எங்கோ நடத்தும் வானவேடிக்கை சப்தத்தில் இருவரும் மோனநிலை கலைந்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டனர்.
“ஓவர் டோஸ் போல. அதான் இப்படி கிறுகிறுக்குது…” என்றான் கண்சிமிட்டி.
“எனக்கு இங்க ஒரு வேலை. என் சேரி இங்க இருந்தது. அதை எடுக்க வந்தேன். மத்தபடி கிறுகிறுத்து எல்லாம் இல்லை…” என்று கேலியாய் சொல்லி சௌபர்ணிகா தன்னை மீட்டுக்கொள்ள,
“பொய், வாயை திறந்தாலே பொய்…” என்று அவனும் வம்பிழுக்க,
“அப்போ நான் உண்மையை சொன்னாலும் பொய்ன்னு சொல்லுவீங்களா ரிஷி?…” என்றவள் எதற்கு கேட்டோம் என்றே தெரியாமல் அதனை கேட்க,
“நமக்கு ஒப்புமை இல்லாத கசப்பான உண்மை பொய்யாவே போகட்டும் உண்மை விளிம்பி அரசியே. இந்த ஆர்க்யூமென்ட்க்கு தான் இந்த நேரம் கால் பண்ணினேனா நான்?…” என்று முறைத்தான்.
பெருமூச்சுடன் தலையசைத்து சிரித்தவள் மனதிற்குள் தடதடக்கும் உணர்வு. அவன் நிச்சயம் தன்னை அதிகம் தேடுகிறான் என புரிந்தது.
“இன்னும் எத்தனை நாள் ரிஷி?…” என்றாள் ஏக்கம் சுமந்த குரலில்.
“ரெண்டுநாள். இங்க இருந்து நேரா மும்பைல ஈவன்ட். முடிஞ்சதும் அடுத்து ப்ரீ தான். இப்போதைக்கு வேற எந்த கமிட்மெண்டும் வச்சுக்கலை…”
“ஓஹ், இப்பவே கிளம்பிட்டீங்களே…”
“ஆமாடா, நாளை மறுநாள் நைட் ஒரு பார்ட்டி. அதுக்கான மேக்கோவர் எல்லாம் ட்ரையல் பார்க்கனும். ஹீரோயின்ஸ், மாடல்ஸ் எல்லாருக்கும். ஸோ ரெஸ்ட் எடுக்க கூட டைம் இல்லை…” என்று சொல்லிக்கொண்டே தயாராக ஆரம்பித்தான்.
அங்கிருந்த இரண்டுமணி நேரமும் அவளுடன் பேசிக்கொண்டே தான் ஒவ்வொன்றும் நடத்தது.
முதல்நாள் நிகழ்வுகள் எல்லாம் பகிர்ந்துகொண்டவன் அன்றைக்கு நடந்த போட்டோ ஷூட் பற்றியும் விவரிக்க கேட்டுக்கொண்டே அவன் தயாராவதை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நாளைக்கு விக்டோரியா மெமோரியல்ல ஒரு ஆட் ஷூட். ஸ்டெயிலிஷ்ட் நானே தான்…” என்றவன் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஒருவரை சொல்லி,
“அவங்க கேட்டு நோ சொல்லமுடியலை. அவங்க கூட வர இன்னொரு மாடல். அவங்க இந்த வருஷத்தோட பிரபஞ்ச அழகி. தெரிஞ்சிருக்குமே…” என்று சிரிக்க, முறைத்தாள் சௌபர்ணிகா.
“பத்திக்கிச்சா?…” என்று அதற்கும் சிரித்தவன்,
“நீ என்னோட பிபி. ஆனா அவங்க உலகறிஞ்ச பிரபஞ்ச அழகி…” என்றும் சொல்ல,
“கொழுப்பு. வாயிலையே அடி விழும்…”
“முடிஞ்சா வந்து தாயேன். வாங்கிக்கறேன்…” என்றான் குறும்பாய்.
“அவங்க தானே உங்கள கிஸ் பண்ண வந்தது?…” என்று சௌபர்ணிகா கேட்கவும் ஆரோனுக்கு சுத்தமாய் ஞாபகம் இல்லை.
