“ரிஷி…” என்றவள் அவனின் கழுத்தை பிடிக்க போய் பின் மீண்டும் தன்னை அமைதிப்படுத்த பார்க்க,
“எழுந்து குளிச்சுட்டு ரெடியாகிருவோம். போட்டோ ஷூட் டீம் வந்திருவாங்க. வா வா வா…” என அவளை குளியலறைக்கு தள்ளி செல்ல,
“ஒன்னும் வேண்டாம். கோ மேன்…” என்றதற்கும் அசராமல்,
“போலாம் போலாம். கிளம்பி ரெடியாகிட்டு போகலாம்…” என்று அவளை கிளப்பிவிட்டுதான் தான் கிளம்பினான்.
“ஒருவழியா சாதிச்சாச்சு…”
“இப்ப கூட இதை சாதிக்கலைன்னா…” என்றவன் அடுத்த வார்த்தை சொல்லும் முன் அவனின் இதழ்களை கைகொண்டு மூடி சௌபர்ணிகா முறைக்க கண் சிமிட்டி அவளின் உள்ளங்கைக்குள் அழுத்தம் கொடுக்க,
“கேடி ராஸ்கல்…” என்று கையை எடுத்தாள்.
“இப்ப சொல்லட்டுமா?…” என்றவன் பேச்சை மீண்டும் நிறுத்தியவள்,
“ஏற்கனவே டயர்ட். இப்ப திரும்பவும் டயர்டாக்காதீங்க ப்ளீஸ்…” என்று சொல்ல,
“என்னால தான? ஆனா நானே டயர்டா இல்லையே….” என அதற்கும் கண் சிமிட்டியவன் அவளின் கன்னத்தில் இதழ் பதித்து,
“சேரி ரொம்ப அழகா இருக்கு…” என்றான் சற்று பின்னால் தள்ளி நின்று.
“ட்ரென்ட்டி தீம், ட்ரடீஷ்னல் தீம் ரெண்டுமே. ட்ரெஸ் கோட் மட்டும் நாலு வெரைட்டி….” என்று ஒவ்வொன்றாய் எடுத்து காண்பித்தான்.
“இது மார்னிங் சேரி, வேஷ்டி. அதுலயே ரெண்டு வெரைட்டி. பர்ஸ்ட் சில்க் சேரி. நெக்ஸ்ட் ஷிபான் சேரி, இதுக்கு ப்ளவுஸ் டிஸைன் நீயே பாரேன்…” என்று அதனை எடுத்து காண்பிக்க அதன் வேலைபாடு அசத்தலாக இருந்தது.
“ரிஷபன், நான் இப்படி போடமாட்டேன். எனக்கு வேண்டாம்…” என நழுவ பார்க்க,
“ஸ்லீவ்லெஸ் தானே? இந்த சேரிக்கு பர்பெக்ட்டா இருக்கும். ப்ரீ ஹேர்ன்றதால பேக் நெக் டெப்த் ரொம்ப தெரியாது. சின்ன சின்ன ஷாட்ஸ் தான்…” என்று சொல்லி ஒருவழியாய் கிளப்பி வந்திருக்க அன்று முழுவதும் போட்டோ ஷூட் நடந்தது.
காலையில் இருந்து அவன் எதிர்பார்த்த நேரங்களில், காலநிலைக்கு ஏற்ப சில மாதிரிகளை சொல்லி காண்பித்து எடுக்க வைத்து என அவர்களுக்கே புதிதாய் கற்று கொடுத்துவிடுவான் போலிருந்தது.
மாலை ஜீன்ஸ், பார்ட்டி கவுன் என்று அதற்கேற்ப அவனும் அணிந்திருக்க அழகின் நிபுணன் என்பதை அவனின் ஒவ்வொரு காண்பிப்புகளும் பறைசாற்றியது.
“ஸார் இன்னும் கொஞ்சம் க்ளோஸா மூவாகுங்க. ரொமாண்ட்டிக்கா இருக்கும். இப்பலாம் இதுதான் ட்ரென்ட்…” என்று இருவரையும் மிக நெருக்கமாக காண்பிக்க செய்ய புன்னகையுடன் மறுத்தவன்,
“எங்களுக்கான நெருக்கம் எங்களுக்கு தனிப்பட்டு எங்களுக்குள்ள தெரிஞ்சா போதும். அதை போட்டோல காமிக்கனும்ன்னு அவசியமில்லையே ப்ரோ. நான் சொன்னமாதிரியே எடுங்க. பிக்சர்ஸ் பார்த்தா முகத்துல ரசனையான சிரிப்பு தான் வரனும். அதுதான் வேணும்….” என்று சொல்ல அவர்களுக்கு ஆச்சர்யமே.
அவனின் வட்டாரத்தில் இவை எல்லாம் அத்தனை சகஜம். நண்பர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் கூட பின்னி பிணைந்துகொண்டு வலம் வர மனைவியுடன் இவன் இவ்வளவு பார்க்கின்றானே என்றானது.
“பார்க்கிற ஜாப்க்கும், நினைக்கிற நினைப்புக்கும் சம்பந்தமில்லை ப்ரோ. ஏன் இவ்வளோ ஷாக்?…” என்று அவர்களை வேலை செய்ய வைத்து அன்றைய நாளை முடித்தவன்,
“நாளைக்கு ஹாஃப் டே இருக்கும். இன்னைக்கு மாதிரி சீக்கிரம் வேண்டாம். ஒன்பது மணிக்கு மேல வாங்க…” என்று அனுப்பி வைத்தான்.
