“சாது சேரி எடுக்க காஞ்சிபுரமே போயிடலாம் .அங்கு என் பிரண்ட் பெரிய பட்டுக்கடை வைத்து இருக்கான் என்று சொன்னேன்.. நீ இங்கேயே போதும் என்று சொல்லிட்ட.. ஆனா இது என்ன விலை குறைவா..” என்று பக்கத்தில் நின்று கொண்டு புடவை பார்த்து கொண்டு இருந்த சாத்வீகாவிடம் குறைப்பட்டு கொண்டு இருந்தான் விக்ரம்..
விக்ரம் சொன்ன விலை குறைவு என்ற அந்த வார்த்தையை கேட்ட பக்கத்தில் தன் திருமண முகூர்த்தத்திற்க்கு புடவை பார்த்து கொண்டு இருந்த பெண்.. அதிர்ந்து விக்ரமை பார்த்தவள் பின் தன் கையில் இருக்கும் புடவையின் விலைப்பட்டியலை பார்த்து விட்டு மீண்டும் விக்ரமை பார்த்தாள்..
அவனோ தன் பிடித்தம் இன்மையை முகத்தில் அப்பட்டமாக காட்டி கொண்டு நின்று கொண்டு இருந்தானே ஒழிய பக்கத்தில் நின்று கொண்டு இருந்த பெண் மீது என்ன அவர்கள் குடும்பத்தின் மீது கூட அவன் பார்வை படியவில்லை..
விக்ரமை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்த பெண்ணை தான்..”ப்ரீத்தி என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க . சீக்கிரம் எடு,..” என்று அவசரப்படுத்தினார் அவர் அன்னை ப்ரியா..
ஆம் நம் விக்ரமை அதிசயமாக பார்த்து கொண்டு இருந்தது ப்ரீத்தி தான்.. பின் பார்க்க மாட்டாளா…? இருபதாயிரத்தில் இருந்து முப்பதாயிரம் விலை உள்ள புடவை பிரிவுக்கு ப்ரீத்தி தான் மட்டும் அல்லாது தன் பெற்றோர்.. தன் வருங்கால மாமியார் வீட்டினரோடு வந்து தன் திருமணத்திற்க்கு என்று விலை உயர்ந்த புடவையை பார்த்து கொண்டு இருந்தால் , அந்த விக்ரமின் பேச்சில் அதிர்ச்சியாக தானே செய்வாள்..
ஆம் இப்போது அந்த இடத்தில் சித்தார்த் குடும்பத்தினர் மொத்த பேரும் தான் வந்து இருந்தனர்.. சித்தார்த் பூவிதழ் தவிர்த்து..
அன்னை சொன்ன பின் தான் ப்ரீத்திக்கு புத்திக்கு உரைத்தது.. இன்னும் பத்து நாள் தான் திருமணத்திற்க்கு நாள் உள்ளது.
இன்று தனக்கு மட்டும் அல்லாது இரு குடும்பத்தினர் மொத்த பேருக்குமே ஜவுளி எடுத்து முடித்து விட வேண்டும்.. என்று இரு வீட்டு பெரியவர்களும் சொல்லி விட்டனர்..
ரவிக்கை தைப்பதில் பிரச்சனை இல்லை.. ப்ரீத்தியே இன்றைய தலை முறைக்கு ஏற்ப ஆரி ஒர்க்கில் இருந்து தெரியும்.. வீட்டில் தனக்கு மட்டும் அல்லாது குடும்பத்திற்க்கே தைத்து கொடுத்து விடுவாள்..
இப்போது கூடுதலாக சாதனா ஜெய அக்கா பொம்மாவுக்கு தைத்து கொடுத்து விட வேண்டும் .. விடாது வேலை பார்த்தாலுமே ஐந்து நாளுக்கு மேல் ஆகி விடும்..
அதுவும் இன்று ஜவுளி.. எடுத்த பின் நேரம் இருந்தால், இன்றே நகைகளையும் வாங்கி விடுங்க என்று சித்தார்த் சொன்னதாக அத்தைமார்கள் சொல்லி விட்டனர்..
