“நீங்க அவளுக்கு அண்ணன். உங்களுக்கு தெரிய வேண்டாமா?…”
“தெரியவேண்டிய அவசியம் இருந்தா கண்டிப்பா தெரியவரும். இப்ப நீ பேசாம சாப்பிடு…” என்றவன் அதட்டலில் வாயை மூடிக்கொண்டாள் சந்தனா.
சபர்மதி அறைக்குள் சௌபர்ணிகா நுழைந்ததுமே அங்கிருந்த வடிவமைப்பு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டாள்.
“ஏதாவது புது டிஸைன் தோணுதாம்மா?…” என்று கேட்டு சோபாவில் அமர,
“உனக்கு எதாவது அம்மாக்கிட்ட சொல்லனுமா சௌபி?…” என மகளை ஆழ்ந்து பார்த்தபடி அவளின் தோளில் கை வைக்க திடமாய் தன்னை காண்பித்துக்கொண்ட சௌபர்ணிகா விழிகள் அலைப்புறுதலை வெளிப்படுத்தியது.
என்னவோ மனதிற்குள் சிறு சலனம் சஞ்சலம் பூண்டிருக்க தானே அதன் வகையை பிரித்தறியாத பொழுதில் தாயிடம் என்ன சொல்லிவிட முடியும்?
அவளுக்கு அதனை சொல்வதிலும் விருப்பமில்லை. சாதாரண நினைவாய் அவனை கடக்க நினைத்தவள் மனது கனத்தது.
‘ப்ச், இந்த நினைவே தவறு’ என மனதை அடக்கி அவனை முற்றிலுமாய் விரட்ட முனைந்தாள்.
விருப்பமாய் என்று நிச்சயம் இல்லை. ஆனால் ஏதோ ஒருவகையில் அவன் பாதிக்கிறான் என்று மட்டும் புரிந்தது.
‘பிடிக்காது, பிடிக்கவே செய்யாது’ இதுதான் அவன் மீது ஆரம்பத்தில் இருந்து அவளின் அபிப்ராயம்.
இப்படி இதையே நினைத்து விருப்பமில்லாமல் கூட அவன் நினைவு வேண்டாம் என்று அதிலிருந்து விலக நினைக்க தாய் கேட்டதும் மீண்டும் மனதிற்குள்ளிருந்து குதித்தெழுந்து கண் சிமிட்டினான் ஆரோன் ரிஷபன்.
‘வாட் நான்சென்ஸ்? சௌபி நீ இவ்வளோ வீக் பெர்சனாலிட்டி இல்லையே’ என தன்னையே வன்மையாக கடிந்துகொள்ள,
“ம்மா எதுவும் இல்லை. என்னவோ கொஞ்சம் டென்ஷன். சரியா தூக்கமும் இல்லையா? அதான்…” என சொல்லி அதற்கு மேல் அவர் கேட்டால் எதையும் சொல்லிவிடுவோமோ என மடியில் சாய்ந்துவிட்டாள்.
“ஒரு டென் மினிட்ஸ்…” என்று கண்ணை மூடிக்கொள்ள,
“ஓகே, தூங்கு…” என்றவர் மகளின் கையை வருடிவிட ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் சீரான சுவாசத்துடன் மகள் உறக்கம் கொண்டிருக்க சபர்மதியின் பார்வை அவளின் இடதுகை மணிக்கட்டில் போடப்பட்டிருந்த தையலில் பதிந்தது.
அன்றையநாள் தன் வாழ்நாளில் மட்டுமல்ல, மகளின் வாழ்நாளிலும் மறக்கமுடியாத ஒன்றாகிற்றே.
மனதை அழுத்தும் பாரம் வெளிவராமல் இருக்க உதட்டை கடித்தபடி இன்னும் இறுக்கமாகிய சபர்மதியின் விரல்கள் அவரறியாமலே மகளின் மணிக்கட்டை அழுத்தமாய் பற்றியது.
“ஸ்ஸ் ம்மா…” என்றவள் கண்ணை திறந்துவிட,
“என்னடா? என்னாச்சு?…” என்றார் சபர்மதி.
“ஹாங், ஒண்ணுமில்லை. நான் என் ரூம்க்கு போறேன் ம்மா. குட் நைட்…” என்று சொல்லி எழுந்துகொள்ள,
“வேணும்னா நீ அம்மாவோட தூங்கேன் சௌபி…” என்றார் சபர்மதி.
“இல்லம்மா, நீங்க தூங்குங்க. எனக்கு ப்ரீயா தூங்கனும். ப்ளீஸ்…” என்று சொல்லி தன்னறைக்கு வந்துவிட்டாள் சௌபர்ணிகா.
உடை மாற்றி இரவு உடையில் வந்து கட்டிலில் விழுந்தவள் கண்கள் தனது மணிக்கட்டை வெறித்து பார்த்தது.
மகள் சென்றுவிட்டாலும் சபர்மதிக்குமே அன்றைய நாளில் தாக்கம் இன்று அதிகமானது. இருவரின் நினைவுகளும் அந்த நாளுக்கே சென்றது.
அந்த தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்துகொண்டிருக்க வகுப்பாசிரியர் மாதிரி தேர்வு வைத்திருந்தார்.
இன்னும் சில நாட்களில் பொது தேர்வு இருக்க பிள்ளைகளின் கவனம் முழுக்க படிப்பில்.
