முப்பத்து ஏழாவது முறையாக அவன் அடித்ததை விளக்கிய அலர் தயக்கத்துடன் ‘மாமா‘ என்று அழைக்க..,
‘இப்ப வந்த கனவுக்கு திட்ட மாட்டேனா.., இதை மட்டும் ஏன் சொல்ற..??‘
விழிகளில் கலக்கத்துடன் அவனை எறிட்டவள் “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? இதுவரை வந்த கனவுல என்னை அடிக்க மட்டும் தான் செஞ்சீங்கஆனா இன்னிக்கு என்னை அடிச்சது மட்டும் இல்லாம என்னை அப்பா வீட்டுலே விட்டுட்டு போயிட்டிங்க ..?’ என்றவளின் குரல் வெகுவாக உடைந்திருந்தது.
“ஏன்டா உன்மாமனார் சைட் அடிச்சா அதை அங்கேயே விட்டுட்டு வரவேண்டியது தானே…. இவளை பத்தி நல்லா தெரிஞ்சும் ஏன்டா இவகிட்ட சொன்ன.. இந்தா இப்போ ஆரம்பிச்சுட்டா ” என்று மனதினுள் தன்னையே கடிந்து கொண்டவன்..,
“ஆனா கனவுல என் நெத்தில ரத்தம் வர்றதைகூட கண்டுக்காம அவ்ளோ கோவமா போன மாமா, எனக்குதானே உன் கோபத்தை பத்தி தெரியும் நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா..??” என்று நீங்காத அச்சத்தோடு மீண்டும் அவனை கட்டிக்கொள்ள…,
“அமுலு ஏதாவது நடக்குற விஷயத்தை பேசுடி… என்று அலுத்துக்கொண்டவன் சரி முதல்ல நீ என்ன கனவு கண்ட அதை சொல்லு” என்றான்.
சில நிமிடங்கள் செலவழித்து தான் கண்ட கனவை அவனுக்கு விவரிக்க..,
“அடியேய் எதாவது லாஜிக்கோட கனவு காணுடி… உங்கப்பா எதோ பேசினதுக்கு அவரை ஒன்னும் சொல்லாம உன்னை அடிச்சேன்னு சொல்றியே இதுலேயே உன் கனவோட லட்சணம் தெரியுது..” என்று சீறியவன்அவளிடம் இருந்து தன்கையை பிரித்துகொண்டு,
“இதுல நான் விட்டுட்டு வேற போனேனாம்..” என்றவனின் குரலில் அனல் தெறித்தது.
“அடிங்ங்க, நானாடி விட்டுட்டு போனேன்.. நீதானே உங்கப்பாக்கு புரியவைக்க முடியாதுன்னு கேட்ட அதனால தானே” என்று பல்லை கடித்தவன்..,
“இதோ பாரு எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கு இதே மாதிரி உளறிட்டு இருக்காம அமைதியா படுத்து தூங்கு” என்று அவன் படுக்கையில் இருந்து கீழிறங்க..,
பதறிக்கொண்டு அவன் கையை பிடித்தவள் “இப்போகூட விட்டுட்டு போறிங்களே மாமா..” என்று இறங்கிய குரலில் விழிகளில் விழவா என்றிருந்த நீரோடு அவள்..!!
