மறு நாள் சித்தார்த் ப்ரீத்தி குழந்தைக்கு தீட்டு கழித்து பெயர் சூட்டும் விழா. காலையில் எப்போதும் போல சித்தார்த் பூவிதழ் நாளைக்கு விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து விட்டனர்..
உறவு முறைகளில் வீட்டு பெண்ணான சாதனா முன்பே குழந்தை பிறப்புக்கு இங்கு இருப்பதால் ஜெய சுதா அவள் கணவன் மாமியார் வீட்டவர்கள் எனறு முன் தினமே வந்து விட்டனர்..
அதனால் பூவிதழ் விழா முடிந்து உறவுகள் சென்ற பின் அண்ணிடமும் வீட்டவர்களிடமும் தன் வேலையை பற்றி பேசலாம் என்று முடிவு செய்தாள்.
அதன் படி விழாவுக்கு உண்டான வேலைகளை மட்டும் பார்த்து கொண்டு இருக்க.. ஜெய சுதாவின் மாமியார்..
“பூவிதழை என் சொந்தத்தில் கேட்டாங்க. என் பங்காளி தான்.. நான் பார்த்து வளர்ந்த பையன்.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..” என்று அந்த மாப்பிள்ளைக்கு ஜெயா அக்காவின் மாமியார் மார்க்கெட்டிங் செய்து கொண்டு இருந்தார்.
அனைத்து தாயும் போலவே பத்மினி பெண்ணுக்கு சீக்கிரம் மணம் முடித்து விடும் எண்ணத்தில் அந்த பேச்சை ஆர்வமாக தான் கேட்டு கொண்டு இருந்தார்.
ஆனால் சித்தார்த். “சாரி அத்தை பொம்மா இரண்டு வருடமாவது வேலைக்கு போன பின் தான் கல்யாணம் செய்யும் எண்ணம்..” என்று தன் முடிவை கூறிவிட்டான்..
ஜெய சுதாவின் மாமியார் தன் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு கொண்டு இருந்த தன் சின்ன சம்மந்தி பத்மாவை பார்த்தார்.. அவர் என்ன சொல்வார் என்று.
ஆனால் சித்தார்த் இப்படி சொன்னதுமே.. அடுத்த வேலை என்ன என்று பார்க்க சென்று விட்டார்..
அது ஜெய சுதா மாமியாருக்கு அவரை அவமானம் படுத்தியது போல் ஆகி விட்டது..அந்த வீட்டில் பெண் எடுத்த சம்மந்தி தான் ஒரு இடம் கொண்டு வந்து இருக்கிறேன்..
அதை பற்றி விசாரிக்காது ஒரு சின்ன பையன் பேச்சுக்கு இந்த வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஆடுவார்களா.. .இந்த வீட்டின் முதல் சம்மந்தி.. அனைவரையும் விட பெரிய மனுஷி என்று நினைத்தவர்..
பொதுவாக பேசுவது போல.” ஆமாம் ஆமாம்.. சம்பாதித்து கொஞ்சம் சேர்த்தால் தான் உனக்கும் கொஞ்சம் சுலுவா இருக்கும்.. உனக்கும் இப்போ மனைவி குழந்தை என்று வந்து விட்டது லே..”
மனது புண்பட வேண்டும் என்று தான் அந்த மூத்த பெண் மணி அந்த வார்த்தையை கூறியது.
பத்மினியும் பாக்யவதி மனதையும் அந்த பெண் மணி நினைத்தது போன்று பலமாக தாக்கியது தான்..
அதுவும் பாக்யவதிக்கு ப்ரீத்தி வீட்டவர்கள் எதை வைத்து பிரச்சனை செய்கிறார்கள் என்று தெரியுமே. ஒரே ஆண் மகன். சின்ன வயதில் இருந்து இந்த வீட்டுக்கு என்ன எல்லாம் பார்த்து பார்த்து செய்கிறான்.. அவனுக்கு இந்த பெயரா..? ஒரு அன்னையாக அந்த வார்த்தையில் அவர் மனது அடிப்பட்டு தான் போனது. இருந்தும் ஒன்றும் கூறவில்லை.. பெண் கொடுத்து இருக்கிறேனே என்று அமைதியாக இருந்து விட்டார்..
பத்மினியும் அய்யோ என்று பாவம் போல் சித்தார்த் முகத்தை பார்த்தார்.. அவருக்கு எப்போதும் முன் நின்று பேசுவதில் பயம் இருக்கும்..அது கணவன் மறைவுக்கு பின் இன்னும் தான் அதிகம் ஆனது.
