அவள் அண்ணனை அவளுக்கு தெரியாதா என்ன..?“அப்பா செட்டில் மெண்ட் பணம் என் பெயரில் பாதி போட்டிங்கலே அண்ணா.. இப்போ அது இன்ரெஸ்ட்டோடு கொஞ்சம் அதிகமா இருக்கும் தானே.. அதோட எனக்கு நகையும் சேர்த்து வைத்து இருக்கிங்கலே…
அதுல பாதி அண்ணிக்கு ஈடு கட்டிடலாம்.. பணத்தை எடுத்து கிராண்டா கல்யாணம் முடித்து விடலாம்.. வெரி சிம்பிள்..” என்று கண் சிமிட்டி தங்கை சொல்ல.அண்ணனோ.. அப்படி எல்லாம் எடுத்து செய்து விட முடியாது என்பதை விட கூடாது என்பதில் திடமாக இருந்தான்..
அதனால் “அது எல்லாம் சரியா வராது பொம்மா..” என்று விட்டான்..
“ஏன் வராது.? ஏன் சரியா வராது..? “ என்று கேட்டதற்க்கு.
“அது உன் திருமணத்திற்க்காக வைத்து இருப்பது பொம்மா.. அதில் எல்லாம் கை வைக்க முடியாது..” என்று மறுத்து விட்டான்.
“அது எல்லாம் கை வைக்கலாம்.. என் கல்யாணம் .. தானே.. அதுக்கு எல்லாம் நானே சம்பாதித்து கொள்வேன்.. நான் மத்த இரண்டு அக்கா மாதிரி இருபத்திரெண்டு இருபத்தி மூன்றில் எல்லாம் மேரஜ் செய்து கொள்ள மாட்டேன்..
இருபத்து ஐந்துக்கு மேல் தான் நான் மேரஜ் செய்துப்பேன்.. அதுக்குள்ள நான் நகை பணம் எல்லாம் சேர்த்து விடுவேன்..”
அதற்க்குள் எப்படி என்று பார்த்த அண்ணன் பார்வையில். “அது எல்லாம் முடியும் நல்லாவே முடியும்.. எனக்கு இப்போது வயது இருபது தான் ஆகுது.. அடுத்த வருடம் தான் என் படிப்பு முடியும்.. நான் தான் காலேஜ் பஸ்ட் தெரியும் தானுங்கலே..
லாஸ்ட் இயர்.. இந்த கம்பெனி எல்லாம் கேம்பஸ் வந்தாங்க. இவங்க தான் இந்த காலேஜூக்கு வருடம் வருடம் வருவது. அது தெரிந்ததினால் தான் நான் இந்த காலேஜில் சேர்ந்தேன்.. நான் **** இந்த கம்பெனிக்கு மட்டும் செலக்ட் ஆகிட்டா போதும்..அவங்களுக்கு யூ எஸ் கிளையண்ட் தான் அதிகம். யூ எஸ் க்ளையண்ட் சம்மந்தப்பட்ட வேலை கிடைத்து விட்டால் போதும் ஒன் ஹார் டூ இயர்ல ஆன்சைட்டுக்கு அனுப்பி விடுவாங்க.
அங்கு மட்டும் நான் டூ த்ரீ இயர்ஸ் ஜாப் பண்ணா. முப்பத்து லட்சம் சொலையா சம்பாதித்து விடலாம்..” என்று அவள் திட்டம் சொல்ல சொல்ல.
அதை கேட்ட சித்தார்த்துக்கு தங்கையின் அந்த திட்டமிடலில் அவ்வளவு பெருமிதம்.. இது எல்லாம் பூவிதழ் எப்போதும் எது செய்தாலும்.. அதன் பாதகத் தன்மையை முன்னும் பின்னும் ஆராய்ந்த பின்னவே அதை செயல்படுத்துவாள்..
ஆனால் இவள் இந்த திட்ட மிடல் இவள் வைத்து மட்டுமே இல்லையே. அதை கேட்டும் விட்டான்..
