சித்தார்த் தன் மனைவி தங்கையோடு வீடு வந்தவனை குடும்பமே வெளியில் நின்று இவர்களுக்காக காத்து கொண்டு இருந்தது.
“அம்மா நான் தான் பத்திரமா கூட்டிட்டு வந்து விடுவேன் என்று சொன்னேன் தானே..” என்று சிறு கண்டிப்புடன் பேசிக் கொண்டே ஹாலுக்கு வந்தவன் அங்கு சாதனாவும் தூங்காது முழித்து கொண்டு இருப்பதை பார்த்து அவளிடமும் கண்டிப்புடன்.
“குழந்தை தூங்கும் போதே தூங்கினா தானே. இப்போ எதுக்காக எங்களுக்காக முழிச்சிட்டு இருக்க.?” என்று அதட்டினான்..
அவன் பேச்சை காதில் வாங்காது எழுந்து சித்தார்த் கையில் இருந்த பையை வாங்கி கொண்டு அதில் இருந்த குழந்தையின் ஜெயின் ட்ரஸ் காப்பூ என்று பார்த்து விட்டு.
“நான் உங்களுக்காக முழிச்சிட்டு இருக்கேன் என்று நினச்சிட்டியா அண்ணா. என் பெண்ணுக்கு என்ன வாங்கி வந்து இருக்க என்று பார்க்க தான் முழிச்சிட்டு இருந்தேன்.. பார்த்துட்டேன் இப்போ தூங்க போறேன்..” என்று சொல்லி விட்டு செல்பவளையே சிரிப்புடன் சித்தார்த் பார்த்திருந்தான்.
தெரியும்.. அவனுக்கு தெரியும்.. தங்கை தங்களுக்காக தான் முழித்து கொண்டு இருந்தாள் என்று.. இருந்தும் தன்னை சமாளித்து விட்டு சென்றவளை பார்க்கும் போது தன் குடும்பத்திற்க்காக காதலை விட்டது தவறே இல்லை என்று நினைத்து கொண்டான்..
அதுவும் காதலிப்பதை விட. காதலிக்கப்படுவது சுகம் தானே.. அதை தினம் தினம் தனக்கு தந்து கொண்டு இருக்கும் மனைவியாக கிடைக்க பெற்றவனுக்கு தன் காதல் தோல்வியில் முடிந்தது எல்லாம் பெரியதாக தெரியவில்லை..
பூவிதழ் தான் என்னவோ போல் இருக்க. அவள் தூங்க போகும் முன்.. “இன்னைக்கு பார்த்ததை மறந்து விடு பொம்மா…?” என்று அண்ணன் சொன்னதும் அதிர்ந்து தான் சித்தார்த்தை பார்த்தாள் பெண்..
அண்ணன் எதை மறக்க சொல்கிறான் என்பதில் குழப்பம்.. மீண்டும் “புரியுதா என் பாஸ்ட் எதுவும் நம்ம பேமிலிக்கு தெரிய கூடாது..” என்றதில் தான் கொஞ்சம் அமைதியானாள் பெண்..அவளின் இந்த அமைதி எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்..
இங்கு விக்ரம் பூவிதழை நெருங்கும் முதல் அடியை எடுத்து வைத்து விட்டு அடுத்த அடியை எடுத்து வைக்க தன் தந்தையிடம் பேசினான்..
“டாட் நீங்க டேனியல் பத்தி என்ன நினைக்கிறிங்க..?” எந்த முகாந்திரமும் இல்லாது கேட்ட மகனை காரணம் இல்லாது ஒரு பேச்சு பேச மாட்டானே என்று நினைத்தாலும் மகன் கேட்ட கேள்விக்கு..
“ம் நல்ல பையன்.. என் மகன் இவ்வளவு நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பான் என்று எனக்கு நீ டேனியல் கூட பழகும் போது தான் தெரியுது..” என்று தன் அபிப்பிராயத்தை சொன்னார்..
விக்ரம் அடுத்து கேட்ட.. “சாதுவை இப்படியே வைத்து கொண்டு இருக்க முடியாதுலே டாட்.. மேரஜ் செய்யனும் தானே..?” என்ற மகனின் பேச்சு பரந்தாமனின் தொழில் மூளை எதையோ புரிய வைத்தது.
உடனே அவரும்.. “டேனியலுக்கு ஏஜ் என்ன விக்ரா. அதோட அவங்க வீட்டில் இதுக்கு ஒத்து கொள்ளனுமே.. “ என்று தான் புரிந்து கொண்டதோடு மட்டும் அல்லாது நடை முறை சிக்கலையும் கேட்டார்..
“டாட் அது டேனி பாடு. நீங்க உங்க ஒபினியனை சொல்லுங்க போதும்.” என்று அதை டேனியல் பார்த்து கொள்வான் என்று விட்டான்..
“நானும் சாதுவை இப்படியே விடும் எண்ணம் எல்லாம் இல்ல.. இன்னும் ஒன் இயர் கழித்து கொஞ்சம் மிடில் க்ளாஸ் பேமிலியா பார்த்து மேரஜ் செய்து வைக்கலாம் என்று தான் எண்ணம்..
