“ப்ளீஸ், ப்ளீஸ் ப்ளீஸ் பிபி. நான் சொல்றேன்ல. கிளம்பி வா. உஷாவை உனக்காக தான் அனுப்பியிருக்கேன்…”
“சரி பார்ட்டி எங்க? இந்த ஹோட்டல் தானே?…”
“இல்லம்மா, நைட்க்கு அங்க ஹால் கிடைக்கலை. அதனால வேற ஹால் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. அங்க இருந்து ஒரு ட்வென்டி மினிட்ஸ் ட்ராவல் தான்….”
“ரிஷி உங்களுக்கு ட்ரெஸ்…”
“எப்பவும் ஒரு ரஃப் செட் வச்சிருப்பேன். அது இருக்கு. நீ ரெடியாகி வா. சில்க் ப்யூட்டி ஐம் வெய்ட்டிங்…” என்று அவசரமாய் சொல்லி முத்தத்தையும் அனுப்பி அழைப்பை துண்டிக்க,
“ஓஹ் காட்…” என்றாள் சௌபர்ணிகா.
உஷா வந்துகொண்டிருப்பதாக அவளும் அழைத்து தகவல் சொல்ல உடனே தானும் தயாரானாள்.
தாமரைப்பூ வர்ணத்தில் அடர் நீலவண்ண பாடர் டிஸைனர் புடவையில் தயாராக உஷாவும் வந்துவிட்டாள்.
“சேரி சூப்பர் மேம். ஆனா பார்ட்டிக்கு…” என்றவள் லாங் மேக்சியில் இருக்க கடைசி வார்த்தைகள் சௌபர்ணிகா காதில் விழவில்லை.
“போலாமா?…” என்று கைபேசியை எடுத்துக்கொண்டு தலையசைக்க,
“ஓகே…” என்று சொல்லி உஷா அவளுடன் வந்தாள்.
உஷா செல்லும் வழியில் வீட்டிற்கும், ஆரோனுக்கும் அழைத்து பேசி முடிக்க அதற்குள் இடமும் வந்துவிட்டது.
வெளியில் பார்க்க கலைநயத்துடன் இருக்க உள்ளே நுழைந்ததும் ஒருபுறம் தோட்டம் போன்ற அமைப்பும், இன்னொருபுறம் நீச்சல் குளமும் அதற்கருகே டிஜே மேடையும் சேர்ந்தே இருந்தது.
வண்ணவண்ண விளக்குகளும் மேடையில் சுழன்று ஒளிரும் விளக்கின் அருகில் சிலர் ஆடிக்கொண்டிருக்க வட்டமேஜைகளில் ஆங்காங்கே பலர் அமர்ந்திருந்தனர்.
“டின்னர் பார்ட்டி மட்டுமில்லையா?…” என வாய்விட்டே சொல்லிவிட்டாள் சௌபர்ணிகா.
ஆம், குளிர்பானங்களுடன், உற்சாகபானங்களும் அங்கே பரப்பப்பட்டிருக்க பிரபலங்கள் அதனுடன் கொண்டாட்டமாய் இருந்தனர்.
சௌபர்ணிகாவிற்கு இப்படியே திரும்பி விடலாமா என்றே தோன்றிவிட்டது சிலரை காணும் பொழுது.
“எவ்வளோ நேரம் இங்கயே நிக்க போறீங்க பிபி?…” என்றவன் கைகள் அவளிடையை தழுவியிருக்க,
“ஹேய்….” என்றவள் பின் அவன் என்றதும் முகத்தில் அயர்ச்சியை காண்பித்தாள்.
“என்னம்மா, பயந்துட்டியா?…” என்று சிரித்தவனை சத்தியமாய் முறைக்க மட்டுமே முடிந்தது.
“ப்ச், இதுமாதிரி இன்னொருதடவை அதுவும் இப்படியான இடத்துல பண்ணாதீங்க…” என்னும் பொழுதே கண்கள் சிவந்துவிட்டது அவளுக்கு.
“ஓகே ஓகே, கூல். ஃபீல்ட் பார்ட்டி. கொஞ்சம் அப்படித்தான் இருக்கும். அதனால நார்மலா இரு…” என்றவன்,
“டென்ஷன் பண்ணிட்டேனோ?…” என்றான் அவளிடம்.
“ரிஷி, நான் கிளம்பட்டுமா?…” வேறு எதையும் அவள் பேசவில்லை.