“அண்ணா எல்லாம் நான் நினைத்தது போல் தான் நடக்கும்.. நீங்க அதை பத்தி எல்லாம் கவலை பட வேண்டாம். நீங்க சொல்லுங்க மேரஜ் கிராண்டா செய்யிறிங்கலா..?” என்றதற்க்கு..
“இல்ல பொம்மா வேண்டாம்.. இரு நாளுக்கு வீணா அவ்வளவு செலவு செய்ய வேண்டாம்..” என்று விட்டான்..
“அப்போ எதுக்கு இரண்டு அக்காவுக்கு அவ்வளவு செலவு செய்திங்கலாம்.. எனக்கு ஏன் அவ்வளவு செலவு செய்ய இருக்கிங்க..” என்று கோபத்துடன் மூக்கை உறிந்து கொண்டு கேட்டவளின் பாவனையில் சிரித்து விட்டான்..
“அது மாப்பிள்ளை வீடு எதிர் பார்ப்பாங்க டா.. அந்த பேச்சை விடு..” என்றதும்..
“வர வர என் பேச்சை நீங்க கேட்பதே இல்ல..” என்று குறைப்பட்டு கொண்டவள்..
“சரி மேரஜ் தான் கிராண்டா வேண்டாம்.. வீடு.. மேல ஒரு ரூம்.. கீழே ஒரு ரூம் தான் இருக்கு.. அக்கா வந்தா நீங்க மொட்டை மாடியோ.. இல்ல கீழே ஹாலிலோ படுத்துக்கிறிங்க..
அதுவும் ஒரே சமயத்தில் இரண்டு அக்காக்களும் சேர்ந்தார் போல் வந்து விட்டால் சுத்தம்.. அம்மா பெரிம்மா நாங்களும் ஹாலுக்கு வந்துடுறோம். இதுல நமக்கு மட்டும் இல்லேண்ணா அக்கா அத்தானுமே ஒரு மாதிரி பீல் பண்றாங்க. ஏன் அடிக்கடி வர மாட்டேங்குறிங்க. வந்தாலும் தங்க மாட்டேங்குறிங்க என்று கேட்டதுக்கு இரண்டு அக்காக்களும் இப்படி சொல்றாங்க.
அதனால உங்க மேரஜ் முன்னாடி கீழே ஒரு ரூம் மேல ஒரு ரூம் கண்டிப்பா போட்டுடனும்..” என்ற பூவிதழ் பேச்சு சரி தான்..
ஆனாலுமே சித்தார்த் இரண்டு அறைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று மனதில் கணக்கு போட்டு கொண்டு இருக்க..
அம்மா சித்தியும்.. “சின்ன பெண் என்றாலும் அவள் சொல்வது வாஸ்த்தவம் தான் சித்து.. நாளைக்கு பின்ன மருமகள் வந்த பின் ரூம் பத்தலேன்னா அது சங்கடம். அது மட்டும் இல்லேம்மா. பொம்மாவுக்கும் கல்யாணம் ஆன பின்னால் கண்டிப்பா வேண்டும்..” என்று சொல்லவும்..
சித்தார்த் சரி என்று ஒத்து கொண்டு விட்டான்.. திருமணத்திற்க்கு இன்னும் ஒன்னரை மாதமே இருக்க.. அதற்க்குள் அறை கட்டி முடித்து விட வேண்டும் என்று..
தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர் சமீபத்தில் தான் வீடு கட்டி முடித்து இருந்தார்.. அவர் உதவியோடு.. அவர் வீடு கட்டியவரை வைத்தே கீழே ஒரு அறை மேல ஒரு அறை என்று கேட்டு பட்ஜெட் கேட்டு வாங்கி.. கொண்டவன். சித்தியும் அம்மாவும் திருமணத்திற்க்கு முன் சாமி எல்லாம் கும்பிட வேண்டும்.
அதனால் வீடு திருமணம் முகூர்த்தம் குறித்ததிற்க்கு ஒரு பத்து நாள் முன்னவே அறையை கட்டி முடித்து விட்டால் தான் சரியாக இருக்கும் என்று சொன்னதல்.
