விக்ரம் எப்போதும் யாருக்காகவும் எல்லாம் கவலை படாதவன்.. எது செய்தாலுமே தன் விருப்பம் இது தான் முதன்மையாக நிற்கும்.. அவனின் இந்த குணமே மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கும் சித்தார்த் குடும்பத்திற்க்கு பல வகையில் பிரச்சனை ஏற்படுத்த கூடும் என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை..
அன்று தன் அறைக்கு வந்த விக்ரமனின் நினைவில் எல்லாம் சகோதரியின் எதிர் காலம் மட்டுமே கண் முன் நின்றது..
எதிலும் நாட்டம் இல்லாது அவள் இருப்பதை பார்த்தவன் மனதில் சித்தார்த் பற்றிய நினைவு அவனுக்கு வந்தது.
அதுவும் தந்தை இன்று தன் காதல் பற்றி கேட்ட போது இதே வீட்டில் முன் காதல் பற்றிய நினைவுகள் கூடவே முகேஷை தன் கண் முன் அப்படி பார்த்த காட்சிகள்.
முதல் முறையாக தான் சகோதரிக்கு அநியாயம் செய்து விட்டோமோ என்று நினைத்தான்.. கூடவே ஆறு மாதம் முன் அவன் மும்பை சென்ற போது நடந்த நிகழ்வுகளையும் தான்..
அன்று தொழில் முறை கருத்தரங்கில் அவன் பங்கு பெற வேண்டி இருந்தது.. அதற்க்கு தன் கம்பெனி மேனஜரை தான் முதலில் அனுப்புவதாக நினைத்தான்..
ஆனால் முன் நாள் இரவு சாதுவிடம் பேசிய போது முன் எப்போதும் இல்லாத வெறுமை அவள் பேச்சில் கண்டான்..
அதனால் நாளை மும்பையில் நடக்கும் மீட்டிங்குக்கு தானே சென்று அப்படியே சாதுவையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு வரலாம் என்று திட்டம் இட்டு இருந்தான்..
இவன் எப்போதும் மும்பை செல்வது என்றால் முன்னவே சாதுவிடம் சொல்லி விடுவான்.. ஆனால் இந்த முறை சொல்லாது தான் சென்றான்..
மாலை தான் அவன் கலந்து கொள்ளும் மீட்டிங்.. அதனால் மதியம் போல் அங்கு இருப்பது போல் தான் ப்ளைட்டில் டிக்கெட் அவன் போட்டது..
அவன் நினைத்த நேரத்திற்க்கு மீட்டிங் அட்டெண் செய்து அது முடிய இரவு எட்டு ஆகிவிட்டது..
அந்த தொழில் துறை மீட்டிங்குக்கு ஜெர்மனியில் அவன் கூட படித்த டேனியலும் வர. நீண்ட ஆண்டுகள் நண்பனை சந்தித்த மகிழ்ச்சி இருவரிடமும் இருந்தது. டானியல் மும்பைக்காரன். தான்.. விக்ரமுக்கும் தெரியும்.. இருந்தும் நேரம் ஒதுக்கி அவனை சென்று பார்க்க முடியாது..அதே போல் தான் டேனியலும் பிஸியானவன்..\
இன்று இந்த சந்திப்பை இன்னும் மகிழ்ச்சி கூட்ட டின்னர் பின் பப் என்று சென்றனர். டேனியல் சென்னையில் ஒரு பிரான்ச் ஒப்பன் செய்வதாக இருக்கிறேன் என்று விக்ரமனிடம் பேச.. அப்படி தொழில் பேச்சு நடந்து முடிந்து..
பின் அவர்கள் வயதான இருபத்தியெட்டு வயதிற்க்கு உரிய பார்வையாக அங்கு வந்த பெண்களை இருவரும் பார்த்து கொண்டும். அவர்களை பற்றி சில பேச்சுக்கள் பேசிக் கொண்டும் இருந்தனர்..
விக்ரமும் டேனியலும் சும்மா பேசுவதோடு சரி..
அந்த இளமையின் பேச்சு துள்ளலில் டேனியல் பேச்சு வாக்கில்.. “நீயும் நானும் பார்ப்பதோடு சரி தான் போ..” என்று விக்ரமை கிண்டல் செய்யும் போது தான் அந்த பப்பில் ஒரு பெண்ணை கண்டான்..