வந்ததும் இப்படி கேட்பவளை என்ன செய்யமுடியும்? அவளின் முகபாவனையே அங்கிருக்க பிடித்தமில்லாததை காண்பித்தது.
“எனக்காக ஒரு பிஃப்டீன் மினிட்ஸ். உன்னை வர சொன்னதே உன்னை வச்சு நானும் கிளம்பிடலாம்ன்னு தான். நாம வெளில போவோம் பிபி….” என்று சமாதானம் செய்து அழைத்து வந்தான்.
அவன் மட்டுமென்றால் இதில் கலந்துகொண்டாலும் பாதியில் கிளம்பிவிடுவது வழக்கம் தான்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம். நேரம் செல்ல செல்ல அங்கிருந்தால் சில வற்புருத்தல்களுக்கு ஆளாக நேரிடும்.
சட்டென முகம் காண்பிக்காதவன் அதனை தவிர்க்கவே விருந்து ஆரம்பித்த சில நிமிடங்களில் கிளம்பிவிடுவது.
இன்று மனைவியை காரணம் காண்பித்து கிளம்புவதாய் இருந்தான் அவன். மறுநாள் மும்பை கிளம்பவேண்டும்.
அதுவரை இருக்கும் நேரத்தில் மனைவியுடன் கழிக்க விரும்பியவன் அங்கிருந்தே வெளியில் செல்லலாம் என்ற திட்டத்தில் இருக்க சௌபர்ணிகா முகம் கண்டு என்னவோ போலானது.
“கொஞ்சநேரம். இது இப்படித்தான் இருக்கும். உனக்கு ஓகே தானே?…” என்று கேட்டவன் முகமே மாறியிருக்க,
“அச்சோ ரிஷி, அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா தான். நாம இருக்கலாம். அதான் நீங்க கூட இருக்கீங்களே?…” என்றாள் சங்கடத்துடன்.
“நிஜமாவா?…”
“நிஜமா. பார்ட்டி எல்லாம் பழக்கம்ன்னாலும் நீங்க சொன்ன மாதிரி இந்த ஃபீல்ட், இந்த டைப் புதுசு தான். அதான் கொஞ்சம் ஒருமாதிரி…” என்றவள்,
“ப்ச், ஓகே. நாம என்ஜாய் பண்ணலாம். வாங்க…” என அவன் முகவாட்டம் பொறுக்காமல் அவனோடு கைகோர்த்துக்கொள்ள மீண்டும் மீண்டும் அவள் முகம் பார்த்தான் ஆரோன்.
“ரிஷி, ப்ளீஸ். இப்போ ஓகே தான்…” என உள்ளே இழுத்துக்கொண்டு வர கலவையான நெடி அவள் நாசியை நிரடியது.
ஒருவாறு சமாளித்தபடி உள்ளே வந்து ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டனர் இருவருமே.
உஷாவும் அடுத்த மேஜையில் சென்று அமர அவளின் தோழிகள் சிலர் வந்துவிட என்று களைகட்டியது.
காதை இறைக்கும் சப்தத்துடனான பாடல்களும், அதற்கேற்ப ஆட்டமும் அங்கே அதிகமாக,
“சாஃப்ட் ட்ரிங்ஸ் எடுத்துட்டு வரேன்டா. இரு…” என்று ஆரோன் எழுந்து செல்ல,
“ஓகே…” என்று சொல்லிவிட்டாள்.
மறுக்க மனமில்லை. அவனுக்காக, அவன் ஒருவனுக்காக அவள் இருக்க விழாவின் முக்கிய விருந்தாளிகள் வந்ததும் ஒவ்வொருவரும் மேடையில் ஏறி தங்கள் அனுபவங்களை, அங்கு நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.
சிலவை கேட்க சுவாரஸியமாகவும், நகைசுவையாகவும் இருந்தாலும் சிலவற்றில் முகம் சுளிக்கத்தான் செய்தாள்.
ஆரோன் முகத்தில் அப்படி எந்த உணர்வும் இல்லை. எப்போதும் போல அவன் புன்னகைத்தபடியும், கைதட்டி கூச்சல் எழுப்பியபடியும் இருந்தவன் மனைவியின் பார்வையில்,
“பழகிருச்சு. இதுக்கெல்லாம் ரியாக்ட் ஆகலாமா?…” என்றான் அவள் பார்வையின் பொருள் உணர்ந்து.