நகைக்கு என்று நாளை திரும்ப டி. நகர் வந்தால் ஒரு நாள் வீணாக போய் விடும்.. இன்றே முடித்து விடலாம் என்று நினைத்து இப்போது ப்ரீத்தி அக்கம் பக்கம் பார்க்காது தனக்கு உண்டான சேலை தேர்வில் ஈடுப்பட்டாள்..
மத்த பெண்களும்.. சாதனா ஜெயா.. அத்தைகள் சம்மந்தி புடவை என்று விறு விறு என்று புடவை எடுத்து விட்டனர்.. எடுத்த புடவைகளை மற்றவர்களிடம் அபிப்பிராயம் கேட்ட பின் தான் பில் செக்ஷனுக்கே பெண்கள் அனுப்பி வைத்தது..
ஜெயாவின் ஐந்து வயது குழந்தை சரண் ஒரு நேரத்திற்க்கு பின் வெளியில் போகலாம் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டான்..
சீனிவாசன் ஜெயாவிடம் ..”என் கிட்ட குழந்தையை கொடும்மா. நீங்க ஆர அமர புடவையை பார்த்து எடுங்க..”என்று விட்டு குழந்தைக்கு வேடிக்கை காட்ட வெளியில் அழைத்து சென்று விட்டார்..
ப்ரீத்தி முதலில் விக்ரமை அதிசயத்து பார்த்ததோடு சரி… அதன் பின் அவர்கள் பக்கம்
திரும்பவில்லை.. ஆனால் இப்போது சாத்வீகா இவர்கள் பக்கமே பார்வையை செலுத்தி கொண்டு தன் முன் இருந்த புடவையை கூட பார்க்காது இருந்தவளிடம்..
விக்ரம்.. “சாது சீக்கிரம் எடு.. லன்ச் முடிச்சிட்டு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.. நான் அதை அட்டண் செய்யனும்..” என்று சாத்வீகாவை அவசரப்படுத்தினான்..
இப்போது தன் கவனத்தை விக்ரமனிடம் திருப்பிய சாத்விகா..”உனக்கு வேலை இருந்தா நீ போ விக்ரம்.. அது தான் கூட சரசுவை அழச்சிட்டு வந்து இருக்கேன்னே..” என்று கூறினாள்..
சரசு.. அவளின் இரண்டு குழந்தைகளை கவனித்து கொள்ள நியமித்து இருக்கும் பணிப்பெண்..
சாத்வீகாவின் பேச்சில்.. விக்ரம்.. “சாது. நீ சேரி செலக்ட் செய்யாது பக்கத்தில் இருக்கிறவங்களை பார்த்துட்டு இருக்கியே என்று சொன்னேன்.. மீட்டிங்கு டைம் இருக்கு பாரு..” என்று கை கட்டி நின்று கொண்டான்..
விக்ரம் சொன்னது போல சாத்வீகா தனக்கு வேண்டிய புடவைகளை ஒரு நான்கு தனியாக எடுத்து வைத்து இருந்தாள். இருந்தும் இப்போது அவள் செவி பக்கத்தில் இருப்பவர்களின் பேச்சை கவனித்தது..
தன் பக்கத்தில் நின்று கொண்டு இருக்கும் பெண்ணுக்கு திருமணம் போல.. அவளுக்கு திருமணம் புடவை எடுக்க வந்தவர்கள் என்பது அவர்களின் பேச்சில் இருந்து புரிந்து கொண்டாள்..
அந்த மூத்த இரு பெண்மணிகளை எங்கேயே பார்த்த நியாபகம்.. ஆனால் எங்கு என்று தான் தெரியவில்லை.. யோசிப்பதற்க்குள் அவர்களின் பேச்சுக்கள் காதில் விழ.. சாத்வீகாவின் கவனம் அவர்கள் பேச்சில் சென்று விடுகிறது.
அவர்களை பார்த்ததில் என்ன ஒற்றுமையான குடும்பம்.. விட்டு கொடுத்து.. ஒருவர் புடவை இன்னொருவருக்கு பிடித்து விட்டதில்..
“நீ எடுத்துக்கோங்க அக்கா. நான் கூட நினச்சேன் இதே நிறத்தில் என் கிட்ட ஒரு சேலை இருக்கு என்று.. உன் கையில் இருக்கும் புடவையின் நிறத்தில் தான் என் கிட்ட இல்ல..” என்று பிடித்த புடவையை விட்டு கொடுத்த விதத்தை பார்த்து.. சாத்வீகாவின் மனதில் ஏதோ ஒரு வெறுமை..
