“உங்களுக்கு தான் இந்த மிடில் க்ளாஸ் பீப்பிள் மெண்டாலிட்டி நல்லா தெரியுமே சார்.. ஒரு பிஸ்க்கெட்டை நாயிக்கு தூக்கி போட்டா. அவன் பின் வாலாட்டி போயிட்டே இருக்கும்..
அதே போல தான் இந்த மிடில் க்ளாஸ் பீப்பிள்.. என் அண்ணாவை என் அப்பா வளர்த்து ஆளாக்குனாரு.. அந்த விசுவாசத்தில் எப்படியும் சித்தப்பா குடும்பத்தை விட்டு விட மாட்டார். என் ப்ளான் சக்ஸஸ் தான் என்று.” என்று அன்று விக்ரம் பேசியதை எழுத்து பிசகாது சொன்னவள்..
இன்னொன்றும் கூறினாள்..” நீங்க சொன்னது ஒன்றை ஒத்து கொண்டே ஆக வேண்டும்.. எங்க குடும்பத்துக்காக ஏது என்றாலும் செய்வோம்.. என் அண்ணன் உங்க சிஸ்டரை விலக்கியது போல.. லவ்வே அப்படி எனும் போது நான் என் அண்ணன் எங்களுக்காக செய்ததிற்க்கு நானே சாட்சி.. எப்படி உங்க லவ்வை நான் அக்செப் பண்ணிப்பேன்..” என்று சொல்லி இருந்தாள் பெண்ணவள்..
விக்ரம் அதிர்ந்து விட்டான்.. பூவிதழ் பேச பேச அனைத்தும் சொன்னதோடு என்னாலுமே நான் உங்க காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னதில், வாழ்க்கையில் முதன் முதலாக தோல்வியை தழுவினான்..
அது கொடுத்த தாக்கத்தில் தன் கை பையை எடுக்க கை நீட்டியவளின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து கொண்டான் விக்ரம்..
அதில் அவள் அதிர்ந்து வாய் திறந்து அவன் முகத்தை பார்த்தாள்..முகத்திற்க்கு நேராக அவள் அதிர்ந்த முகம் வாய் திறந்த அந்த நிலை யோசிக்கவில்லை சிறிதும் யோசிக்க வில்லை.. முத்தம் வைத்து விட்டான்..
விக்ரமுக்குமே முதல் முத்தம் தான்.. என்ன தான் வெளிநாட்டில் படித்து இருந்தாலுமே, தன் எச்சத்தை மற்றவர்களிடம் பகிர்ந்தது கிடையாது.. பெண்களிடம் அணைத்து விடுவிப்பான்.. அதுவும் பெண்களை எப்படி அணைக்க வேண்டுமோ அப்படி அவர்களின் முன் பாகம் தன் மீது படாது தான் அந்த அணைப்பு இருக்கும்.பார்ப்பான் அழகை ரசிப்பான்.. ஆனால்..
அதுவும் வலிய வந்து பழகிய பெண்களிடம் கூட நாசுக்காக மறுத்து விட்டவன். இன்று விலகி நின்ற பெண்ணை இழுத்து தன் மீது மோதியதில் பெண்ணவளின் முன் மென்மை ஆணவனின் மார்பில் முட்டி நிற்க..
அவனின் கவனம் அவள் இதழ் மட்டுமே என்று இருந்ததில் தனக்கு வாகாக அவளை சிறிது மேலே தூக்கி என்று இப்படி செய்ததில் பெண்ணவள் அதிர்ச்சியோடு.. பயம். யாரும் இல்லை அந்த தனிமை.. .ம் ம். என்று மட்டும் தான் அவள் வாயில் இருந்து வெளி வந்தது..
அதுவும் அந்த ஒத்த எழுத்தையுமே பெண்ணவள் கடினப்பட்டு கொண்டு தான் உச்சரிக்க முடிந்தது.. அந்த அளவுக்கு அவள் இதழை விடாது தன் இதழால் சிறை செய்து இருந்தான் விக்ரம்..
விக்ரம் பூவிதழ் பின் சென்றவன் இன்னும் காணுமே என்று தேடி வந்த டேனியல் கண்ணில் தெரிந்த காட்சி விக்ரம் பூவிதழை முத்தம் இட்டு கொண்டு இருந்ததை தான்..
