தம்பி !”எனும் போதே ,”அவிக்கு பார்த்த பொண்ணு சித்ரபாலா இல்லையாப்பா. கரெக்ட் தானே நான் சொல்றது. ஆன்ட்டி உங்க பொண்ணைத் தானே நிச்சயம் பண்ணோம்.பட் இங்க வேற பொண்ணு நிற்கிறாங்க”என்றதும் பெண்ணின் தந்தை வந்து ,”மருமகனே என் பொண்ணுக்கும் உங்களுக்கும் நிச்சயம் அதுக்குத்தான் இந்த ஏற்பாடு என்ன தெரியாத மாதிரி பேசுறீங்க?”என்று பரபரத்தார்.
“
அப்டியா…?”என்று மீண்டும் தந்தையை பார்த்தான் நிதானத்துடன் .
“
தம்பி எல்லாம் உன் நல்லதுக்குத்தான்” எனும் போதே அமைதியாகப் பார்த்தவன் பெண்ணின் தந்தையிடம் திரும்பி ,”இந்த நிச்சயம் நடக்காது சாரி அங்கிள் “என்று சொல்லி விட்டு,” எல்லாரும் ஒரு நிமிஷம் கேளுங்க” என்றான் சத்தமாய்.
“
இவங்க என் பொண்ணு ஆத்யா .இவங்க அம்மா இறந்துட்டாங்க. காதலிச்சோம் அதற்கு சாட்சியா என் ஆத்யா” என எளிமையாக விளக்கம் கொடுத்தான்.
சொந்தங்களின் மத்தியில் சலசலப்பு ஏற்பட
யார் பேச்சைக் கட்டுப்படுத்துவது…?
“
காதலிச்சு கல்யாணம் பண்ணி இருப்பான் போல இத்தனை நாளும் தெரியலை பாருங்க அமுக்குனி மாதிரி இருந்திருக்கான். அதான் இவ்வளவு பெரிய புள்ள இருக்கே… இவங்களும் தான் ஆகட்டும் சொல்லாம கொள்ளாம எதுக்கு இந்த வேலை பார்க்கணும்… இப்ப மேடையில நிக்கிற பொண்ணுக்கு என்ன பதில் சொல்லுவாங்க. பொண்ணு வீட்டாளுங்களுக்கும் அறிவில்லை. விசாரிச்சு செய்ய வேண்டாமா… இனிமே அந்த பொண்ணை யார் கட்டுவா…வித்யாவுக்கு புத்தியே கிடையாது சும்மா எப்ப பார்த்தாலும் பல்லைக் காட்டி பேசினா போதுமா. சூதானமா மகன் என்ன பண்றான்னு பார்க்கறதில்லை. அது சரி ஓடிப்போய் கல்யாணம் கட்டி பிள்ளை பெத்திருக்கான் அதுவே நமக்கெல்லாம் தெரியல. என்ன வளர்த்தாளோ !’என்று ஆளாளுக்கு ஒன்று பேச வித்யாவிற்கு அழுகையே வந்துவிட்டது.
அவினாஷிடம் திரும்பி,” இதுக்குத் தான் வரச் சொன்னியா?” என்று கேட்க அவன் தலைகுனிந்தான்.
“
அங்கிள் ரொம்ப சாரி என்னைக் கேட்டு இந்த நிச்சயம் வைக்கலை.”என்று கூற மணப்பெண்ணோ அமைதியாக இருந்தாள்.
“
தம்பி குழந்தை இருந்தா என்ன. பொண்டாட்டி இல்லாம நீங்களும் எத்தனை நாள் ஓட்ட முடியும்” என்றதும் எரிச்சலாய் வந்தது அவனுக்கு .
“
இத்தனை நாள் எப்படி இருந்தேனோ அப்படி தான் அங்கிள் .”என்றான் கோபத்தை இழுத்துப் பிடித்து.
“
என்ன மச்சான் உங்க பையன் இப்படி பேசுறாரு. பின்ன எதுக்கு எங்களை கூப்பிட்டிங்க, மேடையில் வந்து என் பொண்ணு தவிக்கிறா,இவர் என்னடான்னா தத்துவ ஞானி மாதிரி பேசுறாரு ?”என்று தனஞ்செயனிடம் பாய
அவரோ சங்கடத்துடன்,” நான் பேசுறேன் நீங்க கவலைப்படாதீங்க “என அழகு பக்கம் பார்த்தார் அவர்.
