அதுவும் இவளின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்றதில் அவன் கண்கள் கலங்கி விட்டது. கலங்கிய கண்ணீரை அவன் கட்டுப்படுத்தவில்லை.
ஆண்மகன் பலம் வாய்ந்தவன் தான்.. அவனின் அந்த பலம் என்பது அவனின் துணையான பெண் தான்.. அந்த பெண்ணுக்கு ஏதாவது ஒன்று என்றால், கோழையாகி விடுகிறான்..
அதனால் தான் வயது முதிர்ந்த நிலையில் மனைவி இறந்ததும் அந்த கணவன் மூன்று வருடங்கள் முடிவடையும் முன்பே இறந்து விடுகிறார்.. அதே ஒரு மூதாட்டி கணவன் இழந்தும் ஆண்டுக்கணக்காக இந்த உலகில் வாழ்ந்து விட்டு தான் செல்கிறார்…இதோ விக்ரமை கோழையாக்கி விட்டு படுத்து கொண்டு இருப்பவளையே சிறிது நேரம் பார்த்தவன் பின் வெளியில் சென்று தனக்கு தெரிந்த இந்தியன் ஒட்டல் நடத்துபவரை அழைத்து தனக்கு வேண்டிய உணவை சொல்லி தான் முன் தங்கி இருந்த அதே இடம் அதே அறை தான் என்று சொல்லி விட்டு, சமையல் அறைக்கு சென்றவன்.
காபி கலப்பதற்க்கு உண்டான பொருட்களை தேடி எடுத்து காபி கலந்த போது பேசியில் சொன்ன இட்லியும் வந்து விட இரண்டையும் எடுத்து கொண்டு விக்ரம் மீண்டும் பூதழ் அறைக்குள் சென்ற போது பூவிதழ் தூங்கி கொண்டு இருக்கிறாளா இல்லை மயக்கத்தில் இருக்கிறாளா என்று தெரியாத நிலையில் படுத்து கொண்டு இருந்தவளை தன் மீது சாய்த்து கொண்டு சிறிது சிறிதாக அவளுக்கு அந்த காபி பருக வைத்தான்..
அவளுக்குமே கடைசியாக எப்போது சாப்பிட்டது என்று தெரியாது.. அதே போல் வாந்தி வாந்தி என்று எடுத்ததில் அந்த காபி தேவையாக இருந்ததும்.. அதுவும் பருகும் பக்குவத்தில் விக்ரம் காபியை அவளுக்கு கொடுத்ததால் அவளின் வரண்ட தொண்டைக்கும் அது கொஞ்சம் இதத்தை கொடுத்தது தான்.. ஒரு இட்லி மட்டும் அவளுக்கு ஊட்டி விட்டான்.. மறுக்காது அதையும் உண்டு விட்டாள்..
ஆனால் குடித்தும் சாப்பிட்ட பின்னும் தான் . மீண்டும் வாந்தி வருவது போல் இருக்க. முகம் அதற்க்கு உண்டான ஒவ்வாமை காட்டியதில் பாவம் விக்ரமுக்கு பூவிதழ் முகம் வேதனையை காட்டுகிறது என்று தெரிகிறது ஆனால் என்ன என்று புரியாது..
“என்ன பூவம்மா தூங்கனுமா.? இப்போ தானேடா காபி குடித்தே.. கொஞ்சம் இப்படியே சாய்ந்த மாதிரி என் மீதே சாய்ந்து இரு.. கொஞ்சம் நேரம் கழித்து படுத்துக்கலாம் என்ன.?” என்று விக்ரமனின் குரலும் சரி.. பாவமும் சரி ஒரு சின்ன பெண்ணிடம் பேசுவது போல் தான் இருந்தது.
அப்போதும் பெண்ணவள் ஏதோ பாவனை செய்தாள் தான்.. பாவம் விக்ரம் அவளை தன் மார்பு மீது சாய்த்து கொண்டு காபி கொடுத்து கொண்டு இருந்ததால், அவளின் முக பாவனையை அவனால் சரியாக கணிக்க முடியாது போய் விட்டது..
