இன்று விக்ரம் பேச்சுக்கு பூவிதழ் அமைதியாக இருக்க காரணம்.. அவளுக்கு தெரியும்.. இன்றைய இந்த நிகழ்வின் பொறுப்பு பெரும் பங்கு இவளுடையது என்று..
விக்ரம். “இங்கு ரொம்ப நேரம் இருக்கிறது தப்பா ஆகிவிடும் வா வெளியில் போகலாம்..” என்று அழைத்த போது கூட.
“இன்னும் என்ன தவறு நடக்க இருக்கிறது என்று நினைத்தாளே தவிர.. வெளியில் அண்ணன் இருக்க. அதுவும் இது போலான ஒரு கோலத்தில் கண்ட பின் இருப்பது தவறு என்ன மிக மிக தவறு என்பதை யோசிக்க மறந்தாள்..
புத்திசாலி பெண் தான்.. ஆனால் காச்சல் தவறு செய்தது என்று இது எல்லாம் சேர்த்து அவளை யோசிக்க விடாது செய்து விட்டது..பின் விக்ரம்..
“உங்க அண்ணன் வெளியில் இருக்க.” எனும் போது தான் தான் இருக்கும் நிலை உணராது எழ பார்க்க..
அவளை எழ விடாது .. “ஏய் ஏய்..” என்று சிறிது விலகிய போர்வையை சரியாக செய்து விட்டு..
“ட்ரஸ் போட்டுட்டு வா பூவம்மா..” என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேற பார்த்தவன் போகாது தயங்கிய வாறு.
“சித்தார்த் வரும் போது புல்லா கவர் பண்ணி தானே இருந்த..?” என்று பின் கழுத்தை தடவி விட்டவாறு கேட்டதற்க்கு பூவிதழிடம் இருந்து பதில் கிடைக்காது முறைப்பே கிடைக்க.
“நான் தப்பா எல்லாம் கேட்கல டி. அண்ணன் பாவம் அவர் நிலையில் இருந்து தான் சொன்னேன்..” என்று விக்ரம் சொல்லும் போதே பூவிதழ் முகத்தை கையில் புதைத்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்..
பின் ஒரு மாதிரி அவளை சமாதானம் செய்து விட்டு அந்த அறையை விட்டு வெளி வந்தவன் தெளிந்தவன் போன்ற ஒரு தோற்றத்தில் சித்தார்த் எதிர் இருக்கையில் அமர்ந்தான்..
அவனின் செயல்களையே பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்தும் எதிரில் அமர்ந்தவனை பார்த்தவன் பூவிதழ் அறையையும் பார்க்க.
சித்தார்த்தின் பார்வையில் “இப்போ வந்து விடுவா.” என்று சொல்ல. விக்ரமனின் அந்த உரிமையான பேச்சில் ஏதோ சொல்ல வந்த சித்தார்த் அமைதியாகி விட்டான்.
இதற்க்கு மேலே பார்த்தே விட்டேன் இது என்ன என்று நினைத்து கொண்டானோ என்னவோ..
பூவிதழும் மெல்ல அந்த இடத்திற்க்கு வந்தவள் ஒரு வித தயக்கத்துடன் அண்ணன் பக்கத்தில் அமர போக..
தடுத்து நிறுத்திய சித்தார்த் எதிர் இருக்கையான விக்ரம் பக்கத்தில் இருந்ததை காட்டி அங்கு அமர் என்பது போல் சைகை காட்டினாள்..
ஒரு பேச்சு இல்லை.. ஆனால் பார்வை மொத்தமும் தங்கையிடம் தான்.. “அண்ணா..” என்று சித்தார்த் காட்டிய இடத்தில் அமராது தயங்கி நின்று கொண்டு இருந்தவளிடம்..
“உன் முகத்தை பார்த்து பேசனும் பூவிதழ். அதற்க்கு நீ அந்த இடத்தில் உட்கார்ந்தால் தான் எனக்கு வசதி..” என்று விட்டான்..
