அத்தியாயம் – 9
வீரசிம்மன் “இனிமேல் இங்கு நாங்கள் வைத்தது தான் சட்டம்” என்று கூறிக்கொண்டே ராஜமாதாவின் அருகில் சென்று அவரைத் தள்ளிவிட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தான். ராஜராஜன் ராஜமாதாவை தாங்கிப் பிடித்து விட்டார்.அங்கிருந்த அனைவருக்கும் வீரசிம்மனின் செயல் கோவத்தையும் ஆத்திரத்தையும் கிளப்பியது.
ஜான்சி ராணி கோபத்துடன் ஏதோ கூற வர “வாய மூடு ஜான்சி இனிமேல் உன்னோட அதிகாரம் இங்க செல்லுபடி ஆகாது, என் பையன் மகேந்திரசிம்மன் தான் இனிமேல் இங்கே எல்லாம், அவனோட கையில தான் உங்க வருங்கால ராணியோட வாழ்க்கையே இருக்கு” என்று கூறி ஏளனமாக சிரித்தார் வீரசிம்மன்.
அப்பொழுது சரியாக மேலே இருந்து பூஜாடி ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. அந்த சத்தத்தில் அனைவரும் மேலே பார்க்க, இந்த முறை அதிர்வது வீரசிம்மன் முறையானது. ஆம் மேலே மாடியில் தலையில் ரத்தம் வலிய அரை மயக்கத்தில் நின்று கொண்டிருந்தான் மகேந்திரசிம்மன்.
“அப்பா நான் இங்க இருக்கேன், என்ன ஒருத்தன் அடிச்சு ரூம்ல அடைச்சி வச்சுட்டு மாப்பிள்ளை டிரஸ் அவன் போட்டு போயிட்டான்” என்றான் அரை மயக்கத்தில் மகேந்திரசிம்மன்.
அவனின் பேச்சை கேட்ட அடுத்த நொடி காவலர்கள் அனைவரும் வீரசிம்மன் மற்றும் மகேந்திரசிமனை சுற்றி வளைத்திருந்தனர். மக்கள் அனைவருக்கும் இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.
மணவறையை நோக்கி விரைந்து சென்ற ஜான்சி ராணி மாப்பிள்ளையின் கழுத்தில் தன்னுடைய வாலை வைத்து அழுத்தி “யார் நீ” என்று கேட்க. மாப்பிள்ளை தன் முகத்தில் இருந்த முகத்திரையை விளக்கினான்.
மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் மித்ரா மயங்கி சரிய அவளை சகுந்தலா தாங்கிக் கொண்டார். மித்ராவின் நிலையைக் கண்டு கோபமடைந்த ஜான்சி மாப்பிள்ளை தாக்க சென்றார். வெங்கடேசனோ அதிர்ச்சியில் “ஜானுமா என் பையன் விக்ரமா எதுவும் செஞ்சுறாதீங்க” என்று கத்த ஜானகி குழப்பத்துடன் வெங்கடேசனை பார்த்தார். அவரோ மவுனமாக தலையை மட்டும் அசைத்தார்.விக்ரமோ இவர் தான் தன் தந்தையா என்று அதிர்ச்சியாக இருந்தான்.
ஆமாம் வெங்கடேசனின் முன்னால் மனைவி தான் வாசுகி, இவர்களுக்கு பிறந்தவன் தன் விக்ரம். விக்ரம் இதுவரை தனது தந்தையை பார்த்ததே கிடையாது. அவரைப் பற்றிய எந்த தகவலையும் வாசுகி விக்ரமுக்கு கூறியது கிடையாது. விக்ரம் அறிந்தது அனைத்தும், தனது தாயுடன் வாழ பிடிக்காமல் தந்தை வேறொரு பெண்ணை மணந்து கொண்டு சென்று விட்டார் என்பது மட்டுமே.(வெங்கடேசனோட பிளாஷ்பேக் அப்பறம் சொல்லுறேன் )
விக்ரம் யார் என்று அறியாததால் அங்கிருந்த மக்கள் அனைவரும் குழப்பத்துடன் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டனர். அங்கு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. ஜான்சி அனைவரையும் அமைதியாக இருக்க கூறிவிட்டு.”நீ எப்படி இங்க வந்த, எதுக்காக மித்ரா கழுத்துல தாலி கட்டின” என்று கேட்டார்.