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி மால்தீவ்ஸ்க்கு அத்தை, மாமாவோட நீங்க போயிருந்தப்போ ஒரு டிஸ்கோ ஹால்ல?…” என்று கேட்க அப்போதுதான் அவனுக்கும் ஞாபகம் வந்தது.
“ஆனா கிஸ் பண்ணலையே?…” என்றான் அவனும்.
“மிஸ் ஆகிடுச்சோ?…” அவள் கடுப்புடன் கேட்க,
“லைட்டா…” என கண் சிமிட்டியவன்,
“அன்னிக்கு தப்பிச்சு வந்ததே பெருசு. என்ன நினைச்ச என்னை நீ? அன்னைக்கு அவங்க எனக்கு ப்ரப்போஸ் பண்ணினாங்க தெரியுமா?…” என விளையாட்டாய் இவன் சொல்ல,
“ஓஹ், ஓகே சொல்லியிருக்கலாமே?…” சௌபர்ணிகா குரலை செருமியபடி பேச அதை அவனும் கவனிக்கவில்லை கிளம்பும் அவசரத்தில்.
“சொல்லியிருக்கலாம். ஆனா அப்போ தோணலையே. இனி எங்க தோணும்?…” என்று சீண்டலுடன் சொல்லியவன் தயாராகிவிட்டான்.
“ஓகே டா. டேக் கேர். பேசிட்டே ரெடியானதுல டைம் போனதே தெரியலை…” என தனது ஷோல்டர் பேக்கை எடுத்தவன்,
“உஷா ரெடியான்னும் பார்க்கனும்…” என்றபடி போனை கையில் எடுத்தான்.
“பார்த்துக்கோ. தனியா இருக்கவேண்டாம். வீட்டுக்கு கிளம்பு பிபி. மும்பை போறதுக்கு முன்னாடி வர டைம் இருந்தா ட்ரை பன்றேன்…” என்றவன் பறக்கும் முத்தத்தை அனுப்பி அழைப்பை துண்டித்தான்.
முகத்தில் சிரிப்பை வைத்தபடி இருந்தவள் அழைப்பு நின்றதும் முகம் எதையோ தொலைத்ததை போல் உணர்ந்தது.
அதுவரை இருந்த உற்சாகம் மறைந்துபோக இதயத்தில் என்னென்னவோ ஓலங்கள்.
“ப்ச், கால் பண்ணாமலே இருந்திருக்கலாம்…” என புலம்பவே ஆரம்பித்துவிட்டாள் சௌபர்ணிகா.
அதன் பின் எங்கே உறங்க? விடியும் வரை வீட்டிற்குள் இங்குமங்கும் நடந்து, அமர்ந்து எழுந்து என பொழுதை போக்கியவள் மனதில் அவன் பேசியவை மட்டுமே.
மீண்டும் கைபேசியை எடுத்தவள் உடனே சமூக வலைதளத்தில் அந்தவருட பிரபஞ்ச அழகியின் கணக்கை திறந்தாள்.
நடாஷா நிலானி. தலையில் கிரீடத்தை தாங்கி முகமெல்லாம் புன்னகையுடன் பெருமிதமாய் நின்றவளின் முகப்பு புகைப்படம்.
அதில் சில நிமிடங்கள் பார்வையை நிலைக்கவிட்டவள் அடுத்தடுத்து என்று அவளறியாமல் ஒரு தேடல்.
என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சௌபர்ணிகா கவனம் அவளில் குவிந்திருக்க வெளியே காலிங் பெல் சத்தம்.
சட்டென கலைந்தவள் தான் செய்துகொண்டிருந்த மடத்தனத்தில் அதிர்ந்து போக குப்பென்று வியர்த்துவிட்டது.
“ஷிட்…” என்றாள் நெற்றியில் அடித்துக்கொண்டு.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ? மீண்டும் மீண்டும் அழைப்பு மணி விடாமல் ஒலிக்கவும் தான் எழுந்து சென்றாள் சௌபர்ணிகா.
கதவை திறந்தவள் அங்கே நின்றவனை பார்த்ததும் பெருமூச்சுடன் உள்ளே வர,