சித்ரா சட்டென்று வார்த்தையை விட்டிருக்க, அழகினியன் எரிச்சலாகி வெளியே சென்று விட்டான்.
‘குழந்தைத்தனமாக பேசுபவளிடம் என்ன பேசுவது?’ என்று கோபத்துடன் வெளியேற ,வளவனோ வார்த்தையில் காட்டிவிட்டான் ஆதங்கத்தை.
“என்ன சித்ரா பேச்சு இது…? மலர் உன் அக்கா,அந்த நினைப்பு உனக்கு கொஞ்சமும் கிடையாதா?” என்று தன் கோபத்தை முழுவதும் காட்டாமல் அடக்கியே பேசினான். ஏனெனில் அவளின் புகுந்த வீட்டார் முன் அவளுடைய பெயர் கெட்டிடக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு.
அதற்கே சித்ராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெகுண்டெழுந்து விட்டாள்.
“எல்லோரும் என்னையே திட்டுறீங்களே… ஆனா நான் ஏன் அப்படி பேசுறேன்னு ஒரு தடவை கேட்க மாட்டீங்க அப்படித்தானே?”என்ற சித்ரா,
” அவளை இந்தக் கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்னு சொல்லி சண்டை போட்டேன். அப்பாக்காக அம்மாக்காகனு என் வாயை அடைச்சுட்டா, ஒரு பொண்ணுக்கு இப்ப படிப்பு தான் முக்கியம்’னு அவ்வளவு எடுத்து சொன்னேன் கேட்கவே இல்லை. இனி அவ தலையெழுத்து’னு விட்டுட்டேன். இப்பவும் இங்க என்ன குறை சொல்லுங்க பார்க்கலாம், கர்ப்பமா இருக்கிறதோட வெளியே போயிருக்காளே ஏதாவது பிரச்சினை வந்துட்டா என்ன செய்வா. சரி இவங்க ஃபேமிலி நல்லவங்களா இருக்கப் போய் என்னையும் நம்ம குடும்பத்தையும் எதுவும் சொல்லலை. வேற யாருமா இருந்தா இந்நேரம் என்ன பேசி இருப்பாங்க. அட அவளோட மாமியார் வீடு மாதிரி இருந்தா என்னென்ன பேசியிருப்பாங்க எவ்வளவு கேவலமா நடத்தி இருப்பாங்க அதுவும் எனக்கு கல்யாணம் ஆகி மறுநாளே ஓடினா என்னன்னு சொல்லுவாங்க எதையும் யோசிக்கறதில்லை முந்திரிக்கொட்டை மாதிரி முடிவெடுப்பா எல்லாத்துக்குமே நானும் தலையாட்டணுமா. என்னை சுயநலவாதினு நினைச்சா நினைச்சுட்டு போங்க”என பொரிந்து தள்ளிவிட்டுச் சென்றாள் சித்ரா.
வித்யாவிற்கு புது மருமகள் அழுதது பொறுக்கவே இல்லை. வந்த இரண்டாம் நாளே அவள் அழுவது போல நடக்க வேண்டுமா என்ற ஆதங்கம் அவரிடம்
“என்னன்னாலும் அந்த பொண்ணு வீட்டை விட்டு போயிருக்கக் கூடாது சம்மந்தி. சித்ராவுக்கு ஏதோ ஆதங்கம் பேசிட்டா. நீங்க போய் மலரைத் தேடுற வழியைப் பாருங்க”என்றவர் சித்ராவைத் தேடி செல்ல தனஞ்செயன் மகனைத் தேடிச் சென்றார்.
அழகினியன் வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான். முகத்தில் யோசனை ரேகை இருக்க விழிகள் மூடிக் கிடந்தது.
“தம்பி!” என்றழைத்ததும் லேசாய் செருமி,” சொல்லுங்கப்பா” என நீட்டி நிமிர்ந்து சரியாய் அமர்ந்தான்.
“மருமக பேசினதை…” என்று மகனிடம் சமாதானம் செய்ய முயன்றவரை பார்த்தவன்,” ப்ப்ச், அப்பா இதுல எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நான் ஏன் அவங்க பேசினதை மனசுல வச்சுக்கப் போறேன். ஜஸ்ட் ஒரு ஆதங்கம் ப்பா இவ்வளவு தூரம் மெனக்கெட்டப் பொண்ணை பட்டுனு பேசிட்டாங்களேன்னு வேற ஒன்னும் இல்லை”என்றான் தன்னிலை விளக்கம் தந்து.