“நானும் மித்ராவும் காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணோம் இடையில எங்களுக்கு நடுவுல பிரச்சனை வந்து பிரிஞ்சிட்டோம், மித்ரா டோக்கியாக்கு போய்ட்டா நானும் என் தொழில பாக்க ஆரம்பிச்சிட்டேன்,மித்ராவிட்டு பிரிஞ்சி அஞ்சு வருஷம் ஆகியும் என்னால அவளை மறக்க முடியல. ரியானா ஓட கல்யாணத்துல மித்ரா பார்த்ததும் இனிமேல் அவளை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு முடிவு பண்ணி எப்படியாவது அவகிட்ட பேசி சமாதான படுத்தி அவளை கல்யாணம் பண்ணிக்கனுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், அதுக்குள்ள அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டீங்க”.
“இங்க வந்து மித்ரா கிட்ட பேசி இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணலாம்னு தான் நான் வந்தேன். என்னால மித்ராவை தனியா மீட் பண்ணி பேச வாய்ப்பு கிடைக்கல. இன்னைக்கு காலைல மித்ராவ பார்க்க அவ ரூமுக்கு போயிட்டு இருந்தேன், அப்போ மாப்பிள்ளை ரூம கிராஸ் பண்ணும் போது தான் இவன் மாப்பிள்ளைய கடத்திட்டதா யார்கிட்டயோ போன்ல சொல்லிகிட்டு இருந்தான், மித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளையும் இந்த ஊர் மக்களையும் எப்படி எல்லாம் கொடுமை படுத்த போறான்னு போன்ல சொல்லிக்கிட்டு இருந்தான்”
“மித்ராவை எப்படியாவது இவங்கிட்ட இருந்து காப்பாத்தணும் நினைச்சு தான், நான் மாப்பிள்ளையா வந்து மித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், நான் பண்ணது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க” என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டான். இடையில் ரியானா ஏதோ கூற வர விக்ரம் தலையை அசைத்து அவளை பேசவிடாமல் செய்து விட்டான். இதனை ஸ்ரேயா பார்த்து விட்டாள்.
“நீ இங்க வந்தா உன்ன விட கூடாதுன்னு காவலர் கிட்ட சொல்லி இருந்தேனே அதையும் மீறி நீ எப்படி உள்ள வந்த” என்றான் வினித் கோவமாக.
“நான் பொண்ணு மாதிரி வேஷம் போட்டு உள்ள வந்தேன்” என்றான் ரிங்குவை பார்த்துக் கொண்டே.
மித்ரா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தால்.
ஜான்சி ராணி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வர அரசவையை கூட்டுமாறு கூறினார். அரசவை கூடியாதும் முதலில் இந்த நாட்டில் உள்ள அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக வீரசிம்மனின் கைகள் இரண்டையும் வெட்டி சிறையில் அடைக்குமாறு தண்டனை வழங்கினார் ஜான்சி ராணி. மகேந்திரசிம்மன் மாப்பிள்ளையை கடத்தி சென்று ஆள்மாறாட்டம் செய்ததால் அவனுக்கு பத்து ஆண்டுகள் பாதாள சிறையில் அடைக்குமாறு தண்டனை வழங்கினார்.
