பூவிதழ் சாத்வீகாவை பார்த்ததுமே என்ன மாதிரி ஆற்றுவது என்று தெரியாது ஸ்தம்பித்து நின்று விட்டாள்.. சாத்வீகாவை.. அதுவும் தன் அண்ணியின் அருகில் பார்ப்போம் என்று நினைக்கவில்லை..
சாத்வீகாவோ சித்தார்த் தங்கையை பார்த்தது இல்லை.. அதனால் பூவிதழை பார்த்து அறிமுகமாக சிரித்தாள்.. பூவிதழுக்கு கடமைக்கு என்று கூட சிரிக்க முடியாது நிற்க..
விக்ரமுக்கும் அதே நிலை தான்..அதாவது ப்ரீத்தி சித்தார்த் மனைவி என்று அறிந்ததும், அவனும் என்ன மாதிரி உணர்ந்தான் என்று தெரியாத நிலையில் தான் இருந்தான்..
சாத்வீகாவுக்கு தான் சிரித்தும் சிரிக்காத பூவிதழை பார்த்தவள்.. அதன் பின் தன் மகன் அருணிடம் குனிந்து..
“போகலாமா..” என்று கேட்கும் போது தான் சரியாக அந்த இடத்திற்க்கு சித்தார்த் வந்தது..
“என்ன ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லிட்டு இவ்வளவு நேரம் பண்றிங்க. அங்கே வெயிட்டர் கிட்ட எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறது..” என்று கேட்டு கொண்டே வந்தவன் கண்ணுக்கு முதலில் மனைவி தங்கை மட்டும் தான் தெரிந்தார்கள்.. பின் தான் சாத்வீகாவையும், விக்ரமையுமே கவனித்தது..
பூவிதழ் விக்ரம் போல் எல்லாம் சித்தார்த் ஸ்தம்பித்து எல்லாம் நிற்கவில்லை.. ஒரு நொடி ஒரே நொடி தான் முகம் ஒரு போல் ஆனது.. பின் சாதாரணமாக
“வா போகலாம்.” என்று மனைவி தங்கை இருவரையும் பார்த்து பொதுவாக அழைத்தான்..
பாவம் ப்ரீத்தி இது எதுவும் தெரியாது.. “ இவங்க..” என்று சாத்வீகாவை கை காட்டும் போது சித்தார்த் ..
“ப்ரீ அங்கு வெயிட்டர் எவ்வளவு நேரம் காத்து இருப்பாங்க. நமக்கு கீழே இருக்கிறாங்க என்று எப்போதும் கீழா நடத்த கூடாது டா. அதுவும் இல்லாம அம்மா போன் மேல போன் போட்டுட்டே இருக்காங்க..” என்றதும் ப்ரீத்தி..
“அய்யோ சாரி அத்தான். “ என்று மன்னிப்பு கேட்டவள்..
சாத்வீகாவிடம்.. “வரேன் கே.. அத்தை என்னை இது போல இருக்கும் போது வெளியில் அனுப்பவ அவ்வளவு யோசித்தாங்க.. அதுவும் வரும் போது அத்தனை பத்திரம் சொல்லி சீக்கிரம் வாங்க என்று சொல்லி தான் அனுப்பினாங்க..” என்று சொல்லி விட்டு சித்தார்த் பக்கம் வந்து நிற்க.
பூவிதழோ சித்தார்த் வந்து நின்றதுமே அவன் பக்கம் போய் நின்று விட்டாள்.. விக்ரம் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவன் பக்கம் பார்வை செலுத்தாது நிற்க.. மனைவி சாத்வீகாவிடம் சொல்லி விட்டு வர.
இருவர் தோள் மீதும் அணைவாக கை போட்டு கொண்டு சித்தார்த் நடந்து செல்ல. அதை பார்த்தவர்கள் கண்ணுக்கு அவ்வளவு அழகாக தெரிந்தது..
