தான் பார்த்த காட்சியில் விக்ரம் சட்டென்று தன் முகத்தை திருப்பி கொண்டாலுமே, அவன் அந்த இடத்தை விட்டு போக முடியாது நின்று இருந்தான்..
காரணம் அவன் பார்க்கும் போது பெண்ணவள் எழ முயன்று கொண்டு இருந்தாள்.. ஆனால் எழ முடியவில்லை.. என்ன செய்வது என்று யோசிக்கும் போதே மீண்டும் பொத் என்ற சத்தத்தில் எதை பற்றியும் யோசிக்காது அவளை கையில் அள்ளி கொண்டவன் படுக்கையில் படுக்க வைத்த பின் அங்கு இருந்த போர்வையை அவள் மீது போர்த்தி விட்டு.. ஈரம் படர்ந்த முடியை அங்கு இருந்த துவளை எடுத்து துடைத்து விட்ட பின்.. கப்போர்ட்டில் இருந்து அவளின் உடையை எடுத்து கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என்பது போல் அவள் முகத்தை பார்த்தான் விக்ரம்..
பூவிதழும் இப்போது இல்லை அவளை அவன் கையில் எடுத்த நொடியில் இருந்து அவள் பார்வை அவனிடம் மட்டுமே தான் நிலை பெற்று இருந்தன..
இப்போது விக்ரமும் பார்க்க.. பூவிதழின் பார்வையில் தன் கையில் இருந்த உடையை அவளிடம் காட்டியவன்.. அவள் மீது போர்த்தி இருந்த போர்வையின் மீதே வைத்து விட்டு திரும்ப போக பார்த்தவனின் டவளை. டவளை என்றால் அவன் இடுப்பில் கட்டி இருந்த அந்த ஒற்றை டவலை பிடித்து இருக்க.
“ஏய்..ஏய்.. என்ன பண்ற இழுக்காதே.. இழுக்காதே டி.” எனும் போதே அந்த டவல் பூவிதழின் கையில் இருந்தது..
அடுத்து என்ன நடந்தது.? ஏது நடந்தது.? இருவருமே ஆராயும் நிலையில் இல்லை.. ஒரு போர்வைக்குள் இருவர்.. அந்த வார்த்தை சரியாக அவர்களுக்கு தான் பொருந்தி போனது.
காதல் சொல்லவில்லை. காதலை ஏற்று கொள்ளவும் இல்லை.. ஆனால் தன் மீது அவளுக்கு காதல் என்று ஆணவனுக்கு தெரிந்தது.. அதே போல் தான் ஆணவனுக்கு தன் மீது காதல் என்று பெண்ணவள் புரிந்து கொண்டாள்…
விக்ரம் எழ முயன்றாலுமே பூவிதழ் விடாது அவனை கட்டி கொண்டு இருக்க. விக்ரமுக்குமே அவளை விட்டு விலக மனது இல்லை தான். மனது இல்லை என்றால் உடல் தேவைக்காக விலகாது அவன் படுத்திருக்கவில்லை.. இப்போது இருவருக்குமே ஒருவருக்கு ஒருவர் உள்ளத்திற்க்கு மற்றவர் தேவைப்பட்டனர்..
ஆம் கூடல் என்பது அவர்களுக்குள் ஒரு முறை தான் நிகழ்ந்தது.. அடுத்து பெண்ணவள் தன் மீது படர்ந்தாலுமே அணைத்தது போல் மட்டும் தான் படித்திருந்தான்..
விக்ரம் படுக்கையில் இருந்து எழ பார்த்தது இது முதல் முறை கிடையாது.. நான்காம் முறை.. பெண் தான் எழ விடாது இருக்க.
“பூவம்மா என்ன டி இது.. என்னை ரொம்ப சோதிக்கிற டி…. கொஞ்சம் விடுடா நீ டையடா இருப்ப..” என்று முதலில் சொன்னதற்க்கு இன்னும் இன்னும் அவனின் வெற்று மார்பில் முகத்தை வைத்து கொண்டு பதுக்கியவள்.. விக்ரம் சொன்ன சோர்வு என்ற வார்த்தைக்கு மட்டும்.
“உங்களுக்கு சோர்வா இருக்கா..?” என்று விக்ரமின் முகம் பார்த்து பூவிதழ் கேட்கும் போதே அவள் குரலில் மட்டும் அல்லாது முகத்திலுமே அவ்வளவு சோர்வு அவனுக்கு தெரிந்தது..
