விக்ரம் ஜெர்மனி சென்ற உடனேயே அவன் செய்த முதல் வேலை பூவிதழை அவளுக்கு தெரியாது தூரம் நின்று பார்த்தது தான்.. பார்த்த உடனே பெண்ணவளின் அந்த தோற்றத்தில் ஆணவன் அதிர்ந்து தான் போய் விட்டான்..
ஜெர்மனியில் அவளை பாதுகாக்க வேண்டி விக்ரம் ஏற்பாடு செய்து இருந்த ஆள் இவனிடம் பூவிதழின் நிலை பற்றி சொன்னான் தான்..
ஆனால் இப்படி அவள் கண்கள் சுற்றி கருவளையம் சூழ்ந்து கண்களில் ஒளி மங்கி என்னவோ போல் இருப்பாள் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை..
தன் குடும்பத்தை விட்டு ஒரு இரண்டு மாதம் பிரிவினை அவளை இந்த அளவுக்கு நிலை குலைய வைக்குமா..? விக்ரமுக்கு பூவிதழின் இந்த தோற்றம் அவன் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலுமே, அதையும் தான்டி அவன் மனதில் ஒரு பயம்..
வீட்டவர்களின் மீது இந்த அளவுக்கு பாசத்தை வைத்து இருப்பவள்.. அவளுக்கு மிகவும் பிடித்த அவளின் சித்தார்த் அண்ணாவுக்கு தான் செய்தது சொல் மூலம் கிடையாது நேரிலேயே கேட்டும் பார்த்தும் இருப்பவள் தன்னை எப்படி ஏற்பாள்.. தன் மீது காதலே இருந்தாலுமே.
ஆம் காதலே தான்.. ஒரு சிறு பொறி அவன் மனதில் அன்று தான் அவளுக்கு கொடுத்த அந்த முத்தத்தை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்த போது அவன் ஒன்றை கவனித்தான்..
அது முதலில் தன் முத்தத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதுவும் தன் இதழை அவள் இதழ் மீது பொறுத்த கூட விடாது அவள் முகத்தை அங்கும் இங்கும் அசைத்து கொண்டு மிரண்டு பிடித்தது.. பின் தன் நாவுக்கு அவள் இதழ் உள் புக விடாது தடுப்பாக்கியது அதன் பின்.. ஏதோ அவன் உணர்ந்தான் தான்..
இருந்தும் அதை உறுதியாக அதுவா என்று சொல்ல முடியவில்லை.. ஆசை கொண்ட மனம் தன் ஆசை போல் கற்பனை செய்து கொள்கிறதோ என்ற எண்ணமும் அவனுக்கு தோன்றியது..
முன் அவன் ஆசை நிஜமாக இருந்தாலுமே.. இப்படி தன் குடும்பத்தின் மீது இப்படி பாசம் வைத்து கொண்டு இருப்பவள் தன் மீது இருக்கும் ஆசையை வெளியிடுவாளா..? என்று அனைத்தும் நினைத்து குழம்பி போனவனாக தான் தங்கி இருந்த ஒட்டலுக்கு தன்னை சுத்தப்படுத்தி கொண்ட பின்.. பூவிதழின் பாதுகாப்புக்கு என்று அவன் ஏற்பாடு செய்திருந்தவர்களை தான் தங்கி இருந்த ஒட்டலுக்கு அழைத்தான்..
அவர்களும் விக்ரம் அழைத்த அரை மணி நேரத்திற்க்குள் அவன் ஒட்டலுக்கு வந்து சேர்ந்து விட்டனர்..
வந்தவர்கள் பரப்பரப்பாக. “எப்போ சார் வந்திங்க.?.” என்று கேட்க.
“இப்போ தான் பூவம்மாவை பார்த்துட்டு இதோ இப்போ உங்களை அழைத்தேன்..” என்றதுமே.
“மேடமை பார்த்துட்டிங்கலா சார் தேங்காட்..” என்று இவர்களின் அதிகப்படியான இந்த பேச்சில் என்ன என்பது போல் பார்த்த விக்ரமனிடம் அவர்கள் இருவரும்.
