சுற்றும் முற்றும் பார்த்த டேனியலை விக்ரம் ஏதோ என்று அவனுமே ஆர்வமாக நண்பன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்..
பின் பக்கம் காட்டி “சித்தார்த் அங்கு தானே குளிப்பார்.. அவருக்கு எங்கு மச்சம் இருக்கு என்று கதவு கீழ் குனிந்து பார்த்து விடு..” என்று கூறியவனை விக்ரமுக்கு துப்பலாம் போல் தான் இருந்தது.
ஆனால் சகோதரியை கட்டி கொடுத்து இருக்கிறோம் என்று அவன் முறைப்பதோடு விட்டு இருந்தான்.
ஆனால் சித்தார்த்துக்கு எதையும் பார்க்க தேவையில்லையே குளித்த பின் சூரிய நமஸ்காரம் செய்யலாம் என்று வந்தவன் காதில் விழுந்த பேச்சில்..
“குனிந்து பார்த்தால் மச்சம் தெரியாது.. ஒரு நாள் சொல்லுங்க நான் கதவை திறந்து வைத்து குளிக்கிறேன்..” என்றதில் இருவரும் திரும்பி பார்க்க. டேனியல் அசடு வழிய.
“தோஸ்த் நான் கிளம்புறேன்..” என்று அந்த இடத்தை விட்டு போக பார்த்தவன் பின் சித்தார்த்.
“குழந்தைங்க சாப்பிட்டுட்டு இருக்காங்க.. பாதியில் கூட்டிட்டு போகாதிங்க..” என்றான்.. சாத்வீகாவின் இரு குழந்தைகளையும் தான் சொன்னது..
“ஒகே ப்ரோ..” என்று விட்டு டேனியல் ஒடி விட்டான்..
விக்ரமோ சித்தார்த்தை பார்த்து. “கதவு எப்போ திறந்து வைப்பிங்க.” என்று கை கட்டி கொண்டு கேட்ட பாவனையில். சித்தர்த்தோ அடங்க மாட்டானா.? என்பது போல் பார்க்க.. அது உன்னால் முடியாது மச்சான் என்பது போல் விக்ரம் பதில் பார்வை பார்த்தான்..
இப்படியாக விக்ரம் சித்தார்த் வீட்டில் வாழ்ந்து கொண்டு இருந்த போது தான் விக்ரம் குழந்தை பிறந்த பின் பெரிய அறை கேட்டது..
பூவிதழ் கணவனிடம் அப்படி பேசினாலுமே அன்ணனிடம் தயங்கி தயங்கி விசயத்தை கூற..
அடுத்த நாள் சித்தார்த் மாடியில் இரு அறைகளை கட்டும் வேலையை ஆரம்பித்து விட்டான்..
விக்ரம் அதற்க்கு பணம் கொடுத்தாலும் சித்தார்த் வாங்க மாட்டான் என்று தெரிந்ததால் அமைதியாகினான்..
இருந்தும் சித்தார்த் தன்குழந்தைகளுக்கு மட்டும் அல்லாது சாதனா ஜெயா குழந்தைகளுக்கு பிறந்த நாள் வந்தால் ஒரு பெரிய அமெளண்டை பிக்ஸட் டெப்பாசிட் செய்து அதை கொடுத்து விடுவான்..
விக்ரமுக்கு வசதிக்கு குறை இருந்த போதும் கல கலப்புக்கு குறை இல்லாது அவனின் வாழ்க்கை வண்ணமயமாக்க பூவிதழ் அந்த வீட்டில் இருக்க அவன் வாழ்க்கை நல்ல முறையில் தான் சென்று கொண்டு இருந்தது..
இதோ வீடு மொத்தமும் உறவுகள் கூட்டம்..பேசியில் டேனியல் பேசும் போது சாத்வீகா குழந்தைகளும் விக்ரம் மாமா வீட்டில் கொண்டு போய் விடுங்க என்று அடமாக நின்று விட.
