இத்தனையிலும் அவள் ஒருவார்த்தை கூட சௌபர்ணிகாவிடம் பேசவில்லை. ஆனால் புன்னகைத்து தலையசைத்தாள்.
“கமான் ஆரோன். உன் டான்ஸ் இல்லாம பார்ட்டி எப்படி ஃபுல்ஃபில்லாகும்? பாரு மேம் கூட கூப்பிடறாங்க…” என அந்த முன்னணி கதாநாயகியை காண்பிக்க அவரும் மேடைக்கு அழைத்தார் ஆரோனை.
“ஓகே, டூ மினிட்ஸ்…” என்று அவளை அனுப்பியவன்,
“ஞாபகமிருக்கா, நீ என்னை கிஸ் பண்ணின அன்னைக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு வந்தவங்க…” என்று சொல்ல,
“அவங்க திரும்ப கூப்பிடறாங்க…” என சௌபர்ணிகாவும் கூறினாள் அங்கே பார்த்துக்கொண்டே.
அதற்குள் மைக்கில் ஆரோனின் பெயரை சொல்லி அழைக்க அத்தனைபேரும் கைதட்டி வரும்படி அவனை நெருக்கினர்.
“ப்ளீஸ், போங்க. இல்லைன்னா என்னவோ நான் தான் நோ சொன்னதா நினைக்க போறாங்க…” என்று சௌபர்ணிகா சொல்ல,
“ஓகே வந்திடறேன்…” என்று சொல்லியவன்,
“உஷா, பார்த்துக்கோ…” என்று அவளையும் மனைவியுடன் அமர வைத்துவிட்டு எழுந்து சென்றான்.
முழுக்கை சட்டையின் கைகளை முட்டிவரை ஏற்றிவிட்டவன் மேடையில் ஒற்றை கையை ஊன்றி தாவி ஏறியவன் முகமெல்லாம் ஆர்ப்பரிப்பும், சந்தோஷமும்.
“ஸ்டெப்ஸ்ல ஏறி போனா ஆகாதோ?…” என்று புன்னகைத்தாள் சௌபர்ணிகா.
ஆரோன் திரும்பி பார்த்து கையசைக்க அதனை தனது போனில் வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்தாள்.
அவ்விடத்தில் ஆரோனின் சந்தோஷமே வேறுவிதமாய் இருக்க ஒவ்வொன்றும் அவள் ரசனைக்குள் அழகாய் சென்று அமர்ந்தது.
“பாஸ் எப்பவுமே டான்ஸ்ல கலக்கல் தான் மேம்…” என்றாள் உஷா.
“அதான் விடாம டான்ஸ் பண்ண கூப்பிடறாங்களோ?…” என்றவள் மீண்டும் மேடையை பார்க்க, பிரஷாந்திகா இப்போது ஆரோனின் கையை பிடித்து சுழன்று திரும்ப சட்டென அலைபாய்ந்த மனதை நிதானப்படுத்த ஆரம்பித்தாள் சௌபர்ணிகா.
இடையில் நடாஷா வேறு அவனருகில் வரவும், நிலையாய் நிற்க முடியாமல் தள்ளாடுவதுமாக இருக்க இங்கே இவளுள்ளம் தவிப்பில் உழல ஆரம்பித்தது.
இதுவரை அவரவர்கள் லேசாய் கையை பிடித்தபடி ஒரு விலகலுடன் ஆடிக்கொண்டிருக்க பிரஷாந்திகாவின் இந்த திடீர் நெருக்கத்தை சௌபர்ணிகா மட்டுமல்லாது ஆரோனும் எதிர்பார்க்கவில்லை.
நாசூக்காக அதனை தவிர்த்தவன் சிரித்துக்கொண்டே இரு கைகளையும் உயர்த்தி தட்டியபடி கையசைத்துவிட்டு கீழே இறங்கிவிட்டான்.
“ஆரோன்…” என்ற கூச்சல்களில் திரும்பி போதுமென கையசைத்துவிட்டு மூச்சுவாங்க வந்தமர்ந்தான் அவன்.
“நோ பாஸ். நான் ரூம்க்கு போறேன்…” என மறுத்துவிட்டாள்.
“ஓகே, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன். கிளம்பிடலாம். நாங்க போகும் போது உனக்கும் ஒரு கேப் பிடிச்சு அனுப்பிடறேன்…”
“நோ பாஸ், நான் பார்த்துக்கறேன்…” அவள் மறுக்க,
“ம்ஹூம், நீ தனியா போகனும். இல்லைன்னா நானே ட்ராப் பண்ணிட்டு போறேன். என்ன சௌபர்ணிகா?…” என்று மனைவியிடம் கேட்க,
“நாமளுமே ரூம்க்கு போவோமே ரிஷி…” என்றாள் அவள்.
