“ஓகே, நீ ப்ரெஷாகிரு சௌபர்ணிகா. நானும் வெளில ஒரு பாத் எடுத்துடறேன். கொஞ்ச நேரத்துல டின்னர் அரேஞ்ச் பண்ண ஆள் வருவாங்க…” என்று சொல்லி அவளை மடியிலிருந்து நகற்றியவன்,
“உனக்கான ட்ரெஸ் தனி பேக்ல இருக்கு. அதை போட்டுட்டு வா…” என்று சொல்ல,
“கண்டிப்பா அதுவே தான் போடனுமா ரிஷி…” என கேட்க, அவன் முறைக்க,
“ஓகே, எனக்கொன்னுமில்லை…” என்று தோளை குலுக்கி சொல்லியவளின் பாவனையில், கீழுதட்டை கடித்தபடி அவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தான் ஆரோன்.
“என்ன? என்ன பார்வை? போங்க போங்க…” என்று சொல்லியவள் இலகுவாய் நிற்க முயல,
“எனக்கென்ன பயமா? வாங்களேன்…” என்று அழைத்தவள் அழைப்பில், அவன் ஒரு அடி முன்னே வைக்க துள்ளிக்கொண்டு குளியலறை நுழைந்தாள் சௌபர்ணிகா.
“வெளில வா வேதாளம். உனக்கிருக்கு…” என்று சிரித்தபடி சொல்லியவன் தனக்கான உடையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல ஸ்டீபன் அழைத்துவிட்டார்.
“சொல்லுங்க டாட்…” என்று வெளியில் இருந்த குளியலறையில் உடையை போட்டவன் நீச்சல்குளம் வர அதற்குள் முன்பக்கம் காலிங் பெல் சத்தம்.
“டாட் வெய்ட்…” என்றவன் முன்னே செல்ல,
“சௌபி எங்கடா?…” என்றார் ஸ்டீபன்.
“வாஷ்ரூம்ல…” என்றவன் முன்னிருந்த கதவை திறக்க அங்கே இரவு மேஜையை அலங்கரிக்க வந்திருந்தனர்.
“பேக் சைட்க்கு போட்ல வாங்க…” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டவன்,
“சொல்லுங்க டாட்…” என்றான் அவரிடம்.
“யார் வந்தது?…”
“டின்னர் அரேஞ்ச்மென்ட்க்கு வந்திருந்தாங்க. அதான் போட்ல சுத்தி வாங்கன்னு சொன்னேன்…” என்று தானும் பின்பக்கம் வந்து நிற்க அவர்களும் வந்துவிட்டனர்.
மிதமான காற்று தான். மாலை குளுமையாய் இருக்க, வந்தவர்கள் அங்கிருந்த மேஜையில் அலங்கரிக்கவா, நீரில் நடுவில் மேஜையை போடவா என்றனர்.
“டாட் நானே கூப்பிடறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டு யோசித்தான்.
கீழே அலை என்று பெரிதாய் இல்லை. நீருக்குள் மேஜையை போட சொல்லியவன் அதனை சுற்றி அலங்கரிக்க சொல்ல வந்தவர்களும் பரபரவென வேலையை பார்த்தனர்.
நீச்சல் குளத்தில் இருந்து நீரில் இறங்குமிடத்தில் படிக்கட்டின் அருகில் மேஜையை வைத்து சுற்றிலும் அலங்கார மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டது.
மேஜையை சுற்றிலும் நீரில் அலங்கார விளக்குகளை மிதக்கவிட்டு ரோஜா இதழ்களை தூவி விட்டனர்.
விளக்குகள் ஏற்றப்பட்டு அவ்விடமே உள்ளத்தை கவரும் விதமாய் மாற ஆரோன் இதழ்களில் குறுநகை மிளிர்ந்தது.
“ஆசம்…” என்று சொல்லியவன் கைதட்டி அவர்களை பாராட்ட சற்றுநேரத்தில் உணவுடன் வருகிறோம் என்று கிளம்பி சென்றனர்.
இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவார்கள் என்று தானும் குளித்துவிட்டு கையில்லா பனியனும், ஷார்ட்ஸும் அணிந்து தலையை துவட்டியபடி வர அங்கே மேஜையை புகைப்படம் எடுத்துக்கொண்டு நின்றாள் சௌபர்ணிகா.
முழங்கால் வரையிலான சர்ட்டின் வகை துணியில் மேக்ஸி என்றும் இல்லாமல், இரவு உடை போன்றும் இல்லாமல் அவன் தயாரித்திருந்த உடையில் சித்தம் கலங்க செய்தாள் பெண்.