“நான் எனக்காக சொல்லலே பூவம்மா.. நீ ரொம்ப சோர்வா இருக்க.. அது தான்..” என்று சொன்ன பின்னும் அவனின் பூவம்மா தான் அவனை விடாது அடைகாப்பது போல் அணைத்து கொண்டு இருந்தாள், கடைசியில் வெளியில் காலிங் பெல் சத்தம் கேட்டு தான்..
“பூவாம்மா நான் என் ட்ரஸ் கொண்டு வா என்று ஒருவர் கிட்ட சொல்லி இருக்கேன்.. வந்து இருக்காங்க போல.. பார்.. இப்படியே எவ்வளவு நேரம் இருப்பது.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலையாளை வர வழைக்கிறேன்.. அவங்க கொஞ்சம் வீட்டை க்ளீன் செய்யட்டும்.” என்று அந்த அறை மட்டும் அல்லாது அந்த வீடே இருந்த கோலத்தை சுட்டி காட்டி விக்ரம் கூறவும்.
பூவம்மாவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது. “நான் எப்போவும் ரொம்ப க்ளீனா தான் இருப்பேன் தெரியுமா. ஆனா ஒன் வீக்காவே நான் ரொம்ப வீக்கா இருந்தேன் அதான்.. இப்படி இருக்கு.” என்று அவள் சொன்ன பாவனையில் விக்ரம் மனது தன்னவளை கொஞ்ச தான் நினைத்தது.. ஆனால் தான் ஒரு அடி எடுத்து வைத்தால், அடுத்து தன்னவள் தன்னை விடாது ஒன்டிக் கொள்வாள் என்றதில் தன் ஆசையை இப்போதைக்கு கொஞ்சம் தள்ளி தான் வைத்தான்..
அதுவும் பூவிதழ் அடுத்து கேட்ட. “உங்களுக்கு இங்கு இருக்கிறவங்களை எல்லாம் தெரியுமா.. மார்னிங்க இட்லி.. அது எங்கு விற்குது,.. மாச கணக்கு என் கண்ணில் படாதது உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது.. இந்த வீடு நான் இங்கு இருப்பது.? என்று கேள்வி கனைகளாக தொடுத்து கொண்டு இருந்தவளிடம் விக்ரம் உண்மையை சொல்ல விரும்பவில்லை..
சொன்னால் அடுத்து என்ன ஆகுமோ என்ற பயம். முன் என்றால் பரவாயில்லை. இப்போது இருவரும் ஒருவராக ஆன பின்னே. வெற்று உடம்பில் ஒரு போர்வைக்குள் படுத்து கிடக்கும் இந்த நிலையை நினைத்து பார்த்தவனுக்கு சொல்ல பயம்..
இவளும் இவன் அண்ணன் போல் இருந்து விட்டாள்.. அதனால் அவசர அவசரமாக அவனுக்கே ஒரு நிபந்தனையை விதித்து கொண்டான்.
அது இப்போதைக்கு உண்மையை சொல்ல கூடாது.. பிற்காலத்திற்க்கு சொல்வதா….? வேண்டாமா..? என்பதை அந்த நேரத்திற்க்கு பொறுத்தது என்று.
நல்ல வேளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று விக்ரம் நினைத்து கொண்டு இருக்கும் போதே மீண்டும் வெளியில் காலிங் பெல் சத்தம் கேட்க.
தெரிந்த பையன் தான் வந்து இருப்பான் என்று சொல்லாது.. சொன்னால் அதற்க்கும் எப்படி யாரை தெரியும் என்று கேட்டு வைப்பாளே அந்த பயம் தான்..
அதனால். “ட்ரஸ் கொண்டு வந்து இருக்காங்க பூவம்மா. ரொம்ப நேரம் இப்படி அவங்களை நிற்க வைப்பது தப்பு தானே..” என்றதில் தான் அவனின் பூவம்மா அவனை விட்டு கொஞ்சம் விலகியது.
சட்டென்று எழுந்து கொண்டவன் அங்கு இருந்த ஒரு துண்டை தன் இடுப்பில் சுற்றிய வாறே படுக்கை அறை கதவை திறக்க போனவனிடம்..
“ஐய்யோ அது என் துப்பட்டாங்க..” என்றதில் தான் விக்ரம் குனிந்து தன்னை பார்த்து கொண்டான்.. பார்த்த பின்னும்..
