பூவிதழ் ஜெர்மனிக்கு சென்ற உடனேயே அவள் வேலையில் சேர்ந்து கொண்டு விட்டாள்..
அவள் வேலை செய்யும் இடத்தில் இருந்து அவள் தங்கும் இடம் பக்கம் தான்.. நடந்து செல்லும் தூரத்தில் தான்.. கம்பெனி தான் அவள் தங்கும் இடத்தை கொடுத்து இருந்தனர்..
ஆம் அவள் தங்கும் இடம் அவள் வேலைக்கு செல்லும் இடத்திற்க்கு உரிமை பட்டது தான்.. அவள் தங்கிய பில்டிங். மூன்று தளம் கொண்டது..
இவள் தங்குவது இரண்டாம் தளத்தில், பாதுகாப்பு.. உணவு.. என்று அனைத்துமே அவள் வேலை செய்யும் இடமே பார்த்து கொள்வதால், அதில் அவளுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை..
அவள் அப்படி தான் ஜெர்மனி சென்று ஒரு வாரமும் நினைத்திருந்தாள்.. அதனால் தான் அவள் ஜெர்மனி சென்றதுமே தன் வீட்டவர்களை பேசியில் அழைத்து வீடியோ கால் மூலம் தான் தங்கும் அறை மட்டும் அல்லாது முழு கட்டிடமும் வீடியோவில் காட்டி அங்கு அங்கு இருந்த கேமிரா.. செக்ரியூட்டி ஒவ்வொரு தளத்திற்க்கும் இரண்டு பேர்.. சாப்பிடும் அறை என்று பூவிதழ் அனைத்தையும் காட்டிய பின் தான் அவள் வீட்டவர்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கிட்டியது..
அதற்க்கு முன் அவர்கள் தவித்து தான் போய் விட்டனர்.. அதுவும் சென்ற வாரம் வரை அவளோடு காயத்திரியுமே ஜெர்மனி செல்வதாக தான் இருந்தது.. பூவிதழ் வீட்டவர்கள் அவள் ஜெர்மனிக்கு செல்ல உடனே ஒத்து கொண்டதற்க்கு அதுவும் ஒரு காரணம்..
ஆனால் திடிர் என்று சென்னையில் தான் நினைத்தும் பார்க்க முடியாத கல்லூரியில் அவளுக்கு மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்து விட..
“இந்த படிப்பு. என் கனவு என்று உனக்கு தெரியும் பூ.. அதே போல் இந்த காலேஜ்.. இதை பற்றி நான் உனக்கு சொல்ல தேவையில்லை… அந்த காலேஜ் படிப்பது கனவில் மட்டும் தான் நடக்கும் என்று என்னை தேற்றி கொண்டேன்.. ஆனா இப்போ அந்த கனவு என் கையில் இருக்க.. நான் அதை தவற விட மனது இல்லை பா. “ என்று தான் உன்னோடு ஜெர்மனி வர இயலாது என்று காரணத்தோடு காயத்திரி பூவிதழிடம் கூறிய போது..
பூவிதழ்க்கு தான் தன் தோழியின் கனவு பற்றி தெரியுமே.. அதனால் அதை ஏற்று கொண்டு விட்டாள் தான்.
ஆனால் வேலையில் சேர இருக்கிறேன் என்று ஜெர்மனியின் கம்பெனியில் தங்களுக்கு உண்டான அனைத்தும் செய்த பின் வேலையில் சேரவில்லை என்றால், இந்தியாவின் மதிப்பாக ஐந்து லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்..
அந்த நிபந்தனையோடு தான் பூவிதழும் காயத்திரியுமே அந்த கம்பெனிக்கு சேர்வதாக இருந்தது..
“இப்போ எப்படி.?” என்று பூவிதழ் அந்த நஷ்ட ஈட்டை சுட்டி காட்டி கேட்ட போது..
“அது என் அண்ணன் வேலை செய்யும் ஒனர் கொடுக்கிறேன் என்று விட்டார்.” என்று சொன்னதுமே பூவிதழ் அதற்க்கு மேல் காயத்திரியை நோண்டி கேட்கவில்லை.. பாவம் அவள் அப்போதே கேட்டு இருந்து இருக்கலாம்..
