அதோடு இந்தியாவிலுமே அவன் எதிர் பார்த்தப்படி சாத்வீகாகின் திருமணம் தள்ளி சென்று விட்டது.. தள்ளி என்றால், இவன் இந்த மாதமே என. டேனியலின் பெற்றோர்கள் அடுத்த மாதம் என்று விட்டனர்.
டேனியலும்.. “விக்ரா உன் நிலை எனக்கு புரியுது.. பட் என் பேரன்ஸ் சைடிலும் இருந்து நான் யோசிக்கனும்.. நான் அவங்களுக்கு ஒரே மகன்.. எலோரையும் கூப்பிட்டு செய்யனும் என்று நினைக்கிறாங்க. அதோட இரு மதப்படி திருமணம் செய்ய இந்த டைம் ஆவது வேண்டும் விக்ரா..”
டேனியல் சொல்வதும் ஏற்று கொள்ளும் படி இருந்தது. அதோடு விக்ரமுக்கு முன் தான் சாத்வீகாவுக்கு நம்ம ஸ்டேட்டஸ் என்று பார்த்து அவள் வாழ்க்கையை பாழாக்கி விட்டேன்..
இப்போ டேனியல் மூலம் தான் தேடாது ஒரு நல்ல வாழ்க்கை சாத்வீகாவுக்கு அமைய போகிறது. இதில் நம் சுயநலத்திற்க்காக அவசரப்பட வேண்டாம் என்று நினைத்து தான் டேனியல் குடும்பம் விருப்படி அவர்கள் சொன்ன தேதியில் திருமணம் செய்ய ஒத்து கொண்டது..
இந்தியாவில் விக்ரம் அதற்க்கு உண்டான வேலைகளை பார்க்கும் போது தான் பூவிதழ் ஜெர்மனியில் தனிமையில் அவ்வளவு தத்தளிது போனது..
விக்ரமுக்கு மனது கேட்கவில்லை.. முன் சாத்வீகாவை வேதனைக்கு ஆளாக்கி விட்டேன்.. இப்போது பூவம்மாவை.. அதுவும் இன்னும் அவள் என்னை ஏற்காத போதே என்னால் அவளுக்கு இந்த வேதனை. என்று மனதில் போட்டு குழப்பி கொண்டு வேலை பார்த்தவனின் முகம் கலை இழந்து கிடக்க..
டேனியல் நாளை தான் விக்ரமனின் மச்சானாக ஆகி போகிறான்.. ஆனால் அதற்க்கு முன் தான் ஒரு நல்ல நண்பன் என்று நிருபிக்கும் வகையாக மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாத விக்ரமனின் அந்த மாற்றம் டேனியலுக்கு தெரிந்ததால்..
“என்ன தோஸ்த்.. என்ன பிரச்சனை.?” என்று கேட்ட போது.” ஒன்னும் இல்ல தோஸ்த்.” என்று விட்டான்..
ஆனால் டேனியல் விடாது.. “அங்கு சிஸ்டருக்கு ஏதாவது பிரச்சனையா.?” என்று பூவிதழை தான் டேனியல் அப்படி கேட்டது..
“ம் ஒன்னும் இல்ல.” என்று விக்ரம் மறுக்க. டேனியல் விடாது விக்ரமை பார்த்த பார்வையி,.
“தோஸ்த் என்னை நீ இப்படி விடாது பார்ப்பதற்க்கு பதில் உள்ளே போய் என் சிஸ்டரை பார்த்தாலாவது உன் வருங்காலம் வளமா ஆகும்.” என்ற கிண்டல் பேச்சை டேனியல் தட்டி கழிப்பது போல்..
“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு தெரியும்.. அதுவும் நான் சாதுவை இப்படி எல்லோரும் பார்க்கும் படி பொது வெளியில் பார்ப்பேன் என்று நினைத்து கொண்டாயா..?என்று விக்ரம் வீட்டு தோட்டத்தில் தன் நாளை காலை கோயிலில் திருமணம் என்று இருக்க மாலை வரவேற்ப்புக்கு உண்டான அலங்காரம் அந்த கார்டனில் டேக்ரேஷன் செய்து கொண்டு இருக்கும் வேலை நடைப்பெற்று கொண்டு இருந்தது..
அதை விக்ரம் மேற்பார்வை இடும் போது தான் டேனியல் அங்கு வந்து விக்ரம் முகத்தை பார்த்து இது போல் கேட்டது..
சரியாக அதே சமயம் வீட்டில் பரந்தாமன் டேனியலும் விக்ரமனும் பேசி கொண்டு இருப்பதை கவனித்து விட்டு திருமணம் என்றதும் மீண்டும் தன் வீட்டிற்க்கு அழைத்து கொண்டு விட்ட பெண்ணிடம்..
“இரண்டு பேருக்கு கூல்ரிங்க்ஸ் கொண்டு போய் கொடுத்து விட்டு வாம்மா.” என்று சொன்னார்..” அதன் படி கூல்ட்ரீங்கள் கொண்டு செல்லும் போது இருவரின் பேச்சை கேட்டவளுக்கு இப்போது அவர்கள் அருகில் செல்வதா என்ற தயக்கம் மனதில் எழுந்தது..
