சித்தார்த் இவ்வளவு நேரமும் பெண்ணிடம் தான் பேச்சு இருந்ததே ஒழிய. பார்வை அந்த தென்னை மட்டை மீது மட்டும் தான் இருந்தது..
பெண்ணவளின் இந்த பதிலில் பெண்ணவளை பார்க்க. அவளும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.. ஒரு சின்ன சிரிப்போடு.. அவளின் அந்த சிரிப்பு அவனை கிண்டல் செய்ததா..? இல்லை மகிழ்ச்சியில் உதிர்த்த சிரிப்பா தெரியவில்லை..
ஆனால் பெண்ணவளின் அந்த புன்னகையை பார்த்த சித்தார்த் முகத்திலும் தன்னால் புன்னகை வந்து ஒட்டி கொண்டது..
அதுவும் அடிக்கும் அந்த வெயிலில் பெண்ணவளின் முகத்தில் வியர்வையின் துளிகள் அங்கு அங்கு பொட்டு பொட்டாக படிந்து இருக்க..
அந்த தென்னை மட்டையின் நிழல் வரி வரியாக மங்கையின் முகத்தில் படிய அதை கண்ட ஆண் மகனின் மனது இத்தனை ஆண்டுகள் குடும்பம் குடும்பம் என்று மனதில் சுழன்டு கொண்டு இருந்தவனின் மனதில் மெல்ல தாபமும் காதலும் காமமும் வந்து ஒட்டிக் கொண்டதில், முதல் முறையாக ஒரு பெண்ணை தன் வாலிபத்தின் தேவையை தீர்க்க வந்த பெண்ணாக பார்த்தான்..
பெண்ணவளின் வியர்வை அவனுக்கு அவ்வளவு பிடித்து இருந்தது.. உடனே அதை துடிக்கவும் உதடு துடித்தது.. ஆம் உதடு தான் அந்த வியர்வையை உதடால் துடைக்க விருப்பம் கொண்டான்.
அவன் மனம் போகும் பாதையை நினைத்து அவனுக்குமே பயம் ஏற்பட தன் பின் தலையை கோதி கொண்டவனாக அந்த மாடியின் ஒரத்தில் அமர்ந்து இருந்த காகத்தின் மீது பார்வையை செலுத்தியவன்.. பின் இன்னும் பேச வேண்டியது மீதம் இருக்க.
அதை தெளிவு படுத்தி கொள்ள வேண்டி.. “கடைசி வரை என் அம்மா மட்டும் இல்ல சித்தியும் என் கூட தான் இருப்பாங்க. அதே போல் தான் என் வாழ் நாள் வரை மூன்று தங்கைக்கு சீர் செய்வேன்..” என்று சொன்ன இந்த பேச்சை சித்தார்த் ப்ரீத்தியின் கண்ணை பார்த்து கூறினான்..
அது என்னவோ இங்கு வந்ததில் இருந்து சித்தார்த் தான் தன் பார்வையை அங்கும் இங்கும் அலைய விட்டான்.. ஆனால் பெண்ணவளோ.. பேச்சி ஆரம்பத்தில் இருந்து பெண்ணவளின் பார்வை ஆண்மகன் முகத்தில் மட்டுமே நிலைத்து இருந்தது.. அதுவும் அந்த மெல்லிய புன்னகையோடு..
இப்போது சித்தார்த் பெண்ணவளின் அந்த புன்னகையை கவனித்து.. எப்போதும் இவள் சிரித்த முகத்தோடு தான் இருப்பாளா என்று நினைத்து கொண்டே பெண்ணவளின் அந்த புன்னகையை பார்க்க.
இப்போது பெண் முகத்தில் அந்த மெல்லிய புன்னகை விரிந்து சிப்பிக்குள் முத்து இருப்பது போல் அவளின் பற்கள் வரிசையாக அவன் கண்களுக்கு காட்சி தந்தது.
அதை ரசித்து கொண்டே..”ஏன் சிரிக்கிற..?” என்று பெண்ணை கேட்கும் போது அவன் முகத்திலும் லேசான புன்னகையில் சாயம் தான்..
நேராக நின்று கொண்டு இருந்த பெண் இப்போது அந்த மொட்டை மாடியின் சின்ன சுவரில் சாய்ந்து நின்று கொண்டவள் அதே சிரிப்பு முகம் மாறாது .“ஏன் நல்லா இல்லையா..? என்று கேட்டாள் பெண்..
