சித்தார்த் முறைத்து கொண்டு. “ஒரு சிலருக்கு டைமண்ட் ஒத்து கொள்ளாது..” என்று முறைத்து கொண்டு..சொல்ல. திரும்பவும் விக்ரம் ஏதோ சொல்ல வரும் போது பூவிதழ் பார்த்த அந்த பார்வையில் அமைதியாகி விட்டான்..
பின் காது குத்து கடா விருந்து என்று அனைத்தும் சிறப்பாக செய்து முடித்து விட்டனர்.. இது எல்லாம் பரந்தாமன் சாத்வீகா அவளின் குழந்தைகளுக்கும் கூட புதுமையாக இருந்தனர்..
இவர்களுக்கு இது தான் குலதெய்வம். ஆனால் இது போல் ஒரு விழா போல் எல்லாம் செய்யவில்லை.. வீட்டவர்கள் மட்டும் வந்து தான் அருண் ஸ்வரனுக்கு செய்தது.. ஏன் விக்ரம் சாத்வீகாவுக்கு கூட அப்படி தான்..
பிறந்த நாள் தான் ஒரு பெரிய ஒட்டலில் பார்ட்டி போல் வைத்து அமர்க்களம் படுத்தி விடுவர்.. இது அனைத்தும் புதுமையே பிடித்தும் இருந்தது.
பரந்தாமனின் அன்றைய பார்வை அடிக்கடி சித்தார்த்திடமே சென்று வந்தது.. வீட்டவர்களை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்ட பாங்கு.. அம்மா சித்தி மனைவி தன் குடும்பத்தார் மீது அவன் காட்டும் அக்கறை என்று அவனையே பார்த்து கொண்டு இருக்க..
சாத்வீகா தான் ஒரு நிலைக்கு மேல்.. “டாட் என்ன டாட் அங்கேயே பார்த்துட்டு இருக்கிங்க…?” என்று எச்சரிக்கை செய்வது போல் கேட்டாள்..
“இல்ல சாது உனக்கு கிடைத்து இருக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை நான் கெடுத்து விட்டேனோ..” என்றதில் தந்தையை முறைத்த சாத்வீகா.
“டேனியலுக்கு என்னப்பா குறச்சல்..?” என்று கணவனுக்காக பேச. மனைவி ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாளே.. என்ன ஏது என்று கேட்போம் என்று நினைத்து அவர்களின் பின் பக்கமாக வந்த டேனியலின் காதில் பரந்தாமன் பேசுவதும் விழுந்தது.. அதற்க்கு தன் மனைவி கேட்டதுமே விழுந்தது..
மலர்ந்த சிரிப்பு ஒன்றை முகத்தில் வந்து ஒட்டி கொள்ள அந்த முகபாவனை மாற்றது மீண்டும் விக்ரம் பக்கத்தில் சென்று அமர்ந்தவனிடம்..
“என்ன டேனி முகம் பளிச் என்று இருக்கு.. சாது எதுவும் கூட கொடுத்து இருக்க மாட்டாளே.” என்று கிண்டலும் கேட்டவனிடம்..
“ஏன் கொடுக்கல. நான் போதும் போதும் என்ற அளவுக்கு கொடுத்து இருக்காடா என் டால்.” என்றான்..
டேனியல் மனைவி மீது ஒவர் லல் வந்து விட்டால் இப்படி தான் டால் என்பான்..
“பப்ளீக் ப்ளேசில்..என் டாட் பக்கத்தில் இருக்க நோ நான் நம்ப மாட்டேன்..” என்றவனிடம்..
தான் கேட்டதை கூறினான்.
“சொல் தோஸ்த்.. ஒரு கணவனுக்கு இதோட ஒரு பெருமை என்ன டா வேண்டும்..” என்ற நண்பனின் நெகிழ்ந்த பேச்சில்..
“நீ அதுக்கு வெர்த் தான் தோஸ்த்.” என்று அவன் தோள் தட்டி சொல்லும் போது டேனியலின் பார்வை சித்தார்த்திடம் இருந்தன.
சித்தார்த்தை பார்த்து கொண்டே.. “எனக்கு இவர் மேல லேசா பொறாமை எப்போவும் இருந்துட்ட இருக்கு தோஸ்த்.. காரணம் சாத்வீகாவா கூட இருக்கலாம்.. எந்த பாயிண்ட்டாப் யூல என்னோட இவர் மேல் என்று அவள் நினைத்து விடுவாளோ என்று..” விக்ரமனின் பார்வையில்..
“தப்பு தான் தோஸ்த்.. தப்பு தான்.. ஆனா நீ என் நிலையில் இருந்து யோசித்தால் புரியும்..” என்பவனை அணைத்து கொண்டான் விக்ரம்..
இதை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு இருந்த சித்தார்த் தன் மனைவியிடம்.. “இவன் சிஸ்டரை தன் தோஸ்த்துக்கு கட்டி கொடுத்து இருக்கானா..? இல்ல இவனே கட்டி கொண்டு இருக்கானா…?” என்ற கேட்க.