ஆனால் சித்தார்த்தோ.. “நீங்க சரியா தான் சொன்னிங்க அத்தை..” என்று விட்டான்.. முறைத்து நின்று கொண்டு இருந்த பொம்மாவை கண் ஜாடை செய்து கொண்டே..
ஆனால் ஜெய சுதா தன் மாமியார் பேச்சை விடுவதாக இல்லை.. மாமியார் பேச்சுக்கு ஒத்து ஊதுவது போல் தான்..
“ஆமா அத்த இப்போ பெண்களும் சம்பாதித்து அப்பா அம்மா அண்ணாவுக்கு அதிகம் பாரத்தை ஏத்த கூடாது என்று நினைக்கிறாங்க..
நான் தான் நல்ல இடம் என்று நீங்க வந்து கேட்ட போது என்னை கட்டி கொடுத்து விட்டாங்க.. எல்லாம் என் சித்தப்பா தான் செய்து வைத்தது.
யப்பா யப்பா எவ்வளவு கடன்.. ஆனால் என் தங்கை சாதனா சம்பாதித்து அண்ணன் கிட்ட கொடுத்தா. அது அண்ணாவுக்கு எவ்வளவு சுலபமா ஆகிடுச்சி தெரியுமா.. பெண் பிள்ளைகளும் சுமையை குறைக்கனும் அத்த.
இப்போ பார் உங்க சின்ன மகளுக்கு எல்லாம் நாங்களே செய்து என் பாதி நகை போய் மொத்த சேமிப்பும் கரைந்து கடன் வேறு இருக்கு.. பெண்ணுக்கும் கொஞ்சம் பொறுப்பு இருப்பது நல்லது தான் அத்தை..” என்று விட்டாள்.
கல்லூரி முடிந்த உடனே காதல் என்று வந்து நின்று விட்டாள்.. ஜெய சுதாவின் நாத்தனார்.. காதல் திருமணத்தில் தான் இந்த ஜாதி.. வரதட்சணை ஒழியும் என்று சொன்னவங்க மட்டும் ஜெயா கண்ணில் பட்டால் அவ்வளவு தான்.. ஏன் என்றால் காதல் மட்டும் தான் நம் கையில் ..திருமணம் பெற்றோர் தானே செய்து வைப்பது என்று காதலன் பெற்றோர் பின் மறைந்து கொள்ள.
முன் நின்ற பெற்றோர்கள் ஒரு முழம் நீளம் நீட்டி விட்டார்கள்.. ஒரே மகன் இது எல்லாம் செய் என்று..
ஜெயா கணவன்.. “ இவ்வளவு என்னால் எப்படி முடியும்..” என்று சொன்னது தான்.. அனைவரும் ஹாலில் இருக்க அவர்கள் முன்னவே..
“நான் சாவுறேன்..” என்று சொல்லி கதவை அடைத்து அவளின் அம்மாவின் தூக்க மாத்திரை போட்டு நாடகம் நடத்தியதில், அந்த வரதட்சணை செலவோடு மருத்துவமனை செலவையும் இழுத்து விட்டது தான் மிச்சம் ஆனது இவர்களுக்கு.
இவர்கள் தன் வீட்டில் வந்து நாட்டாமை செய்கிறார்களா..? என்று அனைத்து கோபத்தையும் காட்டி விட்டாள்..
அடுத்து ஜெயா மாமியார் வாயை திறக்கும் மூச் தான்.
பூவிதழ் கூட.. “அக்கா உங்க கிட்ட நான் ட்ரையினிங் எடுத்துக்கனும் கா.” என்று கை கொடுத்து பாராட்டினாள்..
சித்தார்த்த்தும் தன் தங்கை ஜெயாவின் பேச்சை தடுத்து நிறுத்தவில்லை.. புகுந்த வீட்டில் விட்டு கொடுத்து போகலாம் தவறு கிடையாது.. அனைத்தையும் விட்டு இருக்க வேண்டும் என்று எந்த தலையெழுத்தும் பெண்களுக்கு கிடையாது என்பது சித்தார்த்தின் எண்ணம்..
அடுத்து எந்த வித பிரச்சனையும் இல்லாது சித்தார்த் ப்ரீத்தியின் குழந்தைக்கு மனைவி தன் பெயர் இரண்டும் கலந்தது போல்.. ப்ரீசிதா என்று பெயர் இட்டனர்..