பூவிதழ் அவள் வாழ்க்கையில் முதல் முறை தன்னை அவள் அண்ணன் சித்தார்த் முழு பெயர் இட்டு அழைக்கிறான்.. இது போல் கரரான குரலிலும் பேசுகிறான்..
தான் செய்ததும் அவ்வளவு சின்ன விசயம் கிடையாதே… அமர்ந்தாள் அமைதியாக அவள் அண்ணன்சொன்னஇடத்தில்அமர்ந்துவிட்டாள்..
சித்தார்த் தங்கையை பார்த்தது பார்த்த படியே இருந்தான்.. அந்த நிலையிலும் தங்கையின் சோர்வு அவன் கண்களுக்கு தெரிந்தது.
“நீங்க பார்த்தது பொய் அண்ணா.. எதுவும் நடக்கல.” என்று சொல்லி விட மாட்டாளா.? என்று அந்த நிலையிலும் சித்தார்த் தங்கையின் முகத்தை எதிர் பார்ப்புடன் பார்த்தான்..
ஆனால். “சாரி அண்ணா.” என்ற அந்த ஒரு மன்னிப்பில் சித்தார்த்தின் அந்த ஆசையில் தீயை வைத்து விட்டாள்..
சித்தார்த்தின் பார்வை இப்போது விக்ரம் பக்கம் சென்றது.. விக்ரமும் சித்தார்த்தை தான் பார்த்திருந்தான். ஆனால் வாய் திறக்கவில்லை..
பின் சித்தார்த்தே. “காதல் என்றால் என்ன.. என்று தெரியுமா.?”
அவன் முன் இருந்த கோலத்தையும், தங்கை கேட்ட மன்னிப்பையும் வைத்து தான் சித்தார்த் அந்த கேள்வி கேட்கிறான் என்பது விக்ரமுக்கு புரிந்தது.
ஆனாலுமே தயங்காது அளித்தான் பதில்.. “ காதல்னா இது அது என்று விளக்கம் எல்லாம் சொல்ல தெரியல.. ஆனா காதலித்தால் அவளையே கல்யாணம் செய்துக்கனும்.. அது எனக்கு தெரியும்.” என்று விட்டான்..
அதற்க்கு விக்ரம் சித்தார்த்திடம் இருந்து எதிர்ப்பை எதிர் பார்க்க. ஆனால் வந்ததோ பூவிதழிடம் இருந்து.
“உங்களை போல வில்லன் இருந்தா எல்லா காதலும் கல்யாணத்தில் முடியாது..” என்று கோபத்துடன் சொல்ல..
சித்தார்த்திடம் அவ்வளவு நெஞ்சை நிமிர்த்தி பேசி கொண்டு இருந்தவனுக்கு பூவிதழிடம் அப்படி பேச முடியவில்லை..
அதுவும் கோபத்தில் பேசியதில் அவளின் மூச்சு உஷ்ணத்தை அவன் நன்றாகவே உணர்ந்தான்.. அவன் இன்னொன்றையும் உணர்ந்தான்..
அது இதோ போல் அவளின் உஷ்ணத்தை உணர்ந்தான்.. அதுவும் இன்று தான் சில மணி நேரத்திற்க்கு முன் தான்.. ஆனால் அந்த உஷ்ணம்.. தன் உடலை அணல் போல் உருக்குவது போல் இருந்தது.. ஆனால் இந்த உஷ்ணம் அவன் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டுவது போல் இருந்தது..
என்ன சொல்வது என்று தயங்கிய போது.. விக்ரமுக்கு எதிர் பாராது சித்தார்த்திடம் இருந்து அவன் பதில் சொல்வதில் இருந்து விடுதலை கிடைத்தது..
“அதையே தான் நான் உன் கிட்ட கேட்கிறேன்.. தெரியாம இருந்து இருந்தால் கூட பரவாயில்லை.. தெரிந்தும் இப்படி ஏன்..?” என்று தான் அவன் கேட்டான்.. அதுவும் இங்கு வந்ததில் இருந்து சித்தார்த் தன் தங்கையிடம் பேசிய முதல் பேச்சு.. தவறு தவறு முதல் கேள்வி..