சாத்வீகா ஒரு காதல் தோல்வி ஒரு கல்யாண தோல்வியில் முடிவடைந்த பெண் தான்.. ஆனால் முன் இது போல் சித்தார்த்திடமும் முகேஷிடமும் தோன்றாத அந்த கூச்சம் இப்போது வந்து விட முகம் சிவந்தவளாக தயங்கி நின்று விட்டாள்..
என்ன இது டீன் ஏஜ் பெண் போல.. அதுவும் இரண்டு குழந்தைக்கு தாயான பின்.. நான் பார்க்காததா..?’ இதை தான் பெண் நினைத்தாள்..
ஆனால் அப்போது அவளுக்கு தெரியவில்லை. காதலனோ கணவனோ.. ஏதோ ஒன்று.. இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் என்பது உடல் சார்ந்து கிடையாது..
மனது மனது நெருங்கினால் இது போல் ஒவ்வொரு பேச்சு என்ன பார்வை கூட பெண்ணவளை சிவக்க வைக்க கூடும் என்று..
பாவம் அது சாத்வீகாவுக்கு தெரியாது தானே.. முகேஷ் உடல் நெருக்கத்தை மட்டும் தானே அவளுக்கு கொடுத்தது.. சித்தார்த்தோ முதலில் சாத்வீகா பெரிய இடத்து பெண் என்று தயங்கியது பின் தன் சித்தப்பா இறந்த பின் தன்னுள் இருந்த குற்றவுணர்ச்சியில் தயங்கி உடல் என்ன.? உள்ளத்தால் கூட நெருங்காது தள்ளி நின்று விட்டது.. இப்படி தானே சாத்வீகாவின் முன் வாழ்க்கை சென்றது.
இப்போது தான் பெண்ணவள் உண்மையான மனம் நெருங்குவதை அனுபவிக்கிறாள். அது தெரியாது தன்னையே கடிந்து கொண்டவள் .. பேசி கொண்டு இருந்தவர்களை நோக்கி நெருங்கும் சமயம் தான் டேனியல்.விக்ரமனிடம்..
மீண்டும். “பூ அங்கு லோன்லியா பீல் பண்றாளாடா.?” என்று சரியாக யூகித்து கேட்டான்..
அவனுமே மேல் படிப்பை வெளி நாட்டில் முடித்தவன் தானே.. அதுவும் ஆண்கள் பெரும் பாலும் நேரம் வெளியில் செலவழித்த தங்களுக்கே அது போல் இருக்க. பெண்ணவள் வீடு கடை இதை தவிர வேறு எங்கும் செல்லாதவளுக்கு தனிமையின் தாக்கம் இன்னும் தாக்கும் என்பது அவனுக்கு தெரியுமே..
டேனியலின் இந்த கேள்விக்கு விக்ரம் வாயினால் பதில் சொல்லவில்லை என்றாலுமே, முன்பை விட இன்னும் விக்ரம் முகம் என்னவோ போல் ஆகி விட..டேனியலுக்கு அவன் முகமே உண்மையை உரைத்து விட்டதில்..
“நான் தான் சொன்னனே விக்ரா.. பூவை இவ்வளவு சீக்கிரம் ஜெர்மனி அனுப்பாதே என்று.. பார்.. அங்கு அந்த பெண்ணுக்கு யாரை தெரியும்.. சின்ன பெண் விக்ரா.. இங்கு சித்தார்த் பின்னயே சுத்திட்டு இருந்தவள்..” என்று டேனியல் பேச பேச தான் சாத்வீகாவுக்கு முதலில் பூ என்ற பெயர் தெரியாது பின் சித்தார்த் என்ற பெயரில் அதிர்ந்து நின்று விட்டவளுக்கு அடுத்து விக்ரம் கூறிய.
“இப்போ நீ சொன்ன பார்த்தியா சித்தார்த் பின்னாடியே சுத்திட்டு.. அதுக்கு தான் அங்கு அனுப்பியது. இந்தியாவில் இருந்தா அவள் அண்ணன் மடியை விட்டு இறங்க மாட்டாள்..” என்று விக்ரம் சொன்னதுமே டேனியல்..
“இப்போ நீ ஜெர்மனிக்கு போனதுமே பூ உன் மடியில் ஏறி உட்கார்ந்துக்க போகுதா என்ன.?” என்று அந்த வார்த்தையை டேனியல் கிண்டலுக்கு பின் நடக்க போவதை தெரியாது தான் பேசியது. ஆம் டேனியல் சொன்னது போல் பூவிதழ் விக்ரம் மடியில் தான் அமர்ந்து கொள்ள போகிறாள்.. அதுவும் அவள் விரும்பியே என்றால், உங்களால் நம்ப முடிகிறதா.? ஆனால் அது தான் நடக்க போகிறது.
அப்போது நடப்பது இருக்கட்டும்.. ஆனால் இப்போது இவர்களின் இந்த பேச்சில் சாத்வீகா வந்தது தெரியாது திரும்பி விட்டாள்..
