“ஓஹ், எனக்கு ஞாபகமில்லை…” என்று ஒற்றை வார்த்தையில் அவள் முடிக்க சபர்மதியின் புருவம் உயர்ந்தது.
“இன்விடேஷன் உனக்கு தான் தந்ததா இஷாந்த் சொல்றான். நீ ஞாபகம் இல்லைன்னு சொல்றியே?…” என்றவரிடம் பதில் சொல்ல முடியாமல் ஒரு நொடி திகைத்தவள்,
“ஆமாம்மா, இப்ப தான் ஞாபகம் வருது. அதை நான் மறந்தே போய்ட்டேன்…” என்று இதழ்கள் மேல் வியர்வை முத்துக்கள் படர அவள் சொல்ல அதையும் சபர்மதியால் நம்ப முடியவில்லை.
‘சின்ன சின்ன விஷயத்தையும் மறவாமல் ஞாபகம் வைத்திருப்பவள் இதை மறக்கிறாளா?’ என ஆச்சர்யமாய் பார்த்தார்.
“அது,, அன்னைக்கு நான் டென்ஷனா வேற இருந்தேன். அதான் சுத்தமா மறந்துட்டேன்…” என மீண்டும் அதனை வலுவாக சொல்ல அதுவே சபர்மதியின் ஆச்சர்யத்தை அதிகப்படுத்தியது.
தன் பெண் இப்படியெல்லாம் நியாயப்படுத்தமாட்டாளே? ‘புரிந்துகொண்டால் புரிந்துகொள். விளக்கம் எல்லாம் தரமுடியாது’ என இருப்பவள்.
“சரி சரி, எதுக்கு இவ்வளோ சொல்ற நீ? மறந்துட்ட தானே? இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளோ விளக்கமா? விடு. கிளம்பலாமா?…” என கேட்டவர் சௌபர்ணிகா அமைதியில்,
“காபி குடிப்போமா சௌபி?…” என்றார் மகளிடம்.
“ஹ்ம்ம் ம்மா…” என்றவள் ஒரு நாளிதழை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
விழிகள் எழுத்தில் பதியவே இல்லை. அன்று காலையிலேயே அவன் விழாவிற்கு அழைத்தது ஞாபகம் வந்தது தான்.
அதற்காக சென்றுவிட முடியுமா? அதுவுமில்லாமல் இனி அவனை பார்க்கவே கூடாதென்னும் முடிவில் இருந்தாள்.
தன்னுடைய மனதின் திசையே மாறுவதை போலிருந்தது. எண்ணங்கள் அவனை சூழ அதை புத்தி விரும்பவில்லை.
இந்த நினைவுகளை ஆரம்பித்திலேயே விரட்டியடிக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தவள் மனது அதிலிருந்து மீள நினைத்தது.
சபர்மதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கவும் கூட வேறு எதிலாவது கவனம் செலுத்தினால், வெளியில் சென்றால் என்ன என்ற எண்ணத்தில் தான் உடனே சம்மதித்தது.
பெரும்பாலும் இப்படி அவள் எப்போதாவது தான் செல்வது. இன்று இருந்த மனநிலைக்கு உடனே சரி என்றுவிட்டாள் சௌபர்ணிகா.
காபி வரவும் அதனை அவள் குடிக்க ஆரம்பிக்க மகளின் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தார் சபர்மதி.
அவரின் பார்வை தன் மீது இருப்பதை கூட சௌபர்ணிகாவின் அகக்கண் உணரவில்லை.
இதுவும் சபர்மதியை வியக்க வைத்தது. இந்தளவுக்கு மகள் கவனிக்காமல், உணராமல் இருக்கமாட்டாளே என்று பார்த்தார்.
மனதிற்குள் ஒருவித ஏக்கம். மகளுக்கு இருபத்தைந்து வயதாகிவிட்டது. திருமணம் பற்றி பேச்செடுத்தால் பட்டுக்கொள்ளாமல் பேசுகிறாள் என்ற கவலையில் இருந்தார் சபர்மதி.
அவளை வற்புறுத்தவும் முடியவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என நினைத்தவர் இப்போது இந்த மாற்றம் எதனால் என யோசித்தார்.
“ஹ்ம்ம், போகலாம் ம்மா…” என சௌபர்ணிகா எழுந்துகொள்ள,
“இல்லம்மா, சௌபி பார்க்கட்டும். அதுதான் சரியா இருக்கும். அவ பேசிட்டு முடிவெடுக்கட்டும். வேலை தரலாம்ன்னா முதல்ல அவளோட பிராஞ்ச்ல ட்ரெயினாகட்டும்…” என்றும் சொல்லி அவன் சிரிக்க,
“எவ்வளோ சேட்டை உனக்கு? உன்னை விட சின்ன பொண்ணு அவ…” என்று சபர்மதி மகனை கடிந்துகொள்வதை போல கிண்டல் பேச,
“என்ன செய்ய? அவ உங்களை மாதிரியே இருக்காளே? நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. இல்லைன்னா நாளைக்கு எதாச்சும் சின்ன தப்பு நடந்துச்சு என்னை உண்டில்லைன்னு பண்ணிருவா உங்க பொண்ணு…” என்று பேச்சில் தங்கையை வம்பிழுத்தான்.
