“இதானே வேண்டாம்ன்னு சொல்றது. இது ஒரு ப்ரெண்ட்லி மீட். புடவை எடுக்க போற மாதிரி நாங்க ஜஸ்ட் நேர்ல ஒரு பார்வை பார்த்து ஹாய் சொல்லிட்டு வர போறோம். நீ அவளை கலாட்டா பண்ணிட்டிருக்க. டென்ஷனாக போறா…”
“ப்ச், கொஞ்சநேரம் ஆகலாம். தப்பில்லை. என்னை முழுநேரமும் மேடம் டென்ஷன்ல தானே வச்சிருக்காங்க…” என்றான் இலகுவாய் புன்னகைத்து.
விளையாட்டாய் அவன் செய்துவைத்த விஷயம் சௌபர்ணிகாவிடம் பூகம்பத்தை உருவாக்கியது.
‘நினைத்ததை சாதிப்பவனாகிற்றே? ஒருவேளை அவன் சொல்லியதை போல தானோ?’ என வியர்த்தது சௌபர்ணிகாவிற்கு.
அந்த பாட்டி சொல்லிய ‘பொண்டாட்டி’ என்ற வார்த்தை அவளுள் பெரும் தாக்கத்தை விதைக்க, ‘திருமணம்’ என்ற வார்த்தையில் கசந்தவள் வேறு யோசிக்கவே இல்லை.