அதையும் வீடு கட்டுபவரிடம் தெளிவு படுத்தி விட்டான்.. ஒரு பக்கம் வீட்டு வேலைகள் நடக்க இன்னொரு பக்கம் திருமணத்திற்க்கு உண்டான நகை புடவை.. என்று அது ஒரு பாட்டுக்கு நடந்து கொண்டு இருந்தது..
இதில் அவன் ஆபிஸ் வேலை என்று தனி ஆளாக சித்தார்த் தத்தளித்து தான் போய் விட்டான்..
நல்ல வேலை பூவிதழ் அவனுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்தாள், வீடு கட்டும் போது ஏதாவது எலெக்ரிஷன் பொருள் வாங்க வேண்டும் என்றால் தன் ஸ்கூட்டியில் சென்று வாங்கி வந்து கொடுப்பாள்.
சொன்னது போல் சொன்ன நேரத்திற்க்கு அறை கட்டி கொடுக்கப்பட்டது.. சமையல் அறை கட்டவில்லை என்பதினால் வீட்டோடு ஒரு சின்ன பூஜையோடு அந்த அறைக்கு பொருட்களை அடுக்கி வைத்து விட்டனர் பாக்யவதியும், பத்மினியும்.. அப்போதும் பூவதழ் தான் இருவருக்கும் உதவியாக இருந்தாள்.
புது அறைக்கு பூஜை போடுவதோடு கல்யாணத்திற்க்கு சாமியும் கும்பிடுவதால் வீட்டு பெண்களை அழைத்து இருந்தனர்..
இரு பெண்களுமே தன் கணவன் மார்களோடு வந்து இறங்கி விட்டனர்… இரண்டு பெண்களின் கணவன்கள் பூஜை முடித்ததும் தங்கள் வேலைகளை பார்க்க கிளம்பி விட்டனர்.
ஜெய சுதாவும் சாதனாவும்.. இன்னும் திருமணத்திற்க்கு பத்து நாள் தான் உள்ளது.. திருமணம் முடித்து தான் நாங்கள் வருவோம் என்று புகுந்த வீட்டில் சொல்லி விட்டு தான் இங்கு வந்ததே…
இது வரை மருமகள் அம்மா வீடு என்று அதிக நாள் தங்கியது கிடையாது.. சகோதரன் திருமணம் என்று தங்குகிறார்கள். என்று மகிழ்ச்சியோடு தான் மருமகளை அனுப்பி வைத்தது..
அதோடு இரண்டு சம்மந்தி வீட்டிற்க்கும் சித்தார்த் என்றால் பிடிக்கும்.. தங்கமான பையன்.. பொறுப்பானவன்.என்று.. என் பெண்ணை ஒரு பையனை விரும்பிட்டா. இல்லை என்றால் உனக்கு தான் கொடுத்து இருப்பேன்..” என்று..
இதோ இப்போது பூஜை முடித்து விட்டு மாப்பிள்ளை சென்ற பின்.. அடுத்து என்ன திருமண வேலை என்று பேசி கொண்டு இருந்த போது ஜெயா தன் மாமியார் சொன்னதை சொல்ல. சாதனாவும் அதே தான் சொன்னாள்..
பூவிதழ் சிரித்து கொண்டு.. “ஆ அண்ணனுக்கு ரொம்ப டிமாண்ட் தான் போல. ஆனா என்னை எல்லாம் யார் சட்டை செய்வா..? என்று கிண்டலுடன் கேட்க.
“ஏன் சட்டை செய்யல.. என் மச்சினருக்கு உன்னை கேட்டா கொடுப்பாங்கலா என்று என் மாமியார் கேட்டாங்க.. ஆ இன்னொன்னும் சொன்னாங்க. இப்போ போறிய பேச்சு வாக்குல இதை பத்தி பேசி பார் என்று தான் என் மாமியா சொல்லி அனுப்பினாங்க..” என்று சாதனா சொல்ல.