“ம் நல்லா இருக்கு.. ஆனா நான் கேட்டதுக்கு சிரிப்பு பதில் இல்லையே. அது தான் கேட்டேன்..” இன்னும் எனக்கு நீ பதில் சொல்லவில்லை என்று சொல்ல..
“நான் உங்களை லவ் பண்ண காரணமே. நீங்க உங்க பேமிலி மேல் காட்டும் அந்த கேரிங் தான்..” என்ற பெண்ணின் பேச்சில் சித்தார்த் அதிர்ச்சியாக அவளை பார்த்தான்..
“ லவ்வா..?” என்று கேட்டவனுக்கு.
ப்ரீத்தி.. “ம் லவ் தான். எங்க வீட்டவர்களுக்கும்.. உங்க வீட்டவர்களுக்கு ஏன் உங்களுக்குமே இது அரெண்ஜ்டு மேரஜ்.. ஆனால் என்னை பொறுத்த வரைக்கும்.. எட்டு வருட என்னுடைய காதல்.. சாரி சாரி ஒரு தலை காதல் இன்னைக்கு கல்யாணத்தில் முடிய இருக்கு..” அதே சிரித்த முகத்துடன் சொன்ன பெண்ணின் பேச்சை நம்ப முடியாது பார்த்திருந்தான் சித்தார்த்..
அவனின் பார்வையில் .. “என்ன உங்களால் நம்ப முடியலையா.. எப்படி நம்புவிங்க… அது தான் வீட்டுக்கு யார் வந்தாலுமே, தலைய நிமிர்ந்து பார்த்தா தானே தெரியும். யார் நம்மை பார்க்கிறாங்க என்று..”
ப்ரீத்தி பேச பேச. அப்படி ஒரு ஆச்சரியம் சித்தார்த்துக்கு. என்ன சொல்ல வருகிறாள் இந்த பெண்..
“முதல்ல அக்காவோட வரும் போது நான் ரொம்ப குட்டி பெண்.. அதனால அப்போ எல்லாம் ஒன்னும் இல்ல. உங்க அப்பா இறந்த போதும் நான் ரொம்ப சின்ன பெண் ..
அன்னைக்கு நீங்க அழும் போது பாவமா இருந்தது.. அவ்வளவு தான்.. ஆனா அதன் பின் மாமா எங்க வீட்டிற்க்கு வரும் போது எல்லாம்.. என் சித்து இப்படி அப்படி என்று இங்கு வந்தாலே உங்கள பத்தி தான் மாமா அவ்வளவு பெருமையா சொல்லிட்டு இருப்பாங்க.”
ப்ரீத்தி மாமா என்று சொல்வது தன் சித்தப்பாவை என்று புரிந்து கொண்ட சித்தார்த் தன் சித்தப்பாவை நினைத்து சிறிது கண்கள் கலங்கி விட்டது.. எப்போதும் அவருக்கு தன் பெருமை தானே என்று..
அவன் கலங்கிய கண்களை பார்த்த ப்ரீத்தி.. “ இதோ.. இது போல நீங்க உங்க சித்தப்பா மேல வைத்த பாசம்.. ஜெயா அக்கா.. சாதனா பூவிதழ்.. எல்லோர் மீதும் நீங்க காட்டும் அக்கறை..
சொந்த அம்மா அப்பா தன் கூட பிறந்தவங்களுக்கே செய்யனுமா.? என்று யோசிக்கும் இந்த காலத்தில் சித்தப்பா குடும்பத்திற்க்கு என்று இதோ என் கிட்டே பேசுறிங்கலே. இது தான் எனக்கு உங்க மீது ஒரு பிடித்தம் வர காரணம்..” என்று சொல்லி முடித்த பெண்ணவளை பார்த்தான் பார்த்து கொண்டே இருந்தவன்..
மெல்ல..”எப்போ இருந்து நீ என்னை பார்த்துட்டு இருந்த.” என்று கேட்டவனுக்கு.
அவள் பார்த்த ஆண்டுகள்.. சொல்ல. அவன் சாத்வீகாவை காதல் செய்யும் முன்னவே இவள் தன் மீது விருப்பம் கொண்டு இருக்கிறாள்..