“சரிப்பா” என்றவர்,” ஹ்ம்ம் எப்போ பெங்களூரு போகணும்ப்பா ?”என்று கேட்க
“இன்னைக்கு நைட் கிளம்ப நினைச்சேன் ப்பா. புது ப்ராஜெக்ட்ல என் நேம் இருக்கு. போயாகணும் “என்றான்.
“ஓஓஓ டெடி வேணுன்னா எங்க கூட இருக்கட்டுமேப்பா!” என்றதும் புன்னகையாய்,” நைஸா பேசி என் பொண்ணை வாங்க பார்க்கறீங்களே?” என்றான்.
“என்னடா தம்பி…?” என்று முகம் சுருக்கியவரை,” பாப்பா ஸ்கூல் ஓபன் ஆகிடும் ப்பா நெக்ஸ்ட் சம்மர் லீவ் தான் வருவோம்” என்று சொல்லி விட தனஞ்செயன் அமைதியாய் இருந்தார்.
************
ஓவியா தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிட்டாள்.
ஆகாய நீலவண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு சுவற்றின் ஓரமாக கட்டில் போடப்பட்டிருந்தது. அருகே ஜன்னல் இருந்தது. சற்றுத் தள்ளி தலைவைத்து படுக்கும் திசையில் ஒரு மேசை அதில் ஸ்டாண்ட் லாம்ப் இடம்பெற்றிருந்தது. கால்மாட்டுப் பகுதியில் சுவற்றோடு ஒட்டிய செல்ஃப் ஒன்றும் இருந்தது.
தனது துணிகளை பிரித்து அதில் அடுக்கி வைத்த ஓவியா கட்டிலில் அமர கதவு தட்டப்பட்டது.
கதவை திறந்ததும் சிரிப்புடன் ஒரு பெண்மணி நின்றிருந்தார்.
“உள்ள வாங்க ஆன்ட்டி!” என்று புன்னகையோடு வரவேற்க அவரும் உள்ளே வந்தார்.
“நாளைக்கு அடுப்பு எல்லாம் வந்திடும். நீ சமைச்சுக்கலாம் இன்றைக்கு நான் சமைச்சு தர்றேன் சரியா. பொதுவான கிச்சன்’ல சமைக்க சொல்லிடுவேன். ஆனா உன் அங்கிள் தனியா எல்லாம் ரெடி பண்ணி தர சொல்லிட்டாங்க. பிள்ளைத்தாச்சி பொண்ணு கண்ட நேரத்தில் பசிக்கும். நீ தனியா தந்திடுனு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. உனக்கா சமைக்க முடியாட்டாலும் என்னைக் கேளு நான் செஞ்சுத் தர்றேன் ஆனா முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணிடு.” என்றார்.
“ஓகே ஆன்ட்டி. எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க ஆன்ட்டி “என்று கேட்க
“சொல்லும்மா…!”
“மளிகை சாமான் எல்லாம் வாங்கணும் ஆன்ட்டி .கூட வந்தா போதும்”என்றிட அவரும் காலையில் அழைத்துப் போகிறேன் என்று கிளம்பிவிட்டார்.
இம்முறை அவனும் மகளும் மட்டுமே பயணித்தனர். சுமதியின் நெருங்கிய உறவில் ஏதோ விஷேஷம் என்று கிளம்பியிருந்தார். அவருமே டெடியை இங்கே விட்டுச் செல்லலாமே என்று கேட்க நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டான்.
“டெடிக்குட்டி அப்பா கூட ஆஃபிஸ் வர்றிங்களா?” என்றதும் உற்சாகமாக கிளம்பி விட்டாள் குழந்தை.
“ஹாய் மச்சான்…டெடி பார்பி” என்று வாசலிலேயே உற்சாகமாக வரவேற்றான் நண்பன் தருண்.
“ஹாய்டா… என்ன புது ஜாபா?” என்று கிண்டலாக கேட்க அவனோ டெடியை கையில் வாங்கிக் கொண்டு,” ஆமா உள்ளதையே பார்க்க முடியலையாம் இதுல இது வேறயா ஆமா பங்ஷன் எல்லாம் நல்லா போச்சா… டெடிமா சித்திட்ட பேசுனியா?” என்று கேட்க
“ம்ம்ம்… மலர் சிச்சி, சித்து சிச்சி பேசினேனே… மலர் சிச்சி டம்மி பிக் குட்டி பேபி”என்று தனக்கு தெரிந்ததை உற்சாகமாக பேச
அழகினியன் சிரித்தான்.
“அவினாஷ் வொய்ஃப் நேம் சித்ரா தானேடா இது யார் மலர் ?”என அவன் கேட்க
“அந்த பொண்ணோட அக்கா…” என்றவன் அங்கு நடந்ததை சில விஷயங்களை விவரித்தான்.
