மழை இன்னும் வலுத்தது. விடுவதை போல தெரியவில்லை. காருக்குள் இருந்த சௌபர்ணிகாவின் போன் இசைக்க பின்பக்க இருக்கையில் பூஜை பொருட்களுடன் வைத்திருந்தாள் அதனை.
எட்டி எடுக்க முடியாமல் மழையில் நனைந்ததில் புடவை உடலோடு ஒட்டி இருக்க தன்னை நோக்கி அமர்ந்திருந்தவன் வேறு இம்சையாய் உயிரை வாங்கினான்.
“ப்ச், பார்க்க வேற இடமா இல்லை?…” என அவள் கடுப்பாக,
“வாட் யூ மீன். இப்பவும் உன் கண்ணை தான் பார்க்கறேன். அப்பப்ப கொஞ்சம் இந்த கன்னம், அப்படியே கன்னம் பக்கத்துல குட்டியா காது. படபடன்னு பேசற இந்த…” என்றவன் அவளின் முறைப்பில் தோளை குலுக்கிக்கொண்டு கள்ளப்புன்னகை புரிய,
“முதல்ல காரை விட்டு இறங்குங்க. போங்க…” என்று விரட்டினாள் சௌபர்ணிகா.
அவன் பதில் சொல்லும் முன் மீண்டும் போன் அடிக்க ஆரம்பிக்க ஆரோன் எட்டி அதை எடுத்து நீட்டிவிட்டான் அவளிடம்.
சபர்மதி தான் அழைத்திருந்தார் மகளுக்கு. எதிர் மண்டபத்திற்குள் இருக்கும் ஆட்களே தெரியாத அளவிற்கு அடைமழை பொழிய மகள் இன்னும் வராததில் அழைத்துவிட்டார்.
“ம்மா…” என்றதும்,
“சௌபி எங்க இருக்க?…” என்றார் சபர்மதி.
“கோவிலுக்குள்ள வர்றதுக்குள்ள மழை பெருசாகிடுச்சு. கொஞ்சம் நனைஞ்சிட்டேன். அதான் திரும்ப காருக்கே வந்துட்டேன் ம்மா. கார் உள்ள தான் இருக்கேன்…” என்றதும் அவருக்கு நிம்மதியானது.
“காலையில வெயில் வர மாதிரி இருந்து இப்படி திடீர்ன்னு மழை. எதிர்பார்க்கவே இல்லை. சரி நாங்க கோவிலுக்குள்ள தான் இருக்கோம். குறையவும் வரோம். நீ கார்லயே இரு…” என்றார் சபர்மதி.
“ஹ்ம்ம். ஓகே…” என சொல்லி போனை வைத்ததும் திரும்பி ஆரோனை பார்த்தவள், அப்போது தான் மீண்டும் தனது போனை பார்க்க அவன் அனுப்பிய செய்தி மேலே தங்கியிருந்தது.
“எனக்கு மெசேஜ் பண்ணியிருந்தீங்களா?…” என கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்தான் ஆரோன்.
“என்ன? எதுக்கு?…” என திறந்து பார்த்தவள் அவன் அனுப்பியதில் குழம்பி நிமிர்ந்தாள்.
“எதுக்கு பர்மிஷன் கேட்டு மெசேஜ் பண்ணியிருந்தீங்க?…” என்று அதை காண்பித்து கேட்க,
“சரி, லாக் ரிலீஸ் பண்ணுங்க. நான் இறங்கறேன்…” என்றான் அவன்.
“என்ன?…” என சௌபர்ணிகா திகைக்க,
“கீழ இறங்க சொன்னீங்களே மேடம். அதான் சரின்னு சொல்றேன். நான் இருந்தா உங்களை ரொம்ப டென்ஷன் பண்ணிட்டே இருப்பேன். அதான் கிளம்பறேன்…” என்று சொல்ல செய்வதறியாமல் திகைத்து பார்த்தாள் அவனை.
அவன் சொன்னதை செய்ய விரல்கள் நகர்ந்தாலும் அவளால் செய்ய முடியவில்லை.
மனதை இறுக்கவும் முடியாமல், இளக்கமும் தராமல் என்ன இது சித்ரவதை என்றானது அவளுக்கு.
“திரும்பவும் கேட்கறேன். என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?…” என்றான் ஆரோன் ரிஷபன்.
“ம்ஹூம்…” என அத்தனை நிதானமாய் அவனை ஏறிடாமலே தலையசைத்தாள் மறுப்பாய்.
தான் கேட்டதும் அவள் விழிகள் சதிராடியதில் உண்டான தவிப்பு அவனை பலமடங்கு புரட்டி போட்டது.
‘பிடித்தத்தை சொல்ல இவளுக்கு ஏன் இத்தனை தயக்கம்?’ என யோசித்தவன் தான் சொல்லலாம் என்றால் அதையும் மனது மறுத்தது.
என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்னும் சுவாரஸியம் ஒருபுறம். சொல்லமுடியாமல் அவள் தவிப்பதும் கொஞ்சம் பிடித்தது.
‘இதுக்கே இத்தனை அவஸ்தை படறா? லவ்லி’ என மனது ரகசியமாய் அதனை திருடிக்கொண்டது.