பார்த்தவர்கள் பார்த்த உடனே.. செம ஹார்ட் மச்சி..” என்று இன்றைய தலை முறைகள் சொல்லும் அளவுக்கு அவளின் அங்கம் மட்டும் இல்லாது உடையும். அதற்க்கு ஏற்ப எடுத்து காட்டுவது போல் தான் அணிந்திருந்தாள்..
அந்த பெண்ணை பார்த்த உடனே விக்ரமுக்கு எங்கேயோ பார்த்த நியாபகம். எங்கு என்று அந்த பெண்ணை பார்த்து யோசித்து கொண்டு இருந்த போது டேனியல்..
“என்ன மச்சி அப்படி பார்க்கிற.. அது சிங்கிள் பிராப்பர்ட்டி மச்சி..” என்று உனக்கு செட்டாகாது என்பதற்க்காக கூறினான்..
“சே.. நான் அதுக்கு எல்லாம் பார்க்கல..” என்று கூறிய விக்ரம் டேனியல் சொன்ன சிங்கிள் பிராப்பர்ட்டி என்ற வார்த்தையில்.
“மேரஜ் ஆகி விட்டதா..?” என்று கேட்டான்..
அதற்க்கு டேனியல் சிரித்த சிரிப்பில் அங்கு இருந்த சிலர் அவனை திரும்பி பார்த்தார்கள்.. ஏன் டேனியலின் அந்த சிரிப்புக்கு காரணமான அந்த பெண்ணும் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் மது அருந்துவதில் தன் கவனைத்தை செலுத்தி விட்டாள்..
சிரிப்பை கட்டு படுத்திய டேனியல்..
“தோஸ்த் சிங்கள் என்றால் மேரஜ் ஆகி இருக்கும் மட்டும் என்று அர்த்தம் கிடையாது தோஸ்த்.
இது வேறு.. அதாவது இந்த பெண் மாடல்.” என்று டேனியல் கூறும் போது தான் விக்ரமுக்கு அந்த பெண் எங்கு பார்த்தோம் என்று நியாபகத்திற்க்கு வந்தது..
முகேஷ் விளம்பர கம்பெனிக்கு ஒரு முறை சென்ற போது அதாவது சாதுவை திருமணம் செய்து கொடுக்கும் முன்.. சென்ற போது இந்த பெண்ணை பார்த்து இருக்கிறான்.. பின் ஒரு சில விளம்பரத்திலும் பார்த்து இருக்கிறான்..
டேனியல் சொல்ல சொல்ல விக்ரம் நினைவு கூர்ந்து கொண்டு இருக்கும் போது தான் டேனியல்..
“அதோ வரான் பார்.. தாராவின் ஒனர்..” என்று டேனியல் கை காட்டும் இடத்தில் முகேஷ் நின்று கொண்டு இருந்தான்..
டேனியலுக்கு முகேஷுக்கு தான் விக்ரமனின் சகோதரியை மணம் முடித்து கொடுத்து இருப்பது தெரியாது..
சாதுவின் திருமணத்தின் போது டேனியல் அமெரிக்காவுக்கு தொழில் விசயமாக சென்று கொண்டு இருந்தான்..
விக்ரம் பேசியில் அழைத்த போது அவன் இந்தியாவில் இல்லை என்று தெரிந்ததுமே.. சிஸ்ட்டருக்கு மேரஜ் அதுக்கு தான் அழைத்தேன் என்று சொல்லியவன் ஏனைய விவரங்கள் சொல்லாது விட்டான்..
பொதுவாக இருவரும் குடும்ப விசயங்களை பேசி கொள்ள மாட்டார்கள் சந்திப்பதே எப்போதாவது தான் .. அதனால் தங்களை பற்றி மட்டும் தான் பேச்சுக்கள் இருக்கும்..பெரிய இடம் எல்லாம் அப்படி தான் போல.
அதனால் டேனியலுக்கு முகேஷ் யார் என்று தெரியாது அனைத்து தகவல்களையும் விக்ரமனிடம் முகேஷ் பற்றி சொல்லி கொண்டு இருந்தான்..