“கொன்னுட்டா…” என்றவன் விசிலடிக்க அவன் புறம் திரும்பியவள் அவனையும் சேர்த்தே புகைப்படம் எடுக்க,
“ஓஹ் ஆஹாங்…” என்றவள் தலையை சிலுப்பிக்கொண்டு திரும்பி நிற்க நன்றாக கவிழ்ந்துவிட்ட இரவில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் மனைவியின் பேரழகில் அவன் ரசனை உலகம் இன்பமாய் கொதிக்க தொடங்கியது.
அவன் முன்னிருந்த கடல் அலைகளின் நீரோட்டம் அவனுள் ஆர்ப்பரிப்பை உண்டாக்க கைகள் அவளிடையை பரிசோதித்தது.
“அதை நானே சொல்லனுமா வேதாளம்?…” என்றவன் முழுதாய் தன்புறம் அவளை திருப்பி கேமராவை வாங்கி கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தவன், மெல்லிய துணியாலான அந்த ஓவர் கோட்டை இழுத்து கட்ட,
“என்ன பன்றீங்க ரிஷி?…” என்றாள் சிரிப்புடன்.
“சாப்பிடற வரை. டின்னர் வந்திரும்…” என ஆரோன் சொல்லிவிதத்தில் சௌபர்ணிகா அடக்கமாட்டாமல் சிரிக்க,
“கொஞ்சம் லேட்டா இந்த ட்ரெஸ் போட சொல்லியிருக்கனுமோ?…” என்றும் சொல்ல,
கட்டில் கவிதை முதற்புள்ளியை துவங்க ஆசை கொண்ட நெஞ்சங்கள் வேகம் தயக்கங்களை விரட்டி திறந்துகொண்டது.
ரசிகன் ஏகத்திற்கும் அவளை சிறுக சிறுக ரசித்து ரசித்து தன்னை கொடுத்து எடுத்துக்கொண்டான்.
நிலவினை தழுவும் மேகமாய் அவளை மொத்தமாய் தனக்குள் இழுத்துக்கொண்டவன் கைகள் எல்லைகளை கடந்தது.
சின்ன சின்ன முத்தங்கள் தீப்பொறியாய் தீ மூட்ட மூங்கிலென பற்றிக்கொண்ட உணர்வுகளின் சங்கமத்தில் இன்னுமென்ன என்னும் எதிர்பார்ப்பு ஜூவாலையை தணியவிடாமல் எண்ணெய் வார்த்தது இதுவரை காணாமல் கண்டு வந்த அந்த உலகம்.
அவளிடம் தன்னை காற்றாய் இட்டு நிரப்பி செல்ல மிச்சமின்றி அவனோடு முற்றிலும் கலந்தாள் சௌபர்ணிகா.
எந்தவித சஞ்சலங்களுக்கும் இடமளிக்காமல் அவன் கையாண்டவிதம். இல்லை இல்லை, அவள் அவனை கையாளவைத்த விதம்.
உறைய வைக்கும் நொடிகள் எல்லாம் இதழ்களின் உறவாடல், விரல்களின் ஊடுருவல் என நொடிக்கு நொடி துள்ளி, தள்ளி, அள்ளி, மீண்டு, இணைந்து நெகிழ்ந்தனர்.
நிறைவின் காரணமாய் மெல்லிய புன்னகை அவளிதழ்களில். அவன் கைகளில் மென்மைகள் இடையிட்டிருக்க, வன்மையாய் மாற்றிக்கொண்டிருந்தாள் அவனின் புயல்.
ஆளுமை அவனிடத்தில் ஆரம்பித்து அவளிடத்தில் கைசேர்ந்திருக்க முழுதாய் முற்றிலும் அவளவனாய் ஆரோன் ரிஷபன்.
அவளே கேள்வி. அவளே ஆச்சர்யம். அவளே சிணுங்கல். அவளே சிந்தனை. இறுதியில் அவளே அவனுக்கு விடையானாள்.
“ஷட்அப் ரிஷி…” என்றவள் அதட்டல்கள் எல்லாம் அவனின் ஆளுமையான சிரிப்பில் சேர்ந்துகொள்ள விடியா இரவுகளாய் நிமிடங்கள் நீள அவன் நெஞ்சம் படர்ந்தவளின் முல்லை வாசத்தில் அவன் சுவாச காற்றும் அவளிடம் கொள்ளை போனது.