இப்படி அந்த விழா அனைத்து சம்மந்திகள் அதாவது ஜெயா மாமியார் வீடு.. சாதனா மாமியார் வீடு ஏன் ப்ரீத்தி அம்மா அப்பா அக்காக்களும் வந்து அந்த விழாவை ரசனையாக மாற்றி விட்டனர்.. ப்ரீத்தி பெற்றோர் சேர்ந்ததும் ஒரு கதை தான்.. ப்ரீத்தியின் தந்தை சீனிவாசனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.
உடனே பைபாஸ் செய்து ஆக வேண்டும் என்றும் விட்டனர். மற்ற இரு மாப்பிள்ளைகளும் வாங்க தானே பார்ப்பார்கள்.. அதனால் ஆப்பிள் சாத்துகொடி என்று வாங்கி கொடுத்து .
“உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க என்று மட்டும்..” சொல்லி விட்டு சென்று விட்டனர்..
சித்தார்த் கூட பணம் இருக்கும் என்று தான் நினைத்தான். அது தான் ப்ரீத்திக்கு நான் தானே கல்யாண செலவு செய்தது.. அந்த பணம் அவர்கள் பெயரில் வங்கியில் போட்டு வைக்க தானே சொன்னோம் என்று நினைத்து தான் மருத்துவமனை சென்ற போது எப்போது சர்ஜரி செய்ய சொல்லி இருக்கிறார்கள் என்று விசாரித்து மனைவியை தாய்க்கு துணையாக இருக்க சொன்னவர்..
மனைவியிடம்.. “சர்ஜரி செய்யும் போது சொல் ஆம்பிளை துணை வேண்டும்.. இப்போ என்னால் வேலைக்கு லீவ் போட முடியாது.. மந்த் என்டிங்க.” என்று விட்டான்..
சர்ஜரி செய்யும் போது அழைப்பார்கள் என்று மூன்று நாள் பொறுத்து பார்த்த சித்தார்த் ஏதோ ஒரு சந்தேகத்தில் பேசியில் மாமியார் ப்ரியாவை அழைத்து விட்டான்.
“ஏன் சர்ஜரி செய்யவில்லை.?” என்ற மருமகனின் நேரிடையான கேள்விக்கு திக்கி திணறி..
“பணத்துக்கு ஏற்பாடு செய்துட்டு இருக்கேன் பா..” இதை சொல்லும் போதே ப்ரியா கூசி தான் போய் விட்டார்.
“ப்ரீத்தி மேரஜுக்கு உண்டான பணம் இருக்கும் என்று நினைத்து விட்டேன் சாரி.. இதோ நான் அங்கு வந்து விடுகிறேன்..” என்று சொன்னதோடு சித்தார்த் உடனே மருத்துவமனைக்கு சென்றதோடு மட்டும் அல்லாது சர்ஜரிக்கு தேவையான பணத்தையும் கையோடு கட்டி கூட இருந்து சர்ஜரி முடிந்த பின் தான் மீண்டும் மனைவியை மாமியாருக்கு துணையாக மருத்துவமனையிலேயே விட்டு அவன் மட்டுமே வீடு திரும்பினான்..
அதோடு மாமனார் வீடு வந்து சேரும் வரை அனைத்தையுமே அருகில் இருந்து செய்து முடித்து விட்டு தன் மனைவியை தன் வீட்டிற்க்கு அழைத்து செல்லும் அன்று தான் ப்ரியா மாப்பிள்ளையை கையை கெட்டியாக பிடித்து கொண்டார்..
“மன்னிச்சிக்கோங்க தம்பி புத்தி கெட்டு போய் என்ன என்னவோ பேசிட்டேன்.. எங்க கிட்ட இருந்த பணம் மூத்த மாப்பிள்ளை ஏதோ தொழில் ஆரம்பிக்க போகிறார் என்று கேட்டார்.. திருப்பி கொடுத்துடுவேன் என்று தான் வாங்கிட்டு போனார்.. ஆனா இப்போ அவருக்கு சிகிச்சைக்கு கேட்ட போது தொழில்ல போட்டுட்டேன் இப்போ திடிர் என்று கேட்டா என்ன செய்வது என்று கையை விரிச்சிட்டார் மாப்பிள்ளை.’அவர் அப்போவே சொன்னார்.. சின்ன மாப்பிள்ளை அவங்க வீட்டிற்க்கு மட்டும் இல்ல நமக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் முன்ன நிற்பார் என்று நான் தான் தெரியாது செய்து விட்டேன்.” என்று சித்தார்த் தன் குடும்பம் மாமியார் குடும்பம் என்று பிரித்து பார்க்காது செய்ததினால் ஒன்றாக ஆகி விட இப்படி சித்தார்த் குடும்ப எந்த நாளும் கார்த்திகை என்பது போல் தான் தினம் தினம் கொண்டாடினர்..