“இறுதியாக மித்ராவின் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதால் விக்ரமிற்கு” என்று கூறிக் கொண்டிருக்கும் போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் முன்வந்து “ராணி அவர்களே விக்ரம் மட்டும் மகேந்திரசிம்மனை தடுத்து இளவரசியை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இப்பொழுது இளவரசியும் இந்நாட்டு மக்களும் அவர்களுக்கு அடிமையாக இருந்திருக்க வேண்டும், விக்ரம் செய்தது தப்பாக இருந்தாலும் அதில் இந்நாட்டிற்கு நன்மையை மட்டுமே நடந்துள்ளது அதனால் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கக்கூடாது என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூற மக்கள் அனைவரும் அதை ஆமோதித்து குரல் கொடுத்தனர்.
மக்களின் விருப்பத்தை அறிந்த ஜான்சி “விக்ரமின் செயலால் நன்மை நடந்திருந்தாலும், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது தவறு எனவே விக்ரம் மூன்று நாட்கள் உணவு உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானுக்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறேன்” என்றார் ராஜமாதாவும் மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
பின் சபை கலைந்து மக்கள் அனைவரும் சென்று விட ராஜமாதா ஜான்சி இருவரும் மித்ராவிடம் பேச தனியாக அழைத்து சென்றனர். ஸ்ரேயா ரிங்குவை தனியா இழுத்து சென்று “விக்ரம் எப்படி இங்க வந்தான் சொல்லு ரிங்கு,நீ தான அவன் இங்க வர ஹெல்ப் பண்ண உண்மைய சொல்லு” என்று கோவமாக கத்த.
“ஆமா நான் தான் விக்ரம சென்னைக்கு போய் கூட்டிட்டு வந்தேன், பொண்ணு மாதிரி வேஷம் போட வச்சி சிஸ்டர்ஸ் கூட கூட்டிடு வந்தேன்”
“ஏன் டி இப்படி பண்ண, மித்ரா பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா, மித்ராவ விட உனக்கு விக்ரம் முக்கியமா போய்ட்டானா”
“ஸ்ரேயா நான் பண்ணயெல்லாம் மித்ராக்காக மட்டும் தான் அவளோட சந்தோசத்துக்காக தான் ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா”
“மித்ராகாகவா ரிங்கு ஒழுங்க புரியுற மாதிரி சொல்லு”
“நம்ம எல்லாரும் மித்ரா விக்ரம மறந்துட்டானு தான நெனச்சோம், அவ இன்னும் விக்ரம மறக்கல ஸ்ரேயா,சங்கீத்ல விக்ரம் ஓட போட்டோ ஸ்கிரீன்ல பார்த்ததும் மித்ரா முகம் ஒரு மாதிரி மாறிருச்சு நான் உடனே மித்ரா பக்கத்துல போனேன் அவ ஏன் கைய பிடிச்சி அழுதுனா அப்போ அவ கண்ணு கலங்கி இருந்தது. நான் உடனே மித்ராவஆண்ட்டி கூப்புடுறாங்கன்னு சொல்லி ரூம்க்கு கூட்டிடு வந்துட்டேன்”
“ரூமுக்கு வந்ததும் மித்ரா தலைய புடிச்சுகிட்டு பயங்கரமா கத்தி அழ ஆரம்பிச்சுட்டா, ஏன் மித்ரா இப்படி அழுகிறேனு கேட்டதற்கு என்னால் அவனை மறக்க முடியல ரிங்குனு சொல்லி அழுகுறாடி”
