நிகழ்ச்சி முடிந்து வீடு வந்த சௌபர்ணிகா எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள்.
சபர்மதிக்கு மகளிடம் என்னவோ மாற்றம் என்று புரிந்தாலும் அவளின் அலைப்புருதலில் அதிகம் தலையிடாமல் இருந்துகொண்டார்.
எப்படியும் தன்னிடம் சொல்லிவிடுவாள். தானாய் தெளிந்து மீண்டு வரட்டும் என்று நினைத்தவர் மகளை கவனியாமலும் இல்லை.
“இஷாந்த் சௌபியை அப்பப்போ பார்த்துக்கோ. ரொம்ப டயர்டா இருக்கா…” என மேலோட்டமாய் தாய் சொல்ல,
“கண்டிப்பா ம்மா…” என்றான் அவன்.
“என்ன டயர்ட்? எதுவுமே இப்பவும் சொல்லலை உங்ககிட்ட. எனக்கொண்ணும் வித்தியாசம் தெரியலையே?…” என வழக்கம் போல சந்தனா இடையிட,
“அம்மா சொன்னா காரணமிருக்கும். வேணும்னா நீ போய் கேட்டுட்டு வாயேன்…” என்று இஷாந்த் அவளை கோர்த்துவிட,
“எனக்கென்ன வேற வேலை இல்லையா?…” என்று ஜகா வாங்கினாள் உடனே.
“அப்ப அதை பாரு. இதை நான் பார்த்துக்கறேன்….” என்ற இஷாந்த்,
“என்னன்னு மருமகளா அவங்கட்ட போய் கேட்டு தெரிஞ்சுக்கனும்னு தோணுதா உனக்கு?…”
“இந்த சீனி சக்கரை பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் போய் நின்னு பேபேங்கனும். நீங்க எனக்கு பெப்பே காட்டனும். அதானே? சில்வண்டு சிக்காது…” என்று சொல்லியவள் தலையில் குட்டியவன்,
“இந்த வாய் மட்டும் இல்லைன்னா…” என சொல்ல,
“எதாச்சும் சொன்னீங்க. கோவம் வரும்…”
“அந்தா பாரு. அம்மா கூப்பிடறாங்க…”
“ஐயோ எங்க? நானில்லை….” என்று சந்தனா அந்த பக்கமே திரும்பாமல் கண்ணை மூடிக்கொள்ள,
“இப்படியே நில்லு. உனக்கு பின்னாடி தான் இருக்காங்க. பேசிட்டு வா. நான் கிளம்பறேன்…” என்று நகர்ந்துவிட்டான்.
“போகாதீங்க, போகாதீங்க…” என அப்போதும் திரும்பாமல் காற்றில் கையை உலாத்த,
“பிள்ளைக கூட இல்லாம யாரோட கண்ணாமூச்சி விளையாடற நீ?…” என்றார் சபர்மதி மருமகளிடம்.
“ஹாங், அத்தை…” என்று விழித்தவள்,
“அவங்க வரவும் விளையாட இப்பவே சும்மா…” என்று உளறி கொட்ட,
“ஹ்ம்ம், நல்லா பார்த்த. இஷாந்த் கிளம்பிட்டான். அதை பார்த்தியா?…”
“பார்க்கறேன்….” என்றவள் அங்கிருந்து நழுவி ஓடினாள்.
“வரட்டும் எப்படி மாட்டிவிட்டுட்டு போறாங்க?…” என கணவனை வசைமாரி பொழிந்தபடி சென்றாள் சந்தனா.
“யார்கிட்ட மாட்டிவிட்டாங்க?…” என்று மீண்டும் அடுத்த குரல்.
தனது போனை கைப்பையில் வைத்தபடி சௌபர்ணிகா தன் அண்ணியிடம் கேட்க,
“ஆத்தீ மயங்கிட்டேன்…” என வாய்விட்டே சொல்லியவள் சோபாவில் அமர்ந்துவிட,
வருடா வருடம் அதனை சந்தனாவிற்காக, குழந்தைகளுக்காகவே பெரிதாய் கொண்டாடி வந்தனர்.
அவர்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே விசேஷம் அது தான். மற்றவர்களின் பிறந்தநாள் எல்லாம், திருமண நாள் எல்லாம் ஒருகட்டத்தில் நின்றுவிட்டது.
வாழ்த்தும், இனிப்புடனான உணவும் என்று மட்டும் முடித்துக்கொண்டனர் வீட்டினர்.
என்றிலிருந்து என்பது இஷாந்தை தவிர மற்ற மூவருக்கும் தெரிந்திருந்தது அங்கே.
