வந்ததுமே பூவிதழுக்கு ஒரு மெசஜ்.. “இந்தியா வந்து விட்டேன்..” என்று அதோடு அவளை எந்த விதத்திலும் தொல்லை செய்யவில்லை..
அதுவும் குறிப்பாக அன்றைய அந்த கூடலை குறித்து மறை முகமாக கூட விக்ரம் பூவிதழுக்கு நியாபகம் படுத்தவில்லை.. இருவரும் அன்றைய நிகழ்வுக்கு பின் அந்த கூடலுக்கு தான் மட்டுமே காரணம் என்று தன் மீதே பழி சுமத்தி கொண்டனர்..
அதனால் மற்றவர்களை எதிர் கொள்ள தயங்கி நின்று விட்டனர்… பூவிதழ் தன் வீட்டில் அனைவரோடும் நன்றாக பேசி சிரித்து கொண்டு இருந்தாலுமே, அந்த மகிழ்ச்சியிலும் சரி.. சிரிப்பிலும் சரி ஒரு செயற்கை தனம் தெரிந்தது..
தங்களின் அறையில் ப்ரீத்தி சித்தார்த்திடம் ஒரு முறை.. “ஜெர்மனியில் இருந்த வந்த பின் பொம்மா கிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரியுது.. சிரிக்கிறா தான்.. ஆனா அந்த சிரிப்பு நம்மை ஏமாற்றவோ என்று எனக்கு தோனுது..”
ப்ரீத்தியே கண்டு பிடிக்கும் போது சித்தார்த் அதை இனம் கண்டு இருக்க மாட்டானா..? அவனுக்குமே தெரிந்தது தான்.
ஆனால் இதை பற்றி அடுத்து யோசிக்க கூட பயந்தான்.. தங்கையை அழைத்து பேச இன்னுமே அவனுக்கு தயக்கம்.. வீட்டில் இதை பற்றி பேச பயம்.. வீட்டில் இன்னொரு இழப்பை அவனால் ஏற்க முடியாது..
கண்டிப்பாக பெண்கள் தாங்க மாட்டார்கள். இருவருக்குமே வயது கூடுகிறதே.
ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.. என் அனைத்திற்க்கும் சாட்சியாக இருந்தவள்.. எப்படி அந்த வீட்டு பையனை லவ் பண்ணால். அதுவும் திருமணம் முன் இது போல் நடந்தது.. அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..அந்த அளவுக்கு அவனை பிடித்து இருக்கா.? அந்த அளவுக்கு அவன் மீது நம்பிக்கையா…? இதை எல்லாம் நினைக்க நினைக்க இரவு சரியாக தூக்கம் கூட வருவது இல்லை அவனுக்கு.
இது என்ன இன்னும் இருக்கு பார்.. உனக்கு என்பது போல்.. ஒரு மாதம் கடந்த நிலையில், அன்று பூவிதழ் தன் அறையை விட்டு வெளி வர காணும்..
சித்தார்த் தன் மனைவியிடம். “பொம்மா சாப்பிட்டாலா..?” என்று கேட்டு கொண்டே அவன் உணவை எடுத்து வாயில் வைத்தான்..
“காலையில் இருந்து வர காணும்.” என்று மனைவியின் பேச்சுக்கு பொம்மாவை அழைத்து வர எழ பார்த்தவனை தடுத்து நிறுத்திய பத்மினி.
“உனக்கு ஆபிஸ்க்கு நேரம் ஆகுது சித்து.. நீ சாப்பிட்டு கிளம்பு.. இப்போ வர வர அவளுக்கு கொழுப்பு கூடிட்டு போகுது.. வீட்டிற்க்கு பொறுப்பா எல்லாம் செய்யிறா என்று நாம தான் அவளை தலையில் தூக்கி வைத்து விட்டோம்.. இப்போ இறங்க மாட்டேங்குறா..?” என்று சித்தியின் குற்றப்பத்திரிக்கை யோசனையான சித்தார்த் மாலை வீட்டிற்க்கு வந்து தங்கையிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் வங்கிக்கு சென்றான்..
பாவம் தெரியவில்லை.. தங்கையை பார்க்கும் முன் விக்ரம் தன்னை பார்க்க வருவான் என்றும்.. அதுவும் தன் சகோதரி சாத்வீகாவோடு என்றும் தெரியவில்லை.. பூவிதழ் தன் அறையை விட்டு வெளி வராத காரணத்தையும் விக்ரம் மூலமே தெரிந்து கொள்வான் என்பதும்..