அவளின் நினைவுகள் தன் திருமணத்திற்க்கு ஷாப்பிங் செய்தது நினைவுக்கு வந்து போனது..
மாப்பிள்ளை வீட்டவர்கள் இல்லாது நெட் பேங்கில் கோடியில் பணம் போட்டு விட்டு பேசியில்..”உனக்கு என்ன என்ன வேண்டும் என்று வாங்கி கொள் டால்..” என்றவனின் பேச்சும் நியாபகத்தில் வந்தன..
அவளின் பழைய நியாபகங்களை.. பக்கத்தில் நின்று கொண்டு இருந்த பெண் ப்ரீத்தி செல்லில்..
“அனுப்பி இருந்த புடவை எல்லாம் பிடித்து இருக்கா அத்தான்..” ப்ரீத்தி சித்தார்த் பேசியில் இத்தனை நாள் பேசிக் கொண்டதில் சித்தார்த் ப்ரீத்தியை அத்தான் என்று அழைக்க பழகி விட்டிருந்தான்..
பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ப்ரீத்தியின் இந்த பேச்சில் நிகழ்வுக்கு சாத்வீகா வந்தாள்..வந்தவளின் காதில் ப்ரீத்தி அடுத்து சொன்ன. “அந்த புடவையா அது அது கல்யாணம் ஆன நையிட்டுக்கு என்று அத்த சொன்னாங்க..”
இவளின் இந்த பேச்சுக்கு பேசியில் அந்த பக்கம் இருந்தவன் என்ன சொன்னானோ.. பெண்ணின் முகம் வெட்கத்தால் சிவந்து விட்டது..
“வேலைய பாருங்க ஆபிசரே..” என்று சொல்லி பேசியை வைத்து விட்டவள் .. அப்போது தான் தன்னையே பார்த்து கொண்டு இருந்த சாத்வீகாவை ப்ரீத்தி பார்த்தது.
சாத்வீகாவின் பார்வையில் ப்ரீத்திக்கு இன்னும் வெட்கம் பிடிங்கி தள்ளி விட்டது.. சீ நான் அத்தான் கிட்ட பேசினா அக்கம் பக்கம் கூட மறந்து போயிடுறேன் என்று நினைத்து சமாளிப்பாக ப்ரீத்தி சாத்வீகாவை பார்த்து சிரித்து வைத்தாள்..
சாத்வீகாவுக்கும் ப்ரீத்தி தன்னை பார்த்ததில் ஒரு மாதிரியாக ஆகி விட்டது.. தான் அந்த பெண்ணை அப்படி பார்த்து கொண்டு இருந்து இருக்க கூடாது.
அதுவும் அந்த பெண் தன் வருங்கால கணவரிடம்.. அந்தரங்கமாக பேசி கொண்டு இருக்கும் சமயம்.. ஆம் சாத்வீகாவும் திருமண நாள் அன்று இரவுக்கான புடவை என்றால் என்ன என்று தெரியும் தானே. அதுவும் பெண்ணின் வெட்கத்தை பார்த்த போது பெண்ணின் வருங்காலம் என்ன சொல்லி இருக்க கூடும் என்றும் புரிந்து கொண்டாள்..
அதில் இவளுமே லஜ்ஜையில் சிரித்தாலுமே..” மேரஜ் ஷாப்பிங்கா..? என்று சமாளிக்க கேட்டாள்..
ப்ரீத்தியும்.. .”ஆமாம்.” என்று வெட்கத்துடன் தலையாட்ட. “காங்கிராட்ஸ் ..” என்று வாழ்த்தி தனக்கு எடுக்க வேண்டும் என்று ஏதோ இரு புடவைகளை எடுக்க.
அதை பார்த்த விக்ரம்.. சகோதரியை முறைத்து விட்டு.. “நீ சரியே இல்ல சாது.” என்று விட்டு அவள் கையில் இருந்த புடவையை கீழே போட்டு விட்டு அவனே அழகான நான்கு நல்ல புடவையாக தேர்வு செய்து கொடுத்து விட்டு குழந்தையை வைத்து கொண்டு இருக்கும் சரசு அம்மா இருக்கும் இடத்திற்க்கு அழைத்து சென்றான் விக்ரம்..