தொண்டை கர கரக்க. “ அப்போவே சொல்லி இருக்கலாமே..” என்று ஆதங்கத்துடன் கேட்டவனுக்கு பெண்.
“அப்போ நானும் ரொம்ப சின்ன பெண்.. அதோட. அந்த சூழ்நிலையில் நான் லவ் என்று நின்னா கண்டிப்பா நீங்க ஏத்து இருக்க மாட்டிங்க. ஏன்னா நான் காதல் சொன்னா உங்க தங்கைகள் தான் உங்க கண் முன்னாடி வந்து நிற்பாங்க.” என்று சொன்ன பெண்ணவளின் பேச்சு சித்தார்த் மனதை ஈட்டியாக குத்தியது.
‘இல்லையடி பெண்ணே. நீ நினைப்பது போல் நான் அவ்வளவு நல்லவன் கிடையாது.. என் குடும்ப சூழ் நிலையையும் தான்டி என் வயதுக்கு உறிய ஹார்மோன் தடுமாற்றத்தால் என் மனமும் தடு மாறி தான் போனது.. மனதில் நினைத்தவன் கூறவில்லை..
சொல்லாததிற்க்கு காரணம்.. இது வரை பூவிதழுக்கு மட்டுமே தெரிந்த விசயம்.. ப்ரீத்தியிடம் சொன்னால், ஏதோ ஒரு காரணத்தினால். இந்த விசயம் வீட்டிற்க்கு தெரிய வந்தால் குறிப்பாக சித்திக்கு தெரிய வந்தால் தங்களால் தான் தன் காதல் கை கூடவில்லை என்று தப்பாக நினைத்து கொள்வார்கள்..
இன்னொன்று தன் காதலை ப்ரீத்தியிடம் சொல்லி அவள் மனதில் தான் கீழ் இறங்க அவன் விரும்பவில்லை..
அதோடு வந்ததில் இருந்து சிரித்து கொண்டு இருக்கும் பெண்ணவள் தன் முன் காதல் தெரிந்தால் வரும் அந்த முக சுருக்கத்தைம் அவன் விரும்ப பார்க்கவில்லை..
மொத்தத்தில்.. தன் முன் காதலை மறைத்து.. புதிய காதலாக ப்ரீத்தியை ஆசை பொங்க பார்த்தவனின் பார்வையில் பெண்ணவள்..
“என்ன அப்படி பார்க்கிறிங்க..?” என்று கேட்டவளின் குரலே சொல்லியது அவன் பார்வையை பெண்ணவள் விரும்புகிறாள் என்று.
ஆணவனும் அதை தெரிந்து கொண்டே.. “ஏன் பார்க்க கூடாதா..? என்று கேட்டு கொண்டே இது வரை தென்னையின் நிழலை பெண்ணவளுக்கு மட்டுமே கொடுத்து இருந்த ஆணவன் தென்னையின் நிழலை தனக்கு எடுத்து கொண்டவன் தன் நிழலை பெண்ணவளுக்கு கொடுத்தான்.
மிக அருகில் சித்தார்த் வந்து நின்றதால், ப்ரீத்தி அவன் உயரத்திற்க்கு நிமிர்ந்து பார்க்க.. ப்ரீத்திக்கு அதிக சிரமத்தை கொடுக்காத சித்தார்த் தன் தலையை தாழ்த்தி கொள்ள இருவரின் முகமும் மிக அருகில்..
ஒருவர் மூச்சு காற்று இன்னொருவர் உணரும் இடைவெளியில் தான் இருவரின் முகமும் இருந்தது.. அவ்வளவு நெருக்கத்தில் பெண்ணவளை பார்த்து கொண்டே.
“என் வீட்டிற்க்கு வந்தால் என்னை பார்ப்ப என்று சொன்னியே. எப்படி பார்த்த..?” என்று கேட்க.
ப்ரீத்தியோ..”சாதனா கூட எல்லாம் இருக்கும் போது நீங்க அவங்க கிட்ட ஏதோ கேட்க வருவிங்க. அப்போ நான் ஒரமா நின்னுட்டு .. அப்போ பார்ப்பேன்..” தான் பார்த்ததை கூறினாள்..
“ஒரமா நின்னு பார்த்தா எனக்கு எப்படி தெரிந்து இருக்கும்.. இதோ இது போல நேரா நின்னு என்னை பார்த்து இருந்தால், எனக்கு தெரிந்து இருக்கும்..” என்று சொன்னவனின் பேச்சில் ஒரு கள்ள புன்னகை..