மூன்று மணி அளவில் கணக்குகளை சரிப்பார்த்து கொண்டு இருந்த போது அவன் அறையின் கதவு தட்டப்படவும்..
வங்கியின் வாடியாளர்கள் என்று நினைத்து. “ யெஸ் கம்மிங்..” என்று தன் முன் இருந்த கணினியை பார்வை இட்டு கொண்டே சொன்னவன் தான் சரி பார்க்க நினைத்தது முடித்த பின் தான் தன் முன் இருந்தவர்களை நிமிர்ந்து பார்த்தான்.
விக்ரமும் சாத்வீகா.. கூட டேனியலும் அமர்ந்து இருப்பதை பார்த்த சித்தார்த் எப்படி அவர்களை கைய்யால்வது என்று தெரியாது அவர்களையே பார்த்து கொண்டு இருக்க ..
விக்ரம் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.
“சாரி மிஸ்டர் சித்தார்த்.” என்று.
சித்தார்த் இப்போது கொஞ்சம் தெளிந்து கொண்டு விட்டான்..
“எதற்க்கு.?” அவன் கேட்ட சாரி முன் நடந்ததிற்க்கா தற்போது நடந்து கொண்டதற்க்கா என்று பொருள் பட .
விக்ரம்.. “இரண்டுக்கும் தான்.” என்று விட்டான்.
அதற்க்கு ..சித்தார்த்.. “முன் நடந்ததிற்க்கு சாரி சொல்லனும் என்று அவசியம் இல்ல. ஆனா ஜெர்மனியில் நடந்தது சாரி சொல்லும் அளவுக்கு சின்ன விசயம் கிடையாது.. அதுவும் நம்ம இரண்டு குடும்பம் முன் நடந்தது.. எல்லாம் தெரிந்தும் இப்படி.. எனக்கு புரியல.. அவள் சின்ன பெண் என்றும்.. நான் சொல்ல மாட்டேன்.. ரொம்ப பக்குவப்பட்ட பெண்.. எப்படி..?” என்று பேசும் போதே அது வங்கி அனைவருக்கும் காட்சி பொருளாக ஆகுவதோடு இது தன் தங்கையின் விசயம் என்று நினைத்து பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு இருந்தான்.
விக்ரம்.. “என்னால எல்லாத்துக்கும் சாரி தான் சொல்ல முடியும் மிஸ்டர் சித்தார்த்.. அன்னைக்கு நடந்தது அவளோடு தப்பு இல்ல..” என்று விக்ரம் சொல்லும் போதே சித்தார்த் சாத்வீகா டேனியலை பார்க்க.
“நான் இன்னைக்கு காலையில் தான் இவங்க கிட்ட சொல்லிட்டேன்.. சொல்ல வேண்டிய சூழ்நிலை .. திரும்ப எல்லாத்துக்கும் சாரி மிஸ்டர் சித்தார்த்..” என்று விக்ரம் மீண்டும் மீண்டும் எல்லாவற்றிக்கும் மன்னிப்பு கேட்கவும் சித்தார்த்துக்கு ஆயாசமாக இருந்தது..
பாவம் அவனுக்கு தான் தெரியவில்லை.. பேச்சுக்கு பேச்சு எல்லாத்துக்கும் சாரி ஏன் கேட்கிறான் என்பது..
முதல் முறை.. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சாத்வீகா சித்தார்த்திடம்..
“பழைய விசயத்தை நினைத்து புதிய விசயத்தை நாம காம்பிளிகேட் பண்ணிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்..” என்று தன் பேச்சை சித்தார்த்திடம் ஆரம்பித்தால் சாத்வீகா.
சித்தார்த் டேனியலை தயக்கத்துடன் பார்த்த வாறே.. “ நான் பழையது நினைகிறது இல்ல.. அது மறந்தும் விட்டது..” என்ற பேச்சுக்கு சாத்வீகா.
“நல்லது..” என்று கூறியவள்.. பின் சித்தார்த் டேனியல் மீது செலுத்திய பார்வைக்கு.
“இவருக்கு என்னை பத்தி எல்லாம் தெரியும்.” என்று விட்டாள்.