டேனியல் பதறி போய் விக்ரமை நெருங்கி .” விக்ரா என்ன செய்யிற விடு அவங்களை விடு..” என்று பிரிக்க பார்த்தான்.. டேனி பிரிக்க பார்த்ததால் விக்ரம் பூவிதழின் இதழை விடுவித்தானோ .. இல்லை மற்றவர்கள் முன் தன் அந்தரங்கம் வேண்டாம் என்று விடுவித்தானோ.. இல்லை அவன் நாக்கு உணர்ந்த அந்த உப்பு சுவையில் விடுவித்தானோ தெரியவில்லை.. டேனியல் குரலை கேட்டதும் விக்ரம் இதழை விடுவித்ததோடு..
பூவிதழிடம். “என் சிஸ்டரோட உன் அண்ணனை சேர விடாது ப்ளான் போட்ட எனக்கு உன்னை என்னிடம் சேர ப்ளான் போட முடியாதா என்ன..?” என்று தன் விரல் நீட்டி பேசிக் கொண்டு இருந்தவளை பெண் அதிர்வுடன் பார்த்திருந்தாள்..
அதுவும் டேனியல் அங்கு இருந்த ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து பூவிதழிடம் நீட்டி..
“துடைத்துக்கோம்மா..” என்று அவன் சொன்னதுமே தான் தன் இதழின் வலியை உணர்ந்தது.. நாக்கு சுவைத்ததில் அது ரத்தம் என்பதுமே.. கூட டேனியல் முன் மிகவும் அவமானமாக உணர்ந்தாள்..
இரு ஆண்களையுமே திரும்பி பாராது.. கீழே வந்தவள் அங்கு இருந்த ஆட்டோவை கை நீட்டி நிறுத்தி விட்டு ஏறி அமர்ந்ததுமே தன் அண்ணனுக்கு.
“நான் பிரன்ஸ் கூட வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.” என்று ஒரு மெசஜை தட்டி விட்டாள்..முன் போல் தன் அண்ணனிடம் மாட்டி கொள்ள அவள் விரும்பவில்லை.
முன்னாவது அண்ணன் கேட்டதற்க்கு உண்மையை சொல்லி விட்டாள்.. ஆனால் இது என்று நினைக்கும் போதே எரிந்த தன் உதட்டை தொட்டு பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.. நினைக்கவில்லை. நினைத்து பார்த்ததே இல்லை.. தன்னிடம் இப்படி ஒரு ஆண் நடந்து கொள்வான் என்று.
பூவிதழ் வீட்டிற்க்கு சென்ற வேளை யாரும் ஹாலில் இல்லாது போக தன் அறைக்குள் புகுந்து கொண்டளுக்கு மனது இன்னுமே அடித்து கொண்டது.
ஆண் போல் வெளி வேலை அனைத்துமே பார்ப்பாள் தான். மிகவும் தைரியமான பெண் தான்.. ஆனால் இன்று நடந்தது.. மீண்டும் அதை நினைத்து பார்க்க முடியாதவளாக கண்களை இறுக்கி மூடி கொண்டாள்..
உடனே என்ன நினைத்தாளோ தன் அறையில் இருந்த விளக்கை அணைத்து விட்டாள்.. இது போல தன்னை பார்த்தால், கண்டிப்பாக தெரிந்து விடும்.. அதுவும் அண்ணன் வேண்டாம் வேண்டாவே வேண்டாம் என்று ஏதோ பயத்தில் உதட்டை கடித்து கொண்டவளுக்கு அது கொடுத்த வலியில் சட்டென்று உதட்டை விடு வித்து கொண்டு விட்டாள்.
ஏதோ நினைத்து பயம்.. அண்ணனை நினைத்து அண்ணியை நினைத்து தன் வீட்டவர்களை நினைத்து விக்ரமை நினைத்து.. அனைத்திற்க்கும் மேலாக தன்னையே நினைத்து கண்ணை மூடியவளின் கண்களில் இருந்து கண்ணீர்..
சித்தார்த் தங்கை மெசஜ் செய்த உடனேயே கிளம்பி விட்டான் தான்.. ஆனால் ஒரு புகழ் பெற்ற பாடகர் ஏற்பாடு செய்து இருந்த அந்த விழாவால் வண்டியை அடுத்து நகர்த்த முடியாது போய் விட்டான்..