“இவ்வளவு கிட்டேயா.?” என்று கேட்டவளின் முகத்திலும் அவனின் கள்ள புன்னகை எதிர் ஒலித்தது..
அவளின் அந்த புன்னகையில் அவன் முகத்தை இன்னும் அவள் முகத்தின் அருகில் கொண்டு சென்றான்..
ஒரு நூல் இழை தான் உள்ளது அவள் உதட்டை அவன் உதடு தொட. அப்போதும் அசராது ப்ரீத்தி அவனை அதே புன்னகையோடு பார்த்து கொண்டு இருக்க.
“உனக்கு பயம் இல்லையா..?” என்று கேட்டவனிடம்..” உங்களிடம் எனக்கு என்ன பயம்..?” என்று கேட்டு அவன் மீது அவள் வைத்து இருக்கும் நம்பிக்கையை காட்டா..
இவளின் இந்த நம்பிக்கையை நான் எப்போதும் உடையாது பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்த சித்தார்த்..
வந்ததில் இருந்து அவனை இடையூறு செய்து கொண்டு இருந்த அவள் முகத்தில் இருந்த அந்த வியர்வை துளிகளை தன் உதட்டால் ஒத்தடம் கொடுக்க.. பெண்ணவள் அவனின் ஒத்தடத்திற்க்கு வாகாக தன் முகத்தை காட்டினாள்..
மனநிறைவோடு பெண்ணவளை ஆண் பார்க்க.. அதே நிறைந்த பார்வையை ஆண் மீது செலுத்திய ப்ரீத்தி..
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு. “ இது எத்தனை நாள் ஆசை தெரியுமா..?” என்று கேட்டு விட்டு தன்னை நிமிர்ந்து பார்த்த பெண்ணை விலக்க மனம் இல்லை..
ஆனால் அவன் செவியில் விழுந்த அந்த மெல்லிய கொலுசு ஒலி.. தங்கை பூவிதழ் உடையது என்று அறிந்து கொண்டவன்.அவளை சிறிது விலக்கி விட்டு..
“இன்னும் எத்தனை ஆசை இருக்கு. என்று திருமணம் முடிந்து சொல். ஒவ்வொன்னா நிறைத்து வேத்து வைக்கிறேன்..” என்றான்.
அதற்க்கு வேகமாக தலையாட்டிய ப்ரீத்தி. “ ஆமா ஆமா அந்த ஆசை எல்லாம் கல்யாணத்திற்க்கு அப்புறம் தான் நிறைவேத்தனும்..” என்றவளின் பேச்சில் சித்தார்த் வாய் அடைத்து நின்று விட்டான்..
அதற்க்குள் அவர்கள் அருகில் பூவிதழ் வந்து விட்டதால் சித்தார்த்தால் ப்ரீத்தியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியவில்லை..
ஆனால் மனதில் கணக்கு வைத்து கொண்டான். அவர்கள் அருகில் வந்து விட்ட பூவிதழ் எப்போதும் போல் தன் அண்ணன் முகத்தை பார்த்தாள்…
அவள் பார்ப்பாள் என்று தெரிந்து அவனுமே அவளை பார்க்க. அண்ணன் முகத்தில் தெரிந்த வெட்கம் ப்ரீத்தி அக்கா முகத்தில் தெரிந்த புன்னகையில் பூவிதழுக்கு விடை கிடைத்து விட்டது.
அதன் மகிழ்ச்சியில் ப்ரீத்தியின் கை பற்றி கொண்டு,..“வெல்கம் மை பேமிலி அக்கா” என்று சொல்லி வாழ்த்தினாள்..
அதற்க்கு சித்தார்த்.. “அக்கா இல்ல அண்ணி..” என்று தங்கைக்கு திருத்தம் சொல்லி கொடுக்க.ஒ என்று கத்தி கொண்டு இந்த விசயத்தை கீழே இருப்பவர்களின் சொல்ல ஒடி விட்டாள்..
சித்தார்த் சம்மதித்து விட விரைவில் திருமணம் முடித்து விட வேண்டும் என்று அடுத்த மாதத்தில் வரும் முதல் முகூர்த்த நாளே குறிக்கப்பட்டது.