ஆனால் அவளாள் அதற்க்கு பதில் அளிக்க முடியவில்லை.. ஆனால் விக்ரமிடம் இருந்து பதில் வந்தது.
“பூவம்மாவுக்கு எல்லாம் தெரிந்தும் என் மீது லவ் வந்து இருக்குன்னா. இதில் இருந்து தெரியலையா உங்களுக்கு..?”
இருவரும் ஒருவரிடம் இன்னொருவர் காதல் சொல்லவில்லை.. ஆனால் என் மீது அவ்வளவு காதல் என்று உறுதியுடன் சொன்னா விக்ரம்..
“பூவம்மா.. பூவம்மா.” என்று விக்ரம் சொன்ன அந்த அழைப்பையே இரண்டு முறை சொன்ன சித்தார்த்.
“இப்போ பொம்மாவா என் கூட வரியா இல்ல.. பூவம்மாவா இங்கேயே இருந்துட போறியா..?”
சித்தார்த்தால் இந்த கேள்வியை கேட்க முடியவில்லை.. ஆனாலும் கேட்டு விட்டான்..
“அண்ணா.” என்று அழுது கொண்டு ஒடி வந்து தன்னை அணைத்து கொண்டவளை சித்தார்த்தால் விலக்கி விட முடியவில்லை..
அவன் வளர்த்த பெண் அல்லவா அவள்.. உறவு முறையில் அவனுக்கு அவள் தங்கை என்றாலுமே மகள் போல் தான் அவன் மனதால் நினைத்து கொண்டு இருக்கிறான்..
அவனுக்கும் ப்ரீத்திக்கு சில மாதங்கள் முன் பெண் குழந்தை பிறந்து இருக்கலாம்.. ஆனால் முதல் குழந்தை அவனுக்கு எப்போதும் அவனின் பொம்மா தானே.
அதனால் அணைத்து கொண்டவன்.. “நாம இந்தியா போகலாமா..?” என்று சித்தார்த் பூவிதழிடம் கேட்டதுமே அவள் பார்வை தன்னால் விக்ரமை தொட்டு மீண்டு சரி என்பது போல் தலையாட்டியது..
அதை இரு ஆண்மகங்களும் கவனித்தனர் தான்..
“ம் அப்போ கிளம்பு.. இங்கு ஆபிசில் ஏதாவது பார்மால்டிஸ் இருக்கா இருந்தா முடித்து கொடுக்க சொல்..” என்று விக்ரமை நோக்கி கை காட்டி சொன்னவன் பேச்சை பூவிதழ் முதலில் கவனிக்கவில்லை.
பின்.. “இவரால் என்ன செய்ய முடியும் அண்ணா.. நான் என் ட்ரையினரை கேட்கிறேன்..” என்று சொல்லி தன் பேசியை தேடி கொண்டு இருக்க சித்தார்த்தோ விக்ரமை பார்த்திருந்தான்.
விக்ரம்..பூவிதழ் தன் பேசி கையில் கிடைத்தது தன் ட்ரையனருக்கு அழைக்க முயலும் போது அதை தடுத்து நிறுத்தி விட்டு..
“அது எல்லாம் வேண்டாம்.. நான் பார்த்து கொள்கிறேன்..” என்று சொன்ன போது கூட..
“இல்ல கேட்கிறேனே.. குறிப்பிட்ட காலத்திற்க்கு முன் இந்தியா போனால் டென் லாக்ஸ் கொடுக்கனும் என்று அக்ரிமெண்டில் இருந்தது.” என்று சொல்ல.
விக்ரமுக்கு தான் அய்யோ என்று இருந்தது.. சித்தார்த்தோ.. நீ எப்போதும் இவ்வளவு தான் என்பது போல் பார்த்து கொண்டு இருந்தான்..