“
தம்பி நான் சொல்றதைக் கேளு டெடியை நாங்க எல்லாரும் பார்த்துப்போம், உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா. கல்யாணம் ஆனா சரியாப் போயிடும்” என வித்யா இறைஞ்சுதலாய் பேச
“
வாட்….ம்மா என்ன பேசுறீங்க நீங்க?. ப்ப்ச் என்னை இக்கட்டில் நிறுத்தியிருக்கீங்க. ஏன் மா “என்றவன் மணப்பெண்ணிடம் நகர்ந்தான்.
“
உனக்கு இது எத்தனையாவது கல்யாணம் ?”என்று கேட்க அனைவருமே அதிர்ந்து போயினர்.
“
ஏய் என்னடா பேசுற?” என பெண்ணின் அண்ணன் எகிறினான்.
“
ப்ப்ச் நில்லுங்க ஏன் கத்துறீங்க?” என அவர்களை அடக்கி விட்டு,” இது உனக்கு ஃபர்ஸ்ட் மேரேஜ் ரைட். அப்புறம் ஏன் என்னை சூஸ் பண்ணாங்க உன் வீட்டில். ஏற்கனவே குழந்தை இருக்கிறவனை கட்டிக்க உனக்கு என்ன தலையெழுத்து. ஹ்ம்ம் சின்ன வயசுப் பொண்ணா தெரியற என்ன ஒரு இருபது இருபத்தியொன்னு இருக்குமா… அப்புறம் ஏன் மா நாலு வயசு பொண்ணுக்கு அம்மாவாக ஆசைப்படுற. உன் வீட்டில் சொல்லாம ஏற்பாடு பண்ணாங்களா…?” அமைதியாக இருக்கும் அழகினியன் இவ்வளவு பேசவுமே கூட்டத்தில் அமைதி நிலவியது.
“
இல்ல அது வந்து எனக்கு இஷ்டம் தான். பாப்பாவை நான் வளர்த்திடுவேன்.” என்றாள் அந்த பெண்.
“
ஊஃப்ஸ். ப்ப்ச்” என்று தலையைக் கோதிக் கொண்டவன்,” டெடி இவங்க கிட்ட போ” என்று டெடியை மணப்பெண்ணிடம் நீட்ட, புரியாமலேயே அவளும் வாங்கிக் கொண்டாள்.
“
நீங்க எல்லாம் போய் சாப்பிடுங்க. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் என் முடிவை நான் சொல்றேன். கண்டிப்பா சொல்றேன் என்னை நம்புங்க “என்றான்.
குழந்தையை அந்தப் பெண்ணிடமிருந்து வாங்க முற்படவே இல்லை.
ஆத்யாவோ தந்தையின் சொல்படி அமைதியாக அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்ணின் மடியில்.
சரியான ஆளா இருப்பார் போல !’என்று முணுமுணுத்துக் கொண்டே தன் அண்ணியிடம் திரும்பி,” கண்டிப்பா அண்ணி இவர் மாட்டேன்னு தான் சொல்வார் பாருங்களேன். ஒரே இடத்தில் யாரால குழந்தையை வச்சுக்க முடியும். ரெண்டு மணி நேரம் கழித்து ரெண்டு மணி நேரமே வச்சுக்க முடியல காலம் முழுசும் எப்படி வச்சுப்பனு கேட்க போறாரு” என்றாள் மெல்லிய குரலில்.
ஒரு மணி நேரம் கழிந்தது. மணப்பெண் மெல்ல நெளிந்தாள். கால் மரத்துப் போனது அவளுக்கு. இன்னும் ஒரு பத்து நிமிடம் கழித்து தன்னைப் போல ஆத்யாவை இறக்கி விட்டு விட்டாள். கண்கள் இடுங்கி முகத்தில் ஒரு எரிச்சல் கலந்த அதிருப்தி தெரிந்தது அவளுக்கு.
“
டெடி இங்க வாடா!” என்றதும் குழந்தை இறங்கி வர அந்தப் பெண்ணிடம் அத்தனை இலகுத்தன்மை.