இந்த வழியில் இப்படி என்று தெரியாது.. தங்கை அனுப்பிய மெசஜை பார்த்ததும்.. இவனும் எந்த வழி.? என்று கேட்டதற்க்கு பொம்மா வேறு வழியின் மூலம் போவதாக சொல்ல. மனது நிம்மதியாகி விட்டது.. பின் மீண்டும் வீடு சேர்ந்ததும் தங்கை மெசஜில் சொல்லி விட.
இப்போது மீண்டும் வீட்டை நோக்கி வண்டியை திருப்பினான்.. ஆம் பொம்மா ஆட்டோவில் இருந்து இறங்கும் போதே அண்ணனுக்கு மெசஜ் போட்டு விட்டாள்.. வீடு வந்து விட்டேன் என்று..
ஆனாலுல் அண்ணன் வீடு வந்து தன்னை பார்த்தால், என்ன செய்வது என்ற பயமும்.. அவள் நல்ல நேரமா.? இல்லை கெட்ட நேரமா.? என்று தெரியவில்லை..’சித்தார்த் அந்த ட்ராபிக்கில் மாட்டி கொண்டு வீடு வந்து சேரவே நடுயிரவு கடந்து விட்டது.
அப்போதும் வீடு வந்தவனின் கண் தங்கை அறையை தான் பார்த்தது.. இரவு விளக்கு மட்டும் எரிந்ததில் தூங்கி விட்டாள் என்று நினைத்து தன் அறைக்கு சென்று விட்டான்..
சித்தார்த் தன் தங்கையின் அறையின் கதவை தட்டி இருந்தால் தெரிந்து இருக்கும். தங்கை இன்னும் தூங்காது தான் முழித்து கொண்டு இருக்கிறாள் என்று..
டேனியலுக்கு அப்படி ஒரு கோபம்.. பேச வில்லை இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு பேசவில்லை.. பூவிதழ் சென்ற பின் அந்த இடத்திற்க்கு விக்னேஷ் வந்து விட. அவன் எதிரில் விக்ரமை பேச, டேனியலுக்கு மனது வரவில்லை.
ஒரு சமயம் தோஸ்தாக மட்டும் இருந்து இருந்தால் விக்னேஷ் எதிரிலே பேசி இருப்பானோ என்னவோ.. ஏன் தோஸ்தாக மட்டும் இருந்து இருந்தால் விக்ரமனின் இந்த செயலுக்கு இவ்வளவு கோபமும் வந்து இருக்காதோ..ஆனால் படித்த காலத்தை விட.. இந்த ஆறுமாத கால நட்பு டேனியலை விக்ரமனிடம் இறுக்கமாக இணைத்து விட்டது.
அதுவும் விக்ரம் சாத்வீகா காதலில் செய்த அந்த வில்லத்தனைத்தையும் மீறி விக்ரமனின் நட்பு மீது அவன் மதிப்பு வைத்து இருந்தான்..ஆனால் இன்றைய அவனின் செயல் டேனியால் ஏற்றுக் கொல்ளவே முடியவில்லை..
வலுக்கட்டாயமாக முத்தம் இட்டது.. மனைவி என்றாலுமே பிடிக்கவில்லை என்றால் தொட கூடாது என்று வளர்ந்த அவனின் சூழல் விக்ரமனின் செயலை அவ்வளவு எளிதாக அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
விக்னேஷ்.. “என்ன விக்ரம் முதல்ல உன்னை ஆளை காணும்.. உன்னை தேடி டேனி வந்தான் அவனையும் காணும்.. இங்கு இரண்டு பேரும் என்ன செய்யிறிங்க.? உன் லவ்வை பூவிதழ் கிட்ட சொல்லிட்டியா.?” என்று நிறுத்தாது பேசிக் கொண்டு இருந்த விக்னேஷ் பின் தான் இருவரின் முகத்தையும் கவனித்தான்..
அடுத்து ஒன்றும் பேசாது அமைதியாக இருக்க டேனியல் தான்.. “ வரோம் விக்கி.. மத்த விசயத்தை நாளைக்கு பேசிக் கொள்ளலாம்..” என்றதும். எப்போதும் விக்ரம் பேச்சை கேட்கும் டேனியல். இன்று டேனியல் பேச்சை விக்ரம் கேட்டு அவன் பின் சென்றான்..
