“ஓகே வழக்கம் போல உன் அண்ணிக்கு சேரி நீயே டிஸைன் பண்ணிடு. பிள்ளைங்களுக்கு செயின், இஷாந்த், சந்தனாவுக்கு மோதிரம். இதான் நான் யோசிச்சேன்…” என்றார் சபர்மதி.
“ஓகே, நான் அண்ணிக்கு மட்டும் எடுக்கறேன் அப்போ…” என சொல்லி இருவரும் நகை கடைக்கு வர,
“நீங்க மேல இருங்கம்மா. நான் பார்க் பண்ணிட்டு வரேன்…” என்றவள் காரை உள்ளே நிறுத்திவிட்டு லிப்டிற்குள் சென்றாள்.
அதில் அடுத்தடுத்து ஆட்களும் வந்து நிரம்ப யாரோ இடித்து யாரையோ அவள் இடிக்கும்படியாகியது.
‘ப்ச், ஸ்டெப்ஸ்லையே போயிருக்கலாம்’ என நொந்தபடி விலகி நின்றவள் அடுத்த தளத்தில் அதிலிருந்த சிலர் இறங்க இன்னும் இருவர் மட்டுமே.
“எக்ஸ்க்யூஸ் மீ…” என மூடவிருந்த லிப்ட் கதவுகளை நிறுத்தி உள்ளே நுழைந்தான்.
அவன் சத்தத்தில் திரும்பினாள் சௌபர்ணிகா. பார்த்ததும் அவளின் அகமெல்லாம் ஒருவித பரபரப்பு. ஆரோன் ரிஷபன் தான் நின்றிருந்தான் காதில் போனுடன்.
“ப்ச், அந்தளவுக்கு பர்பெக்ட் சாய்ஸ் இல்லை ஜார்ஜ். வேற மாடல் தான் பார்க்கனும். ஓகே, நான் அப்பறம் பேசறேன்…” என போனை வைத்தவன் சௌபர்ணிகாவை முதலில் கவனிக்கவில்லை.
அடுத்த தளத்தில் லிப்ட் நின்றதுமே சௌபர்ணிகா முன் நின்றவர்கள் வெளியேற அதற்கு இடம் கொடுத்து மீண்டும் உள்ளே நுழைந்ததும் தான் கவனித்தான்.
“ஹாய்…” என அவளை பார்த்ததும் அவன் சொல்லி அழைக்க அதற்கே உள்ளுக்குள் புயலடித்தது சௌபர்ணிகாவிற்கு.
“ஓஹ், என்னை தெரியலையா?…” என்றான் மீண்டும் வேண்டுமென்றே அவளிடம் கேலி புன்னகையுடன்.
பேச கூடாது என்று தன் வாயை அடக்கும் முன் வார்த்தைகள் அவனுக்கான பதிலை தந்துவிட்டது.
“ஹலோ…” என்று சொல்லிவிட்டு ‘அச்சோ’ என கண்ணை மூடிக்கொண்டு திரும்பி நின்றாள்.
“ஸோ ஞாபகமிருக்கு போல…” என்றான் புன்னகையுடன்.
“ம்ஹூம், ஜஸ்ட் ஒரு கட்டர்சி…” என்றவள் முகம் பார்த்தவன் மனது தான் அவளை முந்தையநாள் பார்த்ததற்கும், அந்த நிமிடம் பார்த்ததற்குமான வேறுபாடுகளை நொடியில் பட்டியலிட்டுவிட்டது.
“ஓஹ்…” என்று மட்டும் அவளது பதிலாக அவள் வரும் தளமும் நின்றது.
அவனிடம் எதுவும் சொல்லாமல் அதிலிருந்து வெளியேறியவளை பார்த்துக்கொண்டே நின்றவன் பார்வையில் மீண்டும் கதவு மூடும்முன் சௌபர்ணிகா திரும்பி பார்க்க,
“நான் கூப்பிடவே இல்லையே பிரபஞ்ச ப்யூட்டி?…” என்றான் கண் சிமிட்டி தன் வழக்கமான குறும்பு புன்னகையுடன்.