நடந்து சென்ற சித்தார்த் என்ன நினைத்தானோ சட்டென்று திரும்பி விக்ரமை பார்த்தான்.. விக்ரமனின் பார்வை தன் வலப்பக்கமே. இருக்க.. ஏதோ யோசனையுடன் இருந்தவனை பார்த்த விக்ரம் முகத்தில் லேசான புன்னகை..
சித்தார்த்துக்கு ஏதோ சரியில்லாதது போல் அப்போதே பட்டது தான். ஆனால் பூவிதழுக்கு அனைத்தும் தெரியும் என்பதால் பயப்படாது அவனுமே விக்ரமை ஒரு வித திமிர் பார்வை அவனின் மீது செலுத்தி விட்டு தான் சென்றது.
சாத்வீகா என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளுக்கே வெளிச்சம்.. ப்ரீத்தி சித்தார்த் மனைவி.. அரவணைத்து சென்ற விதத்தை பார்த்து ஏதோ பெரியதாக இழந்த உணர்வு அவளுக்கு.டேனியல் இவை அனைத்தையுமே ஒரு பார்வையாளனாக மட்டும் பார்த்திருந்தான்..
பூவிதழை பார்த்ததுமே ப்ரீத்தி.. சித்தார்த் யார் என்பதை இனம் கண்டு கொண்டு விட்டான்..
அதனால் அங்கு இருந்து வீடு வரும் வரை குழந்தைகள் சத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லாது அவர்களுக்குள் ஒரு வித அமைதி நிலவியது..
சித்தார்த்தோ எப்போதும் போல் மனைவி தங்கையிடம் பேசி கொண்டும் “இது எப்படி இருக்கு டேஸ்ட் செய்து பார்..” என்று ஒருவருக்கு ஒருவர் உணவு வகைகளை ஷேர் செய்து சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.. பூதவிதழும் தன் அதிர்ச்சியை உடனே மறைத்து கொண்டு சாதாரணமாக இருந்தாள்..
ஆனால் விக்ரம் சாத்வீகாவிடம் வீடு அருகில் வந்த சமயம்.. “இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போகலாம்.” என்று கூறிய போது.
“வேண்டாம் விக்ரா. என் வீட்டிலேயே என்னை ட்ராப் செய்து விடு.” என்று மறுத்து சொன்னவளிடம் விக்ரம்..
“இல்ல தனியா..” என்று சொன்ன போது சாத்வீகா வீடு வந்து விட..
“இனி எனக்கு அது தானே விதித்து இருக்கு விக்ரா.” என்று காரை விட்டு இறங்கும் போது சொன்னவளையே அதிர்வுடன் பார்த்தான் விக்ரம்..
இன்று டேனியல் விக்ரமை அவன் கெஸ்ட் அவுஸ் அழைத்து செல்லாது சென்னையில் அதிகம் நாள் இருப்பதால், டேனியல் சென்னையிலேயே ஒரு அப்பார்ட்மெண்ட் சொந்தமாக வாங்கி விட்டான்..
இன்று அவர்களின் மது அருந்தும் இடம் டேனியல் வீடாக மாற்றி கொண்டு விட்டனர்..
எப்போதும் போல் சாத்வீகாவை நினைத்து கொண்டு இருப்பவன் முன் அவன் பிராண்ட் மதுவை முன் வைக்க. அதை குடிக்காது தள்ளியவனிடம்..
“இன்னைக்கு இதை தள்ளுன நீ அன்னைக்கு நீயும் உன் அப்பாவும் ஸ்டேட்டஸ் பார்ப்பதை கொஞ்சம் தள்ளி வைத்து இருந்து இருக்கலாம்..” என்று சொன்னவனிடம் விக்ரம் கேள்வியாக பார்த்தான்..