டேனியலுக்கு சாத்வீகாவை பற்றி அனைத்தும் தெரியும் என்பது போல் சாத்வீகாவுக்கு முகேஷோடான திருமண முறிவு.. சமீபத்தில் டேனியலோடான திருமணம் என்று அனைத்துமே சித்தார்த்துக்கும் தெரியும்.
காரணம் சமூகத்தில் சிறிது வளர்ந்து விட்டாலே. வீட்டில் நடக்கும் விசயத்தை வீதிக்கு எடுத்து விட்டு விடுவார்களே… அது போல ஏதோ ஒரு மீடியா வழி மூலம் தான் சாத்வீகாவை பற்றி அனைத்துமே அறிந்து கொண்டான்..
முன் சாத்வீகா முகேஷை விட்டு பிரிவதில் தயக்கம் காட்டியதுமே இதற்க்காக தானே.. ஆனால் இன்று புரிகிறது.. யாருக்காவும் தன் வாழ்க்கையின் நிம்மதியை கெடுத்து கொள்ள கூடாது என்று.. அதை உணர்த்தி இருந்தான் டேனியல்..
சாத்வீகா சொன்னதற்க்கு.. வெறும்.. “ம்..” என்று மட்டும் கூறினான்..
பின் இரு பக்கமும் அமைதி.. அடுத்து எப்படி பேச்சை கொண்டு போவது என்று.. அந்த தயக்கத்தை டேனியல்.
“மிஸ்ட்டர் சித்தார்த் பழையது மறந்து விட்டிங்க என்றால் புதிய உறவு ஏற்பதில் சிக்கல் இருக்காது என்று நினைக்கிறேன்..” என்று பாதியில் விட்ட பேச்சை டேனியல் தொடர்ந்தான்..
வெறும் மனது மட்டுமே இருவரும் பரி மாறி கொண்டு இருந்தால், பரவாயில்லை.. அதுவுமே பூவிதழ் விசயத்தில் கடினம் தான்.. ஏன் என்றால் அனைத்தும் தெரிந்தும் காதல் என்றால்.. அவனும் ஒரு காலத்தில் காதலித்தான் தான். ஆனால் இந்த காதல் எந்த வகை சேர்த்தி என்று அவனுக்கு தெரியவில்லை..
பாவம் அவனுக்கு இன்னுமே அந்த காதல் எது வரை சென்று இருக்கிறது என்று கூட தெரியாது.. தான் டேனியலிடம்..
“நான் எதை பற்றியும் வீட்டில் பேசவில்லை.. யாருக்கும் எதுவும் தெரியாது மிஸ்டர் டேனியல்.. சும்மா சொல்லும் விசயமும் இது இல்ல.. என் வீட்டில் லவ் என்றாலே ரொம்ப யோசிப்பாங்க. ஆனா இது. சுத்தமா எனக்கு புரியல.. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் அந்த நிகழ்வை பேஸ் பண்ண பயந்து தான்.. அதை தள்ளி வைத்து இருக்கேன்..” என்று தன் நிலையையும் வீட்டின் நிலையையும் விளக்கமாக கூறினான்..
விக்ரமோ. “இனி தள்ளி போட முடியாது மிஸ்டர் சித்தார்த்..” என்று விக்ரம் சொன்ன போது கூட பாவம் சித்தார்த் விக்ரம் வீட்டில் அவனுக்கு பெண் தேடுகிறார்கள் போல என்று தான் நினைத்து கொண்டான்..
அதனால். “எனக்கு வீட்டில் பேச டைம் வேண்டும் விக்ரம்..”
வீட்டு மாப்பிள்ளையாக கூடியவன்.. மரியாதையோடு தான் பேசினான்.. தங்கை தான் வேறு ஆப்ஷன் அவனுக்கு கொடுக்கவில்லையே..
ஆனால் விக்ரம் சொன்ன.. “மிஸ்டர் டைம் இல்ல..” என்று திரும்ப திரும்ப அதையே சொல்ல..
“அப்போ நீங்க வேறு பார்த்துக்கோங்க விக்ரம்..” என்று கடிந்து கொண்டான்..
அதற்க்கு விக்ரமும் ஏதோ கோபத்துடம் பேசும் முன் டேனியல்.. விக்ரமனிடம்.. “தோஸ்த் சாருக்கு இன்னும் தெரியல.. என்று நினைக்கிறேன்..” என்ற அந்த பேச்சு சித்தார்த்தின் மனதில் பயத்தை கொடுத்தது..
“என்ன.? என்று கேட்ட போது விக்ரம் வெளிப்படையாக..
