“நான் நல்லா இருக்கேன்…” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் அமர்த்தலாக அவன் சொல்ல,
“நான் எதுவும் கேட்கலையே?…” என்றாள் சௌபர்ணிகா.
கடையின் பணியாளர்கள் அங்குமிங்குமாய் ஓரிருவர் மட்டுமே இருக்க அவர்களும் இங்கே தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“சொன்னேனே…” என மீண்டும் சொல்லியவன்,
“ஓஹ், உங்களுக்கு தெரியாதில்லையா? எனக்கு ரெண்டு சில்க் சேரி வேணும். அதுக்காக தான் வந்தேன்….” என்றான் அவனும் வேண்டுமென்றே.
“ஓஹ் வாங்க. எந்த மாதிரி வேணும்?…” என கேட்டுக்கொண்டே முன்னால் சென்றவள்,
“உங்கம்மாவுக்கா?…” என கேட்க,
“ம்ஹூம். மும்பை பாலிவுட் ஹீரோயின் அன்ட் ஒரு சிங்கர். இவங்க ரெண்டுபேருக்கும்…” என்று சொல்ல அவளின் நடை தடைபட்டது.
அதை கண்டுகொள்ளாதவன் தனக்கு தேவையானவற்றை கேட்டு ஒவ்வொரு நிறமும், டிஸைனும் பார்த்து தேர்ந்தெடுத்தான்.
“இந்த கலர் அவங்களுக்கு சூட்டாகாது. ரொம்ப ப்ரைட்டா இருக்கே? நைட் கான்செர்ட். ஆப்ட்டா இருக்கும். ஷைனியாவும்…” என்று ஒவ்வொரு புடவையை எடுக்கும் பொழுதும் அவன் அதனை மனக்கண்ணில் அவர்களுக்கு அணிவித்து பார்த்தே எடுக்க சௌபர்ணிகா முகம் மாறிவிட்டிருந்தது.
“இதை ரெண்டையும் பேக் பண்ணிட சொல்லுங்க…” என்றும் கூற இன்னும் மனது துவழ ஆரம்பித்தது.
அவனின் பன்மையான அழைப்புமே அவளை எட்டி நிறுத்துவதை போலிருக்க முயன்று தன்னை மீட்டவள் காத்திருந்த பணிப்பெண்ணை அழைத்து,
“பேக் பண்ணிடுங்க…” என்று கொடுத்தனுப்பினாள்.
“கேஷ் நான் கீழ வந்து பே பன்றேன். அங்கயே வெய்ட் பண்ணுங்க. வேற பார்க்கனும்…” என்று சொல்லி அந்த பெண்ணை அனுப்பியவன் அவள் அடுத்த தளம் செல்லும் வரை பார்த்திருந்து சௌபர்ணிகாவிடம் திரும்ப,
“வேற என்ன கலெக்ஷன் வேணும்?…” என்றாள் அவள் தன்னை சரிசெய்துகொண்டு.
எத்தனை முயன்றும் அவள் முக மாற்றத்தை ஆரோன் ரிஷபன் கண்டுகொண்டான்.
“நிறைய வேணுமே? கேட்டதும் கிடைச்சிடும்ன்னா கேட்கலாம்…” என்று புன்னகைக்க,
“சேரீஸ் தவிர வேற எதுவும் கிடைக்காது…” என சொல்ல,
“அப்படியா? டெஸ்ட் பண்ணி பார்த்திருவோமா?…” என்று விஷமத்துடன் அவளை நெருங்க,
“கன்னம் பழுக்க வேணா கிடைக்கும். வாங்கிக்க ரெடியா?…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“எல்லாத்துக்கும் தயார். எங்க என்னை அடி பார்ப்போம்…” என வாகாய் கன்னத்தை சிரித்துக்கொண்டே காண்பிக்க அந்த கன்னக்குழி அவளை தொட்டு பார்க்க அழைத்தது.
“ப்ச்…” என்ற சலிப்புடன் அவள் விலகி செல்ல முயல,
“நில்லும்மா. எங்க போற அதுக்குள்ள?…” என்று நிறுத்தியவன்,
“எதுக்கு இவ்வளோ டென்ஷன்?…” என்றான் இலகுவாய்.
“எனக்கென்ன? நீங்க யாருக்கு வேணா புடவை எடுங்க. இதுல நான் டென்ஷனாக என்ன இருக்கு? அது எனக்கு அவசியமும் இல்லை…” என படபடவென பொரிய,
“வாவ் பொசஸிவ்…” என்று கையை வாயில் வைத்து வியப்பதை போல பாவனை செய்ய அவன் என்ன செய்தாலும் அவள் மனது விரும்பி தொலைத்தது.
“ஹ்ம்ம், வேற?…” என்றான் பாவனையுடன் ராகமாய்.
“கடையை அடைக்கனும். கிளம்புங்க…” கத்தரிப்பதில் அவள் குறியாய் நிற்க,
“போகலாம். கூட வரலாமே?…” என்றதும் சௌபர்ணிகா முகம் இறுக அவனை பார்த்தாள்.
