“என்ன சொன்ற சாது..” தன் அதிர்ச்சி விலகாது கேட்டவனிடம்..
“மேர்ஜ் ஒன் வீக் முன் நான் மேக்கப் ட்ரையலுக்கு போய் இருந்த போது சித்தார்த் அங்கு வந்து என்னை பார்த்தார் விக்ரா.. நானும் மனசு மாறி தான் வந்து இருக்கார்.. என்னை இன்னொருவன் பக்கத்தில் சித்தார்த்தால் கண்டிப்பாக பார்க்க முடியாது என்று அவனை பார்த்து நான் அவ்வளவு சந்தோஷப்பட்டேன் விக்ரா..” என்று சாத்வீகாவின் இந்த பேச்சில் விக்ரம் முன்பை விட அதிர்ந்து தான் போனான்..
“அப்போ சித்தார்த் திரும்ப.. வந்து இருந்தா ஏத்து இருந்து இருப்பியா.. சாது..” என்று கேட்டவளிடம் உடனே பதில் இல்லை..
சிறிது நேரம் சென்று.. “ நான் சித்தார்த்தை முதன் முதல்ல பேங்கில் தான் பார்த்தேன் விக்ரா.. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பின் இதை பத்தி பேசலாமா.. தப்பா தெரியல..
ஆனா ஒன்னு பஸ்ட் லவ்… கண்டிப்பா யாராலும் மறக்க முடியாது விக்ரா..ஒரு வயதான முதியோர் தொகை பற்றி அங்கு வேலை செய்தவங்க கிட்ட கேட்ட போது அந்த பெண் அந்த வயதானவரை அப்படி எரிந்து விழுந்தா..
அப்போ சித்தார்த் துணை மேலாளரா இருந்தார். அதை பார்த்துட்டு அந்த லேடியை கண்டித்ததோடு அவரே அந்த வயதானவருக்கு தேவையானதை கிட்ட இருந்து செய்து கொடுத்தார்.. அவர் மட்டும் இல்ல ஒவ்வொரு கஸ்டமர் கிட்டேயும் அவர் அப்படி தான் கேர் எடுத்து செய்து கொடுப்பார்.. எனக்குமே கார் லோன் என்று எல்லாம் செய்து கொடுத்தார்..
அப்போ ஒரு கஸ்டமருக்கே இப்படி செய்பவர்.. பேமிலிக்கு.. குறிப்பா ஒய்பை எப்படி பார்த்துப்பார்..? அந்த நிலையில் யோசித்த போது எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிடுச்சி விக்ரா…அதுவும் வீட்டில் நீயும் சரி.. டாடியும் சரி.. எப்போவும் பிஸி.. நான் உங்களை குற்றம் சொல்லலே விக்ரா.. நம்ம பிசினஸ் அப்படி கொஞ்சம் ஏமாந்தா கூட.. எல்லாம் போயிடும் தெரியும்.. இருந்தும் நம்ம டீன் ஏஜ்லே அம்மா இறந்து.. அடுத்து நான் நம்ம வீட்டில் ரொம்ப லோன்லியா பீல் ஆனேன்..
நீ பையன் வெளியில் பிரண்ஸ் என்று நீ அந்த பக்கம் போயிட்ட.. அப்பா பிசினஸ் என்று அதில் அம்மாவை மறக்க இன்வால்வ் ஆகிட்டார்..
ஆனா நான்.. நான் வெளியிலோ வேறு ஏதாவதில் கவனம் செலுத்தி இருக்கலாம் உங்களை போல.. ஆனா அது என்னவோ எனக்கு எதிலும் பிடித்தம் இல்ல. உனக்கே தெரியும் எனக்கு பிரன்ஸ் சர்குலும் கிடையாது என்று..
அப்போ சித்தார்த் எல்லோர் மீதும் கேரிங்கா இருப்பதை பார்த்து அந்த கேரிங் எனக்கு வேண்டும் என்று தோனுச்சி.. லவ் சொல்லாத முன்னாடியே.. என் கிட்ட பேசும் முதல் வார்த்தை.. சாப்பிட்டியா..? ஏன் டல்லா இருக்க..?
வெளியில் நிறைய சாப்பிடாதே.. நேரம் ஆகி விட்டா நேரத்தோடு வீட்டுக்கு போ..இது போல் தான் விக்ரா..
அதே போல என் கிட்ட பேசிட்டு இருக்கும் போது வீட்டில் இருந்து போன் வந்தா போதும்.. அம்மா சித்தி பொம்மா அப்படி பாசமா பேசுவாங்க. அது எல்லாம் எனக்கு வேண்டும் என்று நினச்சேன்..ஆனா பார் விக்ரா நான் ஆசைப்பட்ட அந்த கேர் எனக்கு கிடைக்கவே இல்ல. அது லவ் செய்த சித்தார்த் கிட்டே இருந்தும் இல்ல. மேரஜ் செய்து கொண்ட முகேஷ் கிட்ட இருந்தும் இல்ல..” என்று இத்தனை பேசும் இந்த சாது ஏன் சித்தார்த்தை விரும்பிகிறேன் என்று சொன்ன போது சொல்லவில்லை என்று நினைத்து கொண்டான் விக்ரம்..
