“ரூம்ல என்ன செய்ய? நானும் வரேன்…” என்றாள் சௌபர்ணிகா.
“பிபி…”
“ப்ளீஸ், உங்க கூட இருக்க தானே வந்தேன். ரூம்ல இருக்கனும்ன்னா நான் ஊர்லையே இருந்திருப்பேன்…” என்று சொல்ல ஆரோன் மனதில் இனம்புரியாத சஞ்சலம்.
“ஏன் ரிஷி, நேத்து நான் ஏதாவது டிஸ்டர்ப் பண்ணினேனா?…” என்ற கேள்வியில்,
“ச்சே ச்சே என்னாச்சு உனக்கு? நீ டயர்டா இருப்பியேன்னு தான் நான் சொன்னேன். என் கண்ணு முன்னாடியே என் பார்வையில நீ இருக்கிறதுன்னா எனக்கு சந்தோஷம் தானே? வா. வேலை நேரத்துல வொய்பை சைட்டடிக்கிறதும் கூட கிக்கா தான் இருக்கு…” என்று சொல்லி கண்சிமிட்ட,
“ஓஹ், அப்போ நேத்து என்னை பார்த்தீங்களா நீங்க?…” என்றாள் கிண்டலாய் சௌபர்ணிகா.
“அடிங்…” என்றவன் பேசும் முன் கதவு தட்டப்பட,
“உஷா வந்தாச்சு போல…” என்று சொல்லி கதவை திறக்க அவள் தான்.
“பாஸ், எல்லாம் ரெடி. நான் வேன்ல போயிடறேன்…” என்று சொல்லி கிளம்பிவிட்டாள்.
“அவங்க எல்லாம் தனியா வருவாங்களா?…” சௌபர்ணிகா கேட்க,
“ஆமா, ப்ரடக்ஷன் வேன்ல வந்திருவாங்க. ஹீரோயினும், மாடலும் கார்ல வந்திருவாங்க. நாமளும்…” என்று சொல்லியபடி அவளுடன் கைகோர்த்து வெளியே வந்தவன்,
“இங்க நில்லு…” என்று அவளை அங்கிருந்த அலங்கார கதவின் அருகில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டான் ஆரோன்.
“சேர்ந்து எடுக்கலாம். அதென்ன தனியா?…” என்றவள் தனது போனில் இருவரையும் புகைப்படம் எடுத்துக்கொள்ள நடாஷா அதனை பார்த்தபடியே கடந்து சென்றாள்.
அன்றைய படப்பிடிப்பு ஆரம்பமாக கதாநாயகி தயாராகிவிட்டாகிற்று. ஆனால் நடாஷாவிற்கு அணிவித்த புடவை நழுவிக்கொண்டே இருந்தது.
இரண்டு மூன்றுமுறையும் இதுவே வாடிக்கையாக இயக்குனர் அதில் எரிச்சலானார்.
அது நகை விளம்பரத்திற்கான படப்பிடிப்பு. பட்டுப்புடவையில் விதவிதமான நகைகள் அணிவித்து எடுத்துக்கொண்டிருக்க முதல்நாள் போல நடாஷாவிடம் நேர்த்தி இல்லை.
“என்ன ஆரோன்?…” என்றார் இயக்குனர்.
“ஒன் மினிட் ஸார்…” என்றவன் நடாஷாவின் புடவை மடிப்பை சரி செய்ய மீண்டும் நழுவியது.
“வாங்க மேம்….” என்று நடாஷாவை அழைத்து செல்ல சௌபர்ணிகா உஷாவிடம் கேட்டாள் என்னவென்று.
“என்னனு சொல்ல மேம்? இந்த நடாஷா வேணும்னே பன்றாங்க. நான் சரியா தான் பின் பண்ணிவிட்டேன். ஆனா அவங்க காலால கீழ இழுத்து விட்டுக்கறாங்க…” என்று சொல்லி புலம்ப ஆரோனும், நடாஷாவுடன் வந்துவிட்டான்.
