இருவரின் கைகளும் அணைப்பை வலுக்க செய்ய சௌபர்ணிகாவின் அலைபேசி ஒலித்தது.
“ப்ச், கரடீஸ்…” என்றான் ஆரோன் ரிஷபன் மனைவியின் அணைப்பிற்குள் நின்றவாறே.
சத்தமின்றி புன்னகை சிந்தியவள் அவனின் கையிலிருந்து விலகி தனது கைபையை எடுத்தாள்.
“சைலன்ட்ல போட்டிருக்கனும்…” என்றபடி சௌபர்ணிகாவின் கன்னத்தை பிடித்து இழுத்து சொல்லி செல்ல,
“அண்ணா தான்…” என்றாள் அவள்.
“கரெக்ட்டா தான் நானும் சொல்லியிருக்கேன்…” என உல்லாச குரலில் சொல்லி சிரிக்க,
“அவ்வளோ தைரியம்…”
“உன் அண்ணன்கிட்டையே சொல்றேனே? குடேன்…” என்று போனை பிடுங்க பார்க்க அழைப்பு நின்றிருந்தது.
“ரிஷி, ப்ச் என்ன இது விளையாட்டு?…” என்றவள் இங்குமங்குமாய் அசைய,
“ப்பாஹ், நல்லநேரம் குறிச்சு வேற குடுத்திருக்காங்க மம்மி. கொஞ்சநேரம் குட் கேர்ளா இரு பிபி. மனுஷனை டெம்ப்ட் பண்ணிட்டு…” என்று வம்பிழுக்க,
“யூ…” என்றவள் அவனின் முதுகில் சாத்த மீண்டும் அழைப்பு.
“கரடில நல்ல கரடி. பேசு, நான் பின்பக்கம் போய் பார்க்கறேன்…” என்று சொல்லி கதவை திறந்து செல்ல பச்சையும், நீலமுமான கடல்பரப்பில் மெல்லிய அலைகள் அசைந்தாடியது.
நீச்சல் குளமும், அதை ஒட்டிய ஒய்வு இருக்கைகளும், இரவு உணவிற்கென பிரத்யேக அமைப்பும் மனதை வருடியது.
மெல்லிய ஈர காற்றுடனான அந்த சூழல் காதலை கூட்ட வெளியில் நின்றபடியே உள்ளிருந்தவளை திரும்பி பார்த்தான் ஆரோன்.
அங்கிருந்த நீச்சல் குள கைப்பிடி கம்பியில் நின்றவாக்கில் சாய்ந்திருந்தவன் ஒற்றை காலை ஊன்றி இன்னொன்றை கால்மேலிட்டவாறு பார்வையால் அவளை தொடர சௌபர்ணிகாவும் பார்த்துவிட்டாள் அவன் விழியிசை ஈர்ப்பில்.
என்னவென தலையசைத்து கேட்க இவன் இங்கிருந்து கைவிரித்து அழைக்க வெட்கத்துடன் கண்ணாடி கதவை திறந்துகொண்டு அவனருகில் வந்து நின்றாள்.
“ஹ்ம்ம்…” என தலைமுடியை சுருட்டி கேட்ச் கிளிப்பில் அடக்கியவள் கட்டிலில் அமர போக,
“ஹேய் பிபி அங்க இல்லை இங்க…” என சோபாவில் இழுத்து அமர்த்திக்கொண்டான்.
“பெட் ஃபுல்லா பூ. அப்படியே இருக்கட்டும்…” என்று ரகசிய புன்னகை பூக்க,
“மை காட். போட்டோஸ் பாருங்க…” என்றவள் அவனை திசைமாற்ற எங்கே முடிந்தது?
லேப்டாப்பில் ஒவ்வொரு புகைப்படமாக பார்க்க ஆரம்பிக்க அதில் முதல் புகைப்படம் இருவரின் கண்களிலும் புன்னகை.
அவ்விடம் மணமகள் அறை. அதிகாலை முகூர்த்த நேரத்திற்கான ஒப்பனை ஆரம்பித்து உடை மாற்ற அவள் நிற்க கதவை திறந்து வைத்து ஒரு கையை கதவின் மேல்புறம் வைத்தபடி முகம்கொள்ளா புன்சிரிப்புடன் இருவரின் விழிகளில் மையல்.
“கடைசி வரை என்னை உனக்கு புடவை கட்டவே விடலையே நீ…” என்றான் அருகிலிருந்தவள் காதை பிடித்து இழுத்து.
“இன்னைக்கு கட்டிவிடுங்களேன், நோ அப்ஜெக்ஷன்…” சௌபர்ணிகா கண் சிமிட்ட,
“நீ அப்ஜெக்ஷன் சொன்னா மட்டும்?…” என்று கேலியாய் புருவம் உயர்த்த அடுத்த புகைப்படத்தை தள்ளினாள் அவள்.