இதோ இன்று இந்த விழா முடிந்தது தானே.. யாரும் அவர் அவர் வீட்டிற்க்கு செல்ல மாட்டார்கள்.. அனைவரும் சித்தார்த் வீட்டில் தான் அன்று இரவும் இருப்பர். நேற்றைய இரவு நாளை விழா என்று வேலை பார்த்து கொண்டு இருப்பார்.. அசல் கொண்டாட்டம் என்பது இன்றைய இரவு தான்..
டேனியலுக்கும் இது தெரியும் என்பதினால் சித்தார்த்.. “குழந்தைகளுக்கு லீவு தானே டேனியல். வீட்டிற்க்கு வாங்கல நாளை போகலாம்..” என்று அழைத்தது தான் உடனே.
“ சரி.” என்று ஒத்து கொண்டான் .
இதோ இரவு வந்து விட்டது. விக்ரம் இங்கு வந்து தான் நிலா சோறு என்பதே தெரியும்.. விக்ரமுக்கும் இது பிடித்து இருந்தது தான்.. இருந்தும் இன்று அவன் மனைவி ரொம்ப அழகா வேறு இருந்து தொலைக்கிறா..
அதோடு இப்போது எல்லாம் இரவு குழந்தை சரியான நேரத்தில் விழித்து கொண்டு அழுக.. மனைவியை முழுவதும் ஆட்கொள்ள முடியாது போகின்றன. இன்று போய் வந்ததில் குழந்தை அசந்து தூங்கும்.. இன்று நமக்கு கொண்டாட்டம் என்று நினைத்து இருக்க..
இங்கு எது அதுக்கு வழி.. குடும்பமா கொண்டாடலாம் என்று எப்போதும் போல் பூவிதழ் விக்ரமை மொட்டை மாடிக்கு அழைத்து வந்து விட்டாள்..
தனக்கு முன் டேனியல் அங்கு இருக்க பார்த்து பல்லை கடித்து கொண்டே அமர முதலில் கூட்டா சோறு போல் உணவு முடிந்த பின் ஆள் ஆளுக்கு பிடித்த பாடல் என்று முதலில் பாடல் சாதாரணமாக ஆரம்பித்தது..
நேரம் சென்றதில் குழந்தைகள் தூங்கி விட அடுத்து என்ன.? தன் இணை பக்கத்தில் இருக்க பக்கத்தில் என்றால் நெருக்கமாக எல்லாம் கிடையாது சிறிது இடை வெளி விட்டு தான் எப்போதும் பெரியவர்கள் முன் ஜோடிகள் அமர்வர்.. ஜெயா தன் கணவனை பார்த்து வெட்கத்துடன்.
“அன்று ஊமை பெண்ணலோ இன்று பேசும் பெண்ணலோ.” என்று பாட. அடுத்து சாதனா…
“பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன்.” என்று அவள் தன் கணவனை பார்த்து பாடியதில் பெரியவர்கள் நாசுக்காக குழந்தைகள் தூங்கட்டும் நாங்க தூக்கி கொண்டு போகிறோம் என்று கீழே சென்று விட்டனர்.. அடுத்து என்ன தொட வில்லை.. முத்தம் இடவில்லை.. ஆனால் தங்கள் பார்வையாலேயே மனைவிமார்களை வெட்கம் அடைய வைக்கும் வித்தையை அந்த கணவன்மார்கள் கற்று வைத்து இருந்தனர்.. டேனியல் தான்..
“நான் குழந்தைகளை உன் அப்பா கிட்ட விட்டுட்டு உன் அக்காளை கூட்டிட்டு வந்து இருக்கனும் மச்சான்.” என்று புலம்பி கொண்டு இருக்க. அந்த பேச்சு எங்கு விக்ரம் காதலில் விழுந்தது.
அவன் காதில் விழுந்தது எல்லாம் அவன் பூவம்மா அவனை பார்த்து பாடி கொண்டு இருந்த.
அன்று காதல் பண்ணியது..
உந்தன் கன்னம் கிள்ளயது..
அடி இப்போதும் நிறம் மாறது என் நெஞ்சில் நிற்கிறது.என்ற அந்த பாடல் வரிகள் மட்டுமே.
அனைவரின் காதலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை…
சில காதல் காவியம் ஆகலாம்.. சில காதல் வீழ்ந்து கூட போகலாம்.. ஏன் ஒரு சிலருக்கு முதல் காதல் தோல்வியை தழுவி அடுத்த காதல் வெற்றி அடைந்து இருப்பர்.. ஆனாலும் அனைத்துமே காதல் தான். இதில் விக்ரம் பூவிதழ். காதல்..
சித்தார்த்.. ப்ரீத்தி காதல்..’ஏன் டேனியல் சாத்வீகா காதல் ஒன்றுக்கு ஒன்று குறைந்தது கிடையாது.. அனைவருமே அன்று காதல் பண்ணி இருப்பார்கள்.