பெண்ணவளுக்கோ.. வாயை திறந்தால் எங்கு படுக்கையிலேயே வாந்தி எடுத்து விடுவோமோ என்ற பயத்தில், ஆனால் வாந்தி வருவது போலவும் இருந்ததில் அவனை விட்டு எழுந்து நின்றவள்.. உடல் சோர்வில் மீண்டும் தள்ளாட்டம் போல விழ பார்த்தவளை பிடித்து கொண்ட விக்ரம்..
“என்ன பூவம்மா என்ன அடம்..?” என்று அவன் கேட்கும் போதே குடித்த காபி அனைத்தையும் மொத்தமாக அவன் மீது பாதியும் தன் மீது மீதியுமா எடுத்து விட்டு இருந்தாள்..
“ஒ காட்..” என்ற விக்ரமனின் இந்த பேச்சில்.
“சாரி சாரி என்னால் கண்ரோல் பண்ண முடியல.” வாந்தி எடுத்து விட்டு இருந்ததினால், அவளாள் தெளிவாக இல்லை என்றாலும் ஒரளவுக்கு இப்போது பேச முடிந்தது.
ஆனால் சோர்வில், ஒரு நிலையில் நிற்க முடியாது வாந்தி எடுத்ததின் முன்பை விட இன்னும் கீழே விழுந்து விடும் நிலையில் தான் அவளின் நிலை இருந்தது..
கை பிடித்து மீண்டும் படுக்கையில் அமர வைத்த விக்ரம்.. “ எதுக்கு சாரி,.. நான் நீ சொல்வது எனக்கு புரியலையே என்று தான் வருத்தம்.. அதோடு உன் ட்ரஸ் மீது எல்லாம் வாந்தி… இப்போ இதை க்ளீன் பண்ணனும். ஏற்கனவே ரொம்ப சோர்ந்து தெரியற நீ.” என்று தன் மீது வாந்தி எடுத்ததில் அருவெறுப்பு கொள்ளாது.. தன் மீது எடுத்த வாந்தியை பற்றி பேசியதில் சோர்விலுமே அவன் முகத்தை பார்த்தாள் காதலாகா..? ஆம் காதலாக தான்..
விக்ரம் உயரம் என்பதை விட அழகன்.. எத்தனையோ அழகிகளை பார்த்து இருப்பான்.. ஆனால் நான் நான்கு நாட்கள் காய்ச்சலில் குளிக்காது தலை வாராது.. தான் ஒரு கோலத்திலும் துணி ஒரு கோலத்திலும் இருப்பவளிடம். அதுவும் சிகரம் வைத்தது போல் இந்த வாந்தியின் நாத்தம் என்னாலேயே தால முடியவில்லை..
ஆனாலும் இந்த மென்மை.. அக்கறை. என்று பார்த்து கொண்டு இருந்தவளின் கண்களில் விக்ரம் என்ன கண்டானோ..
“என்னடா..?”
அந்த என்னடா என்ற ஒரு வார்த்தையில் அவனின் ஒட்டு மொத்த காதலும் பூவிதழுக்கு தெரிந்தது..
அவள் கன்னம் பற்றி..”கொஞ்சம் இதை க்ளீன் பண்ணிட்டு வந்துடுறேன் பொம்மா. அப்போ தான் உன்னுடைய ட்ரஸ்சில் இருப்பதை சுத்தம் படுத்த முடியும்.. இல்லேன்னா. என்னுடையது உன் மீது பட்டு விடும்..” என்று தன் மீது இருந்த வாந்தியை சுட்டி காட்டி சொன்னவன் குளியல அறைக்குள் புகுந்து முதலில் வாந்தியாகிய தன் சட்டையை கழட்டி விட்டு அப்படியே ஷவர் கீழ் நின்று கொண்டவன்..
பேன்டை கழட்ட முயலும் சமயம் தான் குளியல் அறையின் வாசலில் வந்து நின்றாள் பூவிதழ்..