ஆனா டேனியல் அவங்களும் நம்ம ஸ்டேட்டஸ் தானே. ஒரே மகன். அதுவும் இங்கு ரிலிஜியன் என்று ஏகப்பட்டது முரணா இருக்கு… அவங்க இதுக்கு எப்படி ஒத்து கொள்வாங்க..” என்று மீண்டும் தன் மகள் வாழ்வில் எந்த சிக்கலும் வர கூடாது என்று கேட்டது எல்லாம் வாஸ்த்தவமான கேள்வி தான்..
ஆனால் அவர் இப்போது சொன்ன மிடில் க்ளாஸ்.. இதே மிடில் க்ளாஸ் கான்செப்ட்டை வைத்து தானே முன் சாத்வீகாவை சித்தார்த்தோடு சேர விடாது தடுத்து நிறுத்தியது.
“அது எல்லாம் வராது டாட்.. எனக்கு சாது ஒத்து கொள்ளனும்.. மத்ததை டேனி பார்த்து கொள்வான் என்று சொல்லிட்டான்..எனக்கு சாது மேரஜை ஒன் இயர் கழித்து எல்லாம் வேண்டாம் சீக்கிரம் முடித்து விடலாம் என்ற எண்ணம்..” என்று தன் மனதில் இருப்பதை சொல்லி விட.
பாவம் அந்த தந்தை விக்ரம் பற்றி தெரியாது.. “குழந்தைங்க வளர்ந்து விடுவாங்க என்று நினைக்கிறியா விக்ரா.?” என்று கேட்டார்.
ஆனால் அவனின் விக்ராவோ.. விவகாரமானவன் என்பது போல்.. “ நோ டாட்.. என் நான் மேரஜ் செய்யும் போது எனக்குள் எந்த கில்டி பீலும் இருக்க கூடாது.. ஐயம் என்சாய் மை மேரஜ் லைப்..” என்றானே பார்க்கலாம்..
“விக்ரா நீ லவ் பண்றியா.?” என்று சந்தேகத்துடன் கேட்க.
உடனே. “யெஸ் டாட்..” என்று விட்டான்.
பரந்தாமன் பதட்டம் எல்லாம் படவில்லை.. “ யார் பெண் விக்ரா. உனக்கு அவ்வளவு பிடித்தம் இருந்தால் உடனே மேரஜ் பண்ணிக்கோ.. நீ ஏன் சாதுக்காக வெயிட் பண்ற.. அவள் தனியா தானே இருக்கா.” என்று மகனுடைய வாழ்வு மகளாக தள்ளி போக கூடாது என்று நினைத்து தன் அபிப்பிராயத்தை கூறினார்..
“இல்ல டாட்.. சாது மேரஜ் முடித்து பண்ணா தான் என் மேரஜ் சரிப்பட்டு வரும்.. நானும் ஹாப்பியா இருப்பேன்..” என்று இவ்வளவு அழுத்தமாக சாத்வீகா திருமணம் பின் தான் என்று சொல்லவும் தந்தைக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது.
அதாவது ஒரு பெண் இப்படி இருக்கும் போது விக்ரா விரும்பும் பெண் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொள்ள வில்லையோ.. இல்லை அவர்கள் வீட்டில் இங்கு பெண் கொடுக்க தயஙகுகிறார்களோ என்று நினைத்து விட்டார்..
அதனால் “பெண் பெண் யார் விக்ரா..?” என்று பரந்தாமன் கேட்டது தான்..
இது வரை தொழில் பேச்சு போல பேசிக் கொண்டு வந்தவனின் முக பாவனையும் மாறி போய் விட்டது.. அதே போல் குரலும் அவ்வளவு மென்மை தன்மைக்கு வந்து விட்டது.
“பூவிதழ் டாட்..” என்று அந்த பூவை கையில் பிடிக்கும் போது கசங்கி விடுமோ என்று எவ்வளவு மென்மையாக கையில் பிடிப்போம்.. அவ்வளவு மென்மை தன்மையுடன் சொன்ன விக்ரமை பரந்தாமன் ஆச்சாரியமாக பார்த்தவர்.
“பெண் யார்.. பிசினஸ் சர்க்குலா.. இல்ல நீ வேறு எனும் போது.?” என்று கேட்ட இந்த கேள்விக்கு பதில் சொல்ல விக்ரம் கொஞ்சம் தயங்கினான் தான்.
ஆனால்.. சொல்லி விட்டான்.. “சித்தார்த் சிஸ்டர் டாட்.” என்று.
பாவம் பரந்தாமனுக்கு அந்த பெயரே மறந்து விட்டது .. இந்த மறதி அவரின் மூப்பின் காரணமா..? இல்லை சித்தார்த் நியாபகம் வைத்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை என்று நினைத்து விட்டாரோ..
அதனால். “சித்தார்த் யார் விக்ரா. உன் கூட படித்தவனா..?” என்று டேனியல் போலவோ என்று நினைத்து கேட்டார் பாவம்..
