அதுவும் சித்தார்த்..”அப்போ நான் எங்கு தங்குவது..?” என்ற பேச்சில் பூவிதழ் மனது ஆட்டம் கண்டு விட்டது.. பின் பேச்சு திசை வேறு மாதிரி போக. முடிவு அண்ணனுக்கு அண்ணன் லவ் பெண்ணுக்கும் சண்டை என்ற ஆரம்ப பேச்சில்.. அவள் மனது இப்போது பயத்தை விட. அண்ணன் லவ் பண்ண பெண்ணை திருமணம் செய்ய முடியாதா.? என்று நினைத்தது..
அண்ணன் மீது உண்மையில் அன்பு வைத்து இருக்கும் அந்த சின்ன தங்கைக்கு. பின் பேச்சுக்கள் முடிவில்..
சாத்வீகா சொன்ன .”நிஜமா நான் என் பேமிலி நினைத்து தான் நான் பயந்தேன் மிஸ்டர் சித்தார்த்..ஆனா அவங்க என் மீது இருக்கும் பாசத்தில் அவங்க தகுதிக்கு இறங்கி உங்க கிட்ட பேசுனா..நீங்க உங்க அம்மாவை விட்டு விட சொல்லலை.. உங்க சொந்த தங்கையை விட சொல்லலே..
உன் சித்தப்பா பேமிலியை.. அதுவும் வீடு செட்டில்மெண்ட் என்று எல்லாம் கொடுத்து விடலாம் என்று சொல்றாங்க. எனக்கு புரியல.நாங்க மட்டுமே எல்லாம் விட்டு கொடுக்கனுமா.?
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் தான் .. ஆனால் அதுக்கு என்று எல்லா வகையிலுமே நாங்க இறங்கி வந்து.. ஒரு விசயத்திலும் நீங்க விட்டு கொடுக்கவில்லை என்றால்.. உங்களுக்கு என் மீது இருப்பது காதலா..? என்றே எனக்கு சந்தேகமா இருக்கு..” என்று இருவரும் பேச்சு வார்த்தை நடத்த.
விக்ரம் வந்ததில் இருந்து வாய் திறவாதவன்.. பின் இருந்து அனைத்தையும் ஆட்டி வைத்தவன்.. முதன் முதலாக.. அதுவும் நல்ல விதமாகவே.
“சாது கொஞ்சம் யோசிச்சி பேசு..எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்யும் விசயம் கிடையாது இது..பொறுமை..” என்று சாத்வீகாவிடம் பேசிய விக்ரமனின் குரலில் தன்மை இருந்தாலும், சித்தார்த் மீது வீசிய விக்ரமின் பார்வையில் வேறு இருந்தது. அதை சித்தார்த்தும் கவனித்தான் தான்..
பின்னும் விக்ரம்.. ஜென்டில்மேன் போல்..” நானும் டாடியும் வெளியில் இருக்கோம். நீங்க இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க..” என்று சொல்லி விட்டு விக்ரம் தந்தையிடம் கண் காட்ட .. தந்தை மகன் இருவரும் வெளி வர போவதை பார்த்து ஹாலுக்கு முன் இருந்த அறையில் இருந்த பூவிதழ்..
விறு விறு என்று முன் அண்ணன் அமர சொன்ன இடத்திற்க்கு வந்து சேர்ந்தாள்.. பூவிதழ் நேரமா தெரியவில்லை. விக்ரமும் தன் தந்தையுடன் இவள் இருந்த இடத்தை நோக்கியே வர. அவர்கள் தன்னை பார்க்கும் முன். அங்கு இருந்த ஒரு பறந்த செடியின் பின் மறைந்து நின்று கொண்டாள்..
