அடர்பச்சை நிற சாமுத்திரிகா பட்டில் கையளவு ஜரிகையில் அங்காங்கே ராதா கிருஷ்ணா உருவம் பதிந்த புடவையில் மணமகள் அலங்கரத்தில் தேவதையாய் மிளிர்ந்தாள் பிருந்தா.
பிருந்தாவின் அறைக்குள் நுழைந்த அஞ்சலி “ஹேய் பிந்து… ரொம்ப அழகா இருக்கடி.. இந்த கோலத்துல உன் ஆளு உன்னை பார்த்த, டோட்டலா பிளாட் ஆகிடுவான் ” அவளை வெட்கமுற செய்யும் வேலையில் ஈடுபட்டாள்.
“பச் என்று சலித்த பிருந்தா எனக்கு இது ஒன்னும் புதுசு இல்ல அஞ்சு… ஆனா பழசை…” பேசிக்கொண்டே சென்றவளை “ஹேய் ஹேய் நிறுத்து” என அதட்டிய அஞ்சு
“என்ன பிந்து… இவ்வளவு தூரம் வந்துட்டு, இப்போ புதுசு பழசுன்னு பேக் அடிக்கிற மாதிரி பேசுற… அவன் உன் மேல உயிரையே வைச்சிருக்கான் டி…” அவளை முறைத்தாள் அஞ்சலி.
“அஞ்சு நீ எவ்வளவு சொன்னாலும் என் ரணப்பட்ட மனசு இந்த சமாதானத்தை எல்லாம் ஏத்துக்கமாட்டங்குதே நான் என்ன செய்ய” என்றாள் கண்களில் பளபளத்த கண்ணீரை உள் இழுத்தவாறு.
“உஷ்… என்ன இது… நல்ல நாள் அதுவுமா கண்ணை கசக்கிக்கிட்டு” பிருந்தாவின் அருகில் வந்து தன்னோடு அனைத்துக் கொண்ட அஞ்சலி… “உனக்கு நடந்தது கல்யாணம் இல்ல பிந்து அநியாயம்… அது முடிஞ்சிப் போச்சி… முடிஞ்சித பத்தியே நினைச்சிக்கிட்டு நல்ல வாழ்க்கைய கெடுக்காதடா… நீ ஊர் உலகத்துக்காக வாழல உனக்காக வாழுற புரியுதா… என்று கண்டுப்புடன் பேசியவள்
“கிருஷ்ணா நல்லவன்னு சொல்றதோட, உன்னை உண்மையா லவ் பண்றவன்… உன்னை பத்தி தெரிஞ்சதும் அவன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? உன் காயத்துக்கு அவன் மருந்தா இருக்கனும்னு தான் சொன்னான்… இன்னும் சொல்லனும்னா உன்னை லவ் பண்றதுக்கு முன்னாடியே அவன் உனக்காக யோசிக்க ஆரம்பிச்சிட்டான்”. அஞ்சலி கூறியதும் விழி விரித்து பார்த்தாள் பிருந்தா.
“என்ன அப்படி பாக்குற… ஆண்டிக்கு ஆப்ரேஷன் நடக்க காரணமே அவன் தான் தெரியுமா?”… என்றவள் அன்று நடந்ததை ஆதி முதல் அந்தம் வரை கூறிட அலையடித்து ஓய்ந்தது போல் பிருந்தாவின் மனம் அமைதியை தத்தெடுத்தது.
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ…” அய்யரின் குரலில் அறைக்குள் நுழைந்த செண்பகம் “வாம்மா” என அவளை அழைத்துத் கொண்டு மணவரையை நோக்கி சென்றார்.
பட்டுவேட்டி சட்டையில் அழகனாய் மணவரையில் அமர்த்திருத்த கிருஷ்ணாவின் கண்கள் அன்னநடையிட்டு தங்க பதுமையென நடந்து வருபவளின் மேலேயே நிலைக்க, மாலையை சரிசெய்யும் சாக்கில் அருகில் வந்த கிரி “டேய் மச்சான் கண்ட்ரோல் டா” என்றதும், பல்லை கடித்து அவனை விரட்டியவன் அவள் அருகில் அமரவும் அந்த நிமிடங்களை ரசித்தான்.
“அம்மா…நான் சந்தோஷமா தான், இந்த வீட்டை விட்டு போறேன்… நீங்களும் இனி என்னை நினைச்சி கவலைப்படாம அப்பாக் கூட பேசுங்க” என்றவள், விஷ்ணுவை கட்டிக்கொண்டு அழுதாள்.