சாத்வீகா.. “நீங்க குழந்தைகளை அழச்சிட்டு அங்கேயே தங்கிட்டு அப்படியே கோயிலுக்கு போயிடுங்க. நான் டாடியை அழச்சிட்டு வந்து விடுகிறேன்.” என்று சொல்லி விட்டு இரு குழந்தைகளுக்கும் வேண்டியதை எடுத்து வைக்க அசைந்து அசைந்து சென்றவளை பிடித்து தடுத்து நிறுத்திய டேனியல்..
“இது போல சமயத்தில் அமைதியா ஒரு இடத்தில் உட்கார் என்று சொன்னா கேட்கிறியா..? உனக்கு எல்லாம் ஊன் தம்பி விக்ரம் தான் சரி.” என்று அவளின் நிறை மாத வயிற்றை சுட்டி காட்டி சொன்ன டேனியல் அவனே குழந்தைகளுக்கு உண்டான துணியோடு அவனுடைய ஒரு ட்ரஸையும் எடுத்து கொண்டு மச்சான் வீட்டிற்க்கு பறந்தான்..
அவனுக்குமே சித்தார்த் வீடு என்றால் அவ்வளவு பிடித்தம்.. போகும் டேனியலை சிரித்து கொண்டே பார்த்திருந்த சாத்வீகா.
“எப்போ எப்போ பார்த்துட்டு இருந்திங்க போல..” என்று கிண்டல் செய்து தான் அனுப்பி வைத்தாள்..
மறு நாள் சொன்னது போல் சொன்ன நேரத்திற்க்கு செங்கல்ப்பட்டில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு மூன்று வேனை ஏற்பாடு செய்திருக்க.. அதில் தான் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை ஏறினர்..
விக்ரமும் அதே வேனில் தான் டேனியலோடு ஏறினான்.. அந்த வீட்டு முன் நின்று கொண்டு இருந்த அந்த ஆடி காரை ஏக்கமாக பார்த்து கொண்டே..
“தோஸ்த் வேனில் ஏறு உன் ஒய்ப் பார்க்கிறாங்க..” என்றது தான் ஆடியாவது அம்பானியாவது என்று அனைத்தும் மறந்து வேனில் ஏறி விட்டான்.
இதில் சித்தார்த் வேறு விக்ரமனிடம்.. “ட்ரைவர் பக்கத்தில் உட்கார்ந்துட்டு வழி சொல்லிட்டு வாங்க..” என்று சொல்லி விட்டு சித்தார்த் தன் மனைவி குழந்தை தங்கை பூவிதழ் அமர்ந்து இருந்த கடைசி இருக்கையை நோக்கி நகர்ந்து விட.
விக்ரம் சித்தார்த்தை முறைத்து கொண்டே டேனியலிடம்.. “ட்ரைவர் கிட்ட அட்ரஸ் லோக்கேஷனை ஷேர் செய்து விட்டால் போச்சு..” என்று கடு கடுப்புடன் கூடினான்..
இன்று காலையில் மனைவி தலை குளித்து புதுப்பட்டு புடவை உடுத்தி சின்ன சின்ன நகைகளை அணிந்து அவனின் சின்ன சின்ன ஆசைகளை தட்டி எழுப்பி விட்டு இருந்தாள்..
சரி வண்டி குலுங்கி சென்றால் கூட பரவாயில்லை.. மனைவியின் பக்கம் அமர்ந்து கொண்டால் அந்த குலுங்கள் கூட இனிமையாக்க கூடும் என்று நினைத்தான். அதிலும் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டு விட்டு சென்ற சித்தார்த்தை திட்ட முடியாது முனு முனுக்க..
சித்தார்த்தோ திரும்பி.. “எல்லோருக்கும் இன்றைய சாதனத்தை பயன் படுத்த தெரியும் என்பது இல்லையே.” என்று அவன் முனு முனுக்க எல்லாம் இல்லை.. சத்தமாகவே தான் கூறினான்.
ஒட்டுனரும்.. “எனக்கு அது எல்லாம் தெரியாது சார். முதலாளி கிட்ட சொல்லாடாதிங்க சார்.. வேலையை விட்டு தூக்கிடுவாங்க. பிள்ளை குட்டிக்காரன் சார்.” என்று வார்த்தைக்கு வார்த்தை அந்த ஒட்டுனர் சார் போட.. டேனியல் இது தேவையா..? என்பது போல் விக்ரமை பார்த்தான்.