“ஹப்பா மனசுக்குள்ள நினைக்க கூட முடியலை…” என்று தலையசைத்துக்கொண்டாள் சௌபர்ணிகா.
“யாரை நினைக்க?…” என்றவன் கண்சிமிட்ட ‘உதை’ என்பதை போல பார்த்தவள்,
“சும்மா ரஃப்க்கு எடுத்துவச்ச ட்ரெஸ் கூட பார்த்து பார்த்து வைப்பீங்களோ? ராயல் லுக்….” என்று அவன் அணிந்திருந்த உடையை பாராட்டுதலாக சொல்ல,
“வாவ்…” என்றவன் மொத்த கவனமும் மனைவி பக்கம்.
“ஹலோ அங்க பாருங்க ஸ்டெயிலிஷ். இப்படி திரும்பி என்னையே பார்த்தா?…” என்றவள் அவன் கன்னம் பற்றி மேடை பக்கம் திருப்ப,
“பொண்டாட்டி பாராட்டெல்லாம் எப்பவாச்சும் தான் கிடைக்கும். ஆமா இதுக்கு பரிசும் உண்டு தானே?…” என கேட்டவன் கண்கள் வெளிப்படுத்திய ரகசிய சம்பாஷணையில் சிவந்து போனாள் சௌபர்ணிகா.
“ரிஷி, ப்ளீஸ். இங்க வச்சு என்னது?…” என திரும்பிக்கொள்ள அதற்குள் அங்கு வந்திருந்தவர்கள் ஆரோனிடம் வந்து பேச ஆரம்பித்தனர்.
ஒவ்வொருவரிடமும் மனைவியை அறிமுகம் செய்து வைத்தபடி அங்கேயே இருந்தான் ஆரோன்.
“எல்லாரும் ஈவன்ட்க்கு வந்திருந்தவங்க. இந்த பார்ட்டிக்காக தான் வெய்ட்டிங்…” என்றான் அவளிடம்.
“ஓஹ்…”
“என்ன ஓஹ்? அவ்வளோ ஈஸியா போச்சு உனக்கு. ஆனா இங்க இருக்கற செலிப்ரட்டீஸ் ஒவ்வொருத்தவங்களுக்கும் அவங்களோட ப்யூச்சரை தீர்மானிக்கிற பார்ட்டி. சிலருக்கு க்ளிக்காகும், சிலருக்கு இந்த பார்ட்டியோடவே முடிஞ்சிரும்…” என்று சொல்ல சௌபர்ணிகா மௌனமாய் பார்த்தாள்.
“என்னவாம்?…” அவன் தலையசைக்க,
“புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு….” என்று சொல்லிக்கொண்டிருக்க இன்னும் சில திரைத்துறை பிரபலங்கள் அங்கே வர துவங்கினார்கள்.
“அங்க இருக்காங்களே அவங்க யாருன்னு தெரியுதா?…” என்று ஒரு பெண்ணை ஆரோன் காண்பிக்க,
“டிவி ஆர்ட்டிஸ்ட். மாடலிங் கூட பன்றாங்கன்னு நினைக்கறேன்…”
“எக்ஸாட்லி. அவங்க பக்கத்துல நிக்கிறது தெலுங்கு மூவி ப்ரடியூசர். கூட நிக்கிறது ரெண்டு மூவி மட்டும் பண்ணியிருக்கற வளர்ந்து வர ஹீரோ. அவங்க கூட எல்லாம் இப்படியான பார்ட்டில வாய்ப்புக்காக அறிமுகமாகிப்பாங்க. இது ப்ரெண்ட்ஷிப், இல்லை அதுக்கும் மேல. எதுவானாலும் இருக்கலாம்…” என்றவன்,
“அதுக்காக தான் அடிக்கடி பெரியளவுல இப்படி பார்ட்டீஸ் நடக்கும். இதுக்குன்னு தனி ஆர்கனைஸர்ஸ் இருப்பாங்க. இதுல மிகப்பெரிய அமௌண்ட் இன்வெஸ்மெண்ட் இன்னும் எக்ஸட்ரா, எக்ஸட்ரா இருக்கு. இப்ப எனக்குமே இது மூலமா இன்னும் நிறைய வாய்ப்பு கிடைக்கும். ஆல்மோஸ்ட் நான் வளர்ந்திருந்தாலும் வாய்ப்பு இல்லைன்னா நோ புவ்வா இல்லையா?…” என புன்னகைத்தான்.