பூவிதழ் அப்படி மறைந்தது.. அவர்கள் தன்னை பார்க்க கூடாது என்பது மட்டும் தான்.. அதுவும் அண்ணன் என்ன காரணத்தினால் தன்னை வெளியில் அமர சொன்னர் என்று தெரியாது.. அண்ணன் வில்லன் என்று சொன்ன இவர்கள் அவள் கண்ணுக்கும் வில்லனாக தான் தெரிந்தார்கள்..
ஏற்கனவே அண்ணன் மனது இப்போது காயம் பட்டு இருக்கும்.. தன்னை இவர்கள் பார்த்து வேறு பிரச்சனை வந்து விட போகிறது என்று அண்ணனுக்காக அவர்கள் தன்னை பார்க்க கூடாது என்று நினைத்தவள்..
தனக்காக அவர்களிடம் இவள் பேச விரும்பவில்லை..தன்னை பார்த்தால் யார் என்று கேட்பார்கள்.. பதில் அளிக்க வேண்டும்.. தங்களை வைத்து தானே அண்ணனிடம் இவர்கள் பேசியது.. தங்கள் குடும்பம் ஏதோ அதற்க்கு மேல் அந்த சின்ன பெண் நினைத்து பார்க்க விரும்பவில்லை..
இவள் நல்ல நேரமா..? இல்லை கெட்ட நேரமா..? தெரியவில்லை.. சரியாக இவள் ஒளிந்து கொண்ட அந்த பறந்த செடியின் முன் இருக்கை இருக்க, அதில் அமர்ந்து கொண்டனர்.
பூவிதழோ.. இவ்வளவு இடம் இருக்கு .. இவங்க இங்கே தான் வந்து உட்கார வேண்டுமா.? என்று நினைத்து கொண்டாள்.. அவளுக்கு தெரியாது இல்லையா.? அந்த இடத்தில் தான் செடிகள் அடர்ந்து இருக்கும். அதனால் நிழலும். குளுமையும் அதிகமாக இருப்பதால், கார்டனில் அமர்வது என்றால் அங்கு தான் அமர்வார்கள் என்று.
முன் வீட்டிற்க்குள் பேசியதை பூவிதழ் கேட்டாள் என்றால், இப்போது தந்தையோடு வந்து அமர்ந்த விக்ரம். “என்ன டாட் டென்ஷனா இருக்கிங்க..?” என்று ஒரு சிரிப்போடு கேட்டான்..
“என்ன விக்ரம் நீ சொன்னது போல தான் நான் பேசினேன்.. ஆனா நீ என் கிட்ட இப்படி தனியா அவங்கல பேச சொல்லுவ என்று சொல்லலையே..?” என்று கேட்க.. செடியின் மறைவில் இருந்த பூவிதழ் அய்யோ என்பது போல வாய் மீது கை வைத்து கொண்டாள்..
பூவிதழ் அவள் அண்ணன் புரிந்து கொண்டது போல் இது எல்லாம் திட்டம் போட்ட பேச்சுக்கள் என்று புரியவில்லை. பாவம் சின்ன பெண் தானே. பெரிய பெண்ணான சாத்வீகாவே புரிந்து கொள்ளாத போது பூவிதழ் புரிந்து கொள்ளாததில் தவறு ஒன்றும் இல்லையே.
பூவிதழ் அதற்க்கே வாய் மீது கை வைத்து கொள்ள அமர்ந்திருந்த விக்ரமின் பேச்சை கேட்க கேட்க..மயக்கம் வந்து விழுந்து விடுவோமா என்று அவளே பயந்து போகும் அளவுக்கு பேச்சை கேட்டு கொண்டு இருந்தாள்..
“டாட் நான் இது போல தனியா பேச வைக்கலாம் என்று நினைக்கல.. இது எல்லாம் அந்த அந்த சிட்டிவேஷன் பார்த்து நடந்து கொள்வது..இப்போ நாம அவங்களுக்கு தனிமை கொடுத்து வந்து இருக்கோம்.. சாது நாம அவள் காதலுக்கு நாம கொடுக்கும் முக்கியத்துவத்தை நினைப்பா..