பூவிதழ் அண்ணா. “ இனி இந்த ப்ரீ அழைப்ப்பு யாருக்கு.. குட்டிம்மா வளர்ந்த பின் நீங்க ப்ரீ என்று கூப்பிட்டா உங்க பெரிய ப்ரீ வருவாங்கலா சின்ன ப்ரீ வருவாங்கலா..?” என்று கலாட்டா செய்தவளுக்கு சித்தார்த்..
“எந்த ப்ரீ ப்ரீயா இருக்குறாங்கலோ.. அந்த ப்ரீ வருவாங்க. இது எல்லாம் ஒரு விசயமா..?” என்று அவனுமே தங்கையின் கலாட்டாவில் பங்கு கொண்டான்,..
இந்த கலாட்டாவை எல்லாம் வந்த உறவுகள் பார்த்து சிரித்து கொண்டனர்.. வீட்டின் இரு ஆண்கள் இறந்த பின் என்ன ஆகுமோ என்று சொந்தங்கள் நினைத்து கொண்டு இருக்க.
அன்று போல். இல்லை இல்லை அதோடு சொந்தம் இறுகி.. இன்று ஒரு குடும்பமாக பார்த்த உறவுக்குள் தங்கள் வீட்டில் நடக்கும் அரசியல் நாடகத்தை நினைத்து பெரும் மூச்சு விட்டு கொண்டனர்.
ஊர் மொத்தமும் தங்கள் குடும்பத்தின் மீது தான் என்று அனைவரையும் உட்கார வைத்து பாக்யவதி சுத்தி போட்டார்..
அனைவரின் முகத்தையும் பார்த்த பூவிதழ்.. எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க.. நேற்று நடத்திய அந்த ஆன் லைன் இன்டெர்வ்யூவில் அவள் தேர்வு ஆகி விட்டாள்.. அவளிடம் பாஸ்போர்ட் உள்ளது மற்றதை பேசி விட்டால், கம்பெனி மூலமாகவே தாங்கள் விசாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விடுவதாக சொல்லி விட்டனர்.
இனியும் இதை பற்றி வீட்டில் சொல்லாது இருப்பது தவறு.. ஆனால் நேரம் பார்த்து தான் பேச வேண்டும்.. சென்னையில் வேலை என்றால் வீட்டில் யாரும் தடை சொல்ல மாட்டார்கள்.. எடுத்த உடன் வெளி நாடு என்றால் ஒத்து கொள்வது சற்று சிரமம்.. தான் என்று இவள் எப்படி வேலை விசயமாக பேச்சை ஆரம்பிப்பது என்று யோசிக்கும் போதே..
ஏதோ பதட்டமாகவே இருக்கும் தங்கையையே கவனித்து கொண்டு இருந்த சித்தார்த்..
“பொம்மா என் கிட்ட. இல்ல எல்லோருமிடமும் ஏதாவது சொல்லனுமா..?” என்று தங்கையை அறிந்தவனாக கேட்டான்..
இனி தள்ளி போட முடியாது என்று நினைத்து.. “ஆமா அண்ணா. நேற்று நான் ஒரு இன்டெர்வ்யூ அட்டெண் செய்தேன். வேலை கிடைத்தது போல் தான்.” என்று சொன்னதுமே..
சித்தார்த் யோசனையுடன்.. “இதை சொல்ல ஏன் தயக்கம்.. நீ வேலை தேடுவதும் நீ வேலைக்கு போக ஆசை படுவதும் எங்க எல்லோருக்கும் தெரியும் தானே..” இதில் வேறு ஏதாவது இருக்கோ என்று நினைத்து தான் கேட்டான்.
இருக்கு என்பது போல் தான் பூவிதழ். “ இல்ல அண்ணா உங்களுக்கு இதுவும் தெரியும்.. ஒரு இரண்டு வருஷமாவது நான் வெளி நாட்டில் வேலை பார்க்க ஆசை என்று..”
அதே யோசனை முகபாவனையுடன் தான் சித்தார்த்.. “ஆமாம்..” என்றது..
“இப்போ எனக்கு வெளி நாட்டில் தான் அண்ணா வேலை கிடைத்து இருக்கு..” என்றதும். சித்தார்த் யோசனையுடன் தங்கையை பார்த்தான்.. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் வீட்டவர்கள்.. “அது எப்படி வெளி நாட்டுக்கு எல்லாம்.. நேத்து பார்த்த லே. ஜெயா மாமியார் என்ன சொன்னாங்க என்று.”