“
ஒரு மணி நேரம் உங்களால பார்த்துக்க முடியல எப்படிம்மா காலம் முழுவதும் அவளை வச்சுப்ப. நான் வேலைக்குப் போயிட்டா நாள் முழுதும் வச்சு சமாளிக்கணும் முடியுமா உங்களால். உங்களுக்குன்னு குழந்தை இருந்தா அது வேற அடுத்தவங்க குழந்தையை எப்படி சுமக்க முடியும்?” என்றதும் ஷன்மதி ஆச்சரியத்துடன் ஓவியாவைப் பார்த்தாள்.
“
ஹேய்! எப்படி ?”என்றதும் ,”என்னவோ தோணுச்சு” என்றாள் ஓவியா.
“
அதான் பாப்பாவை வித்யா பார்த்துக்கிறேன்னு சொல்லுச்சே தம்பி. நல்லது கெட்டது நீங்க முன்ன நின்னு செய்ங்க. என் பொண்ணு எதுவும் சொல்ல மாட்டா.” என மணப்பெண்ணின் அம்மா கூற
“
ஓஓஓ !என் பொண்ணுக்கு செய்ய உங்கப் பொண்ணு பர்மிஸன் தருவாங்க அப்படித்தானே.?” என்று கேட்க முகம் சிறுத்துவிட்டது அவருக்கு.
“
எதையும் அதிகமா பேச விரும்பவில்லை நான், உங்க மகளுக்கு நல்ல வரன் முதல் திருமணமாவே அமையும் நீங்க என்னை விட்டுடுங்க” என்றான் கையெடுத்துக் கும்பிட்டு.
“
தம்பி இது சரியில்லை !”என்று மேலும் பேசப் போக
“
அப்படி என்னங்க பிள்ளை இருக்கவனுக்கு கட்டித் தரணும்னு கட்டாயம்.” சட்டென்று கேட்டவன்,” எனக்கு ஒரு கொள்கை இருக்கு. என்னைப் போலவே குழந்தை வச்சுட்டு கணவனை இழந்தவங்க இருப்பாங்க இல்லையா அவங்களை மாதிரி பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறேன். ஸோ இவங்க வேண்டாம் இதுக்கு மேல மானம் போச்சு மரியாதை போச்சுனு குதிச்சா நான் ஒன்னும் செய்ய முடியாது. என் மகள் என் கூட இருப்பா. அவளைப் பார்த்துக்க வேணும் உங்கப் பொண்ணு. அடுத்த குழந்தை பெத்துக்க சம்மதிக்க மாட்டேன், இதுக்கு சம்மதம்னா வாங்க இப்பவே நிச்சயம் என்ன கல்யாணமே பண்ணிக்கிறேன்.”என்றான் ஒரே போடாக
“
அடப்பாவி !”என அதிர்வாய் பார்த்திருந்தனர் பெண்ணின் பெற்றோர்.
“
அப்படி ஒன்னும் அவசியமே இல்லை”என்று பெண்ணின் அண்ணன் ஆத்திரமாய் கூறிவிட்டு,” ப்பா மாப்ளையா கிடைக்காது என் தங்கச்சிக்கு.வாங்க போகலாம் நல்ல இடம் பார்த்து வந்தீங்க சம்மந்தம் பார்க்க!” என்று அலுத்துக் கொண்டவன் தன் குடும்பத்துடன் கிளம்பி விட்டான்.
அவர்கள் சென்ற பிறகு அத்தனை சலசலப்பு சொந்தங்களின் மத்தியில்.
‘
பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு அழுத்தக்காரனை பார்க்கலை .’என்று ஒரு தரப்பும்
‘
என்ன இருந்தாலும் பெத்தப்பிள்ளையை விட்டுட்டு வர எவன் சம்மதிப்பான்?’ என்றொரு தரப்பும் பேசியது.
“
எல்லோரும் ரெஸ்ட் எடுங்க காலையில் கல்யாணத்தை வச்சுக்கிட்டு ஏன் இப்படி…?மத்த வேலை பார்க்க வேண்டாமா, அவி போய் தூங்கு. “என்று எதுவுமே நடக்காதது போல மகளோடு வெளியே சென்று விட்டான்.
***********
வித்யாவிற்கு ஆதங்கம் தாளவில்லை.
