பத்மினி பெண் அறைக்கு கோபத்துடன் செல்ல பார்த்தவரை பாக்யவதியும் சித்தார்த்தும் தான் அமைதி படுத்தினர்..
“நீயே கத்தி பிரச்சனையை பெருசு படுத்தி விடாதே பத்து.. பெண் பிள்ளை சமாச்சாரம்..” என்று அவரை அடக்கி வைக்க.
“இது எல்லாம் மறைக்கும் விசயமா கா. இன்னும் கொஞ்ச நாள்ல.. கடவுளே.. கடவுளே. நான் கரை சேர்ந்துட்டேன் என்று நினச்சிட்டு இருக்கும் போது இப்படி என் தலையில் பாராங்க கல்லை போடுவது போல போட்டாளே… இது இவளோடு முடியும் விசயமா கா..
இது எல்லாம் சம்மந்திங்க வீட்டிற்க்கு தெரிய வந்தால் அய்யோ மத்த பெண்கள் வாழ்க்கை பாதிக்குமே..” என்று இந்த பெண் மட்டும் அல்லாது மற்ற பெண்களையும் நினைத்து கண்கலங்கி போய் விட்டார்.
பாக்யவதி.. “அதுக்கு தான் சொல்றேன் பத்து. சத்தம் போடாதே. பொம்மா செய்தது மன்னிக்க முடியாத தப்பு தான். ஆனா இப்போ அதை எப்படி சரி செய்யனும் என்று தான் நாம பார்க்கனும்.. இப்போ கோபபட்டோ.. இல்ல ஆத்திரம் பட்டோ எந்த பிரயோசனமும் இல்ல.. புரியுதா.. கண்ணை தொடச்சிக்கோ குழந்தை அழுகுற சத்தம் கேட்குது ப்ரீத்தி மேலே இருந்து வருவா.” என்று எச்சரிக்கை செய்தாள்..
ஆம் தன் வீட்டு மருமகள்களுக்கே தெரியாது பூவிதழ் திருமணத்தை முடித்து விட திட்டம் இட்டனர்,.
அம்மா சித்தியிடம் பேசிய பின் சித்தார்த் தங்கையின் அறைக்கு சென்றான்.. அங்கு பொம்மா அண்ணனை பார்த்ததுமே அவன் முகத்தை கூட பார்க்க முடியாது தலையணையில் முகம் புதைத்து கொள்ள.
“இப்போ உன்னை மறைத்து கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்ல . அன்னைக்கு நீ எல்லாம் யோசித்து இருக்கனும்.. இனி சாய்ஸ் நம்ம கிட்ட இல்ல. புரியுதா. விக்ரம் கிட்ட என்ன என்னவோ சொல்லி இருக்க..
முதல் செய்த உன் செயலையே நான் இன்னும் ஜீரணித்து கொள்ள முடியாது தத்தளித்து கொண்டு இருக்கேன். இதுல குழந்தையை.” எனும் போதே.
தலையணையில் அழுது கொண்டு இருந்தவள் அண்ணனை அணைத்து கொண்டு.
“அண்ணா. இதால உங்க வாழ்க்கை../” என்று இழுக்கும் போதே..
“எல்லாம் கை மீறி போயிடுச்சி பொம்மா இனி யோசிக்க ஒன்னும் இல்ல.. “ என்று விட்டான். அடுத்து சொன்னது போல விக்ரம் தன் தந்தை சகோதரி சாத்வீகா குழந்தைகளோடு முறைப்படி பூவிதழை விக்ரமுக்கு பெண் கேட்டு வந்தனர்.
காதல் திருமணமாக தான் நடத்தி முடித்தனர்.. கற்பத்தை மட்டும் மறைத்து.. கடைசி வரை சித்தார்த் சாத்வீகா விசயமும் தெரியப்படுத்தாது தான் திருமணத்தை முடித்தனர்..