அவள் செல்வதை பாவம் இருவருமே கவனிக்கவில்லை.. தன் அறைக்கு வந்த சாத்வீகாவுக்கு இப்போது அன்று தன் செய்த தவறு புரிகிறது.. அதுவும் விக்ரம் லவ் ஒன் சைட். அதற்க்கே விக்ரம் அந்த பெண்ணை தன் வசம் ஆக்க அவ்வளவு செய்யும் போது.
தங்களுடையது இரு தரப்பினால் அங்கீகாரம் செய்து கொண்ட காதல். ஆனால் இருவருமே.. அந்த காதலை காப்பற்ற ஒரு துரும்பும் எடுத்து போடவில்லையே..
சாத்வீகா இன்னொன்றையும் யோசித்தாள்.. அது விக்ரம் இப்போது ஸ்டேட்டஸ் பார்க்கவில்லையே..அன்று சித்தார்த்துக்கு அத்தனை கூறியவன்.. இன்று பூவிதழுக்கு என்ன கூறுவான்.. ஒரு வேளை பெண் என்பவள் இந்த விட்டிற்க்கு தானே மருமகளாக வர போகிறாள்..
வசதியாக வாழ்ந்து விட்டு அது இல்லாது போனால் தான் பிரச்சனை.. அதே வசதியில்லாது வசதி வாய்ப்போடு ஒரு வாழ்க்கை எனும் போது தன்னவளின் சந்தோஷம் இரட்டிப்பாக தான் இருக்கும் என்று நினைத்து விட்டானோ.. என்று நினைத்து கொண்டவளுக்கு தெரியவில்லை..
பூவிதழ் விக்ரமிடம் தன்னை கொடுத்த பின்னுமே.. அதன் மூலம் குழந்தை வந்த பின்னுமே.. என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால், நீ வீட்டோடு மாப்பிள்ளையாக என் வீட்டிற்க்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை பெண்ணவள் வைப்பாள் என்றும்.. அந்த நிபந்தனையை சிறிதும் யோசிக்காது ஆணவனும் பெண் மீது இருக்கும் அந்த காதலினால் ஏற்றுக் கொள்வான் என்பதுமே.. ஆனால் விக்ரம் வருங்காலத்தில் பூவிதழ் வீட்டு மாப்பிள்ளையாக மட்டும் அல்லாது வீட்டோடு மாப்பிள்ளையாகவும் தான் ஆக போகிறான்..
அனைத்தும் யோசித்த சாத்வீகா.. இனி பழையதை பற்று யோசிப்பது நிகழ் காலத்திற்க்கு நல்லது கிடையாது.. இனி இந்த வாழ்வு தன்னுடையது மட்டும் இல்லையே டேனியலுடையதும் தானே.. முன் சென்றதை யோசித்து யோசித்து இனி வரும் வாழ்க்கையை நாம் இழந்து விட்டு நிற்க கூடாது..
பழையது நினைப்பது டேனியலுக்கு நாம் செய்யும் துரோகம் என்று நினைத்து பெண்ணவள் வருவதை ஏற்று கொண்டாள்..
ஆம் சொன்ன தேதியில் முதலில் கோயிலில் தாலி கட்டி பின் மாலையில் வர வேற்ப்புக்கு அனைவரையும் அழைத்து விக்ரம் கலக்கி விட்டான்..வர வேற்புக்கு சித்தார்த்தை அழைக்கலாம் என்ற ஆசை விக்ரம் மனதில் எழுந்தது தான்.. ஆனால் அன்று ஒட்டலில் தான் பூவம்மாவை பார்த்ததை கண்டு கொண்டவனின் பார்வையில் சித்தார்த் உஷாராகி விட கூடும் என்று தான்… சித்தார்த்தை அழையாது விட்டு விட்டான்..
அவனின் இந்த முடிவு நல்லதிற்க்கு தான்.. பூவிதழை ஜெர்மனி செல்ல சித்தார்த் உடனே ஒத்து கொள்ள காரணம். அன்று விக்ரம் தன் தங்கையை பார்த்த அந்த பார்வையாலும் தான்.. பாவம் சித்தார்த்துக்கு தெரியவில்லை.. பூவிதழை அடைய விக்ரம் வீசிய தூண்டில் தான் அவளின் அந்த ஜெர்மனி பயணம் என்று.
இப்படி அனைவரையும் ஒவ்வொரு விதத்தில் சென்ற அந்த நாட்களின் முடிவில் சாத்வீகாவுக்கு சென்னையில் இந்து முறைப்படி முடிந்தது என்றால் மும்பையில் கிறித்தவ முறைப்படி இரண்டு முறையிலுமே சாத்வீகா டேனியலுக்கு முழுமையாக மனைவியாக மாற்றிய பின் தான் விக்ரம் ஜெர்மனிக்கு சென்றான். பார்க்கலாம் விக்ரம் ஜெர்மனி சென்ற பின் என்ன செய்து பூவிதழை அடைகிறான் என்று…