“
இவன் என்ன வேணும்னாலும் செய்வான். நாம எதுவும் கேட்கக் கூடாது அப்படி தானே…? அவன் எது செய்தாலும் நாம அமைதியாப் போகணும் ஆனா அவன் மட்டும் இப்படி சபையில் மூக்கறுப்பான் பரவாயில்லை நான் இனிமே எதுவும் செய்ய மாட்டேன் பேச மாட்டேன் எப்படியோ போங்க” என்று புலம்பித் தள்ளி விட்டார்.
“
விடும்மா. நமக்கு அவன் விஷயத்தில் எந்தக் குடுப்பினையும் இல்லை போல. பெத்து வளர்த்ததோட நம்ம கடமை முடிஞ்சதுன்னு நினைச்சுட்டான். விட்டுடுவோம். பிள்ளையோட வந்தானே என்ன ஏதுன்னு சொன்னானா இல்லையே இப்ப மட்டும் நமக்கு என்ன உரிமை இருக்கிறதுனு இருப்போம் “என்றார் அவரும் மனம் தாளாமல்.
************
இங்கே அவினாஷ் தன் அண்ணனிடம் அதே ஆதங்கத்தைத் தான் கொட்டிக் கொண்டிருந்தான்.
“
ப்ப்ச் என் கிட்ட கேட்காம செஞ்சது தப்பில்லையாடா. நீ இதை நினைக்காதே போ” என்று அனுப்ப முயல
“
அவங்க எவ்வளவு வருத்தப்படுறாங்க தெரியுமாண்ணா. அம்மா அழுது பார்த்திருக்கிங்களா…? இப்ப அவங்க அழறாங்க புரியுதா இல்லையா உங்களுக்கு” என்ற அவினாஷ்,” உங்க லைஃப்ல என்ன நடந்ததுனு கேட்டு கஷ்டப்படுத்தாம ,எதையும் சொல்லிக் காட்டாம இருக்கிறவங்களுக்கு நீங்க எவ்வளவு கஷ்டத்தைத் தர்றீங்கனு உணருங்கண்ணா” என்றான்.
“
நான் பார்த்துக்கிறேன் அவி, நீ போ” என்று அனுப்பத் தான் முயற்சித்தான் அழகு.
இதற்கு மேல் இவனிடம் பேச ஒன்றுமில்லை என்பது போல கிளம்பிவிட உறங்கும் மகளோடு அங்குமிங்கும் நடந்தான்.
“
உன்னை விட்டுட்டு ஒரு வாழ்க்கையாம் டெடி எவ்வளவு ஈசியா சொல்லிட்டாங்க. உன் அம்மா கிட்ட ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் தானே. கைவிடமாட்டேன்னு ம்ம்ம் அப்புறம் எப்படி விடுவேன் உன்னை. “என தனக்குத் தானே பேசிக் கொண்டான்.
மண்டபத்தில் பரபரப்பு அடங்கிக் கொண்டிருந்தது. அனைவரும் உறங்கச் சென்று விட்டார்கள் போலும்.
சமையற்கூடத்தில் மட்டும் பேச்சு சத்தம் மெலிதாய் ஒலித்தது. மறுநாள் உணவிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எனப் புரிந்தது.
ஓவியா மெல்ல நடந்து சமையற்கூடத்தை நோக்கிச் சென்றாள்.
“
அண்ணா பால் கிடைக்குமா…?”என்றதும் இருக்கு,” ம்மா காபி வேணுமா?” என கேட்டார் அவர்.
“
இல்ல பால் மட்டும் தர்றீங்களா?” என்று கேட்டதும் ஆற்றிக் கொடுத்தார்.
“
ஏன் பாப்பா பசிக்குதா ?”என்று கேட்ட சமையலர் பெண்ணிடம் ஆமாம் என்று தலையாட்டினாள்.
“
இந்தாங்க அந்த அல்வா செய்ய ப்ரெட் ரொட்டி வச்சிருந்தோமே அதுல ரெண்டு எடுத்துக் குடுங்க” என்றதும் அவர் கொடுக்க ஓவியாவிற்கும் அது தேவையாக இருக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டார்.
ஓவியா
தனியாக அமர்ந்து உண்டு கொண்டிருக்க, குழந்தையோடு உள்ளே வந்தான் அழகினியன். மிகச் சரியாக அவளது கைபேசியும் இசைத்தது.