சொந்தம் அனைவரும் திருமணம் அன்று.. இவ்வளவு பெரிய இடமா.? என்று ஆத்து ஆத்து போயினர்.. அதுவும் வீட்டோடு மாப்பிள்ளைக்கு எப்படி சம்மதித்தனர் அவ்வளவு காதலா நம்ம வீட்டு பெண் மீது என்று தான் பேசிக் கொண்டனர்..
ஆம் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்பது பூவிதழ் இந்த திருமணத்திற்க்கு கன்டிஷனாக முன் வைத்தாள்..
இதில் மட்டும் யாரின் பேச்சையும் அவள் கேட்கவில்லை.. விக்ரமனிடம் தனியே.
“இதுக்கு ஒத்து கொண்டாள் நம்ம கல்யாணம் இல்லையே. வேண்டாம் இதோடு முடித்து கொள்ளலாம். நான் உங்களை எதற்க்கும் நிர்ப்பந்தம் படுத்த மாட்டேன்.. உங்க விருப்பம் தான்..” என்று தன் கண்டிஷனை முன் வைக்க..
விக்ரம் தான் பாவம் எப்படி அந்த வீட்டில் என்று தத்தளித்து போய் விட்டான்.
டேனியல் தான்.. “முதல்ல மேரஜ் முடியட்டும் தோஸ்த்.. குழந்தையும் பிறக்கட்டும்.. அப்புறம் பேசும் முறையா பேசி. சிஸ்டர உன் வீட்டிற்க்கு கூட்டிட்டு வந்துடு. பிசினஸ்ல எத்தனை இது போல பேசி முடித்து இருக்கோம்.” என்று மச்சானுக்கு தைரியம் சொல்ல சரி என்று ஒத்து கொண்டு தான் இந்த தருமணம் நடந்தது..
எபிலாக்..
ஒன்ரே முக்கால் வருடம் கடந்த நிலையில்..
அன்று காலையில் இருந்தே சித்தார்த் வீடு முழுவதுமே உறவு முறை நிரம்பி வழிந்தது. இப்போது மாடியிலும் இரண்டு அறை எடுத்து இருந்தனர்.. கொஞ்சம் பெரியதாக.. குழந்தை பிறந்த பின் ..
“கீழ் ரூம் ரொம்ப சின்னதா இருக்கு.. பத்தாது எனக்கு தண்டனை கொடுக்குற என்று நீ நம்ம குட்டிம்மாவுக்கு கொடுக்குற..” என்று மூன்று மாதம் தன் பெண் குழந்தையை மடியில் வைத்து கொண்டு தன்னிடம் பேசி கொண்டு இருந்த தன் கணவன் விக்ரமையே ஒரு மாதிரி பார்த்து கொண்டு இருந்தாள் பூவிதழ்..
அவள் பார்வையில் பேசி கொண்டு இருந்தவன் சட்டென்று தன் பேச்சை நிறுத்திய விக்ரம்..
‘இவள் இது போல பார்த்தாளே ஏதாவது சொல்வாளே’ என்று விக்ரம் நினைத்து கொண்டு இருக்கும் போதே அவன் நினைத்தது போல் தான் சொன்னாள்.
“நான் பதினைந்து வயதில் பார்த்த விக்ரமா நீங்க.? நான் ஆளை மாத்தி கல்யாணம் செய்து கொள்ளவில்லையே.. இல்ல ட்வீன்ஸ்.. அதுவும் இல்லேன்னா உங்க அப்பாவுக்கு வேறு..” என்று பேசியவளை விட்டால். தன் இன்னும் முந்தைய தலை முறையை கூட எடுத்து விட்டு விடுவாள் என்று பயந்து போய்.