“ப்ச் அமுலு ஏன்டி இப்படி படுத்துற…, வேலை இருக்கு அதான் போறேன் அதை கூட புரிஞ்சிக்கமாட்டியா..?? அவிரனைவிட உன்னை சமாளிக்கிறது தான் எனக்கு பெரும்பாடா இருக்கு” என்றவன் அவள் அருகே அமர்ந்து,
“உன்னை விட்டுட்டு போகவா அவ்ளோ போராடி கல்யாணம் பண்ணி இருக்கேன். அன்னைக்கு மாமி சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிடதால நம்ம காதல் ஜெயிச்சிடுச்சுன்னு அர்த்தம் இல்லை காலம் முழுக்க வாழுற விதத்துல இருக்கு.. ஸோ யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை விட்டுட்டு போகமாட்டேன் புரியுதா..?” என்று அவளை அணைத்து கொண்டவன்,
“முதல்ல உனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது? எனக்கு தெரிஞ்சு நீ ரொம்ப அதிகமா யோசிக்கிறடி அதான்.., பட்டு எதையும் லைட்டா எடுத்துக்கோ” என்றிட,
“எது அடுத்தவ என் புருஷனை பார்க்கிறதை நான் லைட்டா எடுத்துக்கணுமா..??” என்று கண்களை உருட்டிக்கொண்டு கேட்டவள்,
“அதெல்லாம் எனக்கு தெரியாது என்னை தவிர உங்களை யாரும் பார்க்ககூடாது அவ்ளோதான்! அப்படி பார்த்தா மட்டும்தான் இந்த மாதிரி கனவு வருதுஅதுல நீங்க என்னை அடிக்கிறிங்க”
“ஏய் என் பொறுமையை சோதிக்காதடிஇவ்ளோ நாள் பொண்ணுங்க பார்த்தாங்கன்னு கனவு கண்ட அதுலகூட எதோ ஒரு நியாயம் இருக்கு.. ஆனா இன்னிக்கு உங்கப்பாதானேடி பார்த்தாரு அதுல என்ன பிரச்சனை உனக்கு” என்று அவன் அழாத குறையாக கேட்க..,
“அதுதான் நானும் கேட்கிறேன்.., என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு அவர் ஏன் உங்களை பார்க்கணும்அதுவும் குறுகுறுன்னு..!!”
“அதுக்கு நான் என்னடி பண்ண முடியும்..?” என்று குழந்தைதனமான அவள் கோபத்தை எதில் சேர்ப்பது என்று புரியாதவன்,
“ஆனா ஒன்னு உன்னை சொல்லி குத்தம் இல்லை உன்னை பத்தி நல்லா தெரிஞ்சும் உங்கப்பா பார்த்ததை சொன்னேன் பார்த்தியா என்னை சொல்லணும்” என்று எழில் நெற்றியில் அடித்துக்கொள்ள..,
அலரோ அவன் வார்த்தைகளுக்கு செவி சாயக்காதவளாக தீவிர யோசனையில் ஈடுபட்டிருந்தவள் திடீரென, “நீ ஏன் மாமா இவ்ளோ ஹான்ட்ஸமா இருக்க ..?” என்றாள்
நெற்றியில் இருந்து கரத்தை எடுத்தவன், “எது இந்த மூஞ்சி ஹான்ட்ஸம்மா..??” என்று அருகே இருந்த கண்ணாடியை பார்த்தவாறே கேட்டவன்,
“அது சரி! இப்போ எதுக்கு இந்த திடீர் ஆராய்ச்சின்னு நான் தெரிஞ்சிக்கலாமா..?”
“இல்ல நீங்க அழகா இருக்கிறதால தான எல்லாரும் உங்களை பார்கிறாங்க… உடனே கனவு வந்து அதுல நீங்களும் என்னை அடிக்கிறிங்க”
“என்னடி இது நான் அடிச்சதை இவ்ளோ அசால்ட்டா சொல்ற..?”