விக்ரமோ. “இல்ல அது எல்லாம் கொடுக்க வேண்டாம்.. நீ உன் அண்ணனோடு இந்தியா போ நான் ஒன் வீக்ல வரேன்..” என்று கூறியவனின் பேச்சை அப்போது தான் பூவிதழ் கவனித்தாள்.. கவனித்ததோடு மட்டும் அல்லாது கணித்தும் விட்டாள்.
தங்கைக்கு புரிந்து விட்டது என்று தெரிந்து கொண்ட சித்தார்த் போகலாமா..? உனக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்து விட்டு தான் வந்து இருக்கேன்.. போகலாம் என்று சொன்னதோடு ப்ளைட் கிளம்பும் நேரத்தையும் கூற..
அப்போ அண்ணாவுக்கு ஏதோ தெரிந்து தான் வந்து இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட பெண்.. இப்போது கூட விக்ரமை தவறாக நினைக்கவில்லை..
தவறாக நினைக்கவில்லை என்றால், தன்னை அடைந்ததை மட்டுமே. ஏன் என்றால் அந்த மயக்க நிலையிலுமே தான் நெருங்கிய போது விக்ரம் முதலில் விலகி தான் போனான்.. என்பதை அவள் உணர்ந்தாளே. .
அதனால் அமைதியாக அண்ணனோடு இந்தியாவுக்கு கிளம்பி விட்டாள்.. விக்ரம் சிறிது விலகி நின்று விட்டான் கை கட்டி கொண்டு.. ஆனால் பூவிதழை விட்டு முழுவதும் விலகும் எண்ணம் என்பது அவனுக்கு கிடையாது..
சித்தார்த் பக்கம் இருந்து யோசித்து தான் விக்ரம் அமைதி காத்தான்.. சாத்வீகாவை தான் இது போல் பார்த்து இருந்தால் சித்தார்த் போல் நாம் இதை இப்படி அமைதியாக அனுகி இருப்போமா என்று..
ஆனால் சித்தார்த் எண்ணமே வேறு.. இந்தியாவிற்க்கு அழைத்து சென்று நிலையை சொன்னால் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை சித்தார்த்துக்கு. இருந்தது.. அதை மறந்து விட சொல்ல நினைத்தான்.. ஏன் என்றால் சித்தார்த் நினைப்பது அந்த பங்களாவில் தங்கை மகிழ்ச்சியோடும் மன நிம்மதியோடும் வாழ முடியாது என்று.
ஆனால் விக்ரம் ஒன்று நினைக்கலாம்.. சித்தார்த் ஒன்று நினைக்கலாம்.. கடவுள் என்ன நினைக்கிறார்.. அதில் தானே இருக்கிறது நம் எதிர் கால வாழ்க்கை..
இரண்டு நாட்களில் சித்தார்த் பூவிதழோடு இந்தியாவிற்க்கு வந்து விட்டான்.. அவளின் ஒய்ந்த தோற்றத்தை பார்த்து பெரியம்மா அம்மா அண்ணி அக்காக்கள் என்று அப்படி ஒரு பேச்சு..
“ஆப்படி ஒன்றும் நீ பணம் சம்பாதிக்க தேவை இல்லை.. இந்தியாவில் வேலைக்கு போவது என்றால் போ.. இல்ல என்றால் உன் அண்ணன் ஒரு இடம் சொல்றான். அந்த பையனை கட்டிட்டு புருஷன் வீட்டிற்க்கு போகும் வழியை பார்..” என்று சொல்ல..
பூவிதழோ அதிர்வோடு தன் அண்ணனை பார்த்தான்.. அவன் ஒன்றும் பேசவில்லை.. அமைதியோ அமைதி என்பது போல் தான் நின்று கொண்டு இருந்தான்..
சித்தி சொன்னது போல் அவனிடம் வேலை செய்பவரின் மகனுக்கு பூவிதழை கேட்டார்.. இவனின் குழந்தையில் தொட்டில் போடும் விழாவின் புகைப்படத்தை பார்த்து விட்டு.