“இருக்கட்டும் நான் கதவு பின் நின்று வாங்கி கொண்டு அவனை அனுப்பி விடுகிறேன்..” என்று சொல்லி விட்டு வெளி கதவை லேசாக திறந்து பூவிதழிடம் சொன்னது போல் தன்னை மறைத்து கொண்டவனாக தான் ஒரு கை மட்டும் வெளியில் நீட்டி..
“கொடு.’ என்றான்..
பாவம் கொடு என்ற பின்னும் தன் கையில் எதையும் கொடுக்காததில் கொஞ்சம் முன் வந்து மறைத்தது போல் இருந்த கதவை இன்னும் லேசாக திறந்து பார்க்க. அங்கு சித்தார்த் நின்று கொண்டு இருந்தான்..
வெளியில் நின்று கொண்டு தன் தங்கை தங்கி இருக்கும் அறை என்று வந்தவன்.. அந்த அறையில் அதுவும் அந்த கோலத்தில் விக்ரமை பார்த்து சித்தார்த் அதிகமாக அதிர்ந்தானா.? இப்படியான ஒரு கோலத்தில் தன்னை சித்தார்த் பார்க்கும் படி ஆகி விட்டதே என்று விக்ரம் அதிர்ந்தானா..? என்று தெரியாது இருவரும் நின்று கொண்டது எல்லாம் ஒரு நொடி தான்..
சித்தார்த் விக்ரமை தள்ளி விட்டு வீட்டிற்க்குள் வந்தது மட்டும் அல்லாது அப்போது தான்..
பூவிதழின் அழைப்பில் சரியாக அவள் இருந்த அறையை நோக்கி செல்ல பார்த்தவனை பார்த்து.. அதிர்ந்து விக்ரம் சித்தார்த்தை தடுக்கும் முன் கதவை திறந்து சித்தார்த் அந்த அறைக்குள் சென்றதும்.. சென்ற வேகத்தோடு மீண்டும் ஹாலுக்கு வந்தவன் முகத்தில் தெரிந்த அந்த கோபம். ஆற்றாமை. என்று அனைத்தும் கலந்த கலவையாக அவன் அங்கு இருந்த இருக்கையில் சோர்ந்து போய் அமர்ந்து விட்டவனை பார்த்து விக்ரமுக்கே ஒரு மாதிரியாக ஆகி விட்டது..
ஒரு அண்ணன் ஒரு தங்கையை இது போலான ஒரு கோலத்தில் பார்க்கும் கொடுமை.. அதுவும் திருமணம் பின் என்றால், அது வேறு அதில் சங்கடம் மட்டும் தான் இருக்கும்.. ஆனால் இது அவமானமும் சேர்ந்து சித்தார்த்தை பார்க்க பாவம் போல் தான் இருந்தது விக்ரமுக்கு.
ஆனால் இப்போது விக்ரம் நிலையும் சொல்வது போல் இல்லையே.. இது போலான ஒரு கோலத்தில் நின்று கொண்டு இருக்கிறேன்..
பூமம்மா என் துப்பட்டா என்றாளே என்று குனிந்து பார்க்கும் போது சித்தார்த்தும் அப்போது விக்ரம் கட்டி இருந்த அந்த துப்பட்டாவை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
அந்த துப்பட்டா சித்தார்த் வாங்கி கொடுத்தது.. நன்றாக நினைவிருக்கிறது அவனுக்கு.. சுடி செட் துப்பட்டா கிடையாது.. மல்டி கலரில் இருப்பது.. அது வாங்கிட்டா எல்லா குர்த்திக்கும் போட்டுக்கலாம்..” என்று சொன்ன போது சித்தி கூட.
“ஒரு ஆம்பிளை பிள்ளையை என்ன எல்லாம் கேட்டு வாங்கிட்டு வருவான் டி.. நீ வாங்கிக்க போ..” என்று விட்டார்.. பாவம் போல் தன்னை பார்த்து நின்ற தங்கையிடம் அன்று எதுவும் சொல்லவில்லை என்றாலுமே, மறு நாளே வாங்கி கொடுத்து விட்டான்..
அப்போதே அந்த துப்பட்டாவை தன் மீது போட்டு கொண்டு அப்படியும்.. இப்படியும் திரும்பி காட்டி.. “நல்லா இருக்கா அண்ணா..? நல்லா இருக்கா..?” என்று பூவிதழ் கேட்ட போது மார்ச் மாதம் கடைசியான அன்று வங்கியில் அவ்வளவு வேலைக்கும் பின்னும் நான்கு கடை தேடி வந்த அந்த சோர்வு காணாது போய் விட்டது.