அன்றைய மாதிரி தேர்வுகள் எழுதி முடித்ததும் பிள்ளைகள் தாங்கள் எழுதிய கேள்விக்கான பதில்கள் சரியா, தவறா என விவாதத்தில் தனித்திருக்க, இன்னும் சில பிள்ளைகள் பொது தேர்வில் பார்த்துக்கொள்ளலாம் என கவலையின்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.
“சௌபர்ணிகா…” என்ற ஆசிரியரின் அழைப்பில் அவள் வேகமாய் அங்கே செல்ல,
“இந்த பேப்பர்ஸ் எல்லாம் நான் கரெக்ஷன் முடிக்க முடிக்க கரெக்ட்டா அரேஞ்ச் பண்ணி வை. மறக்காம டோட்டல்ஸ் செக் பண்ணு….” என்று சொல்லவும்,
“ஸார் வீட்டுக்கு கிளம்ப எனக்கு கார் வந்திருமே…” என்றாள் அவரிடம் தயக்கமாக.
“அதனால என்னம்மா? வந்தா வெய்ட் பண்ணுவாங்க. இன்னும் டைம் இருக்கே…” என்று சொல்லியவர்,
“உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கிளம்பிட்டாங்களா?…” என்றார் அவளிடம்.
“ஸ்கூல் பஸ் வந்திரும். இப்ப கிளம்பிருவாங்க…”
“ஓஹ், அதான் தனியா இருக்க பயமா இருக்கா? நான் தான் இருக்கேனே? உன்னை அனுப்பிட்டு தான் நான் போவேன்…” என்று எழுதிய வினாத்தாள்களில் ஒன்றை உருவினார்.
சௌபர்ணிகாவின் வகுப்பு தோழிகளில் ஒரு பெண் வந்து வகுப்பறையில் பார்க்க,
“என்னம்மா?…” என்றார் விநாயகம்.
“ஸார் சௌபி கார் வந்திருச்சு…” என்று அந்த பெண் சொல்ல,
ஆசிரியர் அதட்டி சொல்ல அந்த பெண்ணும் இன்னும் நின்று சௌபர்ணிகாவை தான் கேள்வியாய் பார்த்தாள்.
“நான் கிளாஸ் ரூம்ல ஸார் கூட இருக்கேன்னு சொல்லிரு…” என்றாள் சௌபர்ணிகாவுமே.
“சரி…” என்று அவள் கிளம்பி செல்ல பத்து நிமிடத்தில் ஆங்காங்கே இரைந்துகொண்டிருந்த பள்ளியின் சத்தம் அடங்கியது.
“இது உன் ஆன்ஸர் பேப்பர் தானே சௌபர்ணிகா…” என்ற விநாயகம் திடுமென்று அவளின் கையை பிடித்து தன்னருகே நிறுத்தி இழுக்க ஒரு நொடியில் வெலவெலத்து போனாள் சௌபர்ணிகா.
விநாயகமும் பிடியும், அவர் தொட்ட இடமும் அவளை திடுக்கிட செய்ய ஒரு நிமிடத்தில் வியர்த்துவிட்டது.
அச்சம், கூச்சம், அதிர்வு எல்லாம் ஒரு நொடி தான் சௌபர்ணிகாவுக்கு. சட்டென்று அவள் பார்வை கூர்மை பெற,
“உன்னை தான் கேட்டேன். உன் பேப்பர் தானே? என்ன எழுதியிருக்க நீ?…” என்றார் விநாயகம் மீண்டும் விலகி நின்றவளை அருகில் இழுக்க முயன்று.
“பார்த்தா தெரியுமே ஸார். கேள்விக்கு விடை எழுதியிருக்கேன்…” என பல்லை கடித்துக்கொண்டு கூறியவள் மனதிற்குள் தாயின் குரல்.
‘தப்புன்னு பட்டா தயங்கவே செய்யாத சௌபி. சட்டுன்னு கேட்டுட்டு. யாரா இருந்தா என்ன? அம்மா இருக்கேன்’ என்ற அந்த குரல் அவளுள் எழுந்தது.
அவளின் பார்வையின் தீர்க்கத்தில் விநாயகம் மொத்த பல்லையும் காட்டினார் அவளிடம்.
“என்னம்மா, நான் சட்டுன்னு கையை பிடிச்சதும் பயந்துட்ட போல?…” என பேச்சை மாற்றியவர் அவள் இன்னும் முறைத்து பார்க்க,
“இப்ப என்ன சௌபர்ணிகா? நான் உன்னோட அப்பா மாதிரி ம்மா. இந்த வயசுலையே என்ன இவ்வளோ ரூட்? கிளாஸ் டீச்சர்ன்ற மரியாதை இல்லாம முறைக்கிற?…” என்றவர் மீண்டும் அவளை தொட முயல,
“என்னோட அப்பா என் வீட்டுல இருக்காங்க ஸார். வெளில எனக்கு அப்பா தேவை இல்லை. டோண்ட் டச் மீ…” என்றாள் அவரின் கையை உதறிவிட்டு.
“ஏய் என்ன? பேச்செல்லாம் திமிரா இருக்கு?…” என்று சொல்லி சட்டென எழுந்து பாய்ந்து சௌபர்ணிகா கரத்தை பற்றியவர் அருகில் இழுக்க,