“சித்தார்த் எந்த வகை குறை என்று நீ அப்படி ஒரு வில்லத்தனம் செய்து பிரித்து வைத்த.. நிஜமா நீ சாது லவ் என்று சொன்ன போது வயதில் ஒரு காதல் என்று தான் நினைத்தேன்.. ஆனா. பரவாயில்லை சாத்வீகா அவள் தன் காதலன் தேர்வை சரியாக தான் செய்து இருக்கா..” என்று தன் மனதில் இருப்பதை கூறியவனிடம் விக்ரம் பார்வை மாற்றது பார்த்து கொண்டு இருக்க..
“என்ன தோஸ்த். இன்னும் புரியலையா. பார்த்தலே.. சித்தார்த் தன் ஒய்பை பார்த்த அந்த பார்வை.. யப்பா என்ன லவ்.. அதே தான்டா அந்த பொண்ணும்.. தன் ஹஸ்பெண்ட் தன் பேச்சை தடை செய்யும் போது கூட சித்தார்த் தன் அம்மா என்று சொன்னதுமே.. என்ன சொன்னாங்க. அத்தை அத்தை அத்தை.. என்ன ஒரு பேமிலி பாண்டிங்..
இது நம்ம ஸ்டேட்டஸ்ல பார்க்க முடியுமா.? நீ சொன்னது ஒன்னு உண்மை மிடில் க்ளாஸ் பீப்பிள் தன் பேமிலிக்காக எது என்றாலும் இழப்பாங்க. ஆனா தன் பேமிலிய இழக்க விரும்ப மாட்டாங்க.
ஆனா நம்ம.. இதோ உன்னை எடுத்துக்க… அதே போல் நீ தேர்ந்தெடுத்து உன் சிஸ்டருக்கு மேரஜ் செய்து வைத்த அந்த முகேஷ்..அவன் என்சாய் செய்வான்..
நான் ஒன்னும் சொல்லட்டா.. நீ என்னை அடித்தா கூட பரவாயில்லை.. முகேஷ் உன் சிஸ்டர் அவங்க என்சாய் மட்டும் என்று போய் இருந்தா கூட கண்டு கொண்டு இருக்க மாட்டான்.
ஆனா சித்தார்த் அவன் ஒய்பை யாராவது தப்பா பார்த்தால் கூட கண்டிப்பா முகத்தை உடைக்காது விட மாட்டான்.. இதை தான் நாம மிடில் க்ளாஸ் பீப்பிள் டீசன்சி இல்ல.. என்று சொல்லிட்டு இருக்கோம்..” என்று சொன்னவனின் பேச்சை விக்ரம் மனது ஏற்க தான் செய்தது.
ஆனால் இதில் தன்னையும் ஏதோ சொன்னானே. “நீயும் என்பது போல்.” என்று நினைத்ததை டேனியலிடம் கேட்டு விட்டான்..
“ஆமா உன் சிஸ்டர் லவ்வுக்கு ஸ்டேட்டஸ் பார்த்த நீ உன் லவ்வுக்கு பார்க்கல தானே.. இதே சித்தார்த் பார். அவன் காதலை தன் குடும்பத்திற்க்காக தூக்கி போட்டவன்.. இதே பூவிதழ் ஒருவனை விரும்பி இருந்தா எப்பாடு பட்டாவது அதை சேர்த்து வைக்க தான் பார்ப்பான்..”
விக்ரமுக்கு டேனியல் சொன்ன அனைத்தையும் விட அவன் கடைசியாக சொன்ன.. பூவிதழ் லவ் செய்தால் சேர்த்து வைத்து வைக்க தான் பார்ப்பான் என்ற அந்த வார்த்தை ஆழமாக பதிந்தது..
அதற்க்கு என்று மற்றது பதியவில்லை என்பது இல்லை.. அனைத்தும் புரிந்தது தான். ஆனாலுமே விக்ரம் சொன்னது.
