“எங்க வீட்டு குழந்தைக்கு வாங்கியது தான் கொடுத்தேன் தம்பி. எங்க வீட்டு குழந்தைக்கு நாங்க கண்டதை வாங்கி கொடுப்போமா.” என்று சொன்னதற்க்கு அமைதியாக இருந்த விக்ரம் காரில் ஏறிய பின் பாதி சாப்பிட்டு முடித்த பிஸ்கெட்டை பிடுங்கி வீதியில் வீசி ஏரிந்து விட்டு..
”இது போல யார் கொடுத்தாலும் வாங்க கூடாது..” என்று கண்டித்தவன்.
சரசுவிடமும்.. “உங்களுக்கும் தான் சொல்றேன்..” என்று கூற ஒரு குழந்தையாவது ஒரு வயது தான் ஆகிறது.. ஆனால் நான்கு வயதில் இருந்த குழந்தை தான் மாமனை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது..
இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் சாத்வீகா இல்லை.. விக்ரம். “என்ன சாது என்ன யோசனை..?” என்று கேட்டவனிடம் சாத்வீகா..
“இல்ல நம்ம பக்கத்தில் புடவை எடுத்து கொண்டு இருந்த அந்த இரண்டு ஆன்டியை எங்கேயோ பார்த்த நியாபகம்.. எங்கு என்று தான் தெரியல..” என்ற பேச்சில் விக்ரம் ஒரு வித சலிப்போடு சகோதரியை பார்த்தான்..
சித்தார்த் சித்தப்பா இறந்த அன்று தான் சாத்வீகா பாக்யவதி பத்மினியை பார்த்தது.. ஜெய சுதா சாதனா.. பூவிதழிவின் பின் பக்கம் தான் சாத்வீகா நின்று கொண்டு இருந்ததால் அவர்கள் முகத்தை அவள் பார்க்கவில்லை..
பத்மினி பாக்யவதியுமே. அன்று துக்கம் வீடு என்றதால் அழுது அழுது முகம் ஒரு மாதிரியும்.. துணியும் ஏனோ தானோ என்று தானே இருக்கும். அதனால் சாத்வீகாவுக்கு அடையாளம் தெரியாது போயிற்று..
அதே போல் விக்ரமும் சித்தார்த் பற்றி விவரங்களை அவன் தந்தை கொடுத்த போது சித்தார்த் புகைப்படம் மட்டும் தான் இருந்தது..
குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்ற விவரங்கள் இருந்ததே தவிர புகைப்படம் அதில் இல்லை.. அதனால் விக்ரமுக்கு அது சித்தார்த் குடும்பம் என்று தெரியவில்லை..
ஒருவகையில் அதுவும் ஒரு நல்லதிற்க்கு தான்.. யாரோ ஒரு குடும்பம்.. எவ்வளவு ஒற்றுமை.. அன்பு என்று ஏங்கி பார்த்து கொண்டு இருந்தவள்.. அது சித்தார்த் குடும்பம் என்று தெரிய வந்தால்..?
சித்தார்த் குடும்பத்தினர் அன்றே புடவை முடித்ததோடு நகைகளையும் முடித்து கொண்டனர்.. எளியவர்களின் ஷாப்பிங் எளிமையாக தானே இருக்கும்..அதுவும் வீட்டு பெண்களுக்குமே நாள் இல்லை என்று தெரியும் தானே.. அதனால் விரைந்து முடித்து கொண்டனர்.
அதன் பின் திருமண வேலைகள் நல்ல முறையில் நடந்து கொண்டு இருந்தது.. சித்தார்த் திருமணத்திற்க்கு பின் விடுமுறை தேவை என்பதால், திருமணம் இரண்டு நாட்கள் முன் இருந்து தான் விடுமுறை எடுத்தான் ..
சித்தார்த் ப்ரீத்திக்கு உண்டான திருமண நாளும் அழகாக விடிந்தது.. சித்தார்த் சொன்னது போல எளிமையாக அவர்கள் குலதெய்வ கோயிலில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்து திருமணத்தை முடித்து கொண்டனர்..
அன்று மாலை வரவேற்ப்புக்கு சொந்தம் உறவு முறைகள் சித்தார்த்தோடு வேலைப்பார்பவர்கள் என்று அனைவரும் வந்து இருந்தனர்..
சாதாரணமாகவே பூவிதழ் தன் அண்ணன் என்றால் என்ன வேண்டும் ஆனாலும் செய்வாள். அவன் திருமண நாள் அவளுக்கு சொல்லவும் வேண்டுமோ.
கரும்பச்சை புடவையில் மெரூன் நிறத்தில் பார்டரில் அவள் ப்ரீத்தி அண்ணி கை வண்ணத்தில் செய்து கொடுத்த அந்த ஆரி ஒர்க் ப்ளவுஸை அணிந்து.. அவளின் அந்த உயரத்திற்க்கும் நிறத்திற்க்கும் நீண்ட கூந்தலுக்கும்.. பார்ப்பவர்கள் கண்ணுக்கு அவ்வளவு அழகாக தெரிந்தாள்..