சகோதரிக்கு கிடைக்க இருந்த நல்ல ஒரு வாழ்க்கையை கெடுத்து விட்டு இப்போது புடவை நல்லதாக தேர்வு செய்து கொடுத்து இருந்தான் விக்ரம்.
தன் குழந்தைகள் இருக்கும் இடத்தை நோக்கி நகரும் போதும் சாத்வீகா திரும்பி சித்தார்த் குடும்பத்தை பார்த்து கொண்டே தான் வந்தாள்.. அது சித்தார்த் குடும்பம் என்று தெரியாமலேயே..
விக்ரம்..”என்ன சாது என்ன ஆச்சி ஏன் நீ அவங்களையே பார்த்துட்டு இருக்க…” என்று அதட்டினான்..
“இல்ல விக்ரம் அவங்க கிட்ட பணம் அளவா இருக்கு.. ஆனா சந்தோஷம் அதிகமா இருக்கு.. நம்ம கிட்ட..” அடுத்து சொல்லாது விட்ட வார்த்தையை புரிந்து கொண்டான் விக்ரம்..
இருந்தும்.. “பணம் இல்லாது போனாலும் நிறைய பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும் சாது.. அவங்க நம்மை பார்த்து அவங்களுக்கு என்ன என்று சொல்வாங்க.
எனக்கும் தான் அவங்க பேச்சு காதில் விழுந்தது.. அந்த பெண்ணுக்கு கல்யாணத்திற்க்கு புடவை எடுக்க வந்து இருக்காங்க. இருபது ஆயிரம் தான்.. அவங்க பணத்தை பார்த்து பார்த்து தான் செலவு செய்யனும்..
நிறைய விட்டு கொடுக்கனும்.. ஆசைகள் இருந்தும் பணம் இல்லாது அது கனவா இருக்கும் அவங்களுக்கு.. ஆனா நமக்கு அப்படி இல்லலே.. நீ உன் லைப் நினைத்து ரொம்ப மனச போட்டு குழப்பி கொல்ற. இதுக்கு தான் நம்ம பிசினஸ்க்குள்ள வா என்று சொன்னேன்..” என்று மீண்டும் தன் சகோதரியை தங்கள் தொழிலில் புகுத்த முயன்றான்.
முன் போலவே..”எனக்கு இன்ரெஸ்ட் இல்லை..” என்று விட்டாள்.. ஆம் இப்போது சாத்வீகாவின் வாசம் சென்னை என்று தான் ஆகி விட்டது..
விக்ரம் தான் ஆறு மாதம் முன் மும்பை சென்ற போது அங்கு கண்ட காட்சியில், சகோதரியையும் அவளின் இரு குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்து வந்து விட்டான்.
இது வரை விக்ரம் தந்தையோடு தான் சாத்வீக இருந்தது.. இப்போது தான் அவளுக்கு என்று தனித்து ஒரு பங்களா.. கட்டி முடித்ததை வாங்கி இருந்தார் பரந்தாமன்..
சின்னதாக ஒரு கிரகபிரவேசம் செய்ய தான் புடவை வாங்க வந்தது.. சாத்வீகாவின் குழந்தையை வைத்து கொண்டு இருந்த சரசுவிடம் சென்ற போது குழந்தையின் கையில் பிஸ்க்கெட் இருப்பதை பார்த்த விக்ரம்..
சரசுவிடம்.. “என்ன இது என்ன பிஸ்க்கெட்..?” என்று அதட்டுவது போல் கேட்க பக்கத்தில ஜெய சுதா குழந்தையை வைத்து கொண்டு இருந்த சீனிவாசன்.
“நான் தான் வாங்கி கொடுத்தேன் தம்பி.” என்று சொன்ன போது ஏதோ ஒரு மாதிரி பார்த்த விக்ரம்..
மீண்டும் சரசுவிடம்.. “குழந்தைக்கு கண்டது சாப்பிட்டா ஆகாது என்று தெரியாதா..?” என்று திட்டுவது போல் கேட்கவும்..மீண்டும் சீனிவாசன்..