இது வரை இவ்வளவு வெளிப்படையாக தன்னிடம் இவள் ஏன் பேசியது கிடையாது..
அதுவும் திருமணம் முன் இவளிடம் வந்து முகேஷை பற்றி சொல்லி எச்சரித்ததை ஏன் தன்னிடம் கூறவில்லை.. என்று நினைத்ததை கேட்டும் விட்டான்..
அதற்க்கு சாத்வீகா சொன்ன. “சொல்ல தோனல.. சித்தார்த்தை அப்போ பார்த்ததுமே.. எங்க காதலை பத்தி பேச தான் வந்து இருக்கான் என்று நினைத்தேன்.. ஆனா அவன் என் கல்யாணத்தை பற்றி அதுவும் முகேஷை பற்றி சொன்னதோடு என்னை நினைத்து எல்லாம் உன் வீட்டில் அவசரமா உனக்கு மேரஜ் செய்ய வேண்டாம்.. ஏன்னா இனி உன்னை எந்த விதத்திலும் டிஸ்ட்டெப் செய்ய மாட்டேன். நல்ல மாப்பிள்ளையா பார்த்து பொறுமையா செய்ய சொல்.. முடியல விக்ரா. நான் அவனுக்கு அவ்வளவு தானா.
ஆனா நான் முகேஷோட அந்த மேரஜை மனபூர்வமா தான் ஏத்து கொண்டேன். ஆனா அங்கேயும் நான் நினைத்த அந்த கவனம் எனக்கு கிடைக்கல விக்ரா. நான் வாழ்க்கையில் மொத்தமா ஏமாந்து போயிட்டேன்.. என்று எல்லோருக்கும் தெரியும் படி அம்மா வீட்டிற்க்கு வர கூடாது.. வர கூடாது என்று நினச்சேன்.. ஆனா இப்போ எல்லோரும் எதிரிலும் என் காதலில் மட்டும் இல்ல.. வாழ்க்கையிலும் தோத்தவளா நிற்கிறேன் விக்ரா..” என்று இவ்வளவு பேசிய சாத்வீகாவின் கண்களில் துளி கண்ணீர் இல்லை.. ஆண்டுக்கணக்காக இதை இவள் நினைத்து கொண்டு இருந்து இருக்கிறாள் போல்..
டேவிட் கூட சொன்னானே..ஏதோ ஒரு விசயத்திற்க்காக தான் உன் சிஸ்டர் முகேஷ் செய்வதை பொறுத்து போய் கொண்டு இருந்து இருக்கா என்று.. அது சித்தார்த்தாலா. என்று விக்ரம் நினைக்கும் போதே சாத்வீகா..
தொடர்ந்து.. “சித்தார்த் கேர் எல்லாம் அவன் குடும்ப உறவுக்கு மட்டும் தான் போல்.. ஆர்டர் செய்த புட் சூடா சாப்பிடனும் என்று ஒய்ப் சிஸ்டரை அழைச்சிட்டு போனார். லே விக்ரா.?” என்று கேட்டவளுக்கு விக்ரம் பதில் கூறவில்லை.
ஏன் என்றால் சித்தார்த்தின் அந்த அக்கறை சாத்வீகாவிடம் ப்ரேக்கப் ஆன பின்னும் இவள் மீது இருந்ததினால் தானே திருமணத்திற்க்கு முன் மாப்பிள்ளையின் குணம் சரியில்லை என்று எச்சரித்து சென்று இருக்கிறான்.
ஆனால் இப்போது விசயது அது கிடையாது. அவள் வீட்டு பெண்ணை தான் திருமணம் செய்த பின்.. இரு வீட்டவர்களுக்கும் போக்குவரத்து இருக்க தானே செய்யும்.. இவள் இது போல் தனித்து இருந்தால், இவள் இன்னும் தனக்குள் ஒண்டிக் கொள்ள மாட்டாளா டேவிடோடான திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க திட்டமிட்டான்..
அதாவது விரைவில் என்றால், இவன் ஜெர்மனி போவதற்க்கு முன் முடித்து விட நினைத்தான்..
ஆம் ஜெர்மனி தான்.. பூவிதழை இந்தியாவில் கண்டிப்பாக நெருங்க முடியாது.. அவள் தனித்து இருக்கும் போது தான் அவளை நெருங்க முடியும் என்பது அவனின் திட்டம்..
நெருங்குவது என்றால் தவறாக எல்லாம் இல்லை.. மனதால் நெருங்குவது தான் அவனின் திட்டம்.. ஆனால் அவன் நினைத்தும் பார்க்காது உடலால் நெருங்கி விடுவோம் என்பதை.. அதுவும் அதற்க்கு முதல் அடி எடுத்து வைக்க போவது அவனின் பூவம்மா என்று தெரியாது தான் டேனியலிடம்..