விக்ரம்.. நோ டாட்..” என்றவன்..
பின்.. “ சாது எக்ஸ் லவ். அந்த சித்தார்த்..” என்றதுமே..
உடனே பரந்தாமன்.. “ இது சரிப்பட்டு வருமா என்று யோசித்து பார்த்தியா விக்ரா..?”
மகனின் திருமண வாழ்வின் மகிழ்ச்சி மகளால் தள்ளி போக கூடாது என்று நினைத்தது போல் தான் மகனால் மகள் எந்த சங்கடத்திற்க்கும் ஆளாக கூடாது என்று நினைத்தார்.
“எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு டாட். நான் பார்த்துக்குறேன்.. எல்லாமே..” என்று மகன் சொன்னாலுமே.
பரந்தாமன்.. “ அந்த பெண் எப்படி உன்னை லவ் பண்றா.” என்று கேட்டவர். பின் ஏதோ யோசித்தவராக..
“அந்த பெண் கிட்ட நீ யார்..? என்று தெரியப்படுத்தலையா இல்ல. அந்த சித்தார்த் சாத்வீகாவை பற்றி வீட்டில் சொல்லாது விட்டு விட்டானா..? அப்படி இருந்தா மேரஜ் என்று வரும் போது அந்த பையன் அவ்வளவு சீக்கிரம் இதற்க்கு ஒத்து கொள்வான் என்று எனக்கு நம்பிக்கை இல்ல. அப்போவே அவன் அவ்வளவு தன்மானம் பார்த்தவன்….” என்று தன் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி விட.
“டாட் கூல் கூல்.. முதல்ல என்னை யார் என்று பூவம்மாவுக்கு தெரியும்.. அதாவது நான் சொல்லாமலேயே.. அன்று சித்தார்த் கூட பூவம்மாவும் வந்து இருக்கா..” என்று விக்ரம் சொன்னதுமே..
“அப்போ எப்படி உன்னை லவ் பண்றா.?” என்று முன்னை விட அதிர்வுடன் கேட்க.
“ நான் இன்னும் அவள் என்னை லவ் பண்றா என்று ஒரு தடவை கூட சொல்லலையே டாட்.. நான் தான் லவ் பண்றேன்.. இனிமேல் தான் அவளை என்னை லவ் பண்ண வைக்கனும்.. அதுக்கு உண்டான பிராசஸை தான் பார்த்துட்டு இருக்கேன்..” என்று ஏதோ பிராஜெக்ட் பற்றி பேசுவது போல் பேசிக் கொண்டு இருந்தவனை பயத்துடன் பார்த்தாலுமே.
ஏற்கனவே பெண் வாழ்க்கை இப்படி ஆகி போனதில் மனம் வருத்தத்தில் இருக்கும் பரந்தாமன்.
“எது என்றாலும் பார்த்து செய் விக்ரா. எனக்கு நீயும் ஹாப்பியா இருக்கனும்.. அதே போல சாதுவும் ஹாப்பியா இருக்கனும்.. என் மகள் எந்த நிலையிலும் சங்கடத்துடன் இருக்க கூடாது என்று விட்டார்..
சித்தார்த் வீட்டில் அடுத்த வரவாக அன்று காலை ப்ரீத்திக்கு பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
நார்மல் டெலிவரிக்கு வழி இல்லை என்று சொல்லி விட்டு சிசரியன் மூலம் சித்தார்த் வீட்டில் மீண்டும் ஒரு பெண் குழந்தையே அவர்கள் வீட்டிற்க்கு கிடைக்க..
சிசரின் என்பதால் நான்கு நாட்கள் கழித்து ஐந்தாம் நாள் தான் ப்ரீத்தி தேவதையோடு மருத்துவமனையில் இருந்து தன் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்..
பூவிதழ் அனைத்து கம்பெனிக்கும் மெயிலில் வேலை தேடும் படலாம் போய் கொண்டு இருக்க.. அவளின் தேடலுக்கு முடிவாக வெளி நாடான ஜெர்மனியில் இருக்கும் ஒரு கம்பெனி அவளை ஒரு நாள் சொல்லி இன்டெர்வ்யூ செய்ய உள்ளதாக கூற.
அதில் மகிழ்ந்து போய். இந்தியாவில் வேலை கிடைத்து பின் வெளி நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தவளுக்கு நேரிடையாக வெளி நாட்டில் வேலை என்றதில் அவள் அவ்வளவு மகிழ்ந்து போனாள்..
பாவம் இந்த விக்ரம் சொன்ன தன் லவ் சக்சஸ் செய்ய செய்ய தான் எடுத்த அந்த பிராஜெக்ட்டின் முதல் படி தான் அந்த வேலை என்று தெரியாது அதில் விழ மகிழ்ந்து போய் எப்படியாவது தன் வீட்டவர்களை சம்மதித்து வைத்து விட வேண்டும் என்ற முனைப்போடு முதலில் தன் அண்ணனிடம் பேச சென்றாள்..