“வேறு ரூம் கட்ட வேண்டாம்.. நானும் என் பொண்ணும் இந்த ரூமிலேயே இருந்து கொள்கிறோம்.” என்று விட்டான் பாவம் கடல் போல் தன் பங்களா இருக்க. முன் செய்த வினையின் பலனை அனுபவிக்க. இதோ வீட்டோடு மாப்பிள்ளை என்று இந்த வீட்டிற்க்கு நான் வாக்க பட்டு வந்து என்று இது போல் வசனங்கள் தான் இப்போது எல்லாம் தினம் தினம் தன் தோஸ்த் டேனியலிடம் சொல்லி கொண்டு திரிகிறான்..
டேனியலும் இப்போது எல்லாம் விக்ரமை பார்த்தாலே. கட்டி கொடுத்த பெண்களிடம் கேட்பது போல்…
“இப்போ மாமியார் வீட்டில் ஒன்னும் பிரச்சனை இல்லையே…?” என்று கேட்ட போது முதலில் டேனியல் தன் மீது இருக்கும் அக்கறையில் தான் கேட்கிறான் என்று நினைத்து.
“வசதி பத்தல . ஏஸி.. கூலே ஆக மாட்டேங்குது. பெட் ஸ்மூத்தா இல்ல..” என்று ஆயிரம் குறை படித்தவன்.
“ஆனா ஒன்னும் சொல்லியே ஆகனும் தோஸ்த்.. இரண்டு அத்தைகளின் சமையலும் ஏ ஒன்.. நம்ம போற பைப் ஸ்டார் ஒட்டல் குக் எல்லாம் என் அத்தைங்க கிட்ட பிச்சை வாங்கனும் டா..” என்று பாராட்டும் கொடுத்தான்..
சின்ன வயதில் இருந்தே வேலையாள் சமைத்து கொடுத்த உணவு உண்டு வாழ்ந்தவன்..இப்போது வீட்டு பெண்களின் கை உணவு அவனுக்கு அவ்வளவு ருசியை கொடுத்தது.
விக்ரம் பேச்சில்.. “அப்போ நம்ம ஒட்டல் குக்கை நிறுத்திட்டு உங்க இரண்டு அத்தைகளையும் அப்பாயிட்மெண்ட் பண்ணிடலாமா.?” என்று விளையாட்டு போல் கேட்டான் டேனியல்..
ஆனால்.. “என் அத்தைகளுக்கு என்ன தலை எழுத்து உன் ஒட்டலுக்கு.” எனும் போதே டேனியல் இடை நிறுத்தி..
“நம்ம ஒட்டல் தோஸ்த்.” சென்னையில் இருக்கும் பிரான்சை நினைவு படுத்தினான்.
“எது என்றாலும் என்ன.. எங்க அத்தைங்க வீட்டு ஆட்களுக்கு தான் செய்வாங்க. அவங்க அன்பை எல்லாம் வியாபாரம் ஆக்க கூடாது.” என்றவனின் பேச்சில்.
டேனியல். “பார்டா பிசினஸ் மேன்.. பிசினஸ் ஆக்க கூடாது என்று சொல்வதை..” என்று கிண்டல் செய்தவனிடம் சீரியஸாக.
“நிஜமா இரண்டு அத்தைகளும் சூப்பர் தோஸ்த்.. அதுவும் என் மாமியார். யப்பா…அவ்வளவு வெகுளி தோஸ்த்.. இந்த பேச்சை இப்போ நீ எப்படி எடுத்துப்ப என்று தெரியல..
ஆனா அப்போ சித்தார்த்திடம் பிரிக்க என்று கூட அவங்களை விட்டுட்டு என்று கன்டிஷன் போட்டது எனக்கே இப்போ ஷேமா இருக்கு..” என்ற இந்த பேச்சை விக்ரம் உணர்ந்து தான் கூறினான்.
பூவிதழ் விக்ரமனிடம் இருந்து இந்த மாற்றத்தை கொண்டு வரவும்.. முன் அவன் செய்த செயல். பேசிய பேச்சு.. எவ்வளவு தவறானது என்று உணர்த்தவும் தான்.
விக்ரம் வீட்டொடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று கன்டிஷன் போட்டது..