“புதுசா அடிச்சா பரவால்ல மாமா அதான் ஏற்கனவே முப்பத்தி ஆறு முறை உங்ககிட்ட வாங்கி இருக்கேனே அதான் பழகிடுச்சி”
‘ஒரு முறை தானேடி‘ என்று எழில் அவள் முகம் பார்க்க..,
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மாமா அதான் எல்லாரும் பார்கிறாங்க அப்புறம் கனவு வருது அதுல நீங்க என்னை அடிக்கிறீங்க..” என்றவள் இப்போது தன் பேச்சை நிறுத்தி அவனை நெருங்கி அமர்ந்து,
“இவ்ளோ நாள் பரவாயில்லை மாமா ஆனா இப்போ எங்கப்பாவும் அந்த லிஸ்ட்ல வந்துட்டாங்க அதனால இனிமேல் நான் சும்மா இருக்கபோறதில்லை”
“சரி அதுக்கு இப்போ என்ன பண்றதா இருக்க..??” என்று அவன் சந்தேகத்துடனே அவளிடம் இருந்து இரண்டு அடி தள்ளி அமர்ந்திட..,
உடனே வாகாக அவன் புறம் சம்மணமிட்டு அமர்ந்தவள், “இதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு மாமா, சொல்லபோனா அதை யோசிச்சிட்டே தான் நான் தூங்கினேன்”
“அடிப்பாவி அப்போ என்ன பண்ணனும்ன்னு முடிவு பண்ணிட்டுதான் கனவே கண்டியா…???” என்று நொந்து போனவன், ‘சரி சொல்லிதொலை‘ என்றான்.
“அது வந்து மாமா..” என்று இழுத்தவள் மீண்டும் அவன் விழிகளில் ஏதோ தேடியவாறே
“அது என்னன்னு நான் சொன்னா நீங்க கோவப்பட மாட்டிங்களே..? நான் சொல்றமாதிரி கண்டிப்பா செய்வீங்கதானே..!!” என்று அவள் கேட்ட விதத்திலேயே தன்னை சோதிக்க போகிறாள் என்பது புரிபட..,
“வேற வழி! ஹ்ம்ம்சொல்லு” என்றான்.
“அது என்னன்னா நீங்க இவ்ளோ அழகா இருக்கிறதால தானே எல்லாரும் பார்க்கிறாங்க” என்றிட, எழிலுமே ஒரு கன்னத்தை கரத்தில் தாங்கி அவளுக்கு செவிசாய்த்து கொண்டிருந்தவன்..,
“ஏன்டி சாதரணமாவே பொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க நீ அர்த்த ராத்திரி மூணு மணிக்கு சொல்றியே..” என்று கேட்க..,
“எது மாமா பொய் நீங்க அழகா இருக்கிறதா..? என்றவள் அவன் கன்னத்தை இருமருங்கிலும் பற்றி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா தங்கத்துக்கு வைரத்துக்கும் தான் இன்னார்னும் அவங்களோடமதிப்பும்என்னன்னு தெரியாதாம் அதுமாதிரி தான் உங்களுக்கே உங்களோட மதிப்பு தெரியலை”
“அப்படியா..?” என்று வியந்த எழிலுக்குமே ‘ஆம்‘ என்று தலை அசைப்பதை தவிர வேறு வழி இல்லை.