பின் என்ன .? விக்ரம் காயத்திரி மூலம் தான் பூவிதழை ஜெர்மனியில் இருக்கும் தன் கம்பெனிக்கு வேலைக்கு வர வழைக்க திட்டம் இட்டது.. பூவிதவுமே எடுத்த உடன் ஜெர்மனியில் வேலையா என்று முதலில் அவள் தயங்கிய போது காயத்திரி.
“எனக்கும் அங்கு வேலை கிடைத்து இருக்கிறது..” என்று சொன்னதுமே.
“அப்போ உன் படிப்பு ..?” என்று கேட்டதற்க்கும்.. மூன்று வருடம் படித்து விட்டு படித்து கொள்கிறேன்.. என் கனவு கல்லூரியில்.” என்ற தைரியத்தில் தான் பூவிதழ் இதில் முழுமையாக இறங்கியது..
காயத்திரியும் உடன் வருகிறாள் என்று சொல்லியும் தான் வீட்டில் அனுமதி வாங்கியது..
காயத்திரி மூலம் காயத்திர்க்கே தெரியாது இதை அனைத்துமே செய்து முடித்தது விக்ரம் தான்..
காரணம் காயத்திரி இல்லாது பூவிதழ் மட்டுமே தனித்து வர வேண்டும்.. அதுவும் விக்ரமனின் திட்டமாக இருந்தது..
காரணம் தவறான எண்ணம் எல்லாம் கிடையாது.. பெரும் பாலோர் இது போல் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் சிறிது நாட்கள் சென்று கண்டிப்பாக தனிமையை உணர்வார்கள்.. அந்த சமயம் இந்தியர்கள் என்று நம் நாட்டவர்களின் ஒருவர் முகத்தை பார்த்தால் போதும்..அந்த முகம் தமிழ் என்று இல்லாது தெலுங்கு, மலையாளம்.. இந்தி எந்த பாகுபாடும் இன்றி.. இந்தியாவில் இருக்கும் போது கூட மனதில் அந்த ஒற்றுமை தோன்றாது..
ஆனால் அந்நிய நாட்டில் இந்தியர் என்ற அந்த ஒரு தகுதி மட்டும் போதும் அவர்களை தன் நட்பு வட்டத்திற்க்குள் புகுத்திக் கொள்ள.. பூவிதழ் காயத்திரியோடு ஜெர்மனி சென்றால், தான் ஜெர்மனி சென்றால் தன்னோடு அவள் ஒன்றுவது என்ன பேசுவதுமே சந்தேகம் தானே..
அதனால் தான் கடைசி நேரத்தில் காயத்திரிக்கு பிடித்த படிப்பை பிடித்த கல்லூரியில் அவள் அண்ணன் மூலம் ஏற்பாடு செய்தவன் தன் கம்பெனிக்கு தானே காயத்திரிக்கு உண்டான நஷ்ட ஈட்டை கொடுத்து விட்டான்..
இதோ அவன் நினைத்தது போல் பூவிதழ் ஜெர்மனிக்கு தனித்து தான் வந்து சேர்ந்தாள்.. அதே போல் விக்ரம் நினைத்தது போலவே ஒரு வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லாது சென்ற அவளின் நாட்கள் அடுத்து வெறுமையாக செல்வது போல்.. மிக மிக தனிமையை அவள் மனது உணர்ந்தது..
அவளின் இந்த தனிமைக்கு இன்னொரு காரணம்.. அவள் வேலை செய்யும் இடத்திலும் சரி.. அவள் தங்கும் இடத்திலும் சரி ஒருவர் கூட இந்தியர்கள் கிடையாது.. ஏனைய டிப்பார்ட்மெண்ட் மற்ற தங்கும் இடத்தில் இந்தியர்கள் இருந்தனர்.
அப்படி இருக்கும் படி பார்த்து கொண்டான் நம் விக்ரம்.. இதோ தனிமை இளமையில் மட்டும் கிடையாது வெளி நாட்டிலும் மிக கொடியது என்பதை பூவிதழ் அனுபவத்தில் உணர்ந்தாள்..