சித்தார்த் கூட.. பூவிதழிடம்.. “பழிவாங்குறியா பொம்மா.. காதலை வைத்து எதையும் கார்னர் பண்ண கூடாது பொம்மா..” என்று தன் அனுபவத்தை கூறினான்..
“அண்ணா அவர் ரொம்ப நல்லவர் தான்.. ஆனா இந்த ஸ்டேட்டஸ் பார்க்குறது. இதுல பாசமும் பணக் கணக்கா தான் பார்க்கிறார்.. அன்னைக்கு அவர் செய்தது அவங்க சிஸ்டர் லைப் தானே போச்சு.. நாளைக்கு என் பிள்ளைங்களுக்கும் இது போல் நடக்காது என்று என்ன அண்ணா நிச்சயம்..? என்று பூவிதழ் கேட்ட போது தான் சித்தார்த் பூவிதழ் செயலுக்கு அமைதியாகினான்..
பூவிதழ் எதிர் பார்த்த மாற்றங்கள்.. இதோ விக்ரமனிடம் வர தொடங்கி விட்டது.. இருந்தும் ஒரு சில விசயங்கள்.. அவனின் வசதி மட்டும் இல்லாது இப்போது தன் பேபியை நினைத்து தான் மனைவியிடம் தன் வீட்டிற்க்கு போகலாம் என்று அழைப்பது..
வசதி இருக்க என் குழந்தைக்கு என்ன தலை எழுத்து என்பது அவன் வாதம்.. பூவிதழோ..
என் அண்ணன் குழந்தைகள் இங்கு தான் வளருகிறார்கள்.. என் அக்கா குழந்தைகள் வர போக இல்லையா..? நம்ம குழந்தை தான் குழந்தையா..? என்பது பூவிதழ் வாதம் .. இப்படி திருமணம் முடிந்து ஒன்னே முக்கால் வருடம் முடிவடைந்து இன்று அவர்கள் குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதும்.. சித்தார்த்தின் குழந்தைக்கு இரண்டாம் மொட்டையும்.. அப்படியே இரு பெண்களுமே எங்க குழந்தைகளுக்கு மொட்டை போட்டு விடுகிறோம்.. அது என்ன ஆண் பிள்ளை குலதெய்வத்திற்க்கு தான் மொட்டை போட வேண்டுமா..? எங்களுக்கு குல தெய்வம் இல்லையா என்று இரண்டு பெண்கள் குழந்தைகளை அழைத்து வந்து விட்டனர்..
பூவிதழ் குழந்தைக்கு விக்ரம் வீட்டு முறைப்படி அவன் வீட்டு குலதெய்வத்திற்க்கு தானே முதல் மொட்டை..? என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது..
அது வந்து அந்தஸ்த்தில் வேற்றுமை கொடுத்த அந்த இறைவன்.. குலதெய்வம் என்று வரும் போது சமத்துவத்தை கொடுத்து விட்டான்.. அது தாங்க இரண்டு குடும்பத்திற்க்கும் ஒரே குலதெய்வம் தான்.
நாளை பங்க்ஷன் என்றதிற்க்கு இன்றே வீடு முழுவதும் ஆட்கள் வந்து விட்டனர்.. விக்ரமுக்கு தான் அந்த வீட்டில் ஒரு போன் கூட முழுவதுமாக பேச முடியவில்லை..
மனைவியிடம் மல்லுக்கட்டி கொண்டு இருந்த போது தான் நான் நல்ல நண்பன் டா என்று விக்ரமை காப்பாது போல் டேனியல் அவனை அழைத்தான்.
பேசியை ஆன் செய்து இவன் பேசுவது டேனியலுக்கு சரியாக கேட்கவில்லை.. காரணம் இவர்கள் அறைக்குள் மொத்த குழந்தைகளும் வந்து விட்டனர்.
பின் ..”இருடா மொட்டை மாடிக்கு போறேன் நீ லைனில் இரு.” என்று விட்டு சொன்னது போல் விக்ரம் ..