‘ஹான் எங்க விட்டேன்..‘ என்று நெற்றியை தட்டியவள்.., “இனி நீங்க பேன்ட் ஷர்ட் போட்டுட்டு ஆபிஸ் போககூடாது” என்று அவன் மார்பில் சாய்ந்து கூற..,
‘பேன்ட் ஷர்ட் போடக்கூடாதுன்னா அப்போ நான் எதை போட்டுட்டு ஆபிஸ் போகட்டும்? வேணும்னா லுங்கி பனியன்ல போகட்டா..??’ என்று கேட்க,
உடனே சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தவள், ‘ஒரு நிமிஷம்‘ என்று எட்டி விளக்கை ஒளிரவிட்டுஅங்கு எழில் லுங்கி பனியனில் இருப்பதை கண்டு மீண்டும் விழி அகலாது அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
‘திரும்ப பார்க்க ஆரம்பிச்சிட்டாடா..’என்று நெற்றியை நீவிக்கொண்டவன்..,
“ஏய் பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்.., எதாவது சொல்லுடி” என்று பொறுமை இழந்து உலுக்க..,
‘இல்லை‘ என்று அழுத்தமாக தலை அசைத்தவள் அவனிடம் “இதுல இன்னும் ரொம்ப ஹான்ட்ஸம்மா இருக்கீங்க மாமா.. அதனால இதுவும் வேண்டாம்”
“ஏய் அறிவு கெட்டவளே இதையும் போடாம நான் எப்படிடி வெளில..” என்றவனின் வாயை அவசரமாக பொத்தியவள்…,
“இருங்க இருங்க அவசரபடாதீங்க.. இனி நான் சொல்ற ட்ரெஸ் தான் நீங்க போடணும்”
“ஏன்டி உன்னை கட்டின நாளுல இருந்து எனக்கான டிரஸ் நானே செலக்ட் பண்ற சுதந்திரம்கூட போயிடுச்சி.., நீ கொடுக்குறதை தானேடி இதுநாள் வரை போட்டுட்டு இருக்கேன் அப்புறம் என்ன..?” என்று அவளை முறைக்க..,
“இல்லை மாமா இது வேற மாதிரி”
“வேற மாதிரின்னா எப்படிடி..??” என்று அவன் பல்லைகடிக்க..,
“அதாவது இந்த சாணி கலர் கோமியம் கலரா..??”என்று தன்னை கட்டுபடுத்திக்கொண்டு அவன் கேட்க..,
“ஹான் அதேதான் மாமா அந்த மாதிரி டல் கலர்ஸ் தான் போடணும்”
“சரி அப்புறம்..”
கட்டிலில் இருந்து கீழே இறங்கியவள் அவனையும் இறக்கி நிற்க வைத்து, தலை முதல் பாதம் வரை பார்த்தவள் திருமணத்தின் போது நாதன் எழிலுக்கு போட்டிருந்த ஐந்து சவரன் சங்கிலி அவன் கழுத்தில் உறவாடி அவன் அழகை மெருகூட்டுவதை கண்டு…
உடனே அவனை நெருங்கி எக்கி நின்றவள் அவன் கழுத்தை அலங்கரித்து கொண்டிருந்த செயினை அவிழ்த்து “இனி இது உங்களுக்கு வேண்டாம்” என்று தன் கழுத்தில் போட்டு கொண்டவள் அடுத்து அவன் வலக்கரத்தை உயர்த்தி பிடித்து அவன் பிறந்த நாளுக்காக அவள் பரிசளித்திருந்த காப்பை கழற்ற போக..,
“ஏய், இதை எப்பவும் கழற்றவே கூடாதுன்னு நீ தானேடி சொன்ன..?” என்று அவன் கரத்தை பின்னிழுக்க..,
“நான்தான் சொன்னேன் ஆனா இப்போ வேண்டாம்” என்று அவன் கரத்தை பிடித்திழுத்து கழற்றியவள்.., மீண்டும் அவனை ஆராய தொடங்கினாள்.
அவள் பார்வையே அவனை கிலிபிடிக்க செய்திருக்க, “வேற எதுவும் இல்லையாடி.., அவ்ளோதானா நான் போகலாமா..??” என்றான் அகனெழிலன்.
“இருங்க மாமா இப்போதான் முக்கியமான மேட்டரே இருக்கு” என்றவள் அவன் முகத்தை தாங்கி தாடியை தடவியவாறே “முக்கியமாஇந்த தாடி மீசை எல்லாம் எடுத்திடனும் மாமா” என்றிட..,
“ஆமாமாமா..!! இல்லைன்னு சொல்லலை ஆனா அதுதானே உங்களை இன்னும் அழகாக்குது.., இனிமேல் அது இல்லாமையே நான் உங்களை ரசிப்பேன் ஆனா மத்தவங்க உங்களை பார்க்க கூடாது அவ்ளோதான் ” என்று தீவிரமாக கூற..,
எழிலோ நைந்து போன குரலில் “எப்படி தாடி மீசை எடுத்தா மட்டும் போதுமா..? இல்லை மொட்டையும அடிச்சிக்கனுமா?” என்றான்.