“ரெடி ஸார்…” என்று சொல்ல நடாஷாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம் இருந்தாலும் சிறு ஏமாற்றம் தான்.
ஆரோன் எப்பொழுதுமே அப்படித்தான் என்றாலும் அவனின் மனதில் இடம்பிடிக்க முடியாததில் அவளுக்கு வருத்தம் தான்.
மீண்டும் படப்பிடிப்பு துவங்க சின்ன சின்ன விஷயங்களுக்கும் அவள் ஆரோனை அழைத்துக்கொண்டே இருக்க படப்பிடிப்பில் இருந்த அனைவருக்குமே ஒருமாதிரியானது இந்த நிகழ்வு.
“பிரபஞ்சத்து அழகிக்கு ஸ்டெயிலிஷ்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு தான்…” என அங்கே கீழே பணிபுரிபவர்கள் நக்கலாய் சொல்லி சிரித்துக்கொள்ள,
“நீங்க வேற அவருக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. வொய்ப் கூட வந்திருக்காங்க. பேசாம இருங்கப்பா…” என ஒருவர் சொல்ல,
“இதெல்லாம் டார்க் லைட் மேட்டர். அவங்களுக்கு இது ஒரு விஷயமா? வொய்ப் இருந்தா கேர்ள் ப்ரெண்ட் வச்சுக்க மாட்டாங்களா? இப்பலாம் பெஸ்டின்னு பாலிஷ்டா சொல்லிட்டு போயிடறாங்க. அதுவும் நடாஷா ஆரோனை கவர் பண்ணியே தீருவேன்ற மாதிரி என்னென்ன செய்யறாங்க?…” என்று அவர்களுக்குள் சிரித்துக்கொள்ள சௌபர்ணிகா காதிலும் விழுந்தது.
“எவ்வளோ நாள் தான் அவரும் அவாய்ட் பன்றமாதிரியே இருப்பாரு? இன்னும் கொஞ்சநாள்ல இதுவும் மேகஸின்ல கவர்பேஜா வரும். விடுப்பா விடுப்பா…” என்றனர்.
முதல்நாள் போலவெல்லாம் அவளால் எதையும் காண்பிக்காமல் இருக்கமுடியவில்லை.
பரிதவிப்புடன் ஒவ்வொன்றையும் பார்த்தவளுக்கு இந்த பேச்சுக்கள் வேறு கலக்கத்தை உண்டாக்க உள்ளுக்குள் அவள் கட்டிவைத்த தைரியத்தில் விரிசல் உண்டாக துவங்கியது.
அவளால் அங்கே அமரவே முடியவில்லை. ஆனால் கணவனை விட்டு அகன்று செல்ல மனதும் இடமளிக்கவில்லை.
மனைவியின் மனம் புரிந்தோ என்னவோ ஆரோனின் கவனம் அவளிடம் குவிந்து விலக ஒருவாறு தடுமாறி தான் போனான் அவளின் உணர்வற்ற பார்வையில்.
ஆம், தன்னையறியாமலே சௌபர்ணிகா முகத்தில் வெளிப்படையாக அந்த பதட்டம் வந்தமர்ந்திருக்க முதலில் யோசனையாய் பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
சின்ன சின்ன விஷயங்களுக்கும் விளக்கம் சொல்லி புரிய வைப்பதை விட சிலவற்றை உணர்ந்து தெளிவது தான் நன்று என்று மௌனமாகிவிட்டான்.
இத்தனை நேரத்தில் அவனை அவள் சந்தேகத்துடன் பார்க்கவில்லை. ஆனால் அந்த விழிகளில் வந்துசென்ற தவிப்பு அவனை சுட்டதென்னவோ உண்மை.
படப்பிடிப்பும் ஒருவழியாக நடந்து முடிய அத்தனையையும் உஷாவிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டான் ஆரோன்.
“ரிஷி…” என்று அவளிடம் வந்தவனின் இடையில் ஒரு கையை கொடுத்து அவனை நெருங்கி நின்றவள், அணைத்துக்கொள்ள முடியாமல் அவன் உடையில் அதன் வேகத்தை காண்பிக்க,