எல்லாவற்றுக்கும் ம்ம்ம் கொட்டிக் கொண்டான் அவன்.
“நல்லா அந்தப் பொண்ணு கிட்ட ஒட்டிக்கிட்டாங்க மேடம்,அதான் இவ்வளவு பேசுறாங்க” என்ற அழகு,” டெடியை பார்த்துக்கோடா ஹெச்ஆரை பார்த்துட்டு வர்றேன்” என்று செல்ல, அவன் டெடியோடு ஃபுட் கோர்ட்டிற்கு நகர்ந்தான்.
சற்று நேரத்தில் வெளியே வந்த அழகோ முகத்தைத் தூக்கி வைத்தபடி வந்தான்.
“ஏன்டா என்ன ஆச்சு…?”என்றதும்
“புது ப்ராஜெக்ட்ல என் நேம் இருக்குனு நினைச்சா இப்ப ***** ஆபிஸ் போகணுமாம் நியூ கம்மர்ஸுக்கு ட்ரெயினிங் குடுக்க” என்று எரிச்சலுடன் சொல்ல
“நீ தான் நல்லா டீச் பண்ணுவியே மச்சான் அப்புறம் என்ன ?”என்று சூடான காஃபியை நீட்ட அவனுக்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் கொண்டான் அழகு.
“டேய் அந்த ஆபிஸ் எவ்வளவு தூரம்…?அது மட்டுமில்லாமல் ட்ராபிக், டெடி எவ்வளவு சமாளிக்கறது நான்.” என்று அலுத்துக் கொண்டவன் தலையைப் பிடித்துக் கொள்ள
“மச்சி இதுக்கா இவ்வளவு கடுப்பு… நானிருக்க உனக்கேன் கவலை?” என்றான்.
“எனக்கு பதிலா நீ போறியா தருண்?” என்று முகம் மலர
“வாடி வா, நான் போறேன் இப்ப தான். போடாங் நானே இப்போ தான் ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கேன்.அதுக்குள்ள பிச்சுவிடப் பார்க்கிற” என்று கடுப்பானவன் பின்
“அங்க தான் என் பெரியம்மா இருக்காங்களே… அவங்களோட அப்பார்ட்மென்ட்டில் உனக்கு ஒரு ரூம் தர சொல்றேன், நீ அங்கிருந்து போ… இப்ப டெடிக்கு லீவ் வேற… அவங்க கிட்ட நான் பேசுறேன் டெடியை பார்த்துப்பாங்க. டேகேர் வச்சிருக்காங்க நீ பணம் கட்டிடு. எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பார்த்துப்பாங்க” என்று ஆலோசனை கூற அழகுக்கும் அது சரியெனப்பட்டது.
“அப்போ உடனே பேசிடு மச்சான் எனக்கும் அலைச்சல் மிச்சம்”என்று சொல்ல தருண் உடனேயே பேசி ஏற்பாடு செய்துவிட்டான்.
“மச்சி பேசிட்டேன். நீ உனக்கு இப்போதைக்குத் தேவையான எல்லாம் எடுத்து வச்சுக்கோ. பட் ஒரு இஷ்யூடா அங்க ஜென்ரல் கிச்சன் தான் அட்ஜஸ்ட் பண்ணிப்பியா?”என்றதும் சிறிது யோசித்துவிட்டு
“தருண் இன்னும் எக்ஸ்ட்ரா அமவுன்ட் வேணுன்னாலும் தந்திடுறேன் தனி ஸ்டவ் இருந்தா நல்லா இருக்கும் “என்று சொல்ல
“அது இருக்காம் ஆனா கேர்ள்ஸ் தங்கற இடத்தில் மட்டும் தான் இருக்காம் அதான் யோசிக்கிறேன்” என்று தருண் கூற
“ஓஓஓ !”என்றவன்,” பேசாம வேற ஃப்ளாட் பார்த்துட்டா?” என்று கேட்க
“அது எக்ஸ்பென்சிவ் ஏரியா மச்சி வாடகை எல்லாம் எவ்வளவு இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை உனக்கு. நான் கூட்டிட்டுப் போறேன்,நீ செக் பண்ணிட்டு உனக்கு கம்ஃபர்டா இருந்தா தங்கிக்கோ இல்லாட்டி வேற இடம் பார்க்கலாம்” என்றான் தருண்.
அரைமனதாகத் தான் சம்மதித்தான் அழகு.
(இந்த மாதிரி எங்க இடம் இருக்குனு கேட்க கூடாது கற்பனை தான் நோ லாஜிக்)