அவர்களுக்கு ஏதோ ஒன்று புரிவது போல்.. ஆனால் சார்லஸ் அப்போதும் விளையாட்டாக.. “ஒ விக்ரமை உனக்கு அந்த அளவுக்கா பிடித்து இருக்கு.?” என்று கேட்டு சிரித்து விட..
“டாட் … விக்ரமை பிடிக்கும் தான் .. ஆனா இந்த பிடித்தம் விக்ரம் மீது இருந்தா நான் அவன் இல்ல டாட்.” என்று அவனுமே விளையாட்டு பேச்சு பேச. டேனியல் அன்னை மேரி தான்.. “ சார்லஸ் டேனி விளையாட்டு பேச்சு போதும்..” என்று அதட்டியவர் மகனிடம்..
“பெண் யார் டேனி..?” என்று கேட்டார்.
டேனியலும் எந்த மழுப்பலும் இல்லாது..” விக்ரம் சிஸ்டர்.” என்று விட்டான்..
சார்லஸோ சிறிது யோசித்தவன் பின்.. “ விக்ரமுக்கு டூ சிஸ்டரா டேனி.. இப்போ அந்த பெண் அதான் முகேஷ் மனைவி நல்லா இருக்கிறாளா.?” என்று கேட்டார்..
முகேஷும் மும்பை என்பதாலும், தங்களின் ஒட்டலுக்கு விளம்பரம் செய்ய முகேஷ் விளம்பர கம்பெனியை நாடி சென்றதாலும் முகேஷை சார்லஸ்க்கு நன்றாகவே தெரியும்.. அவனின் பெண் பழக்கங்கள் சேர்த்துமே..
முகேஷ் விவாகரத்தும் மும்பை வட்டாரத்திற்க்கு தெரியும்.. விக்ரமனிடமே.. “ நீ உன் சிஸ்டரை மேரஜ் செய்யும் முன் என் கிட்ட கேட்டு இருந்தா நான் முகேஷை பத்தி சொல்லி இருப்பேன் விக்ரம்..” என்றும் அப்போது சொல்லி இருந்தார்..
அதனால் தான் சார்லஸ் இவ்வளவு விளக்கமாக கேட்டது..ஆனால் டேனி சொன்ன..
“இல்ல டாட் விக்ராவுக்கு ஒன்லி ஒன் சிஸ்டர் தான் மிஸ் சாத்வீகா மட்டும் தான்..” என்றதும் சார்லஸ் மகன் முகத்தை உன்னிப்பாக பார்க்க.
அந்த பார்வையில் டேனியல் தலை குனிய எல்லாம் இல்லை.. அவர் முகத்தை நேராக தான் பார்த்திருந்தான்..
மேரி தான் பதறியவளாக. “அந்த பெண்ணா டேனி.. முகேஷோட ஒய்ப்..?” என்று கேட்ட அன்னையை இப்போது திரும்பி பார்த்த டேனியல்..
“அவங்களுக்கு முறையா டைவஸ் ஆகி விட்டது மாம்.. இப்போ ஒன்லி மிஸ் சாத்வீகா மட்டும் தான் அவங்க..” என்றிட..
உடனே சார்லஸ்.. “அந்த பெண் கணவனிடம் இருந்து டைவஸ் வாங்கி இருக்கலாம்.. ஆனா இப்போதும் அந்த பெண் இரண்டு குழந்தைக்கு அம்மா தான் டேனி..” என்றதும்.
டேனி.. “ சோ..” என்று ஒரே வார்த்தையில், அதற்க்கு என்ன என்று கேட்டதும்.
டேனியல்.. “அந்த இரண்டு குழந்தைகளுக்கு சாது மாம் என்றால் நான் டாட் .. அவ்வளவு தான்.. மத்த குழந்தைக்கு நீ எப்படி அப்பா ஆகுவ என்று கேட்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்..” என்று கேட்டதில் டேனியலின் அன்னை தந்தை இருவரிடமும் பதில் இல்லை..
டேனி.. “நான் உங்களை ஹட் பண்ணனும் என்று இதை நான் சொல்லலே டாட்.. எனக்கு நீங்க கிடச்சது போல. அந்த குழந்தைகளுக்கு நான் இருக்கனும் என்று நினைக்கிறேன் டாட்..” என்று விட்டான்..