“அவன் ஏன் டி அப்படி பேசுனா, அன்னைக்கு மட்டும் அப்படி நடந்துக்காம இருந்திருந்தா இந்நேரம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி குழந்தைகளோட சந்தோஷமா இருந்திருப்போம் எல்லாமே போச்சே அவனால, அவன் போகும்போது என் நிம்மதி சந்தோஷம் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டானே”
“பேபி ப்ளீஸ் அழாதடா நான் வேணா விக்ரம் கிட்ட போய் பேசி அவனை இங்க கூட்டிட்டு வரவா”
“வேண்டாம் ரிங்கு எனக்கு அவனைப் பார்த்தாலே கோவம் கோவமா வருது அவன் பேசின அந்த வார்த்தைகள் தான் எனக்கு ஞாபகம் வருது”
” லூசா மித்ரா நீ, ஒரு பக்கம் என்னன்னா அவன மறக்க முடியலன்னு அழுகுற, சரியா அவன கூட்டிட்டு வரேன்னு சொன்னா உன்ன பார்த்தாலே கோவம் கோவமா வருதுன்னு சொல்ற உன்ன என்னால புரிஞ்சுக்கவே முடியல மித்ரா”
“என்னாலேயே என்னை புரிஞ்சுக்க முடியலடி,என்னால் அவனை மறந்துட்டு லீமீங்குவ கல்யாணம் பண்ணிக்கவும் முடியல, அவன மன்னிச்சு ஏத்துக்கவும் முடியல பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருக்கு செத்துப் போயிடலாம் போல இருக்குடி”
“ஏண்டா இப்படி எல்லாம் பேசுற”
“நானா பேசல ரிங்கு அவன் என்ன பேச வைக்கிறான்” நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போதே ஜான்சி ஆண்ட்டி வந்துட்டாங்க, மித்ரா ரெஸ்ட் ரூம்குள்ள போய்டா” ரியா மித்ரா எங்க இருக்கா ஆளையே காணோம்” என்றார் ஜான்சி
“மித்ரா ரெஸ்ட்ரூம் போனுன்னு சொன்ன ஆன்ட்டி அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றால் ரிங்கு
“ரொம்ப நேரம் இங்க இருக்காமா அங்க போங்க எல்லாரும் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்காங்க, மித்ராவை தனியா விடாத அவ கூடவே இருமா” என்றார் ஜான்சி
“மித்ரா ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வெளியே வந்ததும், நான் அவளை கூட்டிட்டு அங்க வந்தேன், வந்ததும் லீமிங்கு கூட சேர்ந்து டான்ஸ் ஆட சொன்னிங்க அவளும் அவன்கூட சேர்ந்து அவளோ லவ் ஓட ஆடுன, ஆன அங்க நடந்தது என்னனா மித்ரா ஆடும் போது லீமிங்கு அவ கண்ணுக்கு விக்ரமா தெரிஞ்சிருக்கான், அவ விக்ரம் கூட ஆடறதா நினைச்சு தான் அவ்வளவு சந்தோஷமா ஆடுன”
“அது எப்படி உனக்கு தெரியும் ரிங்கு” என்றாள் ஸ்ரேயா
“அன்னைக்கு நைட் மித்து தான் என்கிட்ட சொன்ன, வாழ்க்கை முழுக்க லீமிங்குவ விக்ரமா நெனச்சியே வாழ போறேன் போல, இந்த விஷயம் லீமிங்கு தெரிஞ்ச எவ்வளவு வருத்தப்படுவான், என்ன நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு ரிங்கு”
“இந்த பிரச்சினைல இருந்து எப்படி வெளியே வரணும்னு தெரியல, கல்யாண நாள் நெருங்க நெருங்க ஏதோ முள்ளு மேல நிக்கிற மாதிரி கஷ்டமா இருக்கு டி” என்றாள் மித்ரா.