அவனுக்கும் கண்கள் கலங்கியது, அதை மறைத்தபடியே “என்னக்கா இங்க இருக்க மாம்ஸ் வீட்டுக்கே இத்தனை ஸீனா… என்ன ஹேண்சம் எங்க அக்கா அழுகுது நீங்க எதுவும் சொல்லலியா அவங்கிட்ட”
“எங்கியிருந்துடா கிளம்புறிங்க நீங்க…. இது என்ன டா ஒன் ப்ளஸ் ஒன் ஆஃப்ராடா… அக்காவை கட்டிக்கிட்டா தம்பி இலவசமா அனுப்ப…” கிரி அலப்பறையை கூட்ட அங்கே சிரிப்பலை எழுந்து சூழ்நிலையை மாற்றி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது.
……
சன்ன கரையிட்ட காஞ்சி வெண்பட்டு பிருந்தாவின் உடலை தழுவியிருக்க கூந்தலில் சூடிய மல்லிகையின் வாசம் நாசியை தூளைத்தது. உடலை உறுத்தாத நகைகளை அணிந்து மெல்லிய ஒப்பனையில் அழுகு பதுமையாய் நின்றாள் பிருந்தா. கையில் இருந்த பால் சொம்பு அவளை பார்த்து பயம் காட்ட தடதடக்கும் இதயத்துடன் கிருஷ்ணாவின் அறை வாயிலின் முன் நின்றிருந்தாள்.
‘கதவை தட்டலாமா… வேண்டாமா..” என்ற யோசனையுடன் நின்றிருந்தவள் நடுங்கும் கரங்களுடன் கதவை திறந்தாள். அவள் எதிர்பார்த்து பயந்தது போல் அறையில் எந்த வித அலங்காரமும் இன்றி சாதரணமாக இருக்க ஆஸ்வாச பெருமூச்சுடன் அறையின் உள்ளே நுழைந்தாள்..
வெண்பட்டு புடவையில் அவன் அழைப்பது போலவே தேவதையாகவே வந்தவளின் வதனம் அவனை கிறங்க வைத்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “அங்கயே ஏன் நின்னுட்டா உள்ள வா பிருந்தா” சாதரணமாகவே அவளை அழைத்தான்
தறிகெட்டு ஓடும் இதயத்தை இழுத்து பிடித்துக்கொண்டு அவனை விட்டு சற்று தள்ளி பட்டும் படாமலும் மெத்தையில் அமர்ந்தவளுக்கு இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்ற படபடப்பில் வியர்க்க ஆரம்பிக்க அவள் கரங்களில் புடவை தலைப்பு கசக்கியது.
அவள் எண்ணவோட்டம் புரிந்தவன் “நான் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கோவமா இருக்கியா பிருந்தா…” என்றான் அவளை பார்த்து
அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்க தலை குனிந்தபடியே “உங்களோட காதலுக்கும், அன்புக்கும் நான் தகுதியான ஆள் இல்ல கிருஷ்ணா…” என்றவளின் குரல் உடைந்திருந்தது. அதை சொல்லவே அவ்வளவு கஷ்டப்பட்டாள்.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே… தாடையை தடவி யோசித்தவன், அப்படியே இருந்தாலும் வீணாப்போறத்துக்கு என் வாழ்க்கை என்ன காயா… பழமா…” கிண்டலடித்தவனை சட்டென அவள் பார்க்க “ஓகே ஓகே… நான் பேசல… நீ பேசு” தன் வாய்மீது கை வைத்துக் நல்ல பிளாளை போல் அமர்ந்து கொண்டான்.
“இந்த ஜோக்கடிக்கரதை விட்டு கொஞ்சம் சீரியஸா பேசுங்க… உங்களுக்கு எல்லாமே விளையாட்டா இருக்கு…” அவனை கொஞ்சம் அதட்டவும்.
“ஓகே மேடம்… பீ சீரியஸ் நான் எல்லாத்துலையும் தெளிவா இருக்கேன்.. நீதான் குழம்பி இருக்க… உன்னை எது குழப்புதுன்னு சொல்லு… அதுக்கான பதிலை நான் சொல்றேன்” மார்பின் குறுக்கே கைகளை கட்டி அவளை தீர்கமாக பார்த்தான்.
அவன் பார்வையில் உள்ளுக்குள் குளிர் பரவினாலும் “என் குழப்பங்களை உங்களால தீர்க்க முடியாது கிருஷ்ணா” என்றாள் அவனை போலவே தெளிவாக
“எனக்கு அதுதான் பிரச்சனையே… உங்களுக்கு ஏன் புரியல….இந்த உறவு இந்த வாழ்க்கை உங்களுக்கு புதுசா இருக்கலாம் இது எனக்கு பழசு… என்னால சட்டுன்னு மனச மாத்திக்க முடியல… கிருஷ்ணா… முடியல…” உள்ளம் கொந்தளிக்க உணர்ச்சிவசத்தில் இறுக்க மூடிய விழிகளிலும் நீர் வழிய சத்தமிட்டு மேல் மூச்சி கீழ்மூச்சி வாங்கிட சிலையாய் நின்றாள்.