“சித்தார்த் கிட்ட இருந்து சாதுவை நான் ரொம்ப எல்லாம் வில்லத்தனம் செய்து அவங்களை பிரிக்கல.. ஒரே நாள் கொஞ்சம் அரை மணி நேரம் தான்.. பேசினேன்.. பிரிந்து விட்டாங்க.. ஆனா நான்.. எந்த வில்லத்தனம் செய்தும் என் லவ்வை என் கிட்ட கொண்டு வந்து விடுவேன்.. இன்னொன்னும் சொன்னலே.. சித்தார்த் பேமிலிக்காக தன் லவ்வை விட்டான்..
ஆனா அந்த பேமிலியில் யாராவது லவ் செய்தா எப்படியாவது சேர்த்து வைத்து விடுவான் என்று.’தேங்ஸ் நான் இந்த ஹாங்கில்ல யோசித்து பார்க்கல..” என்று பேசியவனை நம்ம என்ன நினைத்து பேசினா இவன் அதை என்னமா புரிஞ்சி இருக்கான்.. என்று முழித்து இருந்தவன் தோள் தட்டி.
“மாப்பிள நீ சொன்னது எனக்கு நல்லாவே புரிஞ்சுது மாப்பிள இருந்தாலும் லவ்வுல செல்பிஷ் இருக்கனும்.” என்று சொன்னவனின் மற்ற பேச்சை விடுத்து..
“விக்ரா இப்போ நீ என்ன எப்படி கூப்பிட்ட.?” என்று கேட்டவனிடம்..
விக்ரம்.. “இதோ உன் போல. இது வரை சித்தார்த் சாது என்று அவங்களுக்கு குடை பிடித்து கொண்டு பேசி இருந்தவன் என் மாப்பிள்ளை என்ற அந்த ஒரு அழைப்பு அது எல்லாம் தூக்கி போட வைத்து விட்டது லே. அது போல செல்பிஷ் காதலுக்கு அவசியம்.. காதலுக்காக யாரை வேண்டும் ஆனாலும் தூக்கி போடலாம்.. ஆனா யாருக்காகவும் காதலை தூக்கி போட கூடாது.. அப்படி தூக்கி போட்டா அது என்ன காதல்.?” என்று சொன்ன விக்ரம் பேச்சும் ஏற்று கொள்வது போல் இருக்க பாவம் விக்ரமனின் செயலை சுட்டி காட்ட நினைத்து டேனியல் இப்போது அவனின் செயலை தனதாக்கி கொண்டான்.
அது தான் காதலில் சுயநலம் இருக்க வேண்டும் என்று சொன்னான் இல்லையா.. அதன் படி..
“என்னை மாப்பிள்ளை என்று கூப்பிட்ட அது உண்மை தானே.” என்று அதிலேயே நிற்க. சிரித்து கொண்டவன்.
“என் சிஸ்டர் லைப் நல்லா ஆனா எனக்கு சந்தோஷம் தான். அதுவும் இப்போ இது போல் அவள் இருக்க நானும் ஒரு காரணம் எனும் போது நிஜமா எனக்கு ஒரு கில்ட்டி பீல் கொடுக்குது.. ஆனா இந்த கில்ட்டி பீல்க்கு எல்லாம் நான் என் லவ்வில் இருந்து பேக் வாங்குவதா இல்ல.
அதே நேரம் நான் என் லவ் சக்சஸ் ஆகும் போது அவளுக்கு ஒரு நல்ல லைப் கிடைச்சா நான் இன்னும் பெட்டரா என் லைப்பை கொண்டு போக முடியும்.” என்று நான் இவ்வளவு தான் என்று தெளிவாக விளக்கியவன் கூடவே.
“நான் வீட்டில் பேசிய பின் எங்க சைட் எல்லாம் ஒகேவா ஆனதும் உங்க வீட்டு சைடில் இருந்து ஏதாவது பிரச்சனை என்றால்,’ என்று விக்ரம் பேசி முடிக்கும் முன் டேனியல் அவசரமாக.
“லவ்வுல செல்பிஷ்ஷா இருப்பது தப்பு இல்ல.” என்று விட்டான்.