“ஓஹ் வாவ், ரியலி. வித் ப்ளஷர்…” என்றவன் உல்லாசமாய் அவளின் கன்னத்தை கிள்ள,
“யூ…” என்று அவன் கையை தட்டிவிட்டு உஷாவை பார்க்க,
“பார்த்தாலும் பார்த்தேன்னு சொல்லமாட்டேன் மேம்…” என்றவள் போனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு பேச ஆரம்பித்துவிட்டாள்.
“ரிஷி…” என்று சௌபர்ணிகா முறைக்க,
“ஓகே ஓகே கூல். இந்த ஆப்பிள் ஜூஸை குடிச்சிட்டே இரு ம்மா. இப்ப வந்திடறேன்…” என்றான்.
அவன் செல்லவும் சிரிப்புடன் அதனை பருகியபடி அவனை பார்வையால் அவள் பின்தொடர அங்கே அவன் பின்னால் சென்றவளை பார்த்தவள் புருவங்கள் இடுங்கியது.
ஆரோன் சென்ற திசை நோக்கி நடாஷா செல்ல, சௌபர்ணிகா உஷாவை திரும்பி பார்க்க அவள் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.
கைகளை டிஷ்யூவினால் துடைத்தபடி வெளியே வந்த ஆரோனிடம் நடாஷா வழிமறித்து என்னவோ பேச, அவன் பதில் சொல்லி விலக என்று பேச்சுவார்த்தையில் இருக்க சௌபர்ணிகா அப்படியே எழுந்து விரைந்துவிட்டாள்.
“ப்ளீஸ் ஆரோன் இன்னைக்கு நைட் என்னோட ஸ்டே பண்ணு மேன். ஓஹ் காட், யூர் லுக்கிங் ஸ்டன்னிங்…” என்று அவனின் சட்டையை பிடித்திருந்தவள் இன்னும் நெருங்கி இதழ்களில் முத்தமிட பார்க்க ஆரோன் பிடித்து தள்ளும் முன்,
“யூ ப்ளடி…” என அவர்களை நெருங்கிவிட்ட சௌபர்ணிகாவின் காதில் அவளின் பேச்சுக்கள் நாராசமாய் விழ, நொடியில் தன்புறம் திருப்பி அறைந்துவிட்டாள் சௌபர்ணிகா.
“ஹேய்ய்…” என்ற நடாஷாவின் கோபக்குரல் சௌபர்ணிகாவை எச்சரித்ததோடு அவள் தடுமாறி கீழே விழ பார்க்க ஆரோன் பிடித்து நிறுத்தியவன்,
“என்ன பன்ற நீ?…” என்றான் மனைவியிடம் கோபமாய்.
“ஆரோன் மை மேன்…” என்று போதையில் நிற்கமாட்டாமல் அவன் மீதே அவள் சாய, தள்ளி நின்றவர்களை யாரும் பார்க்க கூடிய நிலையும் அங்கில்லை.
சௌபர்ணிகா பார்வை எல்லாம் ஆரோனின் மேல் இல்லவே இல்லை. அவன் தாங்கி பிடித்திருந்த நடாஷாவின் மேலிருக்க, தன் கையிலிருந்த காலி கண்ணாடி தம்ளர் சௌபர்ணிகா கையின் இறுக்கத்தில் பட்டென்று நொறுங்கியது.
சிலீர் என்ற சத்தத்தில் மனைவியின் கைகளை பார்த்தவன் முகமும் கோபத்தில், பதட்டத்தில் தகிக்க,
“ஹேய் என்னடி பன்ற?…” என்றான் பதட்டமாய்.
“அவளை கீழ விடுங்க ரிஷி…” என்று பல்லை கடித்தாள் சௌபர்ணிகா.
“அவங்க நார்மலா இல்லை சௌபர்ணிகா. புரிஞ்சுக்கோ. நீ போய் உஷாவை வர சொல்லு…” என்றான் பொறுமையாக.
“கீழ விடுங்கன்னு சொல்றேன்ல…” என்று இன்னும் குரலை உயர்த்தினாள் சௌபர்ணிகா.
இந்தநிமிடம் கூட ஆரோன் நடாஷாவின் எண்ணம் புரிந்தாலும் அவளுக்கு உதவ நினைக்க, அவள் அணுகுமுறை அப்படி இல்லையே.
தன் கண் முன்னே கணவனை ஆசையுடன் தழுவியதோடு அவள் கைகள் அவனில் போதை கொண்டு அலைபாய இருந்த கொஞ்சநஞ்ச பொறுமையும் பறந்திருந்தது சௌபர்ணிகாவிற்கு.
“விடுங்கன்னு சொல்றேன்ல…” என்று கண்ணாடி குத்திய கையுடன் மீண்டும் ஒரு அறை நடாஷாவின் முகத்தில்.
அது நடாஷா கன்னத்தை பதம் பார்க்க இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை ஆரோன் ரிஷபன்.
“சௌபர்ணிகா…” என்றவன் கர்ஜனையில் அப்படி ஒரு ஆக்ரோஷம்.