“ச்சே ச்சே.. அதெல்லாம் வேண்டாம் மாமா” என்று கூறவும் தான் இழுத்து பிடித்திருந்த மூச்சை ஆசுவாசமாக வெளியிட்டவன்“சரி இப்ப போகட்டா..?” என்று திரும்ப,
யோசனையில் ஆழ்ந்திருந்தவள் அவன் கரத்தை பிடித்து கொண்டு, “உங்களுக்கு நம்ம பாலா தெரியும்ல மாமா” என்றாள்.
“நம்ம பாலாவா..?? அது யாருடி எனக்கு தெரியாம..???” என்றவனின் நெற்றி சுருங்கி விரிந்தது.
“அதுதான் மாமா இந்த சேது, பிதாமகன் படம் எல்லாம் எடுத்தாரே அவர்தான்” எ
“ஆமா, அவருக்கு என்ன இப்போ..?” என்று பற்கள் அரைபட கொலைவெறியுடன் கேட்க..
“அவரோட பரதேசி படம் பார்த்தோம்ல அதுல வர ஹீரோக்கு ஒரு யூனிக் ஹேர்ஸ்டைல் பண்ணி இருப்பாங்க, அது மாதிரி நீங்க பண்ணிக்கணும்” என்றவளை இடைமறித்தவன்..,
“எது கொட்டான்குச்சியை தலையில கவுத்து வச்சிட்டு சுத்தியும் செறைச்சி விட்டிருப்பாங்களே அந்த மாதிரியா..?” என்று கண்களில் கனலோடு எழில்!
“ஹான் ஆமா மாமா எ கைண்ட் ஆஃப்” எனவுமே அவள் முகத்தில் ஓங்கி ஒன்று வைக்க தோன்றினாலும் தன்னை கட்டுபடுத்திக்கொண்டு..,
“ஏன்டி அதோட விட்டுடுற அப்படியே என் மூஞ்சில கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில ஏத்திவிட்டு ஆரணி முழுக்க ஊர்வலம் வா” என்றதும் அவன் கூறியதன் அர்த்தம் புரியாத அலர்,
“அப்படி பண்ணினா என்ன ஆகும் மாமா” என்று படபடத்த இமைகளுடன் அவனை பார்க்க..
“ஹ்ம்ம் என் பொழப்பு சிரிப்பா சிரிக்கும்” என்று எழ முற்பட்டவனின் கரம் பிடித்து அமர்த்தியவள்..,
“சிரிச்சா பரவால மாமா… அப்படி பண்ணினா உங்களை யாரும் பார்க்க மாட்டங்களா? அதை சொல்லுங்க எனக்கு அதுதான் வேணும்”
“ஏய் என்னை கொலைகாரன் ஆக்காதடி…,என்று சீறியவனின் கோபம் முழுதும் மாமனார் மீதே திரும்ப..,
“யோவ் மாமா நேர்ல தான் என்னை வாழ விடமாட்டேங்கிறன்னா கனவுலயுமா வந்து என் வாழ்க்கையில கும்மி அடிப்ப..?” என்று நாதனை பேசவும்…
உடனே “எதுக்கு எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசுறிங்க..?” என்று அலர் சிலிர்த்தெழுந்தாள்.
அவள் தலையில் ஓங்கி ஒன்று வைத்தவன் தாடையை அழுத்தமாக பற்றி “ஏன்டி இதுக்கு மட்டும் உனக்கு அர்த்தம் நல்லா புரியுது ஆனா புருஷனுக்கு கரும்புள்ளி குத்தி ஊர்வலம் வரதுன்னா என்னன்னு தெரியலை அப்படிதானே” என்று கேட்க..,
அவளோ தலையை தேய்த்து விட்டுகொண்டே.., “ஐ ஸ்வேர்… எனக்கு நிஜமாவேதெரியாது மாமா..”