எப்போதும் பூவிதழ் உடைக்கும் சரி.. அலங்காரத்திற்க்கும் சரி அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாள்.. கொடுக்கவும் அவளுக்கு நேரமும் கிடையாது.. அதில் நாட்டமும் இல்லை.
ஆனால் இன்று அவளுக்கு பிடித்தமான அண்ணன் திருமண நாள் அல்லவா….? திருமணத்திற்க்கு புடவை எடுக்கும் போது அவள் அன்னை..
“கலர் சொல்லுடி நாங்களே எடுத்து வந்து விடுகிறோம்,.. அதுக்கு என்று நீ ஒரு நாள் அலையனுமா. அதுவும் நீ மட்டும் இல்லாது உன் அண்ணனையும் கூட சேர்த்து அலைய விடுவே.. உன் அண்ணனுக்கு நிறைய வேலை இருக்கு..” என்று சொன்ன போது..
“ம் நான் தான் எனக்கு உண்டானதை எடுப்பேன்,..” என்று தீர்த்து சொல்லி விட்டாள்..
அவள் அன்னை சொன்னது போல் தான் அடுத்த நாள் மாலை அண்ணனை அழைத்து கொண்டு புடவை மட்டும் அல்லாது திருமணத்திற்க்கு அன்று தனக்கு தேவையானதை அனைத்தும் வாங்கி கொண்டு..
ப்ளவுஸ் தைக்க கொடுக்க என்று ப்ரீத்தி வீட்டிற்க்கு அண்ணனோடு சென்று விட்டாள்..
தனக்கு எது போல் தைக்க வேண்டும் என்று தன் வருங்கால அண்ணியிடம் சொல்ல. அதை ப்ரீத்தி கவனித்தாலா என்று தெரியவில்லை.. அவள் பார்வை தான் தன் அண்ணனிடமே இருந்ததே.
ஆனாலுமே அவள் அண்ணி அவள் கேட்டதை விட அழகாகவே தைத்து கொடுத்து விட்டாள்..அதை அணிந்து கொண்டு.. அவள் திருமணத்திற்க்கு என்று தான் சித்தார்த் நகைகள் வாங்கி வைத்து இருக்கிறானே..
அதை எல்லாம் அணிந்தவள். வந்தவர்கள் கண்ணுக்கு யார் மணப்பெண் என்று தெரியாத அளவுக்கு ப்ரீத்தியின் அளவில் மின்னிக் கொண்டு இருந்தாள்..
இதனால் பூவிதழுக்கு ஒரு சங்கடங்கள் வந்தது.. பார்த்தவர்கள் பூவிதழ் அழகாக தெரிந்ததோடு.. பொறுப்பாக அங்கும் இங்கும்
ஒடி வேலை செய்வதை பார்த்து கொண்டு.. பெண் கேட்டு விட்டனர்.. இப்படி சித்தார்த் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
ஆனால் அதே நாளில் தான் சாத்வீகா தன் தந்தை வாங்கி தந்த புது வீட்டிற்க்கு நெருங்கிய சொந்தத்தை அழைத்து சிம்பிளாக கிரகபிரவேசம் செய்தது.
வந்த உறவுகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சாத்வீகாவின் மனதை புண்படும் படி பேசி விட்டு தான் சென்றனர்.
“ஆம்பிளை என்றால் அப்படி இப்படி தான் இருப்பான்.. உன் இரண்டு குழந்தைக்காவது பார்த்து இருக்க வேண்டும். அப்பா வீட்டில் பணம் இருக்கு அது தான் புருஷனை ஈசியா தூக்கி போட முடிந்தது.. இப்போ எல்லாம் நல்லா தான் இருக்கும்..
தம்பியும் தாங்குறான்.. அவனுக்கு என்று ஒருத்தி வந்த பின் தான் உன் நிலை புரியும்.. உன் அப்பா எவ்வளவு நாள் துணை இருப்பார்.. அவருக்கு அடுத்து..” இது போல் பேச்சுக்கள் தான் காதில் விழுந்தன..
ஒரு சிலர் சாத்வீகா காதில் விழ வேண்டும் என்றே வேண்டும் என்றே தான் சொன்னது.. இது போல் புரம் பேச்சுக்கு மட்டும் சாதி மதம்.. மத்திய வர்க்கத்தினர்.. உயர் வர்க்கத்தினர் என்று வேறு பாடு இருக்காதே..
இதற்க்கு தான் இந்த ஐந்து ஆண்டுகள் அவள் பொறுத்து கொண்டு போனது.. இதில் மட்டும் ஸ்டேட்டஸ் வேறு பாடு இல்லாது விவாகரத்து என்றால் பெண் மீது தானே பழியை போடுவது..