“மேடமுக்கு உடம்பு சரியில்ல. உங்க கிட்ட சொல்லலாம் என்றால் நீங்க உங்க சிஸ்டர் மேரஜில் பிஸியா இருந்திங்க..” என்ற அவர்களின் இந்த பேச்சில் அதிர்ந்து அமர்ந்து இருந்தவன் எழுந்து நின்று விட்டான்..
“வாட் உடம்பு சரியில்லையா..? ஏன் என் கிட்ட சொல்லலே.. ?” என்று தன் அதிர்ச்சி விலகாது கேட்டவனிடம் அவர்கள் இருவரும்..
“மேடமே நீங்க போய் பார்த்துட்டு வந்ததா தானே சொன்னிங்க சார்..” என்று அவர்களுமே குழம்பி போய் தான் கூறியது.
“டாமிட்.. நான் தூரமா நின்று பார்த்துட்டு வந்தேன்..” என்று விக்ரம் அவர்களிடம் சொல்லும் போதே அவளின் கண்கள் சுற்றிய கருவளையம் சோர்ந்த அந்த கண்கள் அவன் கண முன் வர..
எழுந்தவன் மீண்டும் தலையை பிடித்து கொண்டு இருக்கையில் அமர்ந்து விட்டான்..
“ஒ ஷிட்..” என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்டவன்.. தன்னை தானே தேற்றிக் கொண்ட பின் அவர்களை நிமிர்ந்து பார்த்தவன்..
“என்ன உடம்புக்கு..?” என்று என்ன தான் தேற்றிக் கொண்டாலுமே விக்ரமுக்கு இதை கேட்கும் போது தொண்டை அடைத்து கொண்டு விட்டதில் குரல் அவ்வளவு எளிதாக வராது கொஞ்சம் கர கரப்பாக தான் வந்தது.
விக்ரமனின் நிலையை பார்த்த அந்த ஊழியர்களுக்கும் இவனின் இந்த குரலில் அவர்களுக்குமே என்னவோ போல் தான் ஆகி விட்டது..
தங்களின் முதலாளி தெரியும்.. மற்ற ஊழியர்களை விட இவர்கள் இரண்டு பேரிடமும் பேச்சுக்கள் நிறைய தான் இருந்தது..’இவனின் நேரிடையான வேலையில், இருப்பவர்கள் தான் இவர்கள்..
அதனால் தான் விக்ரம் பூவிதழ் பாதுகாப்புக்கு நம்பிக்கையானவர்கள் என்று இவர்களை நியமித்தது.. அதனால் தான் அந்த ஊழியர்களுக்கு விக்ரமனின் தன்மை புரிந்து இருந்தது.. எதற்க்கும் கலங்காதவன் இதற்க்கு அதுவும் வெரும் காய்ச்சலுக்கா என்று யோசித்து கொண்டு இருந்தவர்களிடம்..
“நீங்க பொய் பூவம்மாவுக்கு உதவி செய்யலையா..?என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டவனிடம்..
பூவிதழை வழியில் கண்காணிப்பவன்..” மூன்று நாள் முன் வெளியில் வரும் போதே அவங்க முகம் சரியில்ல சார்.. அவங்க என்ன வேணாலும் நினைத்து கொள்ளட்டும் என்று நானே போய்..
“ஏதாவது உதவி வேண்டுமா.? என்று கேட்டேன் சார். ஆனா நானே வலிய சென்று பேசியதே அவங்களுக்கு பயத்தை கொடுத்து விட்டது போல சார்.
அதுவும் நான் தூரமா நின்னு கண்காணித்து கொண்டு இருந்தாலுமே, என்னை இரண்டு மூன்று முறை பார்த்து இருக்காங்க சார். இப்போ நான் போய் பேசவும் பயந்து வெளியில் வந்தவங்க திரும்ப அவங்க தங்கும் இடத்திற்க்கு திரும்பி நடக்க தொடங்கவும்.. நான் அவங்க பின் என்ன மேடம் என்று கேட்க அவங்க ஒட்டம் பிடித்து விட்டாங்க சார்.. இதுக்கு மேல பின் தொடர்ந்தா பிரச்சனை என்று இவருக்கு நான் தகவல் சொல்லி விட்டேன் சார்..” என்று பூவிதழுக்கு பயிற்சி கொடுப்பவரை இவன் கை காட்டினான்..
