் நான் தான் எல்லாமாக அவளுக்கு இருந்திட வேண்டும் என்று நினைக்க.
இவர்களின் இருவரின் எண்ணத்திற்க்கு காரணமான சித்தார்த்தோ தங்கையை பிக்கப் செய்ய வேண்டி வந்து கொண்டு இருந்தான்..
பார்க்கலாம்.. விக்ரம் பூவிதழோடு பேசும் முன் தன் மனதை வெளிப்படுத்தி விடுவானா .? இல்லை பூவிதழ் உன்னையும் தெரியும்.. நீ என் அண்ணனுக்கு செய்த வில்லத்தனமும் தெரியும் என்று.. முகத்திற்க்கு நேராக சொல்லி விடுவாளா..? இல்லை இவர்களின் இருவரும் தனித்து பேசுவதற்க்குள் சித்தார்த் அங்கு வந்து விடுவானா.? என்று..