“வாசல் வரை தான் சொன்னேன். அதுக்கு கூட மனசில்லை போல? நீ குடுத்துவச்சது அவ்வளோ தான்டா ஆரோன்…” என்றவன்,
“ம்ஹூம். ரிஷபன் ரைட்?…” என அவளை பார்த்து கேட்க திணறி போய் பார்த்தாள்.
“நான் மும்பை கிளம்பறேன் சௌபர்ணிகா. மிட்நைட்ல ப்ளைட். இப்ப நேரா ஏர்போர்ட் தான் போய்ட்டிருக்கேன். அதான் உன்னையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்…” என்று சொல்ல,
“ம்ஹூம், உங்க ப்யூட்டிக்கு சேரி எடுக்கன்னு சொல்லுங்க…” என அவள் திருத்த,
“ஆமா. அந்த சேரி ரெண்டும் என்னோட ப்யூட்டிக்கு தான். பிபிக்கு…” என்று சொல்ல சௌபர்ணிகா திகைப்புடன் அவனை பார்த்தாள்.
“சும்மா ஒரு நிமிஷம் இந்த முகத்துல சந்தோஷத்தை பார்ப்போமேன்னு பொய் சொன்னேன்…” என்று சொல்லி கண் சிமிட்ட கலங்கி போனாள் சௌபர்ணிகா.
அவனின் வார்த்தைகள் கூட தன்னிடம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என வெதும்பி போய் நின்றாள்.
‘இந்தளவிற்கா ஒருவன் உன்னை அசைத்து பார்க்க அனுமதிப்பது?’ என எண்ணினாலும் முடியவில்லை.
அவள் சிக்கிக்கொண்ட அந்த சுழல் மீள விடாமல் மொத்தமாய் மூச்சடைக்க பார்த்தது.
மனதின் அலைப்புருதல் முகத்தில் அப்பட்டமாய் தெரிய சோர்ந்து போன முகமும், ஒளியற்ற விழிகளுமாய் அவனை ஏறிட்டவள்,
அவள் தைரியம் உடல்மொழியில் தெரிந்தாலும் குரலில் தழுதழுப்பில் அதனை கண்டுகொண்டவன்,
“அவ்வளோ பிடிவாதம். ஹ்ம்ம். ஏன் என்கிட்ட ஏன்டா இப்படி பேசறன்னு சண்டை கூட போடமாட்டியோ?…” என்று சொல்ல அவன் அப்படி பேச இடம் கொடுத்தது தான் தானே என்று அழுத்தமாய் நின்றாள்.
“இப்பவும் என்கிட்ட சொல்ல எதுவுமே இல்லையா சௌபர்ணிகா?…” என எதிர்பார்ப்பு நிரம்பிய பார்வையுடன் குரலில் வழிந்தோடும் காதலுடன் அவன் கேட்க அதில் தடுமாறித்தான் பார்த்தாள்.
“என்னை கட்டாயப்படுத்தறீங்க ரிஷபன். இப்படி கேட்கவோ, பேசவோ செய்யாதீங்க…” என சௌபர்ணிகா அயர்ந்த குரலில் சொல்ல,
“நான் உன்னை ப்ரப்போஸ் பண்ண சொல்லலை. நானும் ப்ரப்போஸ் பண்ணலை. ஜஸ்ட் ஒரு சாதாரண பேச்சு. இதுவும் கூடாதுன்னா, நோ ஐ காண்ட்…” என்றான் பிடிவாதமாய் ஆரோன் ரிஷபன்.
“நீங்க மும்பை கிளம்பனுமே? ப்ளீஸ் கிளம்புங்க. நானும் வீட்டுக்கு போகனும்…” என்று சொல்லி தாங்கள் இருந்த தளத்தின் நுழைவு வாயிலை பார்த்தாள்.
“வெய்ட் பன்றாங்க அவங்க…” என பணியாட்களை காண்பிக்க,
“நானும் தான்…” என்றான் அவன் உடனே.
“ரிஷபன்…” என சௌபர்ணிகா பாவம் போல பார்க்க,
“இன்னும் பத்து நாள்ல மும்பையில இருந்து வந்திருவேன். நீ சொல்லனும். புரியுதா?…” என அசையாமல் நின்றவளிடம் சொல்ல என்னவும் பேசிக்கொள் என நின்றாள்.
“ஓய் அடம், போய்ட்டு வரேன்…” என்று சொல்லியவன் அவளின் கன்னத்தில் கைவைக்க செல்வதுபோல் கொண்டுசென்று, அவள் அதிர்ந்து விலகும் முன் அவளை தொடாமலேயே கைகளை சுழற்றி தன்னிதழில் வைத்து பறக்கும் முத்தம் தந்தவன்,
“வருவேன், சீக்கிரமே…” என்று கண் சிமிட்டியவன் குறும்பு புன்னகையில் அவளும் முறைப்பும், இளமுறுவலுமாக பார்க்க அதை கண்களில் நிரப்பிக்கொண்டு கிளம்பினான் ஆரோன் ரிஷபன்.