சித்தார்த் வீட்டின் ஒரே ஆண் மகன் என்பதால் அவனே தன் திருமண நிகழ்வுகளை குறித்து ப்ரீத்தியின் அப்பாவிடம் பேசினான்.
“மேரஜ் சிம்பிளா வைத்து விடலாம் மாமா. கிராண்ட் எல்லாம் வேண்டாம்.. என்னை கேட்டா திருமணத்தை கோயிலில் வைத்து கொண்டு ஈவினிங் ஒரு ரிசப்ஷன் மாதிரி வைத்து விட்டால் கூட போதும்..” என்று அனைத்தும் சிக்கனம் படுத்தும் விதத்தில் கூற..
பெண்ணின் தந்தை சீனிவாசனோ..”என் இரண்டு பெண்ணுக்கு எப்படி செய்தேனோ.. அப்படியே செய்துடுறேன் சித் மாப்பிள்ளை..” என்று சிறு வயது முதலே பெயர் அழைத்து பழக்கப்பட்ட சீனிவாசனுக்கு மாப்பிள்ளை என்ற அழைப்பு தகினத்தோம் போட்டது..
சித்தார்த் முதலில் மாமனின் அழைப்பான. “ எப்போதும் போலவே சித்து என்றே கூப்பிடுங்க மாமா.” என்று பெயர் அழைப்பை தெளிவு படுத்தியவன்..
பின்.. “இப்போ நான் திருமணம் செய்வது பத்தி பேசினது நான் இப்படி எங்க திருமணத்தை முடித்து கொள்கிறேன் என்று சொன்னேன் மாமா.” என்று சித்தார்த்தின் பேச்சில் சீனிவாசன் நம்ப முடியாது அவனை பார்த்தார்..
பின் என்ன முன் இரண்டு மாப்பிள்ளை தான் தேர்தெடுத்த கல்யாண சத்திரம் வசதி குறைவு என்று சொல்லி வேறு மாற்றியது.. பின் சாப்பாடு லிஸ்ட் வரை அவர்களில் ஆதிக்கம் செலுத்தியது என்று இருக்க..
சிம்பிளா திருமணம் முடித்து விடலாம் என்று சித்தார்த் சொன்ன போதே சீனிவாசன் மனம் அவ்வளவு நிம்மதி அடைந்தது.. அந்த திருமணத்தையே தான் நடத்தி கொள்கிறேன் என்ற போது நம்ப முடியாது தான் பார்த்தவர்..
பின்.. “அது அவ்வளவு நல்லா இருக்காது மாப்பிள்ளை. மத்த பெண்களுக்கு செய்தது.. இவளுக்கும் செய்வது தான் முறை சித்தார்த்..” என்று சீனிவாசன் சொல்லியும் அதை சித்தார்த் ஏற்று கொள்ளவில்லை.
“அது தான் நானும் சொல்றேன் மாமா.. இரண்டு பெண்களுக்கு செய்து விட்டிங்க போதும்.. இருக்கும் பணத்தை உங்களுக்கு என்று சேமிப்பில் போடுங்க மாமா. உங்களுடையது பின்சன் ஜாப் இல்ல..” என்றவனை என்ன சொல்வது என்று பார்த்து இருந்தார்..
பூவிதழுக்கு தான் தன் அண்ணன் திருமணம் எளிமையாக நடப்பத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை.. பெரியவர்கள் பேசும் போது பேசாது இருந்தவள் வீட்டிற்க்கு வந்ததும் அண்ணனிடம் பொறிய ஆரம்பித்து விட்டாள்..
“அது எப்படி சிம்பிளா கல்யாணம் பண்ணிப்பிங்க.. இரண்டு அக்கா மேரஜ் எப்படி நடந்தது.. அது போலாவது நடக்கனும் தானே அண்ணா.” என்று தன் ஆதங்கத்தை கூறினாள்..
“பொம்மா உன் மாமா வீட்டு நிலை பார்த்த உடனே தெரியுது.. இதுல கிராண்டா.. மேரஜ் தப்பு இல்லையா.?” என்ற அண்ணனை முறைத்து பார்த்த பூவிதழ்.
“நான் உங்க மேரஜை கிராண்டா பண்ணனும் என்று தான் இப்போ சொன்னேன்.. மாமாவை பண்ண சொல்லலையே..? ” என்று பூவிதழ் கேட்க.. இப்போது சித்தார்த் அமைதி காத்தான்..