“பார்த்தியா சௌபி? இவனை என்னனு கேளு…” என மகளை அழைக்கவும்,
“முதல்ல அண்ணனுக்கு தான் ட்ரெய்னிங் தேவை. பேசாம என் பிராஞ்ச்ல ரெண்டு மாசம் இருக்க சொல்லுங்க…” என சௌபர்ணிகாவும் அவர்களுடன் கலந்துகொள்ள,
“நானே பாவம். சந்தனாவுக்கு தெரிஞ்சா இதை கேட்டதுலையே மயங்கிருவா. அவளுக்காகவாச்சும் விட்டுடுமா…” என்று சிரித்தான்.
பேச்சுக்களுடன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். மாலை மயங்கி லேசாய் இருள் சூழ்ந்துவிட்டது.
கடற்கரையை ஒட்டி மிகப்பெரிய பார்ட்டி ஹாலில் ரிசப்ஷன் நடக்கவிருக்க, அதனருகில் ஆரோன் ரிஷபனின் ஈவன்ட்.
“ஓகே ம்மா. நீங்க ரிசப்ஷன் முடிச்சுட்டு கால் பண்ணுங்க. நானும் வந்திடறேன். ரொம்ப பக்கம். வாக்கபிள் டிஸ்டன்ஸ் தான் போல….” என்றவன் அவர்கள் இருவரும் இறங்கவும் கிளம்பினான்.
இஷாந்த் இடத்தை காண்பித்து காரை நகர்த்திய தூரத்தில் வண்ண விளக்குகளால் மிகப்பெரிய போர்ட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
சௌபர்ணிகாவின் விழிகள் அதில் சில நொடிகள் பதிந்து விலகியது. அவனை பார்க்க வேண்டாம் என்று நினைத்தவள் மனது அவளறியாமலேயே அவனின் உருவம் தென்படுகிறதா என தேடலை துவங்க திடுக்கிட்டு போனாள்.
‘ஷிட் என்ன பன்றேன் நான்?’ என தன்னையே நிந்தித்துக்கொண்டு தடதடக்கும் இதயத்துடன் பார்வையை முயன்று திருப்பிக்கொண்டாள் சௌபர்ணிகா.
இரவு நேர விளக்கொளியும், கடற்கரை காற்றும் ரம்யமாய் இருந்தது. தாயும் மகளுமாய் உள்ளே நுழைய அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்றனர் அந்த குடும்பத்தார்.
உள்ளே சென்ற பின்னர் தான் மூச்சே விடமுடிந்தது அவளால். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வந்து பேசியவர்களிடம் என்ன பேசினோம், எதுவும் நினைவில்லை.
அந்த நிகழ்ச்சியில் லயிக்க முடியாமல் பேஷன்ஷோ சப்தம் உள்ளே வரை கேட்டு அவளை இம்சித்தது.
அரைமணி நேரம் கூட அமரமுடியாமல் தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வில் மனது எதிலிருந்தோ போராட துவங்க மேலும் தாயின் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.
ஒருமணி நேரம் சென்றுவிட்டது. அந்த மணப்பெண்ணுக்கு தங்களின் கடையில் தான் புடவை எடுத்திருந்தனர்.
ஒவ்வொருவரும் வந்து அதை பற்றி பாராட்டி பேசி புகழ்ந்து தள்ள, சபர்மதி சிறு புன்னகையுடன் மகளை தான் காண்பித்தார்.
“டிஸைன் எல்லாமே என் பொண்ணு தான்…” என அவளை முன்னிறுத்தி பெருமிதம் கொள்ள அதை அனுபவிக்கவும் முடியவில்லை.
யாராவது வந்து நின்று பேசிக்கொண்டே தான் இருந்தனர் அவர்களிடம். தெரிந்தவர்களும் வந்து விசாரித்து செல்ல உணவருந்தும் நேரமாகிவிட்டது.
சபர்மதியிடம் இன்னும் சிலர் வந்து பேசிக்கொண்டிருக்க சௌபர்ணிகா அவர்களோடு நிற்க முடியாமல்,
“ஓகே டா, நான் பேசிட்டு வரேன்…” என அவரும் மகளை அனுப்ப வெளியில் வந்துவிட்டாள் சௌபர்ணிகா.
இரவு நேர குளிர்ந்த காற்று, அலையின் ஓசை மெல்லிய இரைச்சலாய், இதனை எல்லாம் சேர்த்து மிதமான சப்தமாகியிருந்த இசை.
மெல்ல மெல்ல கால்கள் அங்கே செல்ல இரு பகுதிக்கும் இடையிலான இடத்தில் வந்து நின்றவள் அமைதியாய் வேடிக்கை பார்த்திருந்தாள்.
அநேக வாகனங்கள் அவ்விடத்தில் செல்வதும், வருவதுமாய் இருக்க இத்தனை சப்தத்திலும் மனது அமைதி இல்லாமல் தவித்தது.
இன்னும் எத்தனை நேரம் இங்கேயே நிற்க முடியும் என்று நினைத்தவள் உள்ளே செல்லும் முன் அதோ அங்கே வெண்ணிற சட்டையும், அதற்கு மேல் சாம்பல் வர்ண கோட்டும் அணிந்திருந்தவன் யாரையோ கை குலுக்கி வழியனுப்ப வந்தான்.
அருகில், மிக அருகில் தான் சௌபர்ணிகா நின்றிருக்க ஆரோன் ரிஷபன் பார்வை சௌபர்ணிகாவை பார்த்தாலும் அறிமுகப்பார்வையை செலுத்தவில்லை.