விக்ரம்.. “சரி சரி பரவாயில்லை என்று சித்தார்த் சொன்னது போல் ஒட்டுனரின் நீண்ட இருக்கையில் விக்ரம் அமர்ந்து கொள்ள அவன் பக்கத்தில் டேனியல் நண்பனுக்கு கம்பெனி கொடுக்க அமர்ந்து கொண்டான்..
“உன் கம்னி தான் எனக்கு தேவை.” என்று விக்ரம் பேச ..டேனியலோ.. “உனக்கு வேறு வழி இல்ல ராசா என்பது போல் பார்த்து வைத்தான்..
இப்படி வழி பயணம் அமைந்தது என்றால் குலதெய்வம் கோயிலில் முதலில் பொங்கல் இட்டு கொண்டு இருந்த போது தான் கோயிலுக்கு விக்ரமனின் தந்தை பரந்தாமனும் சாத்வீகாவும் அங்கு வந்தது..
சம்மந்தியை முறைப்படி நலம் விசாரித்து உபசரித்தனர் பெண்மணிகள் பத்மினி பாக்யவதி.. அடுத்த தலை முறையினருமான ஜெயா சாதனாவும் மாமா அண்ணி என்று உறவு முறை சொல்லி விசாரித்து குடிக்க கைய்யோடு ப்ளாஸ்க்கில் கொண்டு வந்த பில்டர் காபியை கொண்டு வந்தும் கொடுத்தனர்.
இது எல்லம் பரந்தாமனுக்கு சாத்வீகாவுக்கும் புதுமையாக இருந்தன.. எப்போதும் எந்த விழா இவர்கள் நடத்துவது என்றாலுமே தங்களின் சவுகரியம் மட்டுமே முதன்மையாக பார்ப்பார்கள்..
வெட்ட வெய்யிலில் பொங்கல் வைத்து கொண்டு இருக்கும் போது ஒருவர் மாற்றி ஒருவர் நலம் விசாரிப்பது.. சிறியவர்கள் மரியாதையாக பேசுவது. இத்தனை வேலைகளுக்கும் நடுவில் காபி கொண்டு வந்து கொடுத்ததோடு..’நிறைமாத கர்பிணியான சாத்வீகாவை இது போல் மொட்டை அடித்து காது குத்தும் விழா காரர்களுக்கு ஒரு அறையை ஒதுக்கு கொடுப்பர்.. அதில் உட்கார சொல்லி அந்த அறைக்குள் சாத்வீகாவை அனுப்பியதோடு மட்டும் அல்லாது..
பாக்யவதி.. “சித்து நாம டேபுல் பேன் எடுத்து வந்தோமே அது வேனில இருக்கு.. அது கொண்டாப்பா பாவம் வெயில் தாளல போல வேர்த்து கொட்டுது.”
சாத்வீகாவை காட்டி கூறிய பேச்சுக்கு சித்தர்த் உடனே வேனை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்.
பின் சத்வீகாவிடம். “இது போல நேரத்தில் உடம்புக்கு இதமா துணியை உடுத்தனுமா.. பட்டு எல்லாம் எதுக்கு நம்ம வீட்டு விழா தானே.” என்று சொல்லி விட்டு சென்ற பாக்யவதியை சாத்வீகா தன் தாய் உருவத்தில் கண்டார்.
சித்தார்த்தும் பேனை கொண்டு வந்து சாத்வீகா பக்கத்தில் ஒரு ஸ்டூல் வைத்து அதன் மீது வைத்து விட்டு காற்று சாத்வீகா பக்கம் வீசும் படி செய்து விட்டு அந்த அறையை விட்டு வெளி வந்து விட்டான்..
இதை எல்லாம் பார்த்து கொன்டு இருந்த டேனியல்.. விக்ரமனிடம்.. “ஆனா டா.. இந்த உபசரிப்பு எல்லாம் நீங்க பண்ண விசயம் சித்தார்த் வீட்டிற்க்கு தெரியாத வரை தான்..” என்றவனை குத்தவா வெட்டவா என்று பார்க்க…
ஆனால் விக்ரம் மனைவி அது எல்லாம் பார்க்கவில்லை.. டேனியல் தலை மீது நங் என்று ஒரு குத்து வைத்து விட்டு..