ஆனால் சித்தார்த் புரிந்து கொண்டு இருப்பான்.. நம்மை பத்தி சாது கிட்ட தப்பா பேச.. இனி நாமலே மனசு வந்து சித்தார்த்துக்கு மேரஜ் பண்ண நினைத்தாலும் அவள்; மேரஜ் செய்து கொள்ள மாட்டா.நாம எது செய்வது என்றாலும் பின்னால் கூட பிரச்சனை வராது போல செய்து முடித்து விட வேண்டும் டாட்..எல்லாமே க்ளீயர் கட்டா இருக்கனும்.” என்ற மகனின் அந்த சாமார்த்தியத்தில் தந்தைக்கு அவ்வளவு பெருமை..
அந்த பெருமையில். “எப்படி விக்ரம் இப்படி பேசினா சாதுவே அவனை வேண்டாம் என்று சொல்லுவா என்று தோனுச்சி.. அதுவும் குறிப்பா சித்தார்த் நம்ம தந்த ஆபரை ஏத்து கொள்ளாதது என்ன..? கண்டிப்பா அவனுக்கு கோபம் வரும்.. என்று சரியாக சொன்ன.” என்று பாராட்ட..
விக்ரமோ. சிரித்து கொண்டு.. “இந்த மிடில் க்ளாஸ் பீப்பிள் கிட்ட ஒரு மெண்டலிட்டி இருக்கு டாட்.. நாய்க்கு ஒரு பிஸ்க்கெட் போட்டா அந்த பிஸ்க்கெட் போட்டவனை பார்த்தாலே அவன் பின்னால் வால் ஆடிட்டு போகுமாம்.( இது வெறும் கதைக்காக மட்டுமே எழுதப்படும் வசனம்).. அது போல தான் இவங்க.. இந்த மிடில் க்ளாஸ் பீப்பிள்.
நீங்க டிடெக்டிவ் கொடுத்த சித்தார்த் பற்றிய தகவலை முழுசா படிச்சிங்கலா . படிச்சி இருந்தா தெரிந்து இருக்கும்.. சித்தார்த் அப்பா அவனுடைய பதினெழு வயசுல இறந்து இருக்கார்.
அப்போ இவன் டுவெல்த் எக்ஸாம் எழுதி முடிச்சி இருக்கான்.. அவன் தங்கை டெந்த் படிச்சிட்டு இருந்து இருக்கா.. அப்பா தனியார்ல தான் வேலை.. அவங்க அம்மாவுக்கு பென்ஷனும் வராது.. செட்டில் மெண்டும் அவ்வளவு வந்து இருக்காது..
அப்போ இவன் படிப்பு.. இவன் தங்கை படிப்பு.. என்று எல்லாம் இவன் சித்தப்பா தான் பார்த்து இருக்கார். இப்போ சமீபத்தில் இவன் தங்கை கல்யாணமும் சித்தப்பா தான் நடத்தி வைத்து இருக்கார்..இப்போ அந்த சித்தப்பா இல்ல. பையன் என்ன செய்வான்..?” சொல்லுங்க.. அதுவும் மிடில் க்ளாஸ் பையனுக்கு சாதரணமாவே பேமிலி அட்டாச்மெண்ட் இருக்க பசங்க.
சித்தார்த் நிலை.. சொல்லவே வேண்டாம்.. வானத்தில் இருந்து தேவதை குதித்து நீ என்னோடு வா என்று அழைத்தால் கூட என் சித்தப்பா பெண்களுக்கு செய்யும் கடமை எனக்கு இருக்கு என்று சொல்லி விடுவான்.. அப்படி இருக்க நம்ம சாது எல்லாம் எம்மாத்திரம்.?” என்று பேசியவனின் பேச்சை அவன் தந்தை கேட்டார் தான்.. ஆனால் எந்த அளவுக்கு அவர் உள் வாங்கி கொண்டார் என்று தெரியவில்லை.