சௌபர்ணிகா பார்த்தபடியே நிற்க, புன்னகையுடன் ஆரோன் ரிஷபன் உள்ளே நிற்க கதவும் மூடிக்கொண்டது பெண்ணின் மனதை போலவே.
விழிகளை விட்டு மேலேறும் அந்த இயந்திரத்தை பார்த்தவாறு நின்றவள் சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டு தாயை தேடி சென்றாள்.
“நான் சிலது செலெக்ட் பண்ணியிருக்கேன். ஓகே வான்னு பாரு. இல்லையா வேற பார்க்கலாம்…” என்றார் சபர்மதி மகள் வந்ததும்.
சௌபர்ணிகா தலையசைத்தாலும் மனமெல்லாம் மறுநாள் வரவிருந்தேன் என்று சொன்னானே? ஏன்? எதற்கு? என்ற சிந்தனை தான்.
நகையை வாங்கிக்கொண்டு புறப்பட்டவளுக்கு இரவு உறக்கமே பறிபோனது. முந்தைய நாளும் அப்படியே கடந்திருக்க அன்றும் அதே அவஸ்தை.
மறுநாள் காலை என்றுமில்லாததை போல அத்தனை வேகமாய் கிளம்பினாள் சௌபர்ணிகா.
‘வருவேன் என்றானே? எப்போது? நேரம் எதுவும் தெரியவில்லையே?’ என அவளின் மண்டைக்குள் அமர்ந்து தன் நினைவுகளை ராட்டினமாய் சுழலவிட்டான் ஆரோன் ரிஷபன்.
இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த அவன் தந்த அழகு சாதனப்பொருட்கள் பத்திரமாய் இருக்க அன்று அதனை எடுத்து பிரித்து உபயோகிக்க முயன்றவள் மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து மூடிவிட்டாள்.
இன்னும் தன் அடி மனதின் தேவையில் அவள் அல்லாடிக்கொண்டு தான் இருந்தாள்.
அவனிடம் அவள் எதிர்பார்ப்பது என்னவென்று விளங்காமல் எதற்குள்ளோ விலங்கிடப்பட்டு கைதாகி அமர்ந்திருந்தாள்.
ஆசை ஒருபுறம், அச்சம் ஒருபுறம் என்று இருவேறு சங்கிலிகள் அவளை இருபுறமும் பிடித்திருக்க எங்கே இதிலேயே உயிர் கரைந்துவிடும் போலிருந்தது.
ஒருவழியாக கிளம்பி கடைக்கு சென்றவளின் விழிகள் இதயத்துடிப்பின் வேகத்தை விட எதிர்பார்ப்பில் வேகமாய் துடித்தது.
காலை பிற்பகலாகி, மாலை, இரவு என கவிழ்ந்து முழுநாளும் கழிந்ததே தவிர அவன் வரவில்லை.
வந்ததன் அறிகுறியும் இல்லை. என்றைக்குமில்லாமல் உள்ளம் சோர்ந்துவிட ட்ரைவருக்கு அழைத்தாள் சௌபர்ணிகா.
அந்தநேரம் மகள் ஓட்டுனருக்கு அழைக்க தானும் சேர்ந்தே கிளம்பிவிட்டார் சபர்மதி.
“நீங்க என்னம்மா இந்த நேரம்?…” என மனதே விட்டு போனது சௌபர்ணிகாவிற்கு.
‘எல்லோரையும் கஷ்டப்படுத்தி என்ன செய்துகொண்டிருக்கிறேன் நான்?’ என மானசீகமாய் அவளுக்கவளே அடித்துக்கொண்டாள் தாயின் பதட்டமான முகம் பார்த்து.
“உனக்கு முடியலையோன்னு நினைச்சேன் சௌபி…” என்று மகளை ஆராய,
“இல்லம்மா, ரொம்ப டயர்டா இருக்கு. தூக்கமா வருது. அதான் ட்ரைவரை வர சொன்னேன். இதுக்கு போய்…” என்றவளுக்கு அதற்கு மேல் அவரிடம் எதையும் சொல்லிவிட முடியவில்லை.