“ஷி இஸ் பிரக்னெட்..” என்றதில் அதிர்ந்து எழுந்து நின்று விட்டான்.. கத்தவில்லை கோபப்படவில்லை… இப்போது என்ன செய்வது என்ற பயம் மட்டுமே அவன் கண்களில்.. டேனியலுக்கே ஒரு மாதிரியாகி விட்டது..
“மிஸ்டர் சித்தார்த் பயப்படாதிங்க எல்லாம் சரியாக்கி விடலாம்..” என்று தைரியம் அளித்தான்..
டேனியல் பேச்சில் அவனை கோபத்துடன் முறைத்த சித்தார்த்.. “இதுக்கு பயப்படாது ஈஸியா எடுத்துக்க நாம வெளி நாட்டில் இல்ல மிஸ்டர் . நீங்க வெளி நாட்டில் படித்ததினால் அதன் வழி பின் பற்றுறிங்க போல. குழந்தை அடுத்து மேரஜ் என்று.. ஆனா என் வீட்டில் லவ்.. இதுவே எப்படி ஆரம்பிப்பது என்று தெரியல.” என்று சொல்லி தலை மீது கை வைத்து கொண்டான்.
“இப்போ ஒருவர் மீது ஒருவர் கோபம் படும் நேரம் கிடையாது மிஸ்டர் சித்தார்த்.. உங்க சிஸ்டர் என்ன என்னவோ சொல்றா. அதை பத்தி பேச தான் வந்தோம்..” என்று சாத்வீகா சொல்லும் போது சித்தார்த் கோபம் படவில்லை.. காரணம் அந்நிய பெண்கள் மீது கோபம் படும் பழக்கம் அவனுக்கு இல்லாததே காரணம்.
அதனால். “என்ன சொல்றா.?” என்ற இந்த கேள்வியை சித்தார்த் விக்ரமனிடம் தான் கேட்டான்.
விக்ரம் தயங்கிய வாறு. அண்ணன் பழைய விசயம் எல்லாம் எங்க ப்ரீத்தி அண்ணிக்கு தெரியாது.. நம்ம மேரஜ் செய்துக்கிட்டா இரண்டு குடும்பத்திற்க்கும் உறவு வரும்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் சூழல் வரும் என்று சொல்றா..” என்று சொல்லும் போதே..
“இது எல்லாம் அவளுக்கு இப்போது தான் தெரியுதா..?” என்று பல்லை கடித்து கொண்டு அடக்கட்ட கோபத்துடன் கேட்டான்..
“மிஸ்டர் சித்தார்த் அன்னைக்கு நடந்ததில் என் மீது தான் தப்பு..” என்று விக்ரம் மொத்த பழியையும் தன் மீது போட்டு கொண்டான்..
சித்தார்த்தோ விக்ரமனின் இந்த பேச்சில் சிரித்தவன்.. ப்ளைட்ல வரும் போது பொம்மா கூட இதே தான் சொன்னா.. அவர் மீது தப்பு இல்ல நான் தான் என்று.. அதை கேட்டு ஒரு அண்ணனா என் மனசு ரொம்ப குளு குளு என்று இருந்துச்சி..” இது எல்லாம் என்ன பேச்சு என்பது போல் இருந்தது.. சித்தார்த்தின் பேச்சு.
சரி அடுத்து என்ன செய்வது.. என்று கேட்டதற்க்கு விக்ரம்..
“நான் நாளையே உங்க வீட்டிற்க்கு முறைப்படி பெண் கேட்டு வரேன்.. நீங்க அது வரை உங்க தங்கையை பத்திரமா பார்த்துக்கோங்க. பைத்தியம் போல கருவை கலைத்து விடுவேன் .” என்று விக்ரம் பேசி கொண்டு இருக்கும் போதே சித்தார்த் தான் இருக்கும் இடம் மறந்து.
“இது என்ன பைத்தியக்கார தனம்.” என்று கத்தி கொண்டே எழுந்தவனை டேனியல் தான்.
“சார் சார்.” என்று அவனை அமைதி படுத்தும் படி ஆகி விட்டது.
“நான் பார்த்து கொள்கிறேன்..” என்று சொல்லி அனுப்பி வைத்தவன். வங்கியில் அனுமதி பெற்று கொண்டு வீடு வந்தவன் தன் அன்னை சித்தியிடம் அனைத்தும் கூறி விட்டான்..