“அப்புறம் ஆறுதல் சொல்லி தூங்க வச்சுட்டு விடிய காலைலயே ரகுவ கூட்டிகிட்டு சென்னை போனேன், அங்க விக்ரமும் மித்ராவ நினைச்சு தான் குடிச்சுக்கிட்டு இருந்தான், அவன்கிட்ட போயி மித்ராவோட நிலைமைய சொல்லி விக்ரமா வந்து மித்ரா கிட்ட பேச சொல்லி நான் தான் கூட்டிட்டு வந்தேன்”
“மித்ரா விக்ரம் ரெண்டு பேருனாலயுமே ஒருத்தரை விட்டு ஒருத்தரால இருக்க முடியல, மித்ராக்கு விக்ரம் மேல இருக்குறது கோபம் மட்டும் தான், அதுவும் விக்ரம் பேசினா போகுறதுக்கு வாய்ப்பு இருக்குனு தான் நினைச்சேன்”
“விக்ரம் மித்ரா கிட்ட பேசி இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணுவான் என்று தான் நினைச்சேன் ஆனா இப்படி மாப்பிள்ளையா மாறி மித்ரா கழுத்துல தாலி கட்டுவான் நானுமே எதிர்பார்க்கல” என்று நடந்த அத்தனையும் கூறி முடித்தாள் ரிங்கு.
“என்கிட்ட முதல்லயே சொல்லியிருக்கலாமே ரிங்கு, மித்து அவன மறந்துட்டான் நினைச்சு தான் விக்ரம் அவளை பார்க்க வந்தப்ப கூட நான் பார்க்க விடாமல் தடுத்திட்டேன், எனக்கு மித்துவோட சந்தோஷம் மட்டும்தான் ரிங்கு முக்கியம், அவ விக்ரம் கூட சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும்” என்றாள் கண்களில் கண்ணீர் வடிய.
ராஜமாதா மித்ராவிடம் “பிரின்சஸ் அடுத்து நீ என்ன பண்ண போற உன் மைண்ட்ல என்னதான் நெனச்சிட்டு இருக்க” மித்ரா விக்ரமை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர் இவ்வாறு கேட்டார்.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல கிராணி, என்னால அவன மன்னிக்கவும் முடியாது, அவன ஏத்துக்கவும் முடியாது”
“மித்ரா இப்படியெல்லாம் பேசாத, அவன்தான் அவன் தப்பா உணர்ந்து திரும்ப வந்து இருக்கானே, கொஞ்சம் யோசிச்சு பாரு உன் வராமல் போயிருந்தா அந்த மகேந்திரசிம்மன் உன் கழுத்துல தாலி கட்டி இருப்பான், அப்ப நீ என்ன பண்ணி இருப்ப, அவனை ஏத்துக்கிட்டு அவனுக்கு அடிமையா உன் கூட வாழ்ந்து இருப்பியா”
மித்ரா கண்ணீர் மல்க “அவன் கூட வாழறதுக்கு சாகுறதே மேல்னு நெனச்சு அவனையும் கொன்னுட்டு நானும் செத்துப் போயிருப்பேன்”
“மித்ரா என்ன வார்த்தை பேசுற நீ, நீ செத்துப்போறதுக்கா இவ்ளோ அருமை பெருமையா உன்னை வளர்த்தோம் இன்னொரு தடவை நீ இப்படி பேசினா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றார் ராஜமாதா.
“வேற என்னதான் கிராணி என்ன பண்ண சொல்றீங்க, என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கு புரியல, என்னால எத பத்தியும் யோசிக்க முடியல எந்த முடிவும் எடுக்க முடியல”
“மித்ரா உன்னால முடிவெடுக்க முடியல அப்போ நான் சொல்ற படி நீ கேக்குறியா”
“ம்ம்”
“அப்ப விக்ரம ஏத்துகிட்டு அவன் கூட வாழுற வழிய பாரு, அவன விட்டு எப்பவும் நீ பிரிய கூடாது இது தான் இந்த கிராணி ஓட அன்பான வேண்டுகோள் ப்ளீஸ் பிரின்சஸ்”
“கிராணி ப்ளீஸ் எல்லாம் சொல்லாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, உங்களுக்காக உங்களுக்காக மட்டுமே நான் அவன ஏத்துக்குறேன்” என்றாள் மித்ரா, கிராணி மகிழ்ச்சியுடன் மித்ராவை கட்டி அனைத்துக் கொண்டார்.