வீட்டிற்கு வந்தவளுக்கு உணவும் இறங்கவில்லை. ‘என்ன இப்படியாகி போனேன்?’ என கண்ணீர் வர பார்த்தது.
“முடியலைன்னா விடு சௌபி. ஏன் கஷ்டப்பட்டு சாப்பிடற?…” சபர்மதி சொல்லவும் அறைக்கு சென்றவள் மறுநாள் கீழே வரவே இல்லை.
என்னவென பார்க்க தாயும், மகனும் மேலே செல்ல சுருண்டு முகமெல்லாம் காய்ச்சலில் கனன்று சிவந்து படுத்திருந்தாள் சௌபர்ணிகா.
இரவெல்லாம் உறங்க முயன்று முடியாமல் போய், மனதின் அழுத்தம் உடலை தாக்க மொத்தமாய் அலண்டு போனாள்.
“அந்த ஸ்கூல் பிரச்சனைக்கப்பறம் என் பொண்ணுக்கு இப்ப தான் இவ்வளவு காய்ச்சல் கொதிக்குது….” மருத்துவர் வந்து செல்லவும் சபர்மதி சொல்ல,
“ம்மா, அவ கொஞ்சமும் ரெஸ்ட் எடுக்கறதே இல்லை. அப்பப்ப சோர்ந்து படுத்துக்கறா. அதான் இப்படி படுத்துது உடம்பு. இதுவும் நல்லதுக்கு தான். நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று சொல்லிய இஷாந்த் தங்கையின் வேலைகளையும் சேர்த்து தான் கவனித்துக்கொண்டான்.
—————————————————————
“ஷாட் ஓகே…” என்ற விளம்பர பட இயக்குனர்,
“என்ன ஆரோன், இந்த ஆட் பிக்சர் ஓகேவா? இல்லை இதுவும் திருப்தி இல்லையா?…” என்றார் ஆரோன் ரிஷபனிடம்.
“ஹ்ம்ம், நாட் பேட்…” என்றான் அவன் தோளை குலுக்கிக்கொண்டு.
“ஹப்பா சாமி, நீ சூப்பர், ஃபெண்டாஸ்டிக், ஃபெண்டாபிலஸ் கூட சொல்லவேண்டாம். இந்த வார்த்தையை உன்கிட்ட இருந்து வாங்கறதுக்குள்ள நான் படற பாடு இருக்கே?…” என்றவரின் பேச்சில் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
“பேசாம நீயே உங்க ஜீன்ஸ் பிராண்ட்க்கு மாடலா இருக்கலாம். செம்ம ஷார்ப் ஐஸ் அன்ட் பக்கா ஹீரோ மெட்டீரியல் நீ…” என்றும் அவனுக்கு ஐஸ் வைக்க,
“ஏற்கனவே கோவா நல்லா ஜில்லுன்னு தான் இருக்கு. இதுல ஈவ்னிங் வேற. நீங்க எனக்கு ஐஸ் வைக்கறீங்களா?…” என்று சொல்லியவன் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றான்.
“ஹேய் நிஜமா தான் மேன் சொல்றேன். நம்பிக்கை இல்லையா?…” என்றதற்கும் ஆரோனிடம் புன்னகை தான்.
“இந்த உலகமே இப்படித்தான்…” என்ற இயக்குனர் பேக்கப் சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானார்.
“நாங்க ரூம்க்கு கிளம்பறோம் ஆரோன். நாளைக்கு சில ஸ்டில்ஸ் மட்டும் தான். எர்லி மார்னிங் வந்திருவோம்….” என்று சொல்லி கிளம்பி செல்ல,
“பாஸ் நாமளும் கிளம்பனும்…” என்றாள் உஷா.
“உன் ஹஸ்பண்ட் வர சொன்னாரா ப்யூட்டி? உடனே கிளம்பனும்ன்ற?…” என சிரித்தவன்,