“இன்னைக்கு எடுத்த போட்டோவே பெரிய ஆல்பம் போடற மாதிரி இருக்கும். போதுமே?…” என்ற சௌபர்ணிகாவிடம்,
“இன்னும் ரெண்டே ரெண்டு பிக்சர் மட்டும். கடலலைல. இன்னைக்குன்னா அதுக்கு தனியா டைமாகிருக்கும். ஹேர்ஸ்டெயில் பன்றதுல இருந்து எல்லாம் கஷ்டம். அடுத்தடுத்து போயிருக்க முடியாது. அதான் தண்ணிக்குள்ள எடுக்கற ஷாட்ஸ் நாளைக்கு ப்ளான் பண்ணேன்…”
“இதுக்கு பேர்தான் ப்ளான் பண்ணி பன்றதோ?…” என்றவளின் கிண்டலில் அவளின் தலையில் கொட்டியவன்,
“போய் மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு வா. கொஞ்சநேரம் பீச் சைட் ரிலாக்ஸா ஒரு வாக் பண்ணலாம்…” என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
அறைக்கு வரவிருந்த உணவை மறுத்து வெளியில் சென்று உண்டுவிட்டு வரலாம் என்றும் சொல்லியவன்,
“உனக்கு ஓகே தானே? வெளில போய் சாப்பிட…”
“ஹப்பா இதாச்சும் கேட்கனும்ன்னு தோணுச்சே…” என்று கேலியாய் சொன்னாலும் அவனின் கைகளை கோர்த்துக்கொண்டாள்.
எதுவும் சொல்லவில்லை ஆரோன். ஆனால் முகத்தில் அமைதியான ஒரு புன்னகை.
திருமணம் என்றதும் அவள் வேறு எதை யோசித்தாள்? அதில் முழுமையாக லயிக்க வேண்டும் என்பதை தவிர.
இஷாந்த் ஆரோனை அழைத்து தேனிலவு திட்டம் பற்றி கேட்க யோசித்து சொல்வதாகவும், தான் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னானே தவிர அவனிடம் அடுத்து அதனை பகிரவில்லை.
ஆனால் பேச்சுவாக்கில் சபர்மதி சொல்லியிருந்தார் மருமகனிடம். எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்பது மட்டுமே மகளின் எண்ணமாக இருப்பதை.
இந்தநிலையில் அவள் எங்கே இதை யோசிக்க? திருமணத்தன்று ஜெயந்தனை பார்ப்பதும் பதட்டம் கொள்வதுமாக இருந்தவளை திசைதிருப்பவே அவனுக்கு மூச்சு முட்டிவிட்டது.
முதலில் அதிலிருந்து வெளிவரவேண்டுமே என முன்னேற்பாட்டில் வைத்திருந்ததை செயல்படுத்தி இங்கும் வந்தாகிற்று.
இஷாந்திடம் கூட வெடிங் போட்டோ ஷூட் பற்றி சொல்லியிருக்கவில்லை ஆரோன்.
இஷாந்த் ஏற்கனவே இதையும் கேட்டிருக்க அதையும் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டான்.
“எனக்கு டைம் இல்லை பிபி. நம்ம கல்யாணத்துக்குள்ள சில கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடிக்கனும். ப்ரீ வெடிங் ஷூட் கஷ்டம்….” என்று அவளிடமுமே சொல்லியிருந்தான்.
ஆனால் இங்கே வரும்முன்பே என்னென்ன வேண்டுமோ அனைத்தையும் தயார்நிலையில் வைத்துவிட்டு தான் புறப்படவே ஆயத்தமானான்.
ஒவ்வொரு நாளும் மனைவியின் விழிகள் கலக்கம் களைந்து வியப்பிலும், மகிழ்ச்சியிலும் மலர்ந்து விகசிக்க அதற்கென்றே அனைத்தும் செய்தான்.
இன்னும் இரண்டு நாட்களில் சென்னை கிளம்ப வேண்டும். அவனுக்கும் ஒப்புக்கொண்ட வேலைகள் வேறு அணிவகுத்திருக்க கிளம்ப மனதில்லை என்றாலும் கிளம்பி ஆகவேண்டுமே.
“யோசனை தான். இன்னும் ஒருவாரம் இங்கயே தங்கிடலாமான்னு…” என்று சொல்லி கண் சிமிட்டவும்,
“ஆசை தான். குடும்பஸ்தன் கொஞ்சம் பொறுப்பு வேணும்…”
“பதறாம வேக வச்சுக்கலாம் அந்த பருப்பை. இதுக்கு ஓகேவா சொல்லு. இருக்கலாமா?…” என்று கேட்க மறுக்க முடியாமல் திணறினாள் அவன் பார்வையில்.
“என்னவாம் சில்க் ப்யூட்டி ரொம்ப யோசிக்கிறீங்க? ஏற்கனவே இந்த பாடுபடுத்தறான். இன்னும் ஒருவாரமான்னு பயமா இருக்கா?…” என அவளின் நெற்றியில் முட்ட,
“யார் பயந்தா? நானா, இல்லை நீங்களா? இதென்னவோ உங்க மைன்ட் வாய்ஸ் போல?…” என்று பேசிக்கொண்டே சென்றவள் அவனின் மௌனத்தில் திரும்பி பார்க்க, கைகட்டிக்கொண்டு நின்றவன் விழிகளில் அப்படி ஒரு விஷமம்.