“இப்போ சொல்லுடா..” என்றதும் தான் டேனியல்..
“மக்க மனுஷால் என்று அமோகமா வாழுற போல..” என்று கிண்டல் செய்யும் போது டேனியல் பக்கத்தில் இருந்த சாத்வீகா என்ன என்று கேட்டாள் போல.
“ம் உன் தம்பி மாமியார் வீட்டில் மழலை பட்டாளமே இருக்கு.. நாளை பங்க்ஷனுக்கு என்றதுமே.
சாத்வீகாவின் இரு குழந்தைகள் அருணும் ஸ்ரவனும்..
“டேனி டாடி நானும் நானும் மாமா வீட்டிற்க்கு போகனும் என்று ஒரே அடம்..
பின் அடம் பிடிக்காது போனால் தான் ஆச்சரியம்.. இவர்கள் வீட்டில் என்றால் கேம்.. டிவி கார்ட்டூன்.. ப்ளே என்று எலக்ட்ரானிக் பொருட்களோடு தான் விளையாட வேண்டும்..
அதே அங்கு என்றால் சாதனா குழந்தை ஜெயா குழந்தை.. சித்தார்த் குழந்தை இப்போ மாமாவோட குட்டி குழந்தை என்று அங்கு சென்றால் நேரம் போவதே தெரியாது..
அதோடு அங்கு இருக்கும் அத்தைகள். பாட்டிகள்.. சமையல் என்று அனைத்துமே பிடிக்கும்.. அதனால் சாத்வீகா குழந்தைகளுக்கு விக்ரம் மாமா வீட்டுக்கு போவது என்றால் குழியோ குழி தான்..
டேனியல் அவ்வப்போது சித்தார்த் வீட்டிற்க்கு இரு குழந்தைகளையும் விடுவான்.. சித்தார்த் கூட ஒரு முறை விக்ரமனிடம்..
“உன் லைப்ல நீ செய்த ஒரு நல்ல விசயம்..” டேனியலை கை காட்டுவான்..
விக்ரம் அப்போது கூட விடாது பூவிதழை காட்டி.
“அப்போ இது கெட்ட விசயமா.?” என்று கேட்டு வைப்பான்.
இதோ இந்த வீட்டில் வசதி படாது ஒரு காரணம் என்றால், மச்சான் என்ற பெயரில் அங்கு இருக்கு சித்தார்த் இன்னொரு காரணம்..
எப்போ பார் அந்த வீட்டில் சித்தார்த் புராணம் தான்.. எங்க சித்து.. அது எங்க சித்து இது.. அய்யோ தாங்க முடியல.
அவனின் புலம்பல் கொட்டும் இடம் டேனியல் தான்..டேனியல் ஒரு சில முறை.
“சித்தார்த் அந்த வீட்டு பொறுப்பை எடுத்து கொண்ட போது ஜஸ்ட் டுவன்டி பைப் இயர் தான்.. நாம அந்த வயசுல பிடித்த ட்ரஸ். பிடித்த கார் ட்ரிங்கஸ் என்று இருந்தோம்.. ஆனா அவர்.. அவர் அந்த குடும்பத்திற்க்கு எதை எல்லாம் இழந்தார் என்று நான் உனக்கு சொல்ல தேவை இல்லை..” என்று சீரியஸாக சொல்லும் போது..
“அது எல்லாம் அவன் அதிர்ஷ்ட்ட கார தான் தோஸ்த்.. யப்பா அந்த ப்ரீத்தி பொண்ணு கணவன் மேல என்னம்மா பிரியமா இருக்கு என்கிற..” என்று அதோடு விக்ரம் விட்டு இருந்தால் பரவாயில்லை..
“அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு தோஸ்த்..” என்று வேறு கூறினான்.. இவர்களின் இந்த பேச்சு சித்தார்த் வீட்டின் மொட்டை மாடியில் தான் நடந்து கொண்டு இருந்தது..