இப்போது பூவிதழுக்கு பயிற்ச்சி கொடுப்பவன்.. “நானே போன் போட்டு என்ன இன்னைக்கு லீவா வரல..” என்று மேடமுக்கு போன் போட்டு கேட்ட போது முன் அவங்கலா பேசினப்ப நீங்க பேசாதே என்று சொன்னதினால் ஒதுங்கி போனவன் போன் போட்டு கேட்க.. அவங்க என்ன நினைத்தாங்கலோ தெரியல.. நான் எது என்றாலும் மெயில் பண்ணிடறேன்..” என்று சொல்லி வைத்து விட்டாங்க சார்..” என்று அந்த பயிற்சி ஆளன் கூறியதில் விக்ரமுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..
தான் ஒன்று நினைத்து அதாவது இங்கு பேசுபவர்கள் யாரும் இல்லாத போது தெரிந்தவன் தான் அருகில் சென்றால், தன்னோடு நெருங்க கூடும் என்று தான் பயிற்சியாளன் மேடம் என்னிடம் பேசுறாங்க என்று சொன்ன போது .
“நீ அவளை விட்டு விலகி இரு.” என்று சொன்னது.. இப்போது அதுவே பூவிதழ் உடல் நிலை சரியில்லாத போது யாரும் இல்லாது தனித்து இருந்து இருக்கிறாள் என்று அவன் மனதில் அலை கழிந்து கொண்டு இருந்த போது..
வெளியில் பூதழை கண்காணிப்பவன். “சார் ரொம்ப எல்லாம் ஒரி பண்ணிக்காதிங்க சார். இரண்டு நாள் முன் ஒரு டாக்டரை பார்த்துட்டு தான் வந்து இருக்காங்க.” என்று என்ன தான் கூறினாலும் விக்ரமனின் காதில் எதுவும் விழவில்லை கிளம்பி விட்டான் பூவிதழ் தங்கி இருக்கும் இருப்பிடத்திற்க்கு..
அவள் என்ன நினைத்தாலுமே பரவாயில்லை.. தான் இப்போது பார்க்க செல்வதால் அவளுக்கு அனைத்தும் தெரிந்து இதனால் என் காதல் தோல்வி அடைந்தாலுமே பரவாயில்லை என்று நினைத்து தான் பூவிதழ் தங்கி இருந்த அந்த அறையின் முன் நின்று காலிங் பெல் அழுத்தி கொண்டு நின்றான் விக்ரம்..
ஒன்று இரண்டு மூன்று முறை அழுத்திய பின்னும் கதவு தறவாது என்ன. உள்ளிருந்து ஒரு குரலும் வராது போக பயந்து தான் விட்டான்..
கீழ் இருப்பவர்களிடம் இன்னொரு கீ இருக்கும் சென்று வாங்கி வரலாமா என்று நினைத்து கொண்டே கதவின் தாழ் மீது விக்ரம் கை வைத்த போது அது தன்னால் திறந்து கொண்டது..
திறந்தும் உள் போகாது தயங்கி நின்றது ஒரு நிமிடம் தான்.. தனித்து இருக்கும் பெண்.. அதுவும் உடல் நிலை சரியில்லாது இருக்கிறாள் என்ன மாதிரியான நிலையில் இருக்கிறாளோ என்று அவன் தயங்கி நின்றது எல்லாம் ஒரி நொடி தான்..
பின் அவள் எப்படி இருக்கிறாள்.. அவளின் நலன் தெரிய வேண்டும்.. அனைத்தையும் விட அது தான் முக்கியம் என்று பட அதற்க்கு பின் எதை பற்றியும் யோசிக்கவில்லை..
ஆம் எதை பற்றியும் தான் .. உள் நுழைந்தும் ஹாலில் ஒருத்தரும் காணாது அவன் கண்கள் தன்னால் கிச்சன் பக்கம் தான் சென்றது..