அதுவும் சிறிய வயதில் இருந்தே கூட்டு குடும்பத்தில் இருந்தவள்.. வெளி ஊருக்கு ஏதாவது விழாவுக்கு செல்வது போல் இருந்தாலுமே, படிப்பை கொண்டு குழந்தைகளோடு செல்ல முடியாது போனால் பெரியவர்களில் யாராவது ஒருவர் வீட்டில் இருப்பது போல் தான் பார்த்து கொள்வர்.. அப்படி வளர்ந்தவளுக்கு வேலையில் இப்போது அவளுக்கு பயிற்ச்சி மட்டும் தான் நடை பெற்று கொண்டு இருக்கிறது..
அதனால் தனக்கு பயிற்ச்சி கொடுப்பவர் ஜெர்மனியர் தான்.. பேசுவது ஆங்கிலம்… அவர்களின் உறவு கற்பவர் கற்று கொடுப்பவர் என்ற நிலைக்கு மேல் செல்ல முடியவில்லை..
பூவிதழே ஏதாவது பயிற்ச்சி இல்லாத பேச்சான. “சாப்பிட்டிங்கலா..?” என்ற வார்த்தைக்கு எல்லாம் அவரிடம் பதில் இல்லாது போக. அடுத்து அவள் தனிப்பட்டு எந்த பேச்சும் அவரிடம் அதற்க்கு அடுத்து வைத்து கொள்ளவில்லை.
வேலைக்கு வெளியிலோ.. வேலை செய்யும் இடமே பரவாயில்லை என்ற நிலை தான். கம்பெனியிலாது ஆங்கிலத்தை வைத்து ஒரளவுக்கு சமாளித்து விடுகிறாள்.. ஆனால் வெளியில் பொது இடங்களில்.. இந்த கம்முனிகேஷன் அவளுக்கு பெரும் பாடாக ஆகி விட்டது..
அங்கு இருப்பவர்களுக்கு இங்கு போல் ஆங்கிலம் கற்றால் தான் பெருமை.. அறிவாளி என்ற நிலை எல்லாம் கிடையாது போல்.. அதனால் தான் அவர்கள் மொழி மட்டுமே முக்கியமாக இருக்க. பூவிதழுக்கு தெரிந்து இருந்ததால் வெளியில் சென்றாலுமே அவளுக்கு பிரச்சனையாகி போனது..
சுற்ற எல்லாம் வேண்டாம்.. தேவையான பொருட்கள் வாங்க கூட அவளுக்கு பெரும் பாடாக இருந்தது.
இதில் அனைத்தையும் விட முக்கியமான ஒன்று உணவு. அவளின் டிப்பார்ட்மெண்ட் அவள் தங்கும் இடம் இந்தியர் என்றால் இவள் மட்டும் தான் என்பதினால் இந்திய உணவை அவள் கண்ணில் பட்டே ஒரு மாதம் ஆகிறது..
ஆம் இப்போது பூவிதழ் ஜெர்மனி சென்று ஒரு மாதம் ஆகிறது.. ஒரு வாரம் பிரச்சனை இல்லாது சென்ற அவள் வாழ்க்கை அடுத்து அவளின் ஒவ்வொரு நாளும் பெரும் பாடாக அமைந்து விட்டது..
ஒருவாரம் அவர்கள் கொடுத்த பாதி வெந்தும் வேகாத உணவை சாப்பிட்டவளுக்கு அடுத்து அவளாள் தாக்கு பிடிக்க முடியாது.. வெளியில் சென்றாவது சாப்பிடலாம் என்றால், கார் ட்ரைவரிடம் இருந்து மொழி பிரச்சனை ஆரம்பம் ஆகி இவள் தமிழ்நாட்டு உணவை கேட்டால் இட்டாலி உணவகத்திற்க்கு கொண்டு போய் நிறுத்தி விட்டு. பின் தான் திட்டுவது கூட புரியாது போனவனை தான் இவளாள் பார்க்க முடிந்தது. அன்று அவளுக்கு பணம் செலவானது தான் மிச்சம்.. அவளுக்கு பிடித்தது போன்ற உணவை உண்ணாமல் தான் அவள் தங்கும் இடத்திற்க்கு வந்து சேர்ந்தது..