அந்த உணர்வு அவனுள் மயக்கத்தை விரிவாக்க உள்ளூர ரசித்தான் ஆரோன் ரிஷபன்.
“நிஜமாவே இல்லையா?…” என்று மீண்டும் கேட்க,
“இல்லைன்னா புரியாதா?…” அவள் குரல் கம்மிவிட்டிருந்தது.
“நம்பற மாதிரி இல்லையே…” என்றவன்,
“இப்போ இந்த நிமிஷம் இந்த இடத்துல நான் இல்லாம வேற யாராவது இருந்தா சௌபர்ணிகா நிலைப்பாடு என்னவா இருக்கு? இதே தானா?…” என்று வெளிப்படையாக அவன் கேள்வியில் அவளுக்கும் புரிந்து போனது.
தன்னை உணர்ந்தே அவன் இதனை கேட்கிறான் என்று. தன்னை கண்டுகொண்டான் என்று.
பல்லை கடித்தவள் அந்த உணர்வுகளை அடக்கிக்கொண்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“சும்மா…” என்று சட்டென கண் சிமிட்ட அதற்கும் அதே பார்வை தான்.
அவன் இதை கேட்டதும், கேட்டவிதமும் சுத்தமாய் பிடித்தமில்லை. அவன் உணர்ந்துகொன்டத்தில் ஒருவகையில் ஆசுவாசம்.
தான் எதையும் அவனுக்கு தெரிவிக்க தேவையில்லை என்று. அதே நேரம் அச்சமும் கூட.
அதை அப்பட்டமாய் அவள் விழிகள் பிரதிபலிக்க மென்மையாய் புன்னகைத்தான் ஆரோன் ரிஷபன்.
“கேம் ஓவர் சௌபர்ணிகா. நான் என்ன செய்யனும்ன்னு நினைக்கிற நீ?…” என்றான் ஆழ்ந்த குரலில் அவளை பார்த்தபடி.
வெளியில் பெய்துகொண்டிருந்த மழை சௌபர்ணிகா மனதில் புயலை கிளப்பியிருந்தது.
பசை போட்டதை போல அவள் இதழ்கள் ஒட்டிக்கொள்ள ஆழ்ந்த மூச்செடுத்தான் ஆரோன் ரிஷபன்.
“ஓகே, நீ எதையும் சொல்லவேண்டாம். நானும் கேட்கலை. லாக் ஓபன் பண்ணு. நான் இறங்கனும்…” என்றான் பிடிவாதமாய்.
அதற்கு மேல் அங்கிருக்க அவனுக்கு முடியவில்லை. கோபம் ஒருபுறம், ஆசை ஒருபுறமும் அவனை வதைக்க முதலில் சென்றுவிட வேண்டும் என்று தான் நினைத்தான்.
அவள் இறுக்கத்தை அணைத்து அமைதிப்படுத்த அவன் கைகள் பரபரக்க அதனை செய்துவிட கூடாதென்ற கட்டுப்பாட்டில் நிதானம் இழந்துகொண்டிருந்தான்.
பார்வை அவளில் இப்போது திரும்பவில்லை. வேண்டுமென்றே தவிர்த்து தன் நெஞ்சத்தை நீவிக்கொண்டவன்,
“லாக் ரிலீஸ் பண்ணும்மா…” என பல்லை கடித்துக்கொண்டு கடுமையாக.
“இன்னும் மழை குறையலை ரிஷபன்…” என்றாள் மெல்லிய குரலில் சௌபர்ணிகா.
“அது எனக்கு தெரியாதா? நீ பண்ணலைன்னா நான் ஏதாவது பண்ணிடுவேன். விபரீதம்…” என்று தலையை கோதியபடி அவளிடம் தன் முகம் காட்டாமல் சொல்ல,
“என்ன?…” என்றாள் திகைப்புடன்.
“என்ன என்ன?…” என்று திரும்பியவனின் முகத்தில் இதென்ன தன்னை மொத்தமாய் ஆட்டிப்படைக்கும் உணர்வு!!!
ஸ்தம்பித்து சில நொடிகள் அசையாது மிரட்சியுடன் அவள் பார்க்க அந்த விழிகளின் ஆழத்தில் விழுந்தவன் முற்றிலும் தன்னை மறந்தான்.
“உன்னோட அருகாமை, உன்னோட வாசம் என்னை என் கன்ட்ரோல்ல இருக்க விடலை. புரியுதா என்னாகும்ன்னு…” என்று சொல்ல இன்னுமே விரிந்த விழிகளுடன் அவள் பார்க்க,
“ஓஹ் காட்…” என்றவன் தன் தொடையில் வேகமாய் குத்திக்கொண்டான்.
“ரிஷபன்…” என்று சொல்லியவளின் நடுங்கும் குரலில், தன் கைகள் கொண்டு முகத்தை மூடிக்கொண்டவன் சில நொடிகள் அமைதி காத்தான்.
அவனின் செய்கைகள் ஒவ்வொன்றையும் பிரம்மை பிடித்ததை போல பார்த்துக்கொண்டிருந்த சௌபர்ணிகாவின் அசைவற்ற தன்மையில் மெல்ல மீண்டவன்,
“ஊஃப், நத்திங்…” என்று பழையபடி புன்னகைத்து கண் சிமிட்டி,