“ஏய் இதோபாரு என்னை பார்த்தது உங்கப்பாஏன் பார்த்தாருன்னு போய் அவரை கேளுடி! நீங்க எப்படி என் புருஷனை பார்க்கலாம்னு முடிஞ்சா அவர்கிட்ட சண்டை போடு அதை விட்டுட்டு அர்த்த ராத்திரில வேலையை கெடுத்து தூக்கத்தை கெடுத்து என்னை படுத்தி எடுக்குற நீ..!” என்று முறைத்தவன் அவள் கழுத்தில இருந்து சங்கிலியை எடுத்து போட்டுகொண்டு அவள் கரத்தில் இருந்த காப்பையும் பிடுங்கி வலக்கரத்தில் ஏற்றிக்கொண்டே..,
“இதோ பாரு எத்தனை பொண்ணுங்க என்னை பார்த்தாலும் என் பார்வை உன்னை தாண்டி வேற எங்கயும் போகாது அது உனக்கே நல்லா தெரியும்.. அப்படியிருந்தும் கனவு, அடிச்சேன், விட்டுட்டு போயிட்டேன்னு கண்டதையும் உளறதைஇத்தோட நிறுத்து..”என்று கதவருகே சென்றவன் ஒருநொடி நிதானித்து,
“ஏன்டி நிஜமாவே உனக்கு கனவு வந்ததா..?? இல்லை என்னை வச்சு செய்யனுங்கிற உன்னோட பலநாள் கனவை இன்னிக்கு கதை கட்டிவிட்டு தீர்த்துகிட்டியா..??” என்று கேட்க..,
அலரோ பதறிக்கொண்டு “அச்சச்சோ என்ன மாமா பேசுற உனக்கு என்னை தெரியாதா? ஐ ஸ்வேர் சத்தியமா கனவு வந்தது மாமா அதுல நீங்க ரொம்பவே கோபமா இருந்தீங்க.. அப்பாக்கும் உங்களுக்கும் நடுவுல என்ன நடந்தது அவர் என்ன பேசினார்னு தெரியாது ஆனா அதுக்காக நீங்க என்னை அடிச்சிட்டு வேகமா வெளில கிளம்புனீங்க.. வேண்டாம் மாமான்னு நான் உங்க கையை பிடிச்சும் என்னை உதறி அங்கேயே விட்டுட்டு போயிட்டீங்க” என்று கனவில்கூட அவன் தன்னை நீங்கி சென்றதை தாங்க இயலாது அவள் கூற..,
எழிலோ ஏற்கனவே பொறுமை இழந்திருந்தவன்நொடியில் அவள் அருகே வந்து அவள் தாடையை பற்றி “இதே மாதிரி பேசிட்டு இருந்த அப்புறம் பேச வாயே இல்லாம பண்ணிடுவேன்… அமைதியா படுத்து தூங்குடி” என்று கதவை அறைந்து சாற்றிவிட்டு சென்றவன் அடுத்த பத்து நிமிடத்தில் அனைத்தையும் அணைத்து எடுத்து வைத்து விட்டு வந்து படுத்துவிட்டான்.
அவளை முறைத்து கொண்டே உள்ளே வந்து படுத்தவன் அதிகாலையே எழுந்தது முதல் ஓய்வு இல்லாது போனதன் விளைவு உடனே உறங்கிட அவனையே பார்த்தவாறு இருந்த அலருக்கு தான் சுத்தமாக தூக்கம் இல்லாது போனது.
‘எங்கே கனவு நிஜமாகிடுமோ..!! எழிலின் கோபத்திற்கு ஆளாகி அவனை பிரிய நேருமோ’ என்ற பயம் அவளை கவ்வி பிடித்திருக்க உறக்கம் இல்லாது தவித்து போனாள்.