ஆனால் பூவிதழ்… விக்ரம் அதுவும் மிடில் க்ளாஸ் பீப்பிள் பற்றி சொன்ன நாய் பிஸ்க்கெட். என்ன மாதிரியான வார்த்தை அது..? பூவிதழ் சின்ன பெண் தான்.. ஆனால் நாயோடு மனிதர்களை கம்பர் செய்ய மாட்டார்கள் என்று தெரியும் அளவுக்கு இருக்கும் தானே.
அதுவும் தங்கள் குடும்ப சூழ்நிலையை இவர்கள் எப்படி எல்லாம் வைத்து ஆட்டி படைத்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒரு பக்கம் கோபமாக இருந்தது.. ஒரு பக்கம் அழுகை அழுகையாக வந்தது.. ஆனால் அழுது அவளை அவள் வெளிக்காட்டி கொள்ளவில்லை..
சித்தார்த் வீட்டில் இருந்து வெளி வருவதை பார்த்த விக்ரம். “டாட் அவன் வரான்..” என்று எழுந்து கொண்டே சொன்னவன் தன் தந்தையோடு சித்தார்த் நோக்கி செல்ல. பூவிதழ் அதற்க்குள் அந்த செடி மறைவில் இருந்து வெளி வந்து முன் அமர்ந்திருந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்..
அவளின் அந்த அமைதி எல்லாம் வெளி பார்வைக்கு மட்டும் தான்.. மனதினில் அவ்வளவும் இயலாமையில் மனது துடித்து கொண்டு இருந்தது..
அதுவும் தன் அண்ணனை நோக்கி சென்ற அவர்கள் இருவரும் சித்தார்த்தை பார்த்து நக்கல் போல சிரிப்பதும்.. அதற்க்கு கோபமாக அண்ணன் இருப்பதையும் பார்த்தவளுக்கு தெரிந்து விட்டது.. விக்ரம் போட்ட திட்டம் வெற்றி தான் என்று.
தன்னை நோக்கி வந்த அண்ணனையே பார்த்து கொண்டு இருந்த பூவிதழுக்கு அவ்வளவு அழுகை வந்தது.. தன் அண்ணன் முகத்தில் தெரிந்த அந்த இயலாமை முக பாவனையில்..
சித்தார்த் சாதரண மனநிலையில் இருந்து இருந்தால், தன் சின்ன தங்கையின் முக மாற்றத்தை கவனித்து இருந்து இருப்பான்.. ஆனால் அவனும் உள்ளமும் உலை கலனாக கொதித்து கொண்டு இருந்ததால், தன் தங்கையை சரியாக கவனிக்கவில்லை..
“பொம்மிம்மா வா.” என்று அழைத்ததும் அவன் பின் செல்ல இப்போது பூவிதழுக்கு அந்த வீட்டின் அழகை விட.. அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் விகார எண்ணத்தில், அந்த வீடே இப்போது அவள் கண்ணுக்கு அசிங்கமாக தெரிந்தது..
வண்டியில் ஏறியவள் வழி முழுவதுமே பூவிதழ் பார்வை வண்டியின் மிரர் வழியாக அண்ணன் முகத்தையே தான் கவனித்து கொண்டு வந்தாள்.. அவளின் அந்த கவனிப்பு தன் அண்ணன் மீது அவளின் வாழ் நாள் முழுவதும் தொடரும் என்று அப்போது பூவிதழே நினைத்து பார்த்து இருக்க மாட்டாள்.
இருவரும் ஒரு சேர வீட்டிற்க்கு வந்ததை பார்த்ததுமே பாக்யவதி..” என்ன இரண்டு பேருமே ஒன்னா வர்றிங்க..?” என்று கேட்டதற்க்கு சித்தார்த்.
“அவளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து கூட்டிட்டி வரேன் மா..” என்று பூவிதழ் பள்ளியில் செய்த தவறையும் மறைத்து விட்டு, தான் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றதையும் மறைத்து விட்டு சொன்னான்..
சொன்னவன் தங்கை முகம் பார்க்க. அவள் அண்ணன் பேச்சை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தாள்..
.”சரி வா சாப்பிடலாம்..” என்று அழைக்க.. “நான் சாப்பிட்டு விட்டேன் மா. நீங்க சாப்பிடுங்க பொம்மா சாப்பிடல அவளுக்கு கொடுங்க.” என்று மாடி படி ஏற சென்றவன் பின் மீண்டும் தன் அம்மாவிடம்…
“சாதனா காலேஜ் விட்டு வந்தாச்சா..? சித்தி காலையில் இருந்து ஒழுங்கா சாப்பிட்டாங்க தானே..” என்று இந்த மூன்று மாதம் வேலை முடித்து விட்டு வந்தால் கேட்கும் அந்த கேள்வியை இன்றும் தவறாது கேட்டவனை பார்த்த பூவிதழுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..
காதல் தோல்வி பற்றி தெரியாது.. தெரியும் வயதும் கிடையாது..ஆனால் திரைப்படத்தில் பார்த்ததில் அது பெரும் வலி என்ற அளவுக்கு புரிந்து வைத்து உள்ளாள்..
இப்போது தான் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று தெரிந்து வீடு வந்து உள்ளான்.. அப்போதும் மறவாது தன் அம்மா தன் அக்காவை பற்றி விசாரித்ததில் பூவிதழ் என்றும் நாம் நம் அண்ணனுக்கு துணை நிற்க வேண்டும்.. என்று முடிவு செய்தாள்…
அன்று இரவு சாப்பிட்ட பின் பெரியம்மா அம்மா மீதம் உணவை பிரிஜ்ஜீல் எடுத்து வைக்க பார்க்க பூவிதழ் ..”அண்ணன் ஈவினிங்க சாப்பிட்டது பெரிம்மா.. நான் எடுத்துட்டு போய் அண்ணாவுக்கு தரேன்..” என்று சொல்லி உணவை தட்டில் போட்டு கொண்டு மாடி ஏறியவள் அவள் அண்ணன் அறைக்கு செல்ல… அங்கு அண்ணன் இல்லாது போனதில் மொட்டை மாடிக்கு சென்றாள்..
அங்கு சித்தார்த் கட்டாந்தரையில் தன் கை கொண்டே கண்களை மூடிக் கொண்டு படுத்து இருப்பதை பார்த்து மெல்ல சென்று அண்ணன் அருலில் அமர்ந்து கொண்டாள் பெண்..
“அண்ணா..” என்று அவன் தோள் தொட்ட உடன்.. சட்டென்று கண்ணில் இருந்து கையை விலக்கி விட்டு. தங்கையை .பார்த்து.. “என்னடா பொம்மா தூங்கலையா..” என்று தன்னை பார்த்த அண்ணனின் கண்கள் சிவந்து இருந்ததில்..
“அண்ணா அழுதிங்கலா..?” என்று கேட்கும் போதே பூவிதழுக்கும் அழுகை வந்து விட்டது.. விருட்டென்று எழுந்து அமர்ந்து விட்ட சித்தார்த்.. “என்னடா ஏன் அழுகுற. நான் ஏன் அழுக போறேன்.?.” என்று தட்டு தடுமாறி கேட்டவனிடம்..
“எனக்கு தெரியும் . எனக்கு எல்லாம் தெரியும்..” என்று அழுத கண்ணீரை துடைத்து கொண்டே சொன்ன தங்கையின் மோவாயை பிடித்து கொண்டு..
“என்ன தெரியும் பொம்மா.?” என்று கேட்கும் போதே. சாத்வீகாவை பற்றியா..? என்று சந்தேகம் வந்த நொடி அவன் ஒரு மாதிரியாகி விட்டான்..