பின் அவர்களிடம் எந்த மறுப்புமே கிடையாது.. “விக்ரம் வீட்டிற்க்கு எப்போது போகலாம்..” என்று மட்டும் தான் கேட்டனர்..
ஆம் டேனியல் சொன்னது போல் சார்லஸ் டேனியலின் பையோலாஜிக் பாதர் கிடையாது.. மேரி சார்லஸ்க்கு அத்தை பெண்.. சார்லஸ்க்கு மேரி என்றால் சின்ன வயது முதலே மிக பிடித்தம்.. ஆனால் தன் விருப்பத்தை மேரியிடம் அவர் கூறவில்லை..
காரணம் சின்ன பெண்.. படிக்கும் பெண்ணை காதல் சொல்லி அவள் மனதை கெடுக்க அவர் விரும்பவில்லை.. ஆனால் அனைவரும் இவர் போல் நல்லவர்களாக இருக்க முடியாது தானே.
படிக்கும் போது கூட படிக்கும் பெண்ணின் அண்ணனை விரும்பினாள் மேரி.. மேரியின் காதல் உண்மை தான்.. ஆனால் அந்த உண்மையை மற்றவர்களிடமும் நாம் எதிர் பார்க்க முடியாது தானே..
அவனுக்கு மேரியின் இளமை மீது தான் மிக பிடித்தம்.. இருவருக்கும் தனிமை கிடைக்க அவன் அழகாக தன் பிடித்தத்தை மேரியிடம் இருந்து எடுத்து கொண்ட பின் அவனின் சுயத்தை காட்டி விட..
மேரி கற்பம் தரித்து அதை கலைக்க முடியாது.. சார்லஸ் மேரியை திருமணம் செய்து கொண்டு டேனி பிறக்க.. அடுத்து ஒரு குழந்தை பிறக்கவில்லை..
இருந்தும் சார்லஸ் அதை பற்றி பெரியதாக எடுத்து கொள்ளாது இதோ இன்று வரை டேனியலுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்து வருகிறார்..’டேனியலுக்கு இந்த உண்மை தெரிந்தது கூட.. டேனி தன் சின்ன வயதில் சார்லஸை மரியாதை குறைவாக பேசி விட.
மேரியின் தந்தை தான் டேனியிடம் உண்மையை சொன்னது.. என்றென்றும் நீ சார்லஸை மரியாதையோடு நடத்த வேண்டும் என்பதை.. இதோ இன்று அதை சொன்ன பின் சார்லஸ் மேரி மறுக்காது தன் மகனின் ஆசையை நிறை வேற்ற சென்னை கிளம்பி தயாராகி விட்டனர்..
சென்னையில் பூவிதழ் வீட்டில் அவள் ஜெர்மனி செல்வதற்க்கு உண்டான வேலை ஜரூராக நடந்து கொண்டு இருந்தது..
இன்னொரு பக்கமோ விக்ரம் சாத்வீகாவிடம் டேனியலோடான அவளின் திருமணத்தை பற்றி பேசினான்..
சாத்வீகா அவ்வளவு எளிதில் டேனியலை திருமணம் செய்ய ஒத்து கொள்ளவில்லை.. முதல் காரணம்.. “விக்ரா டேனி உன் பிரண்ட். என்னோடு சின்னவன்..” என்றது..
பின் அவனுக்கு என்ன தலை எழுத்து இரண்டு குழந்தை பெற்றவளை மணக்க. பணம் இருக்கு வயசு இருக்கு பார்க்கவும் நல்லா இருக்கான்.. கல்யாணம் ஆகாத பெண்ணாக பார்த்து மேரஜ் செய்ய சொல்..” என்று..
கடைசி காரணம் என்று சாத்வீகா சொன்னது. “ இப்போ ஏதோ ஒரு நினைப்பில் மேரஜ் செய்து கொண்டாலுமே, நாளை டேனியலே.. பிரண்ட் இந்த சொசைட்டி.. ஏன் அவனே கூட யோசிக்கலாம் நாம அவசரப்பட்டு விட்டோமோ என்று..”
சாத்வீகாவின் இந்த பேச்சுக்கு மட்டும் டேனியல் பேசியில் சாத்வீகாவை அழைத்தவன்..