தங்களுடைய திருமண நாளை சபர்மதி கொண்டாட மறுக்க, காரணம் அறிந்த ஜெயந்தனும் எதுவும் சொல்லவில்லை.
மனைவியின் மனமறிந்து எதையும் எதிர்பார்க்கவில்லை அவர். நொடி நேர சபலம் அவரின் வாழ்க்கையை நரகமாக மாற்றி இருந்தது.
தான் செய்யவிருந்த பாவத்தின் பலன் மகளின் வாழ்க்கையில் பிரதிபலித்து அதில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்க தந்தையாகவும் அவர் உடைந்து போனார்.
அதிலிருந்து சௌபர்ணிகாவும் தன்னுடைய பிறந்தநாள் என்று விழா எடுக்க விடவில்லை.
தாய், தந்தை, தங்கை என்று அந்த பள்ளி விவகாரத்தினால் இதனை மறுக்கின்றனர் என்று இஷாந்தும் தனக்கும் எந்த விழாவும் வேண்டாம் என்றுவிட்ட அதுவே வாடிக்கையாகி போனது.
அதிகபட்சம் கோவிலுக்கு மட்டும் சென்று வருவார்கள். அவ்வளவே. இஷாந்த் சந்தனா திருமணத்தின் பின்னர் மறு திருமண நாளுக்கு குழந்தைகள் இரட்டையர் பிறந்துவிட அதற்கடுத்த வருடங்கள் எல்லாம் அது மறக்காமல் கொண்டாடப்பட்டு வருகிறது.
மற்றவர்கள் ஏன் கொண்டாடவில்லை என கணவனிடம் சந்தனா கேட்க, ‘வளர்ந்துட்டோம். அதுல இன்ட்ரெஸ்ட் இல்லை’ என்பவன் மனைவிக்காக அவளின் பிறந்தநாளை கொண்டாடாமல் இருந்ததில்லை.
“ஓகே, நீ கிளம்பு…” என்று சொல்லியவர் தானுமே என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தார்.
மூன்று மணி என்று சொல்லியிருந்தவர் கடைக்கு செல்வதற்கே நான்காகிவிட்டது.
மகளின் அலுவலக அறைக்கு செல்ல அங்கே சௌபர்ணிகா இல்லை. துளசியை அழைத்தவர்,
“சௌபி எங்க? ரூம்ல இல்லை…” என்றார்.
“மேடம் நாலாவது ஃப்ளோர்ல இருக்காங்க. கூட மேனேஜர் பேசிட்டிருக்கார்…”
“ஓகே, நான் பார்த்துக்கறேன்…” என சொல்லி மேலே லிப்ட்டில் செல்ல சௌபர்ணிகா மேஜையில் சாய்ந்து நின்றபடி மேனேஜரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“இன்னும் ரெண்டுநாள்ல ரீ-ஸ்டோர் பண்ணிருவோம். இதை எல்லாம் முன்னாடியே சொல்லமாட்டீங்களா ஸார்? நான் வந்து பார்த்து கேட்கனுமோ?…” என்று அவரை கடிந்துகொண்டிருந்தாள்.
“சௌபி?…” என சபர்மதி மகள் அருகில் அவர் மேனேஜர் இன்னும் பயந்து போனார்.
“சாப்ட் சில்க்ல ரெண்டு கலர்க்கு நல்ல டிமான்ட். ஸ்டாக் ஃபுல்லா முடிஞ்சது. அதை இன்பார்ம் பண்ணவே இல்லை இவர். இப்போ நான் வந்து கேட்டு தெரியவேண்டியதா இருக்கு…” சௌபர்ணிகா சொல்ல,
“என்ன இதெல்லாம் மேனேஜர்?…” என்று சபர்மதி கேட்கவும்,
“ஸாரி மேம். வேற ஒரு டென்ஷன்…” என்றார் வருத்தமாய்.
“இங்க கவனக்குறைவா இருக்கலாமா? உங்க பொறுப்புல விட்டதை நீங்க கவனிக்காம இருந்தா நாங்க வேற ஒருத்தரை உங்க இடத்துக்கு கொண்டுவர வேண்டியதாகிரும். இங்க செய்யற வேலைக்கு தான் மதிப்பு. புரியுதா?…” என்று சொல்லவும் தலையை குனிந்தபடி நின்றார்.
“பார்த்துக்கோங்க…” என்று சொல்லியவர் மகளை அழைத்துக்கொண்டு கீழே சென்றார்.
“சரி இப்ப சொல்லு, என்ன செய்யலாம்ன்னு நினைக்கிற?…”என்று மகளிடம் கேட்க,