வழி முழுவதும் பேச்சு இல்லை.. விக்ரம் மட்டும் ஏதோ யோசனையில் இருந்தான்.. டேனியல் இரு முறை நண்பனை திரும்பி பார்த்தவன் பின் அவன் காரை நிறுத்திய இடம் முன் விக்ரம் தன் கெஸ்ட் அவுசுக்கு டேனியலை அழைத்து கொண்டு சென்ற இடத்தில் வந்து நின்றான்..
ஒன்றும் பேசாது அமைதியாக வந்தவர்கள் விக்ரம் சென்ற முறை வாங்கி வந்த மதுவை எடுக்க செல்ல பார்த்தவனை கை பிடித்து தடுத்து நிறுத்திய டேனியல்..
“எதுக்கு விக்ரா அப்படி செய்த… அந்த பெண்.. அந்த பெண் என் முகம் பார்க்க கூட அப்படி அவமானமா. ரொம்ப தப்பு விக்ரா.. கிஸ் செய்துட்டா உன்னை காதலிச்சிடுவா என்று நினச்சிட்டியா என்ன. எந்த காலத்தில் இருக்க விக்ரா…?” என்று சரமாறியாக டேனியல் கேள்விகள் கேட்க விக்ரம் ஒன்றுக்குமே பதில் சொல்ல வில்லை..
காரில் எப்படி அமைதியை கடைப்பிடித்தானோ.. அதே அமைதியுடன் அங்கு இருந்த இருக்கையில் சாய்ந்து கொண்டவன் கண் மூடி கொள்ள..விக்ரமை திட்டி முடித்ததும். டேனியலின் மனதும் இப்போது கொஞ்சம் சமநிலை அடைந்தது.
அதுவும் விக்ரமனின் அந்த மெளனம் அவனை ஏதோ செய்ய.. அருகில் சென்ற டேனியல் அவன் தோளை தொட்டு தன்னை பார்க்க வைக்க..
விக்ரம் முகத்தை பார்த்த டேனியல் கண்ணுக்கு சிவந்து இருந்த அவன் கண்கள் ஏதோ சொல்ல.. டேனியல்.. “தோஸ்த் அழுகுறியா..?” என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாது வெரித்து பார்த்து கொண்டு இருந்த விக்ரம்..
“அவளுக்கு எல்லாமே தெரிந்து இருக்கு டேனி..” விக்ரம் சொன்னது டேனியலுக்கு புரியவில்லை..
“என்ன சொல்ற..?”
“அது தான் நீ கேட்டுட்டே இருப்பியே.. சித்தார்த் சொல்லி இருப்பானா இருப்பானா என்று..”இப்போது விக்ரம் பேச்சு.. டேனியலுக்கு புரிந்து விட்டது.
“சித்தார்த் சொல்லிட்டானா..? ஆனா அது நீ தான் என்று உன்னை எப்படி தெரியும் என்று கேட்டான்..”
“அதற்க்கு விக்ரம். சித்தார்த் சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை..” என்று விக்ரம் சொன்னதுமே டேனியல் சந்தேகத்துடன் விக்ரமை பார்த்து..
“அப்போ அப்போ அன்னைக்கு பூவிதழும் வந்து இருந்தாங்களா..?” என்று கேட்டான்..
விக்ரம் தலையாட்ட டேனியல் தலை மீது கை வைத்து கொண்டான். “ ஒ மை காட்..” என்று.
அதுவும் விக்ரம் விரிவாக சொன்ன நானும் டாடியும் பேசியது முதல் கொண்டு மிடில் க்ளாஸ் பர்றி தான் சொன்ன உவமை அனைத்தும் சொல்ல.. டேனியலுக்கே என்ன என்று சொல்ல முடியவில்லை..
ஆனாலும்.. “அதுக்கு கிஸ் பண்ணுவீயா விக்ரா..?” என்று டேனியலுக்கு இப்போதும் அவன் செய்த செயலின் மீது இருந்த கோபம் அடங்கவில்லை..
“எனக்கு என் பூவம்மா வேண்டும் டேனி.. அதுக்கு இது என்ன ..? எது வேண்டுமானாலும் செய்வேன்..” என்ற விக்ரமை ஒரு வித பயத்துடன் பார்த்திருந்தான் டேனியல்…