“என்னது பேச்சு வாக்குல கேட்கிறதா.?” என்று அதிர்ந்த பூவிதழ்..
“அந்த பேச்சு எல்லாம் இங்கு வேண்டாம் சொல்லிட்டேன். பிச்சு பிச்சு..” என்று எச்சரைக்க செய்ய.
உடனே பத்மினி..” உண்மையா தான் சொல்றியா சாதனா..?” அன்னைக்கே உள்ள ஆர்வத்தில் கேட்டார்.
“ஆமாம் மா எங்க மாமியாருக்கு நம்ம வீட்டுலேயே இன்னொரு பெண் எடுத்து விட்டா நல்லது என்று நினைக்கிறாங்க..” என்று சொல்ல.
இத்தனை பேச்சையும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த சித்தார் சித்தியின் ஆசையை மேலும் வளர விடாது.
“பொம்மாவுக்கு இதுக்குள்ள கல்யாண பேச்சு எல்லாம் வேண்டாம் சித்தி.” என்று விட்டான்.. அவனுக்கு தங்கையின் கணவு திட்டம் எல்லாம் தெரியுமே அதனால்..
பெரியவர்களும் சித்தார்த் சொல்லி விட்டால் அது மறுப்பதற்க்கு இல்லை என்பது போல் ஏற்று கொண்டனர்.
திருமணத்திற்க்கு இன்னும் பத்து நாட்களே இருக்கு இன்னும் பெண்ணுக்கே புடவை எடுக்கவில்லை.. நகை என்று வீட்டு பெண்கள் பட்டியல் இட்டதோடு நாளை நல்ல நாள் என்று சொல்ல… சித்தார்த் ஒரு பெரும் தொகையை கொடுத்து விட்டு பார்த்துக்கோங்க என்று விட்டான்..
பூவிதழ் தான்.. “அண்ணா நீங்க போகலையா..?” என்று கேட்க. சித்தார்த்.. “ நாளைக்கு பேங்கில் முக்கியமான வேலை இருக்குடா.. மேனஜர் நான் அப்போ அங்கு இல்லேன்னா நல்லா இருக்காது.. நான் உன் அண்ணி கிட்ட பேசிட்டேன்..” என்று விட்டான்..
ஆம் இப்போது சித்தார்த் அவன் வேலை செய்யும் கிளைக்கு மேனஜராக பதவி உயர்வு பெற்று இருக்கிறான்.. அவன் வேலையை பத்தி தெரியும் என்பதினால் அனைவரும் அமைதியாகி விட்டனர்..
அதுவும் ப்ரீத்தி சித்தார்த்தை புரிந்து கொண்டு இருக்க. வேறு எதை பற்றியும் சோசிக்கவில்லை..
பூவிதழும் நாளைக்கு.” ஒரு பிரஜெக்ட்டை சம்பிட் பண்ணனும்.. எனக்கு நான் அண்ணனோடு போய் வாங்கி கொள்கிறேன் என்று விட்டாள்.
பெண் படிப்பு என்று வந்து விட்டால் வேறு எதுவும் பார்க்க மாட்டாள்.. அதோடு சித்தார்த் சம்மந்தப்பட்டது.. வரவில்லை என்று சொல்கிறாள் என்றால் முக்கியமானதாக தான் இருக்கும் என்று சரி என்று விட்டனர்..
மறு நாள் சொன்னது போல டி.நகரில் பாரம்பரியம் வாய்ந்த அந்த பட்டுக்கடையில் இருகுடும்பமும் வந்து சேர்ந்தனர்.. விலை அதிகமும் இல்லாது குறைவும் இல்லாது அந்த பட்டு பிரிவுக்கு இரு குடும்பமும் வர.
அதே பிரிவில் தான் சாத்வீகாவும் சென்னையில் தனக்கு என்று கட்டி இருந்த பங்களாவின் கிரகப்பிவேசத்திற்க்கு புடவை எடுக்க தன் சகோதரன் விக்ரமுடன் வந்து இருந்தாள்..