“நான் எழுதி தரட்டா.. நான் உன்னை மேரஜ் செய்த பின் கண்டிப்பா அதற்க்கு வருந்த மாட்டேன் என்று.. ஏன்னா இன்னை வரை என்னுடைய டேட் என் மாம் மேரஜ் செய்ததை நினைத்து வருந்தியது கிடையாது.” என்ற இந்த பேச்சில் சாத்வீகா.
“டேனி..” என்று அதிர்ந்தவள் அடுத்து எதுவும் பேசாது இருக்க. அந்த அமைதியை போக்கிய டேனியல் தன்னை பற்றிய அனைத்துமே கூறினான்..
டேனியல் இத்தனை கூறிய பின்னும் சாத்வீகாவிடம் அமைதி தான்..” என்ன நீயும் என் அம்மாவை தப்பா நினைக்கிறியா..?” என்று கேட்டதுமே தான் சாத்வீகா பதறி போனவளாக..
“அய்யோ அப்படி எல்லாம் இல்ல. இல்ல உன் டாடி கிரேட் தான்.. அது தான் அவர் வளர்ப்பு நீங்களும்.” என்ற இந்த பேச்சுக்கு மட்டும் டேனியல்.
“என் டாட் கிரேட் .. அது உண்மை தான். ஆனா என் மாம் நீங்க எந்த விதத்திலுமே கீழ் கிடையாது சாது.. உன்னை நீயே ஏன் இப்படி இறக்குற..?” என்று கேட்டதுமே.
“நான் கீழ் இல்லையா டேனி.. ஒருத்தனை லவ் பண்ணேன். இன்னொருத்தனை மேரஜ் பண்ணேன்… அந்த மேரஜை கூட தக்க வைத்து கொள்ள முடியாது.. இதோ தோத்து போய் நிற்கிறேன்..” என்று சொன்னவளிடம் டேனியல் ஒன்று மட்டும் தான் கேட்டான்..
“இதில் எதிலாவது உன் தவறு இருக்கிறதா..?” என்று.
“அப்போ அதை பற்றி யோசிக்காது விட்டு விடு..என்னை பத்தி மட்டும் இப்போ யோசி..” என்று கூற..
இப்போது மீண்டும் சாத்வீகாவிடம் அமைதி.. டேனி..” சாது” என்று அழைத்தவனிடம் சாத்வீகா..
“பயமா இருக்கு டேனியல்..” என்று விட.
“என் மீது நம்பிக்கை வை சாது.. உனக்கு ஒரு நல்ல கணவனாகவும் நண்பனாகவும்.. நம்ம குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் இருப்பேன்.. முதல்ல உன் வாழ்க்கையில் நீ இழந்ததை எல்லாம் நான் கொடுப்பேன் சாது..”
விக்ரம் சாத்வீகா தன்னிடம் பேசியது அனைத்தையும் டேனியலிடம் கூறி விட்டதால், அதை நினைத்து சாத்வீகாவுக்கு வாக்குறுதி அளித்தான்..
“ம்..” என்ற அந்த ஒரு எழுத்தில் சாத்வீகா தன் சம்மதத்தை கொடுத்து விட்டாள்..
பேசியை வைக்கும் முன் டேனியல்.. “ என் பேரன்ஸ்..” என்று ஆரம்பிக்கும் போதே சாத்வீகா..
“நம்ம பேமிலி விசயம் வெளியில் போகாது டேனி.. விக்ரம் இடம் கூட சொல்ல மாட்டேன்..” என்ற அந்த வார்த்தையில் புன்னகை முகமாக பேசியை வைத்த டேனியல் அந்த புன்னகை மாறாது.. தன் பெற்றோர்களுடன் சென்னை வந்து சாத்வீகாவை முறைப்படி பெண் பார்த்து இதோ அடுத்த மாதம் திருமணம் என்ற நிலை வந்து விட..
சித்தார்த் வீட்டில் பூவிதழ் அனைவரையும் பிரிந்து ஜெர்மனி சென்று விட்டாள்.. தனித்து சென்றவள் தனித்து இல்லாது வர போகிறாள் என்று தெரியாது குடும்பமே அவளுக்கு பிரியா விடை அளித்தது…