தன் அன்னை பேச்சை ஆரம்பிக்கவும்.. பூவிதழ்.. “அன்னைக்கும் இன்னைக்கும் நம்ம பிரச்சனை எல்லாம் நாம் தான் பார்த்து கொள்கிறோம் அம்மா.. மத்தவங்க ஆயிரம் சொல்லுவாங்க. ஏன் அவங்க இன்னொன்றையும் தான் சொன்னாங்க.. அண்ணனுக்கு மனைவி குழந்தை என்று வந்து விட்டது.. இனி அவர் குடும்பத்தை பார்த்துக்க வேண்டாமா என்று.?” என்று கோபத்துடன் சொல்லி கொண்டு இருக்க
பூவிதழின் இந்த பேச்சுக்கு ஏதோ யோசனையில் அமைதியாக இருந்த சித்தார்த்.. “பொம்மா.” என்று அழுத்தி அழைத்ததுமே பொம்மா அமைதியாகி விட்டாள்..
மற்றவர்கள் செயல் பிடிக்கவில்லை என்றால். யார் என்றாலுமே சித்தார்த் திட்டவோ.. கத்தவோ மாட்டான்.. அவர்களின் பெயர் அழுத்தம் கொடுத்து அழைக்கும் விதத்திலேயே தெரிந்து விடும்..
அண்ணன் அந்த அழைப்பில் அமைதியாகி விட்டாலுமே, அவளுக்கு தானே தெரியும்.. தன் அண்ணன் என்ன எல்லாம் இழந்து உள்ளான் என்று.
இன்று அண்ணன் திருமணம் செய்து கொண்டு அண்ணி குழந்தை என்று மகிழ்ச்சியோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலுமே, இந்த வாழ்க்கை அண்ணன் வாழ்வானா.. என்று இத்தனை ஆண்டுகள் மனதில் பயந்து கொண்டு இருந்தது அவளுக்கு தானே தெரியும்..
மகளின் இந்த பேச்சில் பத்மினி வாய் பொத்தி அழ. சித்தார்த். “சித்தி அவள் சின்ன பெண் அவளுக்கு என்ன தெரியும்.. அவள் பேசினதுக்கு அழுவிங்கலா..?” என்று கண்டிப்புடன் கேட்க..
அழுகையை முந்தி கொண்டு துடைத்தாலுமே, அதையும் மீறி கண்களில் கண்ணீர் வர. சித்தார்த்.. “சித்தி..” என்ற இந்த அழைப்பில் அழுத்தம் இல்லை.. ஆனால் என்ன இது என்பது போலான பாவனை தான்.
“ஒன்னும் இல்ல சித்து.ஒன்னும் இல்ல.” என்று இன்னும் அழுத்தி கண்களை துடைத்து கொண்டவர்.
“மத்தவங்க பேசுனது கூட பரவாயில்லை.. ஆனா அண்ணி.. ப்ரீத்தி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தது எனக்கு எவ்வளவு ஆசுவாசம் தெரியுமா..? ஆனா அண்ணியே.. முடியல தம்பி.. “ என்று அடக்கியும் அடங்காது பத்மினியின் அழுகை கூட.
பாக்யவதி சாதனா ஜெயா பொம்மா.. என்று பத்மினி சுற்றி இருக்க சித்தார்த் சித்தியை அணைத்து கொண்டவனாக..
“சித்தி என்ன இது சின்ன குழந்தையாட்டாம்..?” என்று சொன்னதுமே.. அழுகையிலும் சிரித்த பத்மினி..
“உன் சித்தப்பா கூட என்னை அப்படி தான் சொல்வார்.. என்ன இது சின்ன குழந்தையாட்டம் என்று.. ஆனா இப்படி விட்டுட்டு போவார்..” என்று பேசியவரின் மனநிலை சித்தார்த்துக்கு நன்கு விளங்கியது.
“கஷ்டமா இருக்கு சித்து.. நாங்க அட்டை பூச்சி போல.” என்ற பேச்சில் சித்தார்த்..
“சித்தி என்ன பேச்சு இது.. அன்னைக்கு என் அப்பா இறந்த போது சித்தா தான் எல்லாம் செய்தார்.. அப்போ நான் அம்மா ஜெயா எல்லாம் அட்டை பூச்சிங்கலா சித்தி.” என்றதுமே..
“அய்யோ என்ன சித்து.?” என்று பதறி பேச.
“பின் என்ன பேச்சு சித்தி இது..? பேசுறவங்க பேசுவாங்க சித்தி;; நாம அது எல்லாம் யோசித்தா வாழ முடியாது.. இப்போ பிரச்சனை பொம்மா. அது என்ன என்று பார்க்கலாம்..” என்று முன் பேசிய பேச்சை சித்தார்த் நியாபகம் படுத்தினான்..