ஆனால் இப்போது அதே துணி வேறு ஒருவன் இடுப்பை அவனால் பார்க்க முடியவில்லை.. நல்ல வேலை அதற்க்குள் தன்னுடைய ட்ரஸை கொண்டு வர சொன்னவன் வந்து விட பூவிதழ் இருந்த அறைக்கு செல்லாது வேறு ஒரு அறையில் உடை மாற்றிய பின் மீண்டும் விக்ரம் பூவிதழ் அறைக்கு சென்றான்..
அங்கு கட்டிலின் மீது அமர்ந்து தன் ஒரு காலுக்கும் இடையில் முகத்தை புதைத்து கொண்டு அழுது கொண்டு இருப்பவளின் முதுகின் மீது விக்ரம் கை வைக்க.
பதறி நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் முழுவதுமே கண்ணீர்… கண்ணீரை துடைத்தவள் இன்னும் பதறியவளாக அந்த அறையின் கதவை பார்த்தவள் பின் அவனை விட்டு கொஞ்சம் விலகி போனவள்.
“ப்ளீஸ் கொஞ்சம் வெளியில் போங்களேன்…” என்று சொன்னதோடு மட்டும் அல்லாது கை எடுத்து கும்பிட்டு போட்டு தன்னை யாரோ என்று நிறுத்தி இருந்தவளையே பார்த்திருந்த விக்ரம்..
பின் என்ன நினைத்தானோ… “நீ சொன்னது போல வெளியில் போக தான் போகிறேன் பூவம்மா. ஏன்னா வெளியில் உன் அண்ணன் உட்கார்ந்துட்டு இருக்கும் போது உன் கூட ரொமான்ஸ் பண்ண முடியாது பாரு,.. ஆனா ஒன்னு நம்ம இடையே கொஞ்சம் நேரம் முன் நடந்தது.. நடந்தது தான்.. அதை மாற்ற முடியாது.. புரியுது தானே.. காச்சல் மயக்கத்தில் இருந்தேன்.. அதனால ஒன்னும் எனக்கு தெரியல.. தெரியல என்று வெளியில் உன் அண்ணன் கிட்ட சொல்ல மாட்டேன் என்று நினைக்கிறேன்….” என்று விக்ரம் பேச பேச பூவிதழின் முகம் வேதனையை காட்டியது..
பின் விக்ரம் என்ன நினைத்தானோ.. “மனசை போட்டு ரொம்ப குழப்பி கொள்ளாதே பூவம்மா. ஆனா ஒன்னு இப்போ நமக்குள் நடந்தது அசிங்கம் என்பது போல் மட்டும் பேசிடாதே.. அப்புறம் நான் மத்தவங்க கிட்ட காட்டும் முகத்தை உன் கிட்டேயும் காட்ட வேண்டி இருக்கும்..”
விக்ரமுக்கு என்ன தான் பூவிதழை சமாதானம் படுத்த பேச ஆரம்பித்தாலுமே, பேச்சின் முடிவு மிரட்டுவது போல் தான் முடிவடைகிறது..
பெண்ணவள் தனக்கு இத்தனை தூரம் இடம் கொடுத்ததிற்க்கு காரணம் அவனுக்கு தெரிந்தது தான். வெளி நாட்டில் யாரும் இல்லா தனிமையில் தன் நாட்டவர் ஒருவரை சந்தித்தாலே உறவு போல் தான் நினைக்க தோன்றும் அப்படி இருக்க. காதலன் அருகில் பார்த்தால், அதுவும் நான்கு நாட்கள் காச்சலில் தனிமையில் தத்தளித்து கொண்டு இருப்பவளின் அருகில் சென்றதால் தான் அந்த நிகழ்வு தங்களுக்குள் நடந்தது.. இல்லை என்றால் பெண்ணவள் தன்னை அருகிலும் விட்டு இருக்க மாட்டாள் என்பதும் புரிந்து கொண்டான் தான்..
ஆனால் காதலையும் மீறி இவர்களுக்கு தான் குடும்பம் முதன்மையாக நிற்குமே.. சித்தார்த்தே அதற்க்கு உதாரணமாக நிற்கும் போது.. அதனால் தான் விக்ரம் பூவிதழிடம் மிரட்டலை கையில் எடுத்து கொண்டான்.
ஆனால் விக்ரமுக்கு ஒன்று புரியவில்லை… பூவிதழ் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவள் இல்லை என்பதும்.. இவள் தான் நாளை இவனை மிரட்ட போகிறாள் என்பதும்.