அவளருகே அமைதியாக வந்து நின்றவன்….”ரிலாக்ஸ் டா… ரிலாக்ஸ்…” அவளை சாந்தப்படுத்தி “மெதுவா கண்ணை திற” என்றதும் இறுக்க மூடிய விழிகள் தன்னால் தளர்ந்திட மெல்ல விழிகளை திறந்தாள்.
“குட்… இப்போ மூச்சை நல்லா இழுத்து விடு” அவளை ஆஸ்வாசம் கொள்ள வைத்தவன் ” இப்படி வா உட்காரு என அவளை மெத்தையின் மீது அமர வைத்தவன் “ஒரே ஒரு நிமிஷம்… நான் சொல்றதை கவனி… கோவப்படாம இந்த ரூமை ஒரு முறை நல்ல பாரு” என்றான் வேண்டுகோளாக,
அவன் குரலில் என்ன கண்டாளோ அவன் சொற்படியே நல்ல பிள்ளையாக அமைதியாக அறையை சுற்றி பார்த்தவளிடம் “இது பார்த்தா பஸ்ட் நைட் ரூம் மாதிரியா தெரியது…” என்றான் கேள்வியாக
“இல்லை” என்று அவள் தலை ஆடியது.
“ஸீ.. பிருந்தா… இதை நீயா சொல்லனும்னு தான் வைட் பண்ணேன்… இந்த பிஸிக்கல் ரிலேஷனன்ஷிப்ல மட்டும் உனக்கு ஹஸ்பண்டா நான் இருக்க விரும்பல… உனக்கு எல்லாமுமா இருக்க ஆசைப்படுறேன்… உன் வலிக்கு நான் மருந்தா இருக்கனும்னு நினைக்கிறேன்… அது தப்பா…. என்று அவள் முகம் பார்த்தான்…
தலைகுனிந்து அவன் ஒவ்வொரு சொல்லையும் மனதில் சேமித்தவளுக்கு உள்ளுக்குள் அத்தனை அமைதி… உணர்ச்சி பெருக்கில் மனதில் அரித்த அத்தனையும் கொட்டி விட இப்போது அமைதி மட்டுமே அவளிடத்தில்,
” என்னை என்னன்னு நினைச்ச விடலைப் பையன் போல உன்னை கண்டதும் காதல் விழுந்து சட்டுன்னு உன்கிட்ட சொல்லிட்டேன்னு நினைச்சியா…!! உன் கண்ணுல எனக்கான தவிப்பை பார்த்த பிறகுதான் பிருந்தா என் காதலையே உன்கிட்ட சொன்னேன்… உனக்குள்ளும் அந்த காதல் இருக்கு .நீயும் உணருவ பிருந்தா அந்த காலம் கண்டிப்பா வரும்… அதுவனைக்கும் கத்திருப்பேன்” என்றான் ஆத்மார்த்தமாக
உண்மை தானே அவள் மனம் தான் இல்லை என்று மறுக்கிறது கண்கள் காதலை பிரதிபலித்து கொண்டு தானே இருக்கிறது… இதோ இப்போதும் அவள் கண்கள் அதைத்தான் செய்து கொண்டிருந்தது.
“உன் மனசு மாறுற வரை என்னால இதே காதலோடு காத்திருக்க முடியும்… நாமலும் மத்தவங்க மாதிரி குழந்தை குடும்பம்னு நார்மல் லைஃப் லீட் பண்ணுவோம்… அதுவரை என்னை நீ உன் பிரெண்டாவே நினைக்கலாம்மா தப்பில்ல…” அவளின் தயக்கம் போக பேசினான். அவள் ஆடாது அசையாது அவன் வார்த்தைகளை அசைப்போட்டவாறு அமர்ந்திருக்கவும்
“ஹப்பா ரொம்ப பேசிட்டேன்…” என அவள் கொண்டு வந்த பாலை எடுத்து தம்பளரில் உற்றி அவளுக்கு பாதியை கொடுத்து தானும் பாதியை குடித்தான். அவள் குடிக்காமல் அவனையே பார்க்க பாலை “குடிச்சிட்டு நிம்மதியா படுத்து துங்குடா” என்றான் கனிவாய்…
அவன் கனிவான பேச்சு அவளுக்கு இதம் கொடுக்க மற்றதை போட்டு மனதை குழப்பாமல் மேலும் அவனை வருத்தாமல் அவன் சொற்படியே பாலை குடித்து விட்டு சமத்துப் பெண்ணாய் மெத்தையில் படுக்க கிருஷ்ணா அவள் அருகில் சற்று இடம் விட்டு தள்ளி படுத்தான். இந்த விலகல் அவள் மனதினை அமைதிப்படுத்தும் என் நம்பிக்கையுடன் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றான்.