குளியல் அறை கதவை தாழ் இடவில்லை விக்ரம். உடல் நிலை சரியில்லாத பெண்.. அதோடு அவரசரமாக தன்னை சுத்தப்படுத்தி கொண்டு அவளை சுத்தம் செய்ய வேண்டும் எவ்வளவு நேரம் தான் அந்த வாந்தி எடுத்த உடையிலேயே இருப்பாள்.. அதுவே இன்பெக்ஷன் ஆகி விடும் என்ற பயத்தில் தான் சட்டையை கழட்டியது ஷவர் முன் உடையோடு நின்று விட்டான்..
பூதழை பார்த்ததுமே தன் நிலை மறந்து அவள் அருகில் சென்றவன்.. “என்னடா திரும்ப வாமிட் வருதா.?” என்று பதறியவனாக கேட்டான்..
இல்லை என்று தலையாட்டி மறுத்தவள் .. அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. அவனை அந்த நிலையில் பார்த்தவளுக்கு அந்த உடல் நிலையிலும் வெட்கம் வந்தது.
என்னடா.?” என்று மீண்டும் கேட்டவன் அவள் தன்னை பார்த்து மீண்டும் குனிந்து கொண்ட போது தான் தான் இருக்கும் நிலை உணர்ந்து மெல்ல சிரித்துக் கொண்டவனின் முகமும் வெட்கத்தின் சாயல் தான்..
வெளி நாட்டில் திறந்த வெளி நீச்சல் குளத்தில்… நீச்சல் உடையில்… ஆண் பெண் பேதம் தெரியாது ஒன்றாக குளித்து இருப்பவனுக்கு , இப்போது தன்னவள் முன் சட்டை இல்லாது இருப்பதில் வெட்கமும் கூடவே வேறு ஒரு நிலையும் மனதில் வந்து போக. தன்னால் அவன் முகத்தில் வெட்கம் வந்து விட்டது..
அது கொடுத்த தாக்கத்தில் ஈரம் படிந்த தன் தலை கேசத்தை தடவிக் கொண்டான் அப்போது தான் பெண்ணவள் தயங்கி அவனை பார்த்தவள்..
“எனக்கு இது ரொம்ப ஸ்மெல்லா இருக்கு.. இதனால திரும்ப வாமிட் வருவது போல் இருக்கு..” என்றதுமே மற்றதை எல்லாம் மறந்து.
“வா வா ..” என்று அழைத்து சென்றவன்.. அவள் மேல் சட்டையில் கழட்ட கை வைக்கும் போது அவன் பதரும் முன் தன் மேல் உடையை கெட்டியாக பிடித்து கொண்டவள்..
ம் என்று மறுப்பாக தலையசைத்து மறுக்க சரிடா சாரி ஏதோ ஏதோ..” என்று திக்கி திக்கி ஏதோ சொல்ல வந்தவன் பின் வெளியில் போக பார்த்தவன் .. “கதவை தாழ் இடாதே பூவம்மா..” சென்று விட்டான்..
வெளி வந்தவன் தன் ஈர உடையை கழட்டி விட்டு டவளை இடுப்பில் கட்டிய பின் தான் தன் உடை என்ற யோசனையே அவனுக்கு வந்தது..
இட்லி வர வழைத்தது போல் உடையையுமே அவனால் இருந்து இடத்திற்க்கு வர வழைக்க முடியும்.. இந்த ஊரும் சரி. இந்த இடமும் சரி. அவனுக்கு புதியது கிடையாது.. அது இல்லை விசயம்.
விசயம் என்ன என்றால் இப்படியே எப்படி அவள் முன்.. தன்னை மேல் சட்டை இல்லாது இருக்கும் போதே தன்னை நிமிர்ந்து பார்க்க அவ்வளவு தயங்கினாள்.. இப்போது எப்படி எனும் போதே.
குளியல் அறையில் இருந்து பொத் என்ற சத்தம் அவனுக்கு கேட்டதில் என்ன எது என்று கூட யோசிக்காது குளியல் அறைக்குள் சென்று விட்டான்..
சென்றவன் பார்த்த அந்த காட்சி.. அவன் வாழ் நாள் முழுவதுமே தொடர்ந்து வரும் காட்சி.. அப்படி ஒரு நிலையில் தான் பெண் மல்லாக்காக விழுந்து கிடந்தாள்..