விக்ரமுக்கு அந்த அறை மட்டும் கிடையாது.. அந்த பில்டிங் அனைத்துமே தெரியும்.. இதில் அவனுக்குமே ஒரு பங்கு இருப்பதால், கட்டும் போதே பார்வை இட்டு இருக்கிறான்.. கட்டி முடித்ததுமே பார்த்து உள்ளான்.. அதுவும் குறிப்பாக பூதழ் தங்கி இருக்கும் இந்த அறை.. முன் இவன் தங்கி இருந்தது.. அனைத்து அறைகளையும் விட இது மிகவும் வசதியானது..
பாவம் பூவிதழ் மற்றவர்களின் அறைக்கு சென்று பார்த்திருந்தால், அந்த அறைக்கும் தான் தங்கி இருக்கும் அறைக்குமே உண்டான வித்தியாசம் தெரிந்து இருக்கும்..
விக்ரம் கிச்சன் பக்கம் பார்த்தவன் பின் எதை பற்றியும் யோசிக்காது அங்கு இருந்த மெயின் படுக்கை அறையை திறந்தான்.. அங்கும் பூவிதழ் இல்லாது போக.. முன் இருந்ததை விட அவன் பதட்டமாகி விட்டான்..
அடுத்த அறையை திறந்து பார்க்க.. அங்கும் அவள் இல்லை.. பின் ஏதோ யோசனையில் திரும்ப முன் பார்த்த அந்த மெயின் படுக்கை அறைக்குள் நுழைந்து அந்த அறையில் இருந்த குளியல் அறையை திறக்க..
அங்கு நிற்க முடியாது சோர்ந்து போய் வாந்தி எடுத்து கொண்டு இருந்தவளை பார்த்தவன்..
“பூவம்மா..” என்று விக்ரமniன் அந்த அழைப்பில் தலை சுற்றினாலும் குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவள் அங்கு விக்ரமை கண்டவள்..
சிறு குழந்தை போல் உதட்டை பிதிக்கி கொண்டு.
“என்னால முடியல.. பயமா இருக்கு என்னை உன் கூட கூட்டிட்டு போ..” என்று சொல்லி இவன் பக்கம் கை நீட்டி கொண்டு இருப்பவளின் இப்படியான வர வேற்பை விக்ரம் நினைத்தும் பார்க்கவில்லை..
தன் பக்கம் கை நீட்டியவளின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவனின் மனது அந்த நிலையிலும், இந்த கையை எப்போதுமே நான் பிடிக்கும் வரம் வேண்டும் கடவுளே.
கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடம் இந்த கோரிக்கையை வைத்தான்..பின் நிலை உணர்ந்thu கை தாங்கலாக குளியல் அறையில் இருந்து படுக்கைக்கு அழைத்து வந்து அமர வைத்தவன்.
அவள் முகத்தில் ஈரத்தோடு ஒட்டி கொண்டு இருந்த முடி கற்றைகளை காதோடு ஒதுக்கி வைத்து விட்டு தலையணையை சாய்வாக நிற்க வைப்பது போல் நிற்க வைத்தவன்.. அவளை அதில் மெல்ல சாய்த்தது போல் படுக்க வைத்தவன்
“கொஞ்ச நேரம் கண் மூடி படுத்து இருடா பூவம்மா இதோ நான் வந்துடுறேன்..” என்று சொல்லி விட்டு போக பார்த்தவனை விடாது கையை கெட்டியாக பிடித்து கொண்டு போகாதே என்று தலையாட்டி சொல்லியவளிடம்..
“பூவம்மா ரொம்ப டையடா இருக்கேடா. நான் போய் இட்லி வாங்கிட்டு வரேன்.. அதுவும் நான் போகலே சொன்னா வாங்கி வந்து கொடுத்து விடுவாங்க.” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் கூறியவனிடம்.. யோசித்தவள் பின்.
“வந்துடனும்.. கண்டிப்பா வந்துடனும்..” என்று தந்தை வெளியில் சென்றால் மகள் பேசுமே அதே போல்.. அந்த மொழியில் பேசியவளின் நிலையை அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.