“என் மகனுக்கு பெண் தேடுறேன் உங்க தங்கையை கொடுப்பிங்கலா சார்..” என்று வயதில் பெரியவர் என்றாலுமே சித்தார்த்தை சார் போட்டு அழைத்து பேசும் பதவியில் அவன் இருந்ததால் மரியாதை அழைப்பில் கேட்க.
வீட்டில் பேசிட்டு சொல்றேன் சார்.என்று சொன்னது போல் சொன்னவன். எனக்கு அந்த பையனை தெரியும். நல்ல பையன் தான்.. பொம்மா இந்தியாவிற்க்கு வந்த பின் கேட்டு முடிவு செய்யலாம் என்று இருந்தான்..
ஆனால் அதற்க்குள் என்ன என்னவோ ஆகி விட்டது.. ஆனால் இது என்ன இன்னும் இருக்கிறது என்பது போல்.
சித்தார்த் தனிமையில் தங்கையிடம். “இப்போ எந்த முடிவும் எடுக்க தேவை இல்லை பொம்மா..ஒரு இரண்டு மாதம் கழித்து எது என்றாலும் பேசலாம்.” என்று அந்த விசயத்தை தள்ளி போட நினைத்தான்.
“ம்..” என்று விட்ட பொம்மா பின் தயங்கி தயங்கி..
“எப்படி ஜெர்மனி வந்திங்க விக்ரம் பற்றி எப்படி தெரியும்.” என்று சித்தார்த்தை ஜெர்மனியில் பார்த்த நாள் முதல் மனதில் அறித்து கொண்டு இருந்த கேள்வியை கேட்டு விட்டாள்..
“லாஸ்ட் வீக் என் கஸ்டமர் ஒருவர் பேங்க வந்த போது சும்மா பேமிலி பத்தி பேசிட்டு இருந்த போது உன்னை பத்தி பேச்சு வந்தது.
அப்போ நீ ஜெர்மனி போனது அங்கு எங்கு வேலை பார்க்குற என்று சொன்னேன்.. அப்போ தான் அவர் இந்தியாவின் கார் கம்பெனி கூட அங்கு ஷேர் வாங்கி இருக்கு பார்டனர் என்பது போல சொன்னார். அது விக்ரம் உடையது என்று தெரியும்..
அப்போ கூட நான் தப்பா எல்லாம் நினைக்கல. வீடியோ காலில் உன் முகம் நீ என்ன தான் உடம்பு நல்லா தான் இருக்கு என்று சொன்னலுமே எனக்கு தெரியாதா..? என் பொம்மாவை பத்தி.அவசர அவசரமா என் பேங்க கஸ்டமர் ஒருவரை பிடித்து ஜெர்மனிக்கு டிக்கெட் வாங்கி..” என்று சொல்லி கொண்டு வந்தவன் அடுத்து பேசவில்லை.. பேச முடியவில்லை..
இதை பற்றி அண்ணன் தங்கை பேச வேண்டிய விசயம் கிடையாது.. அதனால் அதை பற்றி பேச வரும் போது எல்லாம் வாயை இழுத்து மூடி கொள்கிறான்..
பயம் தங்கையை தவறாக பேசி விட போகிறோமோ என்ற பயம் அவனுக்கு.. நல்ல வேலை அந்த சமயம் அவனின் மனைவி ப்ரீத்தி வந்து இருவரையும் காப்பாற்றி விட்டாள்..
“இன்னைக்கு தான் வந்தா இன்னைக்கே எல்லாம் பேசிடனுமா.? இனி அவள் இங்கு தான் இருப்பா.. பொறுமையா பேசிக்கலாம். உங்களை பாப்பா தேடுறா.. வாங்க.” என்று நாத்தனாரை தூங்க அனுப்பி விட்டு கணவனை தன் அறைக்கு அழைத்து கொண்டான்..
ஜெர்மனியில் விக்ரமும் சொன்னது போல ஒரு சில வேலைகள் இருந்தது.. அதை முடித்து விட்டு இந்தியாவுக்கு வந்து விட்டான்..