இவை அனைத்தையும் விட பூவிதழுக்கு கடினம் ஒன்று உண்டு என்றால், அது தான் இந்த தனிமை.. உணவு என்று இவள் மன மாறுப்பாட்டை குடும்பத்திற்க்கு தெரியாது பார்த்து கொள்வது தான்..
அதுவும் அவள் அம்மா பெரியம்மாவை கூட அவள் சமாளித்து விடுவாள். அண்ணன் சித்தார்த் தன் குரலை வைத்தே.. “பொம்மா அங்கு ஏதாவது பிரச்சனையா.?” என்று இதே போன்ற கேள்விகளை தான் வேறு வேறு மாடுலேஷனில் கேட்டு தான் இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொன்ன பிறகு தான் பேசியையே வைப்பான்..
அதுவும் தன்னை வீடியோ காலுக்கு வரவழைத்து அப்போது கூட. “உன் முகம் ஏன் இப்படி சோர்ந்து போய் இருக்கு.?” என்று அது போல கேள்விகள் கேட்ட பின் தான்..
இப்படி பூவிதழின் நாட்கள் சென்ற போது தான் ஜெர்மனியில் இருந்து விக்ரமுக்கு பேசியில் அழைப்பு சென்றது.
பூவிதழுக்கு பயிற்ச்சி தருபவன் தான் விக்ரமை அழைத்து பேசியது..
(ஆங்கிலம் பேசியதை இங்கு தமிழில்..)“ சார். நான் சொல்றதை தவறா எடுத்துக்க கூடாது.. மேடம் ரொம்ப லோன்லியா பில் பண்றாங்க சார்..இது தொடர்ந்தால் மனது ரீதியாக வேறு எதாவது பிரச்சனைக்கு கொண்டு போய் நிறுத்திடும் சார்.” என்று பூவிதழ் பயிற்ச்சியாளர் சொன்னதை ஒரு வாரம் முன்பே பூவிதழின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு என்று விக்ரம் நியமித்து இருந்த நபர் கூறி விட்டார்..
“இங்கு வந்ததை விட மேடம் ரொம்ப மெலிந்து விட்டாங்க.. இதே நிலை நீடித்தால், அது நல்லதுக்கு இல்ல சார்..” என்று சொன்னதோடு தனித்து பொருட்கள் வாங்க கூட அவள் கஷ்டப்படும் போது எல்லாம் ஆங்கிலம் தெரிந்த முறையில் இரு முறை பூவிதழின் பாதுகாப்புக்கு என்று ஏற்பாடு செய்தவன் வலிய உதவி செய்தாலுமே.. அதை தொடர முடியாத நிலை..
தன் மீது சந்தேகப்பட்டு காவல் துறையை நாடினாலும்.. இல்லை பயந்து ஜெர்மனி விட்டு சென்று விட்டாலுமே விக்ரம் நினைத்தது நடக்காது என்பதினால் விக்ரம் சொல் படி..
இப்போது எல்லாம் பூவிதழை தூரம் நின்று கண் காணிப்பதோடு நிறுத்தி கொண்டான்.. இருந்தும் மனது கேளாது விக்ரமை அழைத்தும் சொல்லி விட்டான்..
விக்ரமுக்குமே பூவிதழ் இவ்வளவு சிறிய நாளிலேயே அவள் இந்த அளவுக்கு டவுன் ஆவாள் என்று எதிர் பார்க்கவில்லை..
எதிர் பார்த்து இருந்தால், அவள் ஜெர்மனிக்கு செல்வதையே சிறிது காலம் தள்ளி போட்டு இருப்பான்..
பூவிதழை இவ்வளவு விரைந்து ஜெர்மனிக்கு பேக் செய்ய காரணம்.. இந்தியாவிலேயே அவள் எதிர் பார்த்தபடி வேலை கிடைத்து விட்டால், பின் அவன் நினைத்தது நடக்க முடியாது போய் விடுமோ என்ற பயத்தில் தான்.. அவ்வளவு விரைவாக பூவிதழ் ஜெர்மனி செல்லும் படி பார்த்து கொண்டான்..