“மூச்சு.. எனக்கு என் அண்ணன் அண்ணி சந்தோஷம் முக்கியம் பார்த்துக்கோங்க..” என்று எச்சரிக்கை செய்து விட்டு சென்றாள்..
கொட்ட பட்ட தன் தலை மீது கை வைத்தவன். “ஆனாலும் இது ஒவர் டா. எந்த நாளும் கார்த்திகை என்று இவங்க ரொம்ப தான் பண்றாங்கடா..” என்று புசு புசு என்று மூச்சு விட்டு கொண்டு பேசினான்..
இப்படி அனைத்தும் நல்ல படியாகவே நடந்தால் அது என்ன விழா. இதோ இது தான் விழா என்பது போல் பொங்கல் வைத்து குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு பின் குழந்தைக்கு மொட்டை அடிக்க தாய் மாமன் சித்தார்த் மடி மீது அமர வைத்து.. பின் அடுத்து அடுத்து குழந்தைகளுக்கும் மொட்டை அடிக்கப்பட.
சாத்வீகாவின் குழந்தைகளும் “நான் நான்.” என்று சொல்லி மொட்டை அடிப்பவரின் முன் தலை குனிந்து காட்டி கொண்டு இருந்தனர்.
பின் பாக்யவதிவும் பத்மினியும் தான். “ அம்மாவுக்கு பாப்பா வர போகுது தானே.. இந்த சமயம் நீங்க மொட்டை அடிக்க கூடாதுடா. பாப்பா பிறக்கட்டும். இதே போல் உங்க வீட்டு பாப்பாவுக்கும் மொட்டை அடிப்பங்கலே. அப்போ நீங்களும் அடித்து கொள்ளலாம் என்ன.?” என்று குழந்தைகளுக்கு தெளிவாக கூறினார்..
டேனியல் தன் மதத்திற்க்காக தான் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று நினைத்து..
“ஆன்ட்டி பரவாயில்லை குழந்தைங்க ஆசைப்படுறாங்க மொட்டை போட்டு கொள்ளட்டும்..” என்று கூற..
பூவிதழ் தான். “அண்ணா அம்மா இது போல இருக்கும் போது அந்த வீட்டு பிள்ளைகளுக்கு மொட்டை போட கூடாது.. அண்ணன் குழந்தைங்கள் பரவாயில்லை. சொந்த அண்ணன் அக்கா எல்லாம் போட கூடாது..” என்று சம்பிரதாயத்தை விளக்க..
பக்கதில் நின்று கொண்டு இருந்த விக்ரம்..
“ம் நூத்து கிழவி சொல்லிட்டா பா..” என்று காலையில் இருந்து தன் அருகில் வராத கோபத்தை இப்படி மட்டம் தட்டி பேசி குறைத்து கொள்ள பார்த்தான்..
ஆனால் பூவிதழோ நான் யாருடைய தங்கச்சி என்பது போல். “ஆமா ஆமா நூத்து கிழவி தான். அதனால இந்த கிழவி பக்கத்தில் எப்போதும் வந்து விடாதிங்க..” என்று சொல்லி விட்டு சென்றவள் பின்
“பூவம்மா பூவம்மா என்று கெஞ்சி கொண்டு சென்றான். இதையும் பரந்தாமன் பார்த்து கொண்டு தான் இருந்தார்.
தன் மகன் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்தாலுமே அவன் முகத்தில் எப்போதும் இல்லாத அந்த மகிழ்ச்சியையும் தான்..
மொட்டை அடித்த பின் தட்டான் வந்து காது குத்த கம்பல் கேட்க சித்தார்த் டப்ஸ் போல் இருந்த கம்பளை எடுத்து கொடுத்தான்..
பிறந்ததில் இருந்து வரும் ஒரு சில செயல்கள் கூடவே வரும் என்பது போல் அதை வாங்கி பார்த்த விக்ரம்..
“டைமண்ட் இல்லையா.?” என்று கேட்டான்.
தன் மகளுக்கு அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவன் எண்ணம்..