“இவன் பெண்கள் விசயத்தில் எப்போதும் அப்படி இப்படி தான்.. டாட் சொல்லி இருக்கார்.. இவனுக்கு இந்த பெண் மட்டுமே பழக்கம் கிடையாது.. ஆனால் இந்த பெண் முகேஷுக்கு ஸ்பெஷல் என்று மும்பை வட்டாரம் சொல்லுதுப்பா.ஒரு முறை இவன் மனைவியை பார்த்தேன் தோஸ்த்” தன் சகோதரியை பற்றி பேச்சை ஆரம்பிக்கவும் இப்போது விக்ரமனின் பார்வை முகேஷ் இடம் இருந்து டேனியலிடம் வந்தது..
“ஓரு பார்ட்டியில் பார்த்தேன்.. சென்னை போல நல்லா தான் இருந்தா. இரண்டு குழந்தைகள் ..பார்க்க அப்படி அழகா இருந்தாங்க.” என்று கூறியவன்.
பின் குரலை சிறிதாக்கி..“இதுல என்ன ப்யூட்டி என்ன என்றால் அந்த பார்ட்டிக்கு இந்த தாராவும் வந்து இருந்தா..ம் மனுஷன் வாழுறான் பா. ஒரே இடத்திற்க்கு மனைவியையும் கீப்பும். ம்” என்று பெரும் மூச்சு விட்டவன்..
பின் இன்னும் குரலை சிறிதாக்கி கொண்டவன்.. “பார்ட்டியில் கொஞ்ச நேரம் தாராவையும் முகேஷையும் காணவில்லை.. இது எல்லாம் அவன் மனைவிக்கு தெரியாம இருக்கும் என்று நினைக்கிறயா தோஸ்த்.. தெரியும் எல்லாம் தெரியும்.. தெரிஞ்சும் அடக்கி வாசிக்கிறங்க என்றால் வசதி தோஸ்த் வசதி..” என்று தன் விரலை தேய்த்து பணம் என்று கூறினான்..
டேனியல் விசயம் சொல்ல சொல்ல அப்படி ஒரு கோபம் மனதில் எழுந்தது.. முதல் முறை தோற்று போன உணர்வு விக்ரமுக்கு எழுந்தது.முகேஷ் தன் தேர்வு.. நான் தேர்ந்தெடுத்தேன் என்று தந்தை கூட அவ்வளவு விசாரிக்காது தன் மீது இருக்கும் நம்பிக்கையில் சாத்வீகாவை முகேஷுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
தன் தோற்றல் வேறு எதிலாவது இருந்து இருந்தால் பரவாயில்லை. அடுத்த முறை வெற்றி பெற்று விடலாம்.. ஆனால் வாழ்க்கையில்.. நினைக்க நினைக்க அவ்வளவு கோபம் விக்ரமனின் கண்ணில்..
அதுவும் முகேஷ் நின்று கொண்டு இருந்த இடத்தை விட்டு தாராவின் பக்கம் செல்ல செல்ல.. டேனியல் தெரியாது சொல்கிறான் என்று ஏதோ ஒரு நம்பிக்கை சிறிது வைத்து இருந்தவன்
முகேஷ் தாராவின் அருகில் சென்றதோடு அவள் குடித்து கொண்டு இருந்த மதுவை அவள் கையில் இருந்த வாறே முகேஷ் அதை பருகி விட்டு அவள் முகத்தை பார்க்க அவள் என்ன சொன்னாளோ.. தன் இதழில் இருந்த மதுவை மாதுவின் இதழுக்கு கடத்தி கொண்டு இருந்தவனிடம் வேகமாக சென்ற விக்ரம்..
முகேஷ் என்ன என்று உணரும் முன் அவன் சட்டையை பிடித்து கொண்டு அவன் மூக்கிலேயே ஒரு குத்து வைத்தான்.
விக்ரமனின் அந்த ஒரே அடியிலேயே முகேஷ் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. தாராவோ.. “என்ன செய்யிற மேன்…? யார் நீ..? ஏன் அடித்தே.” என்று இந்தியில் காச் மூச்சு என்று கத்தி கொண்டு இருந்தாள்..