விக்ரம் சகோதரியின் முகத்தை பார்த்து விட்டு. “விடு சாது.. இதை எல்லாம் பெருசா எடுத்தா நாம வாழ முடியாது.. அடுத்து நீ என்ன செய்ய போற. வீட்டில் இருந்தா ஏதாவது கண்டதை யோசிச்சிட்டே இருப்ப நீ நம்ம கம்பெனிக்கு வா..” என்று அழைத்தான்.
இப்போது சாத்வீகா.. “குழந்தைக்கு ஒரு இரண்டு வயது ஆகட்டும்.. ஏதாவது செய்யிறேன்.. ஆனா நம்ம பிசினஸா இல்ல வேறு ஏதாவதா என்று அப்போ என் மனதுப்படி செய்யிறேன்..” என்று சொல்ல. விக்ரமுக்கு பரவாயில்லை நல்ல முன்னேற்றம் தான். என்று திருப்தி பட்டு கொண்டான்..
சாத்வீகாவுக்கு புது வீட்டில் தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தாள்.. அன்று விக்ரமும் சகோதரி வீட்டில் தான் தங்கினான்..
சாத்வீகா அறையில் விளக்கு எரிவதை பார்த்து அவள் அறைக்கு சென்ற விக்ரம்..” என்ன சாது தூங்காம என்ன செய்யிற..? என்று கேட்டவனுக்கு சாத்வீகா பதில் சொல்லாது விளக்கு மட்டும் அணைத்து கண்ணை மூடிக் கொள்ள..
விக்ரமும் ஒன்றும் சொல்லாது கதவை அடைத்து விட்டு அவள் அறையை விட்டு வெளி வந்தாலும்.. இன்னும் சாத்வீகாவை நாம் பார்த்து கொள்ள வேண்டுமோ.. என்று சிந்தனை விக்ரமுக்கு..
இங்கு சித்தார்த் வீட்டில் அதே நாளில் ப்ரீத்தி தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நாளிலேயே அவர்கள் மண வாழ்க்கை நல்ல முறையில் தொடங்கி விட்டனர்.
இது போல் சடங்கு பெண் வீட்டில் தான் நடக்கும்.. ஆனால் சீனிவாசன் வீட்டில் இருப்பது ஒரே அறை என்பதால், பத்மினி தன் அண்ணனிடம் சொல்லி விட்டார்.
“சித்து கொஞ்சம் கூச்சப்படுறான் அண்ணா. அதனால அங்கு நம்ம வீட்டிலேயே வைத்து கொள்ளலாமே .. சொந்தம் நமக்குள் என்ன பார்மால்ட்டிஸ்..” என்ற தங்கையின் பேச்சுக்கு மட்டும் அல்லாது சீனிவாசன் தன் மாப்பிள்ளையின் விருப்பத்திற்க்கே..
“சரி பத்து.” என்று விட்டார்.. பூவிதழ் திருமணம் ஆகாதவள்.. அதனால் அவளுக்கு முன்னவே சாப்பாடு கொடுத்து விட்டு
அறைக்கு போய் படுத்து கொள் என்று வீட்டு பெரியவர்கள் சொல்லி விட்டனர்..
பூவிதழுக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும், இந்த நாள் தெரியுமே, அதனால் எந்த மறுப்பும் சொல்லாது சாப்பிட்டவள் அறைக்கு செல்லும் முன் ப்ரீத்தியை கட்டி அணைத்து விட்டு தான் சென்றாள்..
ஏனோ இனி அண்ணன் சந்தோஷமாக இருப்பார். இது வரை குடும்பத்திற்க்காக மட்டுமே வாழ்ந்து கொண்டு இருந்தவர் தனக்கான ஒரு வாழ்க்கையை தொடங்குவார் என்று நினைத்ததில் அவ்வளவு சந்தோஷம்..
பூவிதழ் ப்ரீத்தியை கட்டி அணைக்கும் போது அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தனர் ஜெய சுதாவும் சாதனாவும். இவளின் அணைப்பில் ப்ரீத்தி குழம்பி போய் விழிக்க..
அதை பார்த்த ஜெயா.” அண்ணி அவள் அப்படி தான்.. சித்தார்த் அண்ணாவுக்கு ஒரு புது சட்டை போட்டாலே. அப்படி அண்ணாவை பார்த்து பார்த்து ..
“அண்ணாவுக்கு இந்த சட்டை நல்லா இருக்குல.. நல்லா இருக்குலே என்று அன்று முழுவதும் சொல்லுவா.. இன்னைக்கு அவளுக்கு பிடித்த அண்ணனின் திருமணம் சொல்லவா வேண்டும்” என்று சொல்ல..
சாதனா.. “அவள் ஒரு அண்ணன் பைத்தியம் விடுங்க அண்ணி..” என்று ப்ரீத்தியிடம் சொன்னவள் பூவிதழிடம்..
“போ போ தூங்கு..” என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டாள்..