“எந்த ஊர்லயும் கல்யாண பொண்ணை அவங்க சொந்தத்துல தான் அழைச்சிட்டு வருவாங்க. நீங்க என்னடான்னா நான் தான் வருவேன்னு ஆர்ப்பாட்டம்…”
ஆம், சௌபர்ணிகா மணமேடை செல்ல தயாராக இருக்க ஆரோன் ரிஷபன் வந்து மாலை அணிவித்து மண்டியிட்டு காதலுடன் கை கொடுத்து அவளை பார்த்திருந்த அந்த தருணம்.
“லவ்லி…” என்றான் அவன்.
அதிலும் திருமண புடவை. அவன் எதிர்பாராதது. உடல்முழுவதும் தங்க ஜரிகையும் இடையே குங்குமவர்ண பட்டுநூலும், அதனிடையில் மாந்தளிர் பச்சைகள் ஆங்காங்கே பொட்டு வைத்ததை போல நெய்திருக்க அதிலிருந்த வடிவமைப்பும் புதுமையே.
அவ்வொரு இழையிலும் அவனின் பெயர். அதற்குள் அவளின் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கள்.
உடல் முழுவதும் இருவரின் பெயரை விதவித கோணங்களில் கண்களுக்கு தெரியாதவிதத்தில் கொடிகளும், கம்பிகளும், இன்னும் சில ஓவியங்களுமென அவளே வரைந்திருக்க அழகாய் அவள் எதிர்பார்த்தபடி புடவையும் அமைந்துவிட்டது.
“இப்படி ஒரு டிஸைன் யாருக்கும் நான் பார்த்ததில்லை. அத்தனை சுலபமா நெய்ய முடியலையே?…” என்றிருந்தார் சபர்மதி ஆராதனாவிடம்.
தள்ளி நின்று பார்த்தவர்களுக்கு அது ஒருவகையான புது டிஸைன் என்று தான் தோன்றும்.
“உங்க பொண்ணு எப்பவுமே ட்ரெண்ட் செட்டர் தான். இப்படித்தான் நமக்கும் புடவை வேணும்ன்னு நினைக்க வச்சு தேடவும் வச்சிடறாங்க…” என்று திருமண வீட்டில் அத்தனைபேரும் புடவையின் அழகை வியக்காதவர்கள் இல்லை.
அடுத்த புகைப்படம் திருமாங்கல்யத்தை கையில் வைத்துக்கொண்டு அவன் செய்த அலப்பறைகளும், அத்தனைபேரின் சிரித்த முகமும்.
“என்ன இருந்தாலும் பர்ஸ்ட் கிஸ் நீ தான் குடுத்த. எதுவாயிருந்தாலும் நியாயமா போவோமே. இந்தா பிடி. கட்டு பார்ப்போம்…” என்று கழுத்தை நீட்ட,
இருவரும் கவனிக்காத நேரத்தில் எடுப்பட்டிருந்தது. அடுத்தடுத்து அதையே சின்ன சின்ன அசைவுகளின் மாற்றத்தில் எடுத்திருக்க இயல்பான புகைப்படம் இறுதியாய் அவன் கைகளுக்குள் அவள் முகம்.
“அழகா இருக்குல…” என்றாள் அவனிடம்.
இப்படியாக ஒவ்வொரு புகைப்படமாக பார்த்து ரசித்து லயித்து ஒருகணம் அந்நிகழ்வுக்குள் சென்று வந்தனர் இருவருமே.
“பார்த்துட்டே இருக்கனும் போல இருக்குல…” என மீண்டும் மீண்டும் அவள் பார்க்க,
“இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாமா பிபி? இன்னும் இங்க நிறைய காதலோட நான் இருக்கனுமோன்னு தோணுது….” என்றவன் அவளை தன் மடியில் ஏந்திக்கொண்டான்.
“என்ன திடீர்ன்னு?…” சௌபர்ணிகா அவன் கண்களுக்குள் அளவளாவ,
“கொஞ்சம் பதட்டம். உன் முகத்துல உள்ள டென்ஷன் எனக்குள்ள ஒட்டிருச்சு. உன் முகத்துல காதலையும் தாண்டிய ஒரு உணர்வு. அதை கவனிச்சதுல என் கவனம் சிதறி உன்னை முழுமையா அதுக்குள்ள ஈடுபடுத்த என்ன செய்யன்ற யோசனை. இப்படி சில இடங்கள் தடுமாறிட்டேன்…” என்றவன் அவளின் திகைத்த முகம் கண்டு,
“ஆமா, என்னோட எல்லாமே உன்னால மட்டும் தான். என்னை என்னடி செய்யற நீ?…” என அவளின் நெற்றியில் முற்றுகையிட்டவன் இதழ்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இடம் பெயர மயக்க நிலை தான் இருவருக்குமே.
வெளியில் வானம் மயங்க துவங்க நிலவு உலவ வந்துவிட்டிருக்க திறந்திருந்த பால்கனி கதவு வழியே போட் சத்தம்.
“நெக்ஸ்ட் வில்லாக்கு ஆள் வராங்க போல?…” என இருவரும் விலகி திரும்பினர்.