முகேஷுக்கோ ரத்தம் வந்ததில் ஒரு மாதிரி தள்ளாடும் நிலை.. ரத்தம் வருவது நிற்காது கொட்டி கொண்டு இருந்தது. தாரா அதை துடைத்து கொண்டு இருந்தாள்.
விக்ரம் மீண்டும் முகேஷை அடிக்க அவன் சட்டையை பிடித்து தன் பக்கம் இழுத்து கொண்டு அடிக்க முயலுகையில் டேனியல் விக்ரம் கை பிடித்து தடுத்தவன்..
“என்ன விக்ரம் செய்யிற.. பப்ளீக் ப்ளேஸ்.. என்ன ஏன்.” என்று கேட்க டேனியல் பேச்சை எல்லாம் கவனிக்கும் நிலையில் விக்ரம் இல்லை..
தாராவோ.. “யார அடிச்சி இருக்கே தெரியுமா.. இரு போலீஸுக்கு போன் பண்றேன்..?” என்று அவள் எகிறிக் கொண்டு பேச.. தாராவின் அந்த பேச்சில் விக்ரமனின் கோபம் இன்னும் தான் கூடியது..
“கால் மீ போலீஸ்..?” என்று அவன் தைரியமாக சொல்லிக் கொண்டே தன் முழு கை சட்டையின் கை பகுதியை மேல் தூக்கி கொண்டு தாரா அருகில் செல்ல இப்போது தாரா கொஞ்சம் ஜெர்க்காகி போனாள்..
விக்ரம் மீட்டிங் முடிந்து வந்ததால் அப்படியே பார்முல் உடையில் தான் இருந்தான்.. அந்த உடை அந்த இடத்திற்க்கு பொருத்தம் இல்லாது போனாலுமே, அவன் உடையே சொன்னது அவனின் உயரத்தை..
அடுத்து தாராவுக்கு ஆண்கள் உபயோகிக்கும் அனைத்து பிராண்டும் தெரியுமே. விக்ரமனின் உடல் முழுவதும் அவன் போட்டு இருந்தது சொன்னது அவனின் உயரத்தை.
அதோடு அவன் முகேஷை அவ்வளவு தைரியமாக அடித்ததோடு மட்டும் அல்லாது போலீஸ் கூப்பிடு என்ற பேச்சில், சிறிது யோசித்தால் விக்ரம் யார்..? என்று.. ஏன் என்றால் முகேஷ் மும்பையில் கொஞ்சம் செல்வாக்கானவன்.. அவனை அடித்து இருக்கிறான் என்றதினால்..
தாரா பின் வாங்கி கொண்டாள்.. ஆனால் விக்ரம் விடுவதாக இல்லை..
“போலீஸ் கம்பிளையிண்ட் செய்தால் அவங்க நீங்க யாரு என்று கேட்பாங்க. என்ன சொல்லுவீங்க அவங்க கிட்ட நீங்க யார் என்று.. கீப் கம்பிளையிண்ட் கொடுத்தா எல்லாம் போலீஸ் அவ்வளவு பெருசா எடுத்துக்க மாட்டாங்க.. வேண்டும் என்றால் அவங்க மனைவி கம்பிளையிண்ட் செய்யட்டுமே என் மீது ஆக்ஷன் எடுக்க.” என்று தாராவுக்கு எடுத்து கொடுத்தான் விக்ரம்..
அனைவரின் முன்னும் விக்ரம் பேச்சுக்கு பேச்சு தன்னை கீப் என்று அழைத்து தன்னை தாழ்த்தியதில் மும்பையில் முகேஷூம் பெரிய ஆள் தானே என்று.
ரத்தத்தை துடைத்து கொண்டு எழுந்து நின்று கோபத்துடன் விக்ரமை பார்த்து இருந்த முகேஷிடம்..
“முகீ உங்க மனைவியை இவன் மீது கம்பிளையிண்ட் செய்ய சொல்.. கூப்பிடு கூப்பிடு..” என்று தாரா பேச பேச..
கொஞ்சம் நிதானப்பட்டு இருந்த விக்ரமனின் கோபம் இன்னும் கூடி போனது. என் சகோதரியை இவள் என்ன அவ்வளவு எளிதாக நினைத்து கொண்டாள்..