தன் பூவம்மா அடுத்த வாரம் ஜெர்மனிக்கு போக போகிறாள்.. நான் மூன்று மாதம் கழித்து தான் போவேன்.. அதற்க்குள் சாதுவோடான உன் மேரஜ் முடிந்து விடுமா என்று கேட்ட போது..
“என் சைட் ஜஸ்ட் ஒன் வீக். போதும். நீ அங்கிள் கிட்ட பேசிட்டதா சொன்ன சாது.” என்று தயங்கியவனிடம்.. விக்ரம் அனைத்தும் சொல்லி விட்டான்..
கேட்ட டேனியல் அமைதியாகி விட. விக்ரம் “டேனி.. என்ன யோசிக்கிற.. மேரஜ் முன் கூட சித்தார்த்தை அவள் எதிர் பார்த்து இருந்து இருக்கா.. அதை யோசிக்கிறியா..” என்று கேட்ட விக்ரமனிடம்..
“ஏன் விக்ரா எப்போ பார்த்தாலும் நீ இப்படியே பேசிட்டு இருக்க. உன் லவ் தான் ப்யூரா.. என்னுடையது எல்லாம் இல்லையா..? நான் யோசித்தேன் தான்.. சாதுவை பற்றி இல்ல சித்தார்த்தை பற்றி..
இப்படி வேண்டாம் என்று ஒதுக்கியவனையும் எதிர் பார்த்துட்டு இருந்து இருக்கா.. தன் பேமிலிக்கு முக்கியத்துவம் கொடுத்த சித்தார்த் ஏன் லவ்வுக்கு இம்பார்ட்டாண்ஸ் கொடுக்கல.. அது தான்.. சரி அதை விடு.. நான் என் பேமிலி கிட்ட பேசுறேன். கண்டிப்பா கூட என் பேரன்ஸையும் சென்னைக்கு அழச்சிட்டு வருவேன்.. நீ என் சைடில் எல்லாத்துக்கும் ரெடியா இரு .” என்று சொன்னதோடு மும்பைக்கும் சென்று அவன் சொன்னது போல் தான் சாத்வீகாவோடான தன் திருமணத்திற்க்கு சம்மதம் வாங்கி விட்டான்..
என் வீட்டில் சம்மதம் என்பதை டேனியல் விக்ரமுக்கு அழைத்து பேசியின் மூலம் சொல்ல. விக்ரமினால் நம்ப முடியவில்லை..
அதுவும் முன்மை சென்ற மறுநாளே. “உன் வீட்டில் மேரஜூக்கு உண்டான ஏற்பாட்டை கவனி.. முறைப்படி என்றால் இன்னும் இரண்டு நாளில் நான் என் பேரண்ஸ்ஸோட சென்னை வருகிறேன்.. யாரும் மதம் மாற தேவையில்லை.. நானும் சாதுவை மாற சொல்ல மாட்டேன்.. அதே தான் எனக்கும்..” என்று கட கட என்று டேனியல் பேசியதில் விக்ரம்..
“எப்படி டேனி.. உடனே சம்மதித்து விட்டாங்க..?” என்று கேட்டதற்க்கு மட்டும் டேனியலிடம் பதில் இல்லை..
விக்ரம் யோசித்தான் தான்.. அவனின் யோசனைக்கு டேனியல் ..” என்னை உனக்கு தனிப்பட்டு எல்லா விசயமும் தெரியும்.. உனக்கு வேறு ஏதாவது தெரிந்து கொள்ளனும் என்றால் விசாரிச்சிக்கோ. ஆனா இப்போ என்னிடம் கேட்பது என் பேரன்ஸ்ஸோட பர்சனல் விசயம்..” என்றதும் விக்ரம் அடுத்து எதுவும் கேட்கவில்லை..
டேனி விக்ரமிடம் பேசிய உடனேயே மும்பை வந்து விட்டான்..
அவர் தந்தை சார்லஸ்.. “என்ன டேனி.. சென்னை எல்லாம் எப்படி இருக்கு.. உன் முகத்தை பார்த்தால் உனக்கு சென்னை ரொம்ப பிடித்து விட்டது போல.”
மனைவி மேரி உணவு பரிமாற சாப்பிட்டு கொண்டே சார்லஸ் தன் மகனிடம் கலாட்டா செய்ய தான் அந்த பேச்சை ஆரம்பித்தார்.
ஆனால் டேனியலோ.. “என் முகம் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் சென்னை பிடித்து இருக்கு என்று மட்டும் சொல்ல முடியாது டாட்.. சென்னையில் இருக்கிற ஒருத்தவங்களை பிடிச்சி இருந்தா கூட என் முகம் சந்தோஷத்தை காட்டும் தானே..” என்ற டேனியலின் இந்த பேச்சில் உணவு உண்டு கொண்டு இருந்த சார்லஸ்சும் சரி.. உணவு பரி மாறிக் கொண